தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், டிசம்பர் 25, 2019

கனவு மெய்ப்பட்டது



  அபுதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார் அதன் காரணமாக நானும் சில காலம் மதுரையில் தங்கி இருந்தேன் இதன் காரணமாகவே பதிவுகளுக்கு உடனுக்குடன் வர இயலாத சூழல் தீபாவளிக்கு முதல் வாரம் ஐந்து தினங்கள் குடும்பத்துடன் விடுமுறையில் வந்து வீடு கிரஹபிரவேசம் முடிந்து பிறகு தீபாவளியையும் புதிய வீட்டில் என்னோடு கொண்டாடி விட்டு மறுநாள் மதுரையிலிருந்து அபுதாபி பறந்து விட்டனர்.

புதன், டிசம்பர் 18, 2019

இனிய(அ)வன் முட்டாள்


நான்தான் அறிவாளி என்று
நினைத்திருந்த இனியவனின்
கர்வத்துக்கு விழுந்தது மரணஅடி
உறவுகளின் துரோகம் பணம் இழப்பு

வியாழன், டிசம்பர் 12, 2019

வெள்ளி, டிசம்பர் 06, 2019

குயிலகம் (4)



பதிவின் முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
முகிலன் வருங்கால மாமனார், மாமியார், மைத்துனர்களிடம் கும்பிட்டு சொல்லி விட்டு நேராக ஜனனி அருகில் போனான் பக்கத்தில் நின்றிருந்த தோழிகள் சற்றே விலகி நின்றார்கள்

ஞாயிறு, டிசம்பர் 01, 2019

குயிலகம் (3)


பதிவின் முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
வெள்ளி மீசை சொன்னது
என்னப்பா இது மாப்ளேதான் பெண்ணுகிட்டே தனியா பேசுவார்னு பார்த்தால் மாமியாரும், மாமனாரும் பேசுறாங்க ஹா... ஹா... ஹா... மாப்ளே நல்லா ஜாலியான ஆளுதான்
மரகதவள்ளி தட்டில் பஜ்ஜியை மீண்டும் எடுத்து வைத்து...
தம்பி சாப்பிடுங்கப்பா
இல்லை போதும் நிறைய சாப்பிட்டாச்சு
தம்பி நீங்களும் சாப்பிடுங்க

திங்கள், நவம்பர் 25, 2019

குயிலகம் (2)


பதிவின் முந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக...
‘’ஜனனி’’

ஜனனி சட்டென நிமிர்ந்து பார்த்தாள் அவன் தனது பெயரை முதன்முறையாக அழைத்தது ஒரு பரவசத்தை தூண்டியது காரணம் அவளும் முகிலனை கணவனாகவே ஏற்றுக்கொண்டு விட்டாள் இனி வேறொரு ஆடவன் வேண்டாம் மேலும் தனது குடும்பத்தில் அப்பா, அம்மா, பாசமான அண்ணன்கள், அண்ணிகள், தம்பி அப்பத்தாள் அனைவருக்கும் மகிழ்ச்சி என்றால் நமக்கும் மகிழ்ச்சிதானே...

செவ்வாய், நவம்பர் 19, 2019

குயிலகம் (1)



ந்த நடுத்தர வர்க்கமான வீடு சந்தோஷத்தில் குளிதித்துக் இருந்தது காரணம் ஜனனியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் மாப்பிள்ளை முகிலனோடு முறையாக வந்து பந்துக்களோடு ஹாலில் உட்கார்ந்து இருக்கின்றார்கள். முகிலன் டி.சி..சி வங்கியில் மேலாளராக நல்லதொரு சம்பளத்தில் இருக்கிறான் அழகானவன் அவனுடைய மீசையை ஒரு சாயலில் பார்க்கும்போது வலைப்பதிவர் கில்லர்ஜியைப் போலவே இருப்பான்.

புதன், நவம்பர் 06, 2019

மச்சுவாடி, மச்சான் மச்சக்காளை


மாப்ளே எங்க ஊரு, மச்சுவாடி பக்கம் போனியா ?
இல்லை மச்சான் போனவாரம் அம்மாதான் போயிட்டு வந்துச்சு.
என்ன செய்தி ஊரு நிலவரம் எப்படியிருக்கு ?
சரியில்லை மச்சான் வியாபாரம் சுமாராத்தான் இருக்கு.

