தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், செப்டம்பர் 30, 2015

தடையாக மாறும் அடையாளச் சின்னங்கள்


நம் முன்னோர்கள் தான் வாழ்ந்ததின் அடையாளமாக பல விடயங்களை நமக்கு கொடுத்து விட்டுச் சென்றார்கள் அந்த வகையில் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள் நம் இந்தியாவில் ஏராளம் அப்படி நமக்கு கிடைத்தவைகளில் தஞ்சை பெரியகோவில், பூதங்கள் கட்டியதாக சொல்லப்படும் ஆவுடையார் கோவில், செஞ்சி கோட்டை, தாஜ்மஹால், மைசூர் அரண்மனை, மதுரை திருமலை நாயகர் மஹால், வீரபாண்டிய கட்டப்பொம்மன் மறைந்திருந்த தேவகோட்டை சங்கரபதிக்கோட்டை இங்கிருந்து புதுக்கோட்டை தொண்டைமான் அரண்மனைவரை பூமிக்குள் குதிரையில் போகும் சுரங்கப்பாதை உள்ளது இப்பொழுது பராமரிப்பின்றி மூடிவிட்டது இப்படி எவ்வளவோ விடயங்கள் சொல்லலாம் கணக்கில் அடங்காது புதிதாக கட்டவில்லை என்றாலும் பரவாயில்லை இருக்கும் பழமை வாய்ந்த கட்டடங்களை பராமரிப்பதில் அரசு கவனம் செலுத்துவதில்லை.

பழனி கோவில் போன்று மக்களிடமிருந்து வருமானம் வரும் இடமெல்லாம் பராமரிப்பு சிறப்பாக இருக்கிறது சென்னையில் பல பாலங்கள் கட்டி முடிக்கப்படாமல் அரையும், குறையுமாக நிற்கிறது காரணம் தொடங்கியது மற்றொருவர் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி அவைகள் முடிக்கப்படாமல் இருந்தால் இதுவரை கட்டியவைகளும் வீணாகும் என்பது அரசுக்கு தெரியாமல் இல்லை போனால் போகட்டும் நமக்கென்ன ? மக்களின் வரிப்பணம்தானே எவன் கேட்கப்போகிறான் கேட்டாலும் காவல்துறை நமது கையில்தானே.. பிறகு பார்த்துக்கொல்லலாம் புதிதாக கட்டப்பட்ட சட்டமன்றம் கூட மீண்டும் மாற்றப்பட்டு அவை மருத்துவமனையாக மாற்றப்பட்டது ஏதோ பங்காளிச்சண்டை போல் பரிமாறிக் கொள்கிறார்கள் ஒரு அரசு அலுவலகத்தை இடம் மாற்றுவது என்றால் சாதாரண காரியமா ? நாமெல்லாம் நமது வாடகை வீட்டை மாற்றுவதற்க்கே எவ்வளவு செலவு செய்யவேண்டியது இருக்கிறது இவர்கள் நமது பணத்தை இப்படியெல்லாம் வீண் விரயமாக்குகின்றார்கள் காரணம் என்ன ? மக்கள் நிச்சயமாக கேள்வி கேட்கப்போவதில்லை.

ஐந்து  வருடத்துக்கு ஒருமுறை சென்று கும்பிட்டு கைத்தடிகள் மூலம் ஓட்டுக்கு ஐநூறு ரூபாய் வீதம் எறிந்தால் போதுமே வேலை முடிந்து விட்டது பிறகு விலைவாசி ஏறும்போது மட்டும் டீக்கடையில் உட்கார்ந்து வாய் கிழியப்பேசுவது அர்த்தமற்ற பேச்சுக்களால் பயன் என்ன ? அவசியமற்ற வார்த்தைகளை பேசிக்கொண்டே இருப்பவனும் முட்டாள், அவசியம் வரும்பொழுது பேசாமல் இருப்பவனும் முட்டாள்.

