தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜனவரி 31, 2016

தமிழ் எண்கள்

 
FACE BOOK கில் ஒரு நண்பர் மேற்கண்ட கடிகாரப் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் தமிழ் எண்களை படியுங்கள் என்று, இதை நாம் எங்கு படிப்பது ? யாரிடம் படிப்பது ? நாம் சிறுவயது தொடங்கி பள்ளிக்கூட ஆசிரியரிடம்தான் படித்து வருகிறோம் ஆனால் நமக்கு இந்தத் தமிழ் எண்களை சொல்லித் தரவில்லையே காரணம் என்ன ? முதல் காரணம் நமது அரசாங்கம் இந்த எண்களை அங்கீகரித்து நடைமுறை படுத்தவில்லை அதன் காரணமாய் நமது ஆசிரியர்களில் பெரும்பாலானோருக்கும் இந்த எண்கள் தெரியவில்லை


1985 ம் ஆண்டு தேவகோட்டையில் ஒரு பெரியவர் பாலபாடம் என்ற 1910 ம் ஆண்டு பழந்தமிழில் அச்சடித்த பெரும்பாலான எழுத்துக்கள் இப்பொழுது கிடையாது புரட்டும்போதே உடைந்து விடும் அந்த நிலையிலான பழங்கால நூல் ஒன்று வைத்திருந்தார் சுமார் 400 பக்கங்கள் இருக்கும் அவர் செல்வந்தரும்கூட நான் அடிக்கடி அந்த நூலை எடுத்துப் படிப்பேன் ஒருநாள் அவர் நூலை புரட்டிக் கொண்டே இருந்தார் நான் என்ன ஐயா தேடுறீங்க ? எனக்கேட்டேன் அதற்கு அவர் ''கள்ளுன்னலின் கொடுமை'' நேற்று படித்தேன் கொஞ்சம் பாக்கியிருக்கு அதான் தேடுகிறேன் என்றார் அதற்கு தலைப்பும் பக்கமும் போய்ப் பார்த்தால் உடனே கிடைத்து விடுமே என்றேன் எண்கள் தமிழில் இருக்கும் எப்படி பார்ப்பது ? எனக்கேட்டார் எனக்குத் தெரியும் என்றேன் எங்களுக்குள் தொடங்கிய விவாதம் சவாலாகி இரண்டு ரூபாய் பந்தயத்தில் வந்து நின்றது இரண்டே நிமிடத்தில் எண்களைப் பார்த்து பக்கத்தை விரித்து வைத்தேன் சொன்னபடியே இரண்டு ரூபாயை கொடுத்து விட்டு, இதுதான் பள்ளிக் கூடத்திலேயே கிடையாதே இத்தனை வயதான எனக்கே தெரியவில்லை உனக்கு எப்படித் தெரியும் ? நான் விவேகானந்தரிடம் (காலண்டர்) படித்தேன் என்றேன் அன்றே எனக்குள் தொடங்கிய முயற்சிதான் இன்றும் யாருடைய உதவியுமின்றி COMPUTER ரில் நானாகவே பல மொழிகளை படிக்கவும் TYPE செய்யவும் கற்றுக் கொண்டேன்.



 இந்த தமிழ் எண்கள் COMPUTERரில் TYPE செய்யும் போது பூஜ்யம் மட்டும் ஆங்கில எண்களைப் போல் தான் வருகிறது உண்மையான தமிழ் பூஜ்ய எண் 90 % மலையாள எழுத்தான '''' வைப்போல் இருக்கும் (மலையாள() ஏனோ தெரியவில்லை COMPUTER ரில் வருவதில்லை மேலும் தமிழ் எண்களைப் போல் தெலுகு, ஹிந்தி, மலையாளம், அரபிக் மொழிகளிலும் எண்கள் உண்டு அதேபோல் மலையாளம், அரபிக் இரண்டு மொழிகளைத் தவிர மற்ற மொழிகளின் பூஜ்ய எண் ஆங்கிலத்தில்தான் வருகிறது ஆனாலும் சமீபத்தில் சில இடங்களில் பூஜ்யத்தை பார்த்தேன் அது எப்படியென தெரியவில்லை இதனைக் குறித்த எனது ஐயங்களை தீர்ப்பார் யாருமில்லை இன்றும் நம்மூரில் சில வாகனங்களில் இந்த எண்களை காணலாம், அப்பொழுது எனக்குள் ஒரு சந்தோஷம் தோன்றும்.