வெள்ளி, நவம்பர் 01, 2019

சோமனூர், சோம்பேறி சோமு



சோமு இவனொரு சோம்பேறி எப்படியோ டிகிரிவரை படித்து விட்டான் ஒரு வேலைக்கும் போகமாட்டான். முதலில் வேலை என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளக்கூட முயன்றதில்லை இன்று வரையிலும். எல்லாவற்றுக்கும் சோம்பல் படுவான் அவனது அம்மா அலமேலு ஒரே பிள்ளை என்று செல்லம் கொடுத்து பரம்பரை சொத்து ஏராளமாக இருப்பதை காரணம் சொல்லியே மகனை இந்நிலைக்கு கொண்டு வந்து விட்டாள்.

ஞாயிறு, அக்டோபர் 27, 2019

தீபாவளிக்கு வந்துட்டான்...



லைப்பூ நட்பூக்கள் அனைவருக்கும் கில்லர்ஜியின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் உரித்தாகுக இவ்வருட புதுமணத் தம்பதிகள் சீரும், சிறப்புமாய் தீபாவளியை கொண்டாடி அடுத்த வருடம் புதிய உறவுகளோடு இணைந்து கொண்டாடிட இறைவன் – இறைவி அருள் கிட்டட்டும். இன்று தியேட்டரில் போய் அவசியம் காணவேண்டிய திரைப்படம் எமது நண்பர் நடித்த தீபாவளிக்கு வந்துட்டான்...

செவ்வாய், அக்டோபர் 22, 2019

கல்வியும், கலவியும்


துரை, அழகர்கோவில் பதிவின் மற்றொரு வர்க்கங்களின் வாழ்க்கை முறைகள்பற்றி சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா அவைதான் இந்த கல்வியும், கலவியும். இவர்கள் அந்த சாமியார்களைப் போல் சோம்பேறிகள் அல்லர் உழைப்பாளிகள் என்றே சொல்லலாம் காரணம் இவர்கள் காசிமணி, ஊசி முதல் திருஷ்டி பொம்மைகள் வரை விற்பனை செய்பவர்கள் இவர்களில் நரிக்குறவர்களும் உண்டு தெலுகு பேசுகிறவர்களும் உண்டு.

வியாழன், அக்டோபர் 17, 2019

அழகர்மலையிலிருந்து...


துரை, அழகர்கோவில் சென்றிருந்தேன் உறவினர்கள் சாமி கும்பிடுவதற்காக எனது மகிழுந்தில் போயிருந்தோம்.. மருமகள் எட்டு மாதமாக இருந்ததால் மலைக்கோவில் போகக்கூடாது என்ற ஐதீகத்தை மதித்து நான் மேலே போகவில்லை //இல்லாட்டாலும் கொச்சிக்கு போக கொடிகட்டித்தான் நிற்பே// என்று முணங்குவது கேட்கிறது. ஆகவே கீழே மலையடிக் காட்சிகளை தங்களிடம் பகிரலாமே என்று எமது விழிகளால் ஸ்கேன் செய்யத் தொடங்கினேன்.

சனி, அக்டோபர் 12, 2019

பேரையூர், பேட்டி பேரறிவாளன்


ணக்கம் ஐயா பேரறிவாளன் அவர்களே.. தொல்பொருள் ஆராய்ச்சியில் தோற்று தொலைந்து போய் தேடித் தோண்டியெடுத்த தங்களை எங்களது தோல் உரிப்பான் தோழன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தங்களுக்கு எமது வாழ்த்துகள் பேட்டியை தொடங்கலாமா ?
பேரின்பத்தமிழுக்கு வந்தனம் நன்று தொடங்கலாம்.

திங்கள், அக்டோபர் 07, 2019

நாங்குநேரி, நாயனம் நாராயணன்


01. பாசி விற்க வந்த பெண் பசி பொறுக்க முடியாமல் உணவு கேட்டாள்.

02. ராசியானவன் என்று காசியை கடையில் சேர்க்க அன்றே சீல் வைத்தனர்.

03. பிளைட்டில் கொடுத்த சாப்பாட்டு பிளேட்டை சுட்டு வந்தாள் பட்டு மாமி

04. மாடி ஏறி வந்த மங்கையர்க்கரசி படி தவறி பல்டி அடித்து கீழே விழுந்தாள்.

புதன், அக்டோபர் 02, 2019

அத்தியின் வரவு


த்தி வரதரின் வரவால் பலருக்கும் வரவு வந்து இருக்கிறது. கோயிலோரத்தில் வீடு வைத்து இருந்தவர்கள் பக்தர்களிடம் பத்து ரூபாய் வசூலித்துக் கொண்டு கழிவறையை உபயோகத்துக்கு விட்டு அரைக்கிலோ மலத்தை தன்னோட வீட்டு மனையில் சேமிச்சு வைத்து இருக்காங்களே... இவங்கே விருத்திக்கு வருவாய்ங்களா ?