நாம் பல நல்ல வாய்ப்புகளை தவற விட்டு விடுகிறோம் இன்றைய அரசியல்வாதிகளின் செயல் கோமாளித்தனமாகவே இருக்கிறது காரணம் அவர்கள் அடிப்படையில் கூத்தாடிகள் என்பதே உண்மை நாம்தான் ஒரு கூத்தாடி இரண்டொரு திரைப்படங்களில் அநியாயத்தை தட்டிக்கேட்கும் வீரனாக
(டப்பிங் வாய்ஸ் காரணம் தமிழ் தெரியாது) 
பேசி நடித்தவுடன் வருங்கால முதல்வரே வா என்று பதாகைகள் வைத்து விடுகின்றோமே.. அவனும் மனிதன்தானே ஆசைகள் இருக்காதா ? அவன் புத்தன் இல்லையே உடனே அவனது கைத்தடிகளான வீட்டில் வளர்த்த விட்டில் பூச்சிகளை வைத்து மன்றம் தொடங்குகிறான் அதை அப்படியே கட்சியாக்குகின்றான், கொடி பிடிக்கின்றான் மிகவும் சுலபமாக தலைவனாகி முதல்வனும் ஆகிவிடுகிறான் அவர்களது பழக்கதோஷம் கோமாளி ஆட்சி நடத்துகின்றார்கள் இதைத்தான் நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள் கேனப்பய ஊருல கிறுக்குப்பய நாட்டாமை என்று உண்மைதானே ஆண்டாண்டு காலமாக கொடிப்பிடித்து மக்களுக்காக தெருவில் நின்று குரல் கொடுத்தவனை, மக்கள் என்றுமே மதிப்பதில்லை காரணம் அவர்கள் பகட்டாக இல்லையே இது பகட்டு உலகம் 
(நான் கம்யூனிஸ்டுகாரர்களை சொல்வதாக கூட நினைக்கலாம் அதுவும் பொருத்தமாகத்தான் இருக்கிறது) 
நான் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவன் இதிலொரு வேடிக்கை சொல்லட்டுமா ? உழைக்கும் வர்க்கமான தமிழர்கள் உழைப்பாளிகளுக்கு ஆதரவு கொடுக்கும் கம்யூனிஸ்டுகளை மதிப்பதில்லை ஆனால் உழைக்க மறுக்கும் சோம்பேறிகளான மலையாளிகள் தக்க தருணத்தில் கம்யூனிஸ்டுகளை ஆதரிப்பார்கள் காரணம் அவர்கள் உழைக்காமலே பிழைக்கத் தெரிந்தவர்கள் நம்மவர்கள் உழைத்தும் பிழைக்கத் தெரியாதவர்கள் இதுதான் உண்மை.

அதனால்தான் பிழைக்க வந்த பிற மாநிலத்தான் தமிழ் திரைப்படத்துறையில் பெரிய அளவில் நட்சத்திரம் என்று அறியாமைகள் சொல்கின்றார்களே ஆகவே நானும் அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காக சொல்கிறேன் தமிழ் நட்சத்திரமாக ஜொலிக்கின்றார்கள் தமிழர்கள் வயிற்றுப்பசி போக்க அன்றாடக் கூலிக்கு அவர்கள் ஜொலிப்பதற்காக லைட்பாய்களாகவும், கசக்கி எறியப்பட்டு முழுதும் நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்ற நிலைக்கு வந்த தமிழச்சிகள் பலரும் டூயட் பாட்டுக்கு லாலா லாலா லா... லா.. லா... என்று பாடிவருகின்றார்கள் அடுத்தொரு முறை திரைப்படம் காணும்பொழுது கவனியுங்கள் கோஷ்டியில் பாடும் பெண்களின் முகத்தை அதிகபட்சமாக தமிழச்சிகளின் முகமே... பிற மாநிலத்தான் ஆணும், சரி பெண்ணும் சரி கோடிகள் சம்பளம் பெறுகின்றார்கள் அதை அவர்கள் உடனடியாக அவர்களது மாநிலத்திலேயே முதலீடு செய்கின்றார்கள் இதை தொலைநோக்கு பார்வையுடன் கூர்ந்து கவனித்தால் தெரியும் நம்மில் பலருக்கு தொலைநோக்கு பார்வை கிடையாது தொலைந்து போன பார்வையே உண்டு தமிழா விழிப்புணர்வு பெறு இல்லையேல் விழி இல்லாமல் இரு.