தமிழ் வாழ ! அந்த தமிழோடு நாமும் வாழ !

காணொளி 

வெள்ளி, ஜனவரி 29, 2016

உசிலம்பட்டி, உடுக்கையடி உலகநாதன்


இந்தப்பதிவுக்கு முதன் முதலாக வருபவர்கள் இதன் தொடர்பான கீழ்காணும் பதிவுகளை படித்த பிறகு தொடர்ந்தால் பதிவின் காரணங்கள் விளங்கும் இதில் கொக்கி போட்டு தொடர் பதிவாக்கிய அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி.

புதன், ஜனவரி 27, 2016

என் நூல் அகம் 6


வணக்கம் நட்பூக்களே... கடந்த வருடம் கவிஞர் திரு. நா. முத்து நிலவன் அவர்கள் வீட்டில் புதுக்கோட்டை பதிவர்களை சந்தித்தேன் என்று சொன்னேன் அல்லவா அப்பொழுது பதிவரும், கல்வி அதிகாரியுமான திருமதி. ஜெயலட்சுமி அவர்கள் திரு. வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் எழுதிய ‘’துரோகச் சுவடுகள்’’ என்ற நூலும் அன்புடன் எனக்கு பரிசளித்தார்கள் அதனைப்பற்றிய எனது பார்வையில் இதோ....

செவ்வாய், ஜனவரி 26, 2016

இந்தியா கிளர்ச்சியுடன் முன்னேறும்

                   
            
நாம் கடந்து வந்த பேரிடர் நமக்கு கஷ்டத்தை மட்டுமல்ல, நல்லதொரு பாடத்தையும் தந்து இருக்கின்றது என்பதை நாம் நினைவில் நிறுத்தி ஆகவேண்டும் ஆம் அரசியல்வாதிகளின் முகத்தை தோலுறித்து காண்பித்து இருக்கின்றது இந்த முகங்களை நாம் கடைசிவரை மறந்து விடக்கூடாது மறக்கும் பொழுது நாம் மீண்டும் பல இன்னல்களை சந்திக்க வேண்டியது வந்த பேரிடரால் சென்னையில் எத்தனையோ உயிர்கள் போயிருக்கிறது.

ஆனால்  அரசியல்வாதிகள் யாராவது போயிருக்கின்றார்களா ? சிந்திக்க வேண்டிய விடயமிது ஆம் அவர்களுக்கே முதலுதவி வழங்கப்பட்டு இருக்கின்றது ஆகவே அவர்களில் யாருமே இறக்கவில்லை இதுதான் யதார்த்த உண்மை தேர்தல் வருகின்றது பேசியே நம்மை ஓய்த்தவர்களை இனியும் பேசவிடக்கூடாது இவர்களை பேசவிடாமல் தடுப்பது எப்படி ? வெகு சுலபம் கூட்டம் நடத்துவதற்க்கு எந்த அணியில் இருந்து வந்தாலும் சரி யாருமே போககூடாது போகாமல் இருப்பதால் நாம் செத்து விடமாட்டோம் போவதால்தான் அன்றைய வருமானம் இழந்து நமது குழந்தைகள் சோறு கிடைக்காமல் பசியால் செத்து விடவாய்ப்புண்டு குறிப்பாக திரைப்பட நடிகர்கள் வந்தாலும் மனம் மாறி போய் விடக்கூடாது அவர்களும் நம்மைப்போன்று சோறு களித்து மலம் கழிக்கும் ஜாதிதான் இவர்கள் தேவலோகத்து தூதர்கள் அல்ல