வெள்ளி, செப்டம்பர் 27, 2019

சீர்காழி, சீக்காளி சீதாலட்சுமி



மீபத்தில் சீர்காழி போய் மூன்று தினங்கள் தங்கினேன் அப்பொழுது நானும் தொ.கா.நாடகம் பார்க்கும் துர்பாக்கிய நிலைப்பாடு வேறு வழியின்றி பார்த்தேன். அப்பொழுது அவளுக்கு, இவளும் இவளுக்கு அவனும், அவனுக்கு இவளும் என்ன உறவு முறை ? என்பதை வீட்டிலிருந்த எனது அப்பத்தாள் சீதாலட்சுமி எனக்கு மிகவும் பொருப்புணர்வோடு புளியைப்போட்டு விளக்கினார்கள்.

ஞாயிறு, செப்டம்பர் 22, 2019

ஒண்ணுமே புரியலே உலகத்திலே...



செருப்பை கண்ணாடி கூண்டுக்குள்ளும், உணவை தெருவில் ஓடும் சாக்கடையோரமும் வைத்து நடக்கும் வியாபாரம் எனக்கு விளங்கவில்லை.

சோற்றில் சிறிய கல் கிடந்தால் மனைவியை ஏசும் மனிதர்கள் பக்தி என்ற பெயரில் கோவிலில் மண்சோறு சாப்பிடுவது ஏனென்று எனக்கு புரியவில்லை.

புதன், செப்டம்பர் 18, 2019

மேலூர், மேலாளர் மேகநாதன்



வணக்கம் நட்பூக்களே கடந்த வருடம் இதேநாளில் இக்கதை எங்கள் ப்ளாக்கில் வெளியாகியது சரியாக ஓராண்டு கடந்தும் இன்றைய தேதிவரை கதைக்கு பேசி தீர்மானித்த எழுபத்தி மூன்று லட்சத்து, பதினாறு ஆயிரத்து, நானூற்றி எண்பத்து இரண்டு ரூபாய், ஐம்பது காசுகள் (73,16,482.50) இதுவரை தரப்படவில்லை என்பதை இதன் மூலம் அறிவிக்கிறேன். இதைப்படிப்பவர்கள் நல்ல தீர்மானமாக எடுத்துச் ஜொள்ள’’வும்.

மேகலா ஓர் தீர்மானத்துடன் நடந்தாள் இன்று அலுவலக மேலாளர் மேகநாதனிடம் சொல்லி விடுவதுதான் சரி இனியும் பொறுமையாக இருப்பது சரியாக வராது நாமும் எவ்வளவு காலம்தான் கஷ்டப்படுவது ? பாவனா போன வருடம் வேலைக்கு சேர்ந்தவள் எத்தனை வேகமாக பதவி உயர்வு பெற்று இன்று வங்கியில் கடன் பெற்று வீடு கட்டிக்கொண்டு இருக்கின்றாள் நான் இங்கு சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. வாடகை வீட்டைக்கூட கூடுதலான வாடகையில் பிடிப்பதற்கு வழியில்லை நமது பொருளாதாரம் உயர்வுக்கு வழியில்லை கணவன் முகுந்தனை நம்பி இனி பயனில்லை,

வெள்ளி, செப்டம்பர் 13, 2019

தேவநாடு


ண்ணே தேர்தல்ல எந்த மோசடியும் செய்யாமல் மோடி மறுபடியும் பிரதமர் ஆயிட்டாரே இனிமேலும் உலகம் சுற்றுவாராண்ணே ?
அடேய் மாங்கா மடையா அவரு இதுவரை 86 நாடுகளுக்குதான்டா போயிக்காரு சீக்கிரமே செஞ்சுரி அடிச்சு அடுத்த தேர்தலுக்குள்ளே டஃபுள் செஞ்சுரி அடிக்கிறதா... சபதம் எடுத்து இருக்காராம்டா...

திங்கள், செப்டம்பர் 09, 2019

கெரகாட்டக்காரன்



வணக்கம் நட்பூக்களே கரகாட்டக்காரனின் மாங்குயிலே பூங்குயிலே என்ற பாடலின் மெட்டில் பாடிப்பாருங்களேன்...

மடப்பயலே மக்குப்பயலே புத்தி சொல்றேன் கேளு
மறுபடியும் செருப்படிதான் வாங்கும் நாளு இந்த நாளு

வெள்ளி, செப்டம்பர் 06, 2019

முகம் மறைத்து...



எனது கடந்த
காலத்தில் அறியாத
வயதில் நான் செய்த
சிறிய தவறுகள்
அவ்வப்போது எனது
நினைவுக்கு வந்து
என்னை முகம் மறைத்து
மனம் கூசச் செய்கிறது.