என்று தமிழன் கட்டவுட்டிற்க்கு பாலாபிஷேகம் செய்வதை நிறுத்துகின்றானோ ? என்று தமிழன் விபச்சாரிகளுக்கு கோவில் கட்டுவதை நிறுத்துகின்றானோ ? என்று தமிழன் பிறமொழிக்காரனை தலைவா என்று சொல்வதை மறக்கின்றானோ ? அன்றுதான் தமிழ்நாடு மோட்சம் பெறும் இல்லையேல் பி.எஸ்.வீரப்பா அவர்கள் வசனம் பேசியது போல் இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாகப் போட்டும் என்று சொன்னது உண்மையாகும்.

புதுக்கோட்டை பதிவர் திருவிழா நடத்தும் மின் இலக்கிய போட்டிகள் 2015க்காக எழுதப்பட்டது (வகை 2) விழிப்புணர்வு கட்டுரைப்போட்டிக்கு ‘’கட்டுரை’’ என்ற வகையில் நான் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையை என்னுடையது என்று உறுதி தருவதோடு போட்டிகள் முடியும் வரை வேறு தளங்களில் வெளியிட மாட்டேன் என்றும் உறுதி தருகிறேன்.

நான் போட்டிக்கு அனுப்பிய பிற படைப்புகளை காண கீழே சொடுக்குக...







2015 புதுக்கோட்டை பதிவர் விழாவுக்கு அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கும்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

குறிப்பு - நேற்றோடு எமது போட்டிக்கான பதிவுகளை நிறுத்தி விடுவோம் என்று நினைக்கும் தருவாயில் நேற்றைய பதிவுக்கு கருத்துரையிட்ட நண்பர் திரு. கரந்தையார் அவர்கள் என்னை உசுப்பேற்றி விட்டார்கள் ஆகவே உடனடியாக யோசிக்காமல் எழுதியது காரணம் போட்டியில் நுழைய இன்னும் நான்கு மணி நேரம் மட்டுமே உள்ளது இதற்க்கு பரிசு கிடைத்தால் அதற்கு காரணம் நண்பரே..

செவ்வாய், செப்டம்பர் 29, 2015

பெரியப்பாவின் சிலைகளை ஆற்றில் கரைப்பது ஏன் ?


நம் முன்னோர்கள் சில செயல்களை நமக்கு எல்லோருக்கும் புரியாமலே சொல்லி விட்டு சென்று விட்டார்கள்.

ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக் கொண்டு போயிருக்கும் அதனால் அங்கே நீர் நிலத்தில் இறங்காமல் ஓடி கடலை அடையும் ஆனால் களிமண் உள்ள இடத்தில் நீர் கீழே பூமியில் இறங்கும். அதனால் விநாயகர் சதுர்த்தியன்று சிலைகளை களி மண்ணால் செய்து ஆற்றில் கரைக்கச் செய்தார்கள். அதை ஏன் ? மூன்று அல்லது ஐந்து நாட்கள் கழித்து ஆற்றில் போடவேண்டும் ? ஈர களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்று விடும் சற்று காய்ந்த களிமண் நீரின் வேகத்தை தாங்கிக்கொண்டு அதே இடத்தில் படிந்து விடும். இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியின் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீர் பிரட்சினையை தீர்க்கும் ஆற்றில் மட்டுமே கரைக்க வேண்டும் இதையே இன்றைய இளைஞர்களை களி மண்ணை ஆற்றில் போடவேண்டும் என்றால் வரமாட்டார்கள்.

எப்படி நம் முன்னோர்களின் சாமர்த்தியம் ?
பண்டாகால நம் முன்னோர்கள் இதன் வழியே பண்டிகைகளை புகுத்தி மனிதன் சந்தோஷமாக வாழ்வதற்கு வழி வகுத்தார்கள் இவ்வாறாக பிறந்ததாகத்தான் இருக்க வேண்டும் பிற பண்டிகைகளும், திருவிழாக்களும்.
கணபதி பப்பா மோரியா
இன்றைய விநாயகர் சதுர்த்தி எப்படி இருக்கிறது ?