உங்களுக்கு சிறிய விளக்கம் தருகிறேன் எத்தனை திரைப்படங்களில் பார்த்து இருப்பீர்கள் ஆபத்தில் மாட்டிக்கொள்ளும் மனிதர்களை இந்த காவல்துறையினரையும், ஏன் ? ராணுவ வீரர்களையும்கூட ஓரம்கட்டி விட்டு சும்மா வேலையின்றி கசாநாயகியை டாவடித்துக் கொண்டு இருந்த கசாநாயகர்கள் மட்டும் மிகவும் சுலபமாக காப்பாற்றி கொண்டு வந்து உயிருடன் மீட்டு விடுவார்கள், தீ எரிந்து கொண்டு இருக்கும் வீட்டுக்குள் ரோபோட் மாதிரி பாய்ந்து சென்று கிழவிகளைக்கூட தூக்கி வந்து உயிருடன் மீட்டு விடுவார்கள் இது எப்படி ? இப்பொழுது மட்டும் ஏன் ? சன்னல் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டும் குதித்து களம் இறங்கியிருக்க வேண்டாமா ? 

அட மடையா... அது சினிமா, நடைமுறை வாழ்க்கையில் அப்படியெல்லாம் செய்ய முடியாதுடா... என்று என்னை சொல்கின்றீகளா ? இதையேதான் நானும் சொல்கிறேன் சினிமாதானே பிறகு எதற்கு ? திரைப்படங்களில் அவர்களின் விரல் அசைவுக்குகூட அர்த்தமற்ற வகையில் உணராமல் கை தட்டுகின்றீர்கள் ? அவர்களின் பதாகைகளுக்கு கடவுள் நிலைக்கு பாலாபிஷேகம் செய்கின்றீர்கள் ? கேள்வி புரிந்ததா ? அதேநேரம் ராணுவ வீர்ர்களான நமது சகோதரர்கள் மட்டுமல்ல சாதாரண கூலித் தொழிலாளிகளால் கூட உதவி செய்ய முடிந்தது எப்படி ? 

இதுதான் நண்பர்களே நடைமுறை யதார்த்தம் ஆனால் இவர்களுக்கு சம்பளம் கோடிகள் ஆனால் நமக்காக மட்டுமல்ல, இந்த கோடிகள் சுலபமாக சம்பாரிக்கின்றார்களே நடிகர்களுக்காக மட்டுமல்ல, நம்மை காலம் முழுவதும் ஏமாற்றி வாழும் அரசியல்வாதிகள் இவர்களுக்காகவும் எந்த நொடியும் உயிர் துறக்கும் ராணுவ வீர்ர்களுக்கு சம்பளம் எவ்வளவு ? இதற்கு காரணம் யார் ? வெகு சுலபமாக பணம் உண்டாக்கினார்கள் இவர்கள் வெள்ள நிவாரணத்துக்கு அள்ளிக் கொடுத்தால் குறைந்து விடுவார்களா ? ஆகவே இவர்களையும் நாம் ஓரங்கட்டுவோம் எப்படி ? இவர்களின் திரைப்படங்கள் வெளியானதும் தியேட்டருக்கு போககூடாது சினிமா பார்க்காமல் இருப்பதால் செத்து விடமாட்டோம் அதற்கு செலவழிப்பதால் நமது குழந்தைகள் சோறு கிடைக்காமல் பசியால் செத்து விடவாய்ப்புண்டு.

மக்களிடையே மதவாதத்தை தூண்டி விட்டு குளிர் காய்ந்தவர்களின் முகத்தில் கரியை பூசியிருக்கின்றார்கள் மக்கள். மசூதிகளில் ஹிந்து பெண்களும், கோயில்களில் இஸ்லாமிய ஆண்களும் நடமாட்டம் இது வந்ததெப்படி ? பேரிடர் தந்த பெருமை என்றே நாம் கருதுவோம் நம் முன்னோர்கள் எது நடந்தாலும் நன்மைக்கே என்பார்களே... இதனால்தானோ... இந்த ஒற்றுமை என்றும் தொடர வேண்டும் நம்முள் இருந்த வேற்றுக்கருந்து அழிந்து விட்டது என்றே கருதுவோம் அவரவர் மதக்கொள்கைகள் அவரவர்களுக்குள் இருக்கட்டும் அதில் யாரும் நுழைய வேண்டாம் மதம் தவிர்த்து நமக்குள் வாழும் மனிதத்தை மட்டும் பகிர்ந்து கொள்வோம்.