திங்கள், செப்டம்பர் 02, 2019

அரியவை அறிக...



ணக்கம் வலையுலக உறவுகளே... எனது நட்புக்காக... பதிவுக்கு வந்த ஐயா திரு. சென்னை பித்தன் அவர்கள் அதிகமான புகைப்படங்களை வெளியிட்ட திரு. கில்லர்ஜி அவர்கள் மீண்டும் அவரே இதனை முறியடிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது என்று சொல்லி விட்டு போனது எனது தேடுதல் பணியை துவங்கி விட்டது.

வியாழன், ஆகஸ்ட் 29, 2019

மூஸாலி கோயில் (8)

முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக...

‘’ய்யோ... ஆத்தா...’’ சிவமணியின் அலறல் சத்தம் கேட்டு வடங்காடு கிராமமே எழுந்திருக்கும் அப்படியொரு அலறல் அவனது கயிற்றுக் கட்டிலுக்கு அருகில் பாயை விரித்து படுத்துக் கிடந்த அவனது ஆத்தா வீராயி திடுக்கிட்டு எழுந்து சிமிழி விளக்கை ஏற்றி விட்டு, ஏண்டா பேதியில போக பொழுது சாய்ஞ்சா கணாக் கண்டுக்கிட்டு கத்தி ஊரைக்கூட்டுறியே எருமை மாடு நல்லா பொழிகழுதை மாதிரி தின்னுப்புட்டு ஊரைச்சுத்துறியே... நான் காடு கரையில வேலை செஞ்சுட்டு வந்து ஒனக்கு கஞ்சி ஊத்துறேன்ல.. என்னைச் சொல்லணும் காலாகாலத்துல ஒனக்கு ஒரு கால்கட்டு போட்டாத்தான் நீ சரிப்பட்டு வருவே நாளைக்கே போறேன் வலசைக்காட்டுக்கு எந்தம்பி மக கோமளவள்ளிய பரிசம் போட...

திங்கள், ஆகஸ்ட் 26, 2019

மூஸாலி கோயில் (7)

முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக...

ந்தரத்திலிருந்து இறங்கிய தேவகோட்டை தேவையறிந்த தேவதை அம்மனைக் கண்டதும் மீண்டும் உயிர் வந்ததைப்போல் உணர்ந்தான் சிவமணி ஆஹா முகமே தெரியவில்லையே உடைகள் மட்டுமே பறக்கின்றது ஆண் முகம் போலவும் இருக்கின்றதே எப்படியோ இனி நமக்கு விடுதலை விடுதலை விடுதலை அனைவரும் நடுங்கிக் கொண்டு நின்றார்கள் தேவதை சிவமணிக்கு முன்னால் இறங்கி நின்றது சுடிதார் போன்ற உடையணிந்து எவ்வளவு அழகான முகம் தேவகோட்டை அல்லவா ஆணோ, பெண்ணோ எல்லோருமே அழகாகத்தானே இருக்கின்றார்கள் அப்படியானால் தெய்வமும் அழகாய்த்தான் இருக்கும் அதுவும் காக்கும் கடவுளாயிற்றே... கனிவான முகத்தைக் காட்டிய தேவதை சடக்கென்று திரும்பிக் கூட்டத்தைப் பார்த்துக் கேட்டது...

வெள்ளி, ஆகஸ்ட் 23, 2019

மூஸாலி கோயில் (6)

முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக...

ட்டீரென முகத்தில் தண்ணீர் அடிக்கப்பட மயக்கத்திலிருந்த சிவமணி கண் விழித்தான் தாகம் எடுக்க முகத்தில் அடித்த தண்ணீரை நாவால் ஈரப்படுத்திக் கொண்டான் எதிரே ஒருவன் வேப்பங்கொத்தை வைத்து சிவமணி உடல் முழுவதும் நீவி விட்டு ஒதுங்கி நிற்க தலைவன் கத்தினான்.

செவ்வாய், ஆகஸ்ட் 20, 2019

மூஸாலி கோயில் (5)



முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக...

சிவமணி பயந்து நடுங்கி கொண்டு இருக்க அந்த உருவம் அசைந்து அசைந்து அவனருகில் வந்தது அவனுக்கு முன்புறம் நின்று வானத்தை நோக்கி யானையைப் போன்றே பிளிர அந்த உருவத்துக்குப் பின்னால் வெள்ளையாக ஒளிவட்டம் சிவமணிக்கு சர்வநாடியும் ஒடுங்கி விட்டது அருகில் அவனின் பக்கத்தில் மண்டியிட்டு உட்கார்ந்தது