டண் கணக்கான அளவுகளில் கிரேனில் தூக்கிப்போய் கடலில் இறக்குகின்றார்கள் அவைகளில் கெமிக்கல் கலந்த சுண்ணாம்பு கடல் தண்ணிரில் கலந்து கடலை மாசு படுத்துகின்றன அவைகளை மீன்கள் உண்டு அந்த மீன்களை நாம் உண்ணுகிறோம் புதிய வியாதிகளை நாமே உருவாக்குகின்றோம் வீண் செலவுகள், வேதனைகள் எவ்வளவு கொடுமை யாராவது நினைத்துப் பார்க்கின்றோமா ? இல்லை காரணம் மூளைச்சலவை அரசியல்வாதிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு மக்களாகிய நாமும் ஒத்துழைக்கின்றோம் ஆகவே இவர்கள் வருடத்துக்கு வருடம் விழாவின் பிரமாண்டம் வலிமையாகிறது இது பக்தியா ? இந்தப்படை போதுமா ? இன்னும் கொஞ்சம் வேண்டுமா ? என்பதுதானே... கடந்த இருபது வருடங்களில் இந்த விழாக்கள் அளப்பெரிய வளர்ச்சியைப் பெற்று விட்டன இந்தியாவில் இந்த விழாவின் வருடாந்திர செலவு மட்டும் வருடத்துக்கு 20,000 ஆயிரம் கோடி செலவு ஆகிறதாம் நண்பர்களே பிள்ளையார் என்னை இப்படி கொண்டாடுங்கள் என்று சொன்னாரா ? இந்தப்பணத்தை வைத்து கல்யாணம் ஆகாத எத்தனை ஏழைப்பெண்களுக்கு வாழ்வு அளிக்கலாம் அப்படிச் செய்தால் பிள்ளையார் ஏற்றுக் கொள்ள மாட்டாரா ? அப்படி ஏற்கவில்லை எனில் அவர் கடவுளே இல்லையே பக்தி வேண்டியதுதான் அவை அறிவுப்பூர்வமாக இருத்தல் அவசியம் இல்லையா ? தங்களுக்கு நினைவிருக்கலாம் சில வருடங்களுக்கு முன்பு பிள்ளையார் பால் குடிக்கின்றார் என்று ஒரே பரபரப்பு ஊடகங்களுக்கு சொல்லவும் வேண்டுமா ? எவ்வளவு வேகமாக பரப்பினார்கள் அந்த அலை ஓய்ந்ததும் ஒருவர் சொன்னார் பிள்ளையாரை நான்தான் பால் குடிக்கச் சொன்னேன் என்று சொல்லி மக்களிடம் மேலும் பீதியைக் கிளப்பினார் அவரை பிள்ளையார் ஒன்றுமே செய்யவில்லை இதன் காரணமாகத்தான் பலரும் பல வித்தைகளை கையாள்கின்றார்கள்.

அற்புத கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற் பொருள் குவிதல் வேண்டின்
நலமெல்லாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக் 
களஞ்சிய திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்
பொய்யில்லை கண்ட உண்மை
- கவியரசர் கண்ணதாசன்

இப்பொழுதெல்லாம் மதங்களின் திருவிழாக்கள் பக்தியின் வழியில் இல்லை என்பது மட்டும் நிச்சயமாகி விட்டது ஒரு காலத்தில் ஐயப்பன் கோவிலுக்கு மாலையணிந்து விரதமிருந்து போகின்றவர்களை அனுப்பி வைக்கின்ற பொழுது அதை அவரின் கடைசியாத்திரை என்ற கணக்கிலே அனுப்பி வைத்தோம் அவர்கள் வீடு திரும்ப 1 மாதம்கூட ஆனது காரணம் காடு, மலை கடந்து போய் வந்தார்கள் அவர்களை புலிகள் அடித்திருக்கலாம் என்று நம்பப்பட்டது இப்பொழுது அப்படியில்லை காலையில் புறப்பட்டால் மறுநாளில்கூட வீடு திரும்புகின்றார்கள் அதேபோல வயது முதிர்ந்த பக்கவப்பட்டவர்களே மலைக்குப் போய் வந்தார்கள் இன்று அந்த பழக்கமும் மலையேறி விட்டது,

//டேய் மாப்ளே என்னடா மாலை போட்ருக்கே ? 
ஆமாடா ஐயப்பன் கோயிலுக்கு போறேன் நீயும் வாயேன்... 
சரிடா நானும் நாளைக்கே மாலை போடுறேன்..// 