குடியரசு தினமான இன்று முதலாவது மதம் மறந்து மனிதம் வளர்க்க சபதம் எடுப்போம் வளரட்டும் மனிதநேயம் ஒளிரட்டும் 
மனிதவாழ்வு
.
இந்திய மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.

இனியெனும் ந்துவும், கிருஸ்தியரும், முஸ்லீமும் தொடர்ந்து 
சகோதரர்களாய் இணைந்திருப்போம் இனி...

ந்தியா கிளர்ச்சியுடன் முன்னேறும்


தேவகோட்டை கில்லர்ஜி  அபுதாபி

காணொளி

சனி, ஜனவரி 23, 2016

பதவி


சதாசிவம் சாதாரண பியூன் இவன் மனைவி சுதா ஒரு பிரைவேட் கம்பெனியில் மேனேஜர் கை நிறைய சம்பளம் கணவனை மதிப்பதில்லை சதாசிவத்தை சதா... திட்டிக் கொண்டே இருப்பாள் இதனால் சதாசிவத்திற்கும் பதவி ஆசை வந்தது தான் வேலை செய்யும் ஆபீஸில் மேனேஜர் பதவி மீது ஆசைப்பட்டான் ஆனால் அதற்கு படிப்பும் திறமையும் வேண்டுமென சொல்லி விட்டார்கள் என்ன செய்வது ? நம்மிடம் படிப்பும் இல்லை திறமையும் கிடையாது படிப்பாவது செலவு செய்து சர்டிபிகேட் வாங்கி விடலாம், திறமைக்கு எங்கே போவது ? கடையிலும் விற்க மாட்டார்கள் இதனால் ஆபீஸில் வேலை செய்ய பிடிக்க வில்லை வேலையை விட்டு விடலாம் ஒரு டிடெக்டிவ் கம்பெனி தொடங்கினால் கை நிறைய சம்பாரிக்கலாம் துப்பறியும் நிபுணர் என்ற பதவியும் கிடைக்குமென நினைத்து மனைவியிடம் சொன்னான் அவள் அதெல்லாம் வேண்டாம் அதற்கு அனுபவமும் மூளையும் வேண்டுமென மறுத்து விட்டாள் என்ன செய்வது ? அனுபவம் பிறரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் மூளை நம்மிடம் கிடையாது கடையிலும் விற்க மாட்டார்கள்.

அந்த நேரம் பத்திரிக்கையில் ஒரு விளம்பரம் பார்த்தான் புதிதாக கண்டு பிடித்த ஏழு சக்கர கார் ஒன்றிக்கு தமிழ் நாட்டில் டீலர்கள் தேவை ஆறு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கட்டி விட்டால் வாரம் ஒருமுறை மும்பை தலைமை அலுவலகம் வந்து மீட்டிங்கில் கலந்து கொண்டால் போதுமானது நாம தமிழ் நாட்டிலேயே பெரிய டீலர்னு பேர் வாங்கிடலாம் கை நிறைய பணமும் புழங்கும் படித்து விட்டு மனைவியிடம் சொன்னான் அதற்கு அவள் அவ்வளவு பணமும் இல்லை அதற்கெல்லாம் ஹிந்தி பேசத்தெரிய வேண்டுமென மறுத்து விட்டாள் என்ன செய்வது ? பணமாவது மாமனார் காலில் விழுந்து விடலாம் ஹிந்தி ? நமக்கு தமிழே தகராறு சரி ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து விட்டால் எப்படியாவது தேர்தல்ல நின்னு ஜெயிச்சுட்டா அமைச்சர் பதவி கிடைக்கும் கை நிறைய பணமும் வரும் மனைவி தடுத்தும் கட்சிக்காரர்களின் ஆதரவுடன் மனைவியை தைரியமாக எதிர்த்து கொ.இ.க கட்சியில் சேர்ந்தான். 

ஒரு பதவி கிடைக்குமென கட்சிக்காக மாநாடுக்கு போனான் பேரணியில் கலந்து கொண்டான் வாழ்க ! வாழ்க ! எனகோஷம் போட்டான் போஸ்டர் ஒட்டினான் கட்டவுட் கட்டினான் விலை மாதர்களுக்கு பென்ஷன் தொகை வழங்குவதில் ஊழல் நடந்ததாக ஆளுங்கட்சியின் அராஜக ஆட்சியை எதிர்த்து வரும் 18 ம்தேதி ரயில் மறிப்பு போராட்டம் என தலைவர் அறிவித்தார் போராட்டத்திற்கு சதாசிவமும் சென்றான் தாய்க்குலத்திற்காக தன் உயிரையும் துச்சமென நினைக்கும் தலைவன் வாழ்க ! தலைவன் கேட்க வேண்டுமென பக்கத்திலேயே கோஷம் போட்டுக் கொண்டே சென்றான் ரயிலும் நெருங்கி வந்தது தலைவர் கண் அசைக்க சட்டென சதாசிவத்தை ரயில் முன் தள்ளி விட்டார்கள் யார் தள்ளி விட்டது ? என்ன நடந்தது ? ஒன்றுமே புரியவில்லை தலைவர் பிரச்சனையை பெரிதாக்கி காவல்துறைக்கு தலைவலியை கொடுத்து விட்டு சதாசிவம் வீட்டுக்கு சென்று சுதாவிடம் ஆறுதல் சொல்வது போல் பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுத்து இறந்த சதாசிவம் குடும்பத்திற்கு கட்சி நிதியிலிருந்து 50,000.00 ரூபாய் வழங்கப்படும் ? ? ? என அறிவித்து விட்டு போய் விட்டார்.

சதாசிவம் ஆவியாகி இறைவனிடம் ACCOUNTS பார்க்க மேலே போய்க் கொண்டிருக்க....
அவனது தோழர்கள் கீழே போஸ்ட் ஒட்டிக் கொண்டிருக்க... அதில்

கண்ணீர் மழை...
தாய்க்குலத்திற்காக ரயில் முன் பாய்ந்து உயிர் நீத்து சிவலோக பதவி அடைந்த தோழர் சதாசிவத்திற்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி. 
இவன்
கொ.இ.க
 

காணொளி

வெள்ளி, ஜனவரி 22, 2016

அத்’’தாய்


இந்தப்பதிவை படிக்க வரும் சகோதரிகளிடம் மட்டும் எமது மன்னிப்பு கோரலோடு துவங்குகிறேன் அதன் காரணம் பதிவைப் படிக்கும்போது தங்களுக்குப் புரியும்.

என் இனிய தமிழகத்து சகோதரிகளே.... உங்களது கணவர் உங்களது மகனிடம் நீ அம்மாவை மறக்ககூடாது தாயை கடைசிவரை தெய்வம் மாதிரி நினைக்க வேண்டும் அப்பொழுதுதான் அவர்களின் ஆசீர்வாதம் உனக்கு எப்பொழுதும் கிடைத்து நீ நல்ல நிலையில் சந்தோஷமாக வாழ்வாய் அனைத்து மதங்களும்கூட இதைத்தான் போதிக்கின்றன என்று சிறுவயது முதலே தினம் சொல்லிக்கொண்டே வருகிறார் என்று வைத்துக் கொள்வோம் இதற்க்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பீர்களா ? இல்லை எதிர்ப்பு தெரிவிப்பீர்களா ?

ஆதரவு என்றால் இது நல்லதொரு விடயம் தாங்கள் தங்களது மாமியாரை நல்ல விதமாக பார்த்துக் கொல்கின்றீர்கள் என்று அர்த்தம். மாறாக எதிர்ப்பு என்றால் விடயம் புரிந்து விட்டது தங்களது மாமியார் தற்போது மீனாம்பதி முதியோர் காப்பகத்தில் என்று அர்த்தம் மட்டுமல்ல தாங்கள் எதையும் ஒளிவு மறைவின்றி துட்டு ஒன்று புட்டு இரண்டு என்று உண்மை பேசும் தன்மையுடையவர் என்பதும் புரிகின்றது.

செவ்வாய், ஜனவரி 19, 2016

என் நூல் அகம் 5


வணக்கம் நட்பூக்களே... கடந்த வருடம் புதுக்கோட்டை பதிவர்களை கவிஞர். திரு. நா. முத்து நிலவன் அவர்களின் வீட்டில் சந்தித்தேன் அப்பொழுது அன்புப் பரிசாக 2 நூல்கள் தந்தார் அதில் ஒன்றுதான் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே ! இவ்வளவு காலம் கடந்த பிறகா விமர்சனம் எழுதுகின்றாய் என்று யாரும் கோபித்தல் கூடாது காரணம் புறப்படும் பொழுது சென்னையில் புத்தக மூடை கை மாறி விட்டது  மீண்டும் என் கையில் கிடைக்க நம்பிக்கையான கை வேண்டுமே ஆகவே தாமதம் இதை Too late என்று சொல்வதைவிட Too too too late என்றே சொல்லலாம் அதுவொரு பெரிய கதை அதை விலாவாரியாக எழுதினால் விலா எலும்பு புட்டுக்கிட்டு அதுவே 4 பதிவாகி விடும் ஆகவே வேண்டாமே..

திங்கள், ஜனவரி 18, 2016

Tirumurugan Transport


இந்தப்பதிவுக்கு முதன் முதலாக வருபவர்கள் இதன் தொடர்பான கீழ்காணும் பதிவுகளை படித்த பிறகு தொடர்ந்தால் பதிவின் காரணங்கள் விளங்கும் இதில் கொக்கி போட்டு தொடர் பதிவாக்கிய அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி

சனி, ஜனவரி 16, 2016

தேடுகின்றேன் நான்...


தேடுகின்றேன் நான்...
வாங்கிய கடனை திரும்ப கேட்பதற்கு முன் திருப்பிக் கொடுக்கும் மானிடர்களை,
தேடுகின்றேன் நான்...
எனது இந்தியாவில் கட்சித் தொண்டன் அல்ல ! அரசியல் தலைவன் தீக்குளிப்பதை,
தேடுகின்றேன் நான்...
வாக்காளர்களுக்கு பணம் தராமல் ஓட்டுக்கேட்கும் அரசியல்வாதிகளை,
தேடுகின்றேன் நான்...
வேட்பாளர்களிடம் பணம் கேட்காமல் ஓட்டுப் போடும் வாக்காளர்களை,
தேடுகின்றேன் நான்...
தேர்தல் இல்லாத நேரத்தில் தொகுதி மக்களை கை எடுத்து வணங்கும் எம்எல்ஏக்களை,
தேடுகின்றேன் நான்...
சட்டசபையில் எதிர்க் கட்சியை கேள்வி கேட்கும் எம்எல்ஏக்களை,
தேடுகின்றேன் நான்...
பொதுக்கூட்டத்தில் எதிர்க் கட்சியை கேள்வி கேட்காத எம்எல்ஏக்களையும்,
தேடுகின்றேன் நான்...
வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை அணியாத அரசியல்வாதியை,
தேடுகின்றேன் நான்...
தோளில் துண்டு போடாத அரசியல்வாதியையும்,
தேடுகின்றேன் நான்...
முன்னும் பின்னும் கார்படை சூழாமல் காரை தானே ஓட்டிப் போகும் அரசியல்வாதியை,
தேடுகின்றேன் நான்...
அந்தக் காரில் வெட்டியாய் நால்வர் இல்லாமல் போகும் அரசியல்வாதியையும்,
தேடுகின்றேன் நான்...
ஸ்விட்சர்லாந்த் நாட்டின் திசையறியா அரசியல்வாதியை,
தேடுகின்றேன் நான்...
ஆஸ்திரேலியாவுக்கு தன் மக்களை படிக்க அனுப்பாத அரசியல்வாதியையும்,
தேடுகின்றேன் நான்...
வீட்டுக்குள் மருமகள் வர-தட்சினை கேட்காத குடும்பங்களை,
தேடுகின்றேன் நான்...
தனிக்குடித்தனம் போகும் மகளை கண்டித்து தடுக்கும் தாயை,
தேடுகின்றேன் நான்...
தனிக்குடித்தனம் போகும் மருமகளை வாழ்த்தியனுப்பும் மாமியாரை,
தேடுகின்றேன் நான்...
போன வருடம் கட்டிக்கொடுத்த தன் மகள் வாந்தி எடுக்காமல் இந்த வருடம் வீட்டுக்கு வந்த மருமகள் வாந்தி எடுப்பதை கண்டு பூரிக்கும் மாமியாரை,
தேடுகின்றேன் நான்...
மகள் இறந்த பிறகும் மருமகன் நல்லாயிருக்க வேண்டுமென நினைக்கின்ற மாமன்-மாமியாரை,
தேடுகின்றேன் நான்...
மகன் இறந்ததினால் மருமகளுக்கு மறுமணம் முடித்து வைக்கும் மாமன்-மாமியாரையும்,
தேடுகின்றேன் நான்...
மாமியார் மடியில் படுத்துக் கொண்டு டிவி பார்க்கும் மருமகளை,
தேடுகின்றேன் நான்...
டிவியில் சீரியல் பார்க்க பிடிக்காது என்று சொல்லும் மாமியார்-மருமகளையும்,
தேடுகின்றேன் நான்...
மருமகளுக்கு பேன் பார்க்கும் மாமியாரை,
தேடுகின்றேன் நான்...
மாமியாரின் கால் நகத்தை வெட்டி விடும் மருமகளையும்,
தேடுகின்றேன் நான்...
துபாயிலிருந்து வீட்டிற்கு போண் பேசும் போது பணம் கேட்காமல் பேசி முடிக்கும் குடும்பத்தினரை,
தேடுகின்றேன் நான்...
கணவன் வாங்கி வந்த நெக்லஸை நாத்தனார் கழுத்தில் போட்டு அழகு பார்க்கும் மனைவியரை,
தேடுகின்றேன் நான்...
அழகு பார்ப்பதற்காக போட்ட நெக்லஸை சந்தோஷமாய் கழட்டிக் கொடுக்கும் சகோதரியை,
தேடுகின்றேன் நான்...
வரும் போது உங்க மச்சானுக்கு கோல்ட் வாட்சு எடுத்து வாங்கண்ணா என்று சொல்லாத சகோதரியை,
தேடுகின்றேன் நான்...
பேச்சே வராத குழந்தையிடம் ஜிமிக்கி வாங்கிட்டு வாங்க மாமான்னு சொல்லு என்று சொல்லாத சகோதரியையும்,
தேடுகின்றேன் நான்...
எப்ப கேன்சலில் வருவீர்கள் என்று கேட்கும் மனைவியர்களை,
தேடுகின்றேன் நான்...
வரும் போது ரெட்டை வடம் செயின் எடுத்து வாங்க என்று சொல்லாத மனைவியர்களையும்,
தேடுகின்றேன் நான்...
வாங்கும் இடத்தை மருமகள் பெயரில் முடிக்கச் சொல்லும் தாயாரை,
தேடுகின்றேன் நான்...
வாங்கும் வீட்டை மாமியார் பெயரில் முடிக்கச் சொல்லும் மனைவியரையும்,
தேடுகின்றேன் நான்...
காலேஜூக்கு போகணும்னா ஹீரோ ஹோண்டா வேண்டுமென டிமாண்ட் வைக்காத மகனை,
தேடுகின்றேன் நான்...
மகனுக்கு காரியம் சாதிக்க கணவனுக்குப் பிடித்த கீரைப் போண்டா செய்து கொடுக்காத மனைவியரை,
தேடுகின்றேன் நான்...
கல்லானாலும் கணவன் என்று நினைக்கும் பூவையரை,
தேடுகின்றேன் நான்...
மண்ணானாலும் மனைவி என்று நினைக்கும் ஆடவரை,
தேடுகின்றேன் நான்...
தேடுகின்றேன் நான்...
தேடுகின்றேன் நான்...
தேடுகின்றேன் நான்...


சண்டாளன் சாம்பசிவம்-
அட மூதேவி இப்படியே தேடிக்கிட்டு கடைசியிலே சுடுகாட்டுல வந்து நிக்கிறியே இங்கேகூட கிடைக்க மாட்டாங்களே...

குறிப்பு - இது கவிதையோ கட்டுரையோ நானறியேன் ஆயினும் எனக்கு மனக்காயத்தை கொடுத்து இதை எழுதுவதற்கான அடிப்படை ‘’கரு’’ தருவதற்கு  காரணகர்த்தாவாகிய என் மனைவியின் தாய் - தந்தையருக்கு நன்றி - கில்லர்ஜி