இதுதானே நடக்கின்றது இதுதான் பக்தியா ? இதில் பக்தியின் மார்க்கம் உண்டா ? ஒரு நேர்த்திக் கடன்தான் உண்டா ? இதில் பழனி பாதயாத்திரையும் சேரும் ஐயப்பனுக்கு மாலையணிபவர்கள் கோவில் போய்விட்டு வீடு திரும்பி மாலையை கழட்டும்வரை விரத முறைகள் மாறக்கூடாது விரதமுறைகள் நான் சொல்ல வேண்டியதில்லை அனைவரும் அறிந்தவையே... மலைவாசலில் கள்ளு விற்கப்படுகின்றதே  யாருக்காக  நான் நேரில் கண்ட உண்மை எப்பொழுது தெரியுமா ? 1989-ல் இன்று நிலை என்னவோ ? யாமறியேன் பராபரமே... நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாற்றங்கள் மலையை விட்டு இறங்கியதும் மாலையை கழட்டி விடும் சாமிகள் பலரும் உண்டு இறைவனை வணங்காதவர்கள், இல்லை என்று சொல்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம், வாழட்டும் ஆனால் இறைவனை வணங்குபவர்கள் அப்பழுக்கற்றவர்களாக வாழ்ந்து காண்பிப்பதே இறை பக்தியை உயர்வு படுத்தும் இல்லையேல் தாழ்வு படுத்தும் என்பதே எமது கருத்து இறை நம்பிக்கையுடையோரே மதம் வளர்க்க வேண்டாம் சரியாக இருக்கும் அதை மழுங்கடிக்காமல் வாழ்வதே சிறப்பு மதம் மறந்தால் மனிதனாகலாம் ஆகவே...
மதம் மறப்போம் மனிதம் வளரப்போம்.


புதுக்கோட்டை பதிவர் திருவிழா நடத்தும் மின் இலக்கிய போட்டிகள் 2015க்காக எழுதப்பட்டது (வகை 2) விழிப்புணர்வு கட்டுரைப்போட்டிக்கு ‘’கட்டுரை’’ என்ற வகையில் நான் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையை என்னுடையது என்று உறுதி தருவதோடு போட்டிகள் முடியும் வரை வேறு தளங்களில் வெளியிட மாட்டேன் என்றும் உறுதி தருகிறேன்.

நான் போட்டிக்கு அனுப்பிய பிற படைப்புகளை காண கீழே சொடுக்குக...





காணொளி

 2015 புதுக்கோட்டை பதிவர் விழாவுக்கு அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கும்
தேவகோட்டையான்
கில்லர்ஜி किल्लरजि കില്ലർജി  కిల్లర్ జి  Killergee كـــيللرجــــي

திங்கள், செப்டம்பர் 28, 2015

Dr. 6 முகம்


அன்பு நண்பர்களே... வணக்கம் எமது கடந்த Mineral Water பதிவுக்கு வந்த அன்பின் ஜி குவைத் திரு. துரை செல்வராஜூ அவர்கள் படித்து விட்டு பின்னூட்டத்தில் எனது கழுத்தில் இப்படியொரு கொக்கியை போட்டு விட்டு போய் விட்டார்கள் நானும் மறுமொழியில் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியாமல் இப்படியொரு வாக்கு கொடுத்து விட்டேன் பிறகுதான் புரிந்தது எமது தவறு இருப்பினும் வாக்கு கொடுத்ததை காப்பாற்றுவது எமது கடமை இல்லையெனில் தி கிரேட் தேவகோட்டைக்காரன் 

சனி, செப்டம்பர் 26, 2015

இயற்கையை காப்போம், இன்பமாய் வாழ்வோம்


 தினம் ஒரு மரம் வெட்டுவோம் ஆம் நண்பர்களே... வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்றுதான் கேள்விப்பட்டு இருப்பீர்கள் இதென்ன ? புதுசு ஆம் புதுசு கண்ணா புதுசு இயற்கையை காப்பாற்ற நாம் புதிதாக மரம் நடவேண்டாம் கீழ்காணும் காணொளியைக் கண்டு கேளுங்கள்.

சீமை கருவேல மரங்களால் நமக்கு பயன் என்ன ? என்பதை. ஆங்கிலேயர்களின் தொலை நோக்குப்பார்வை அன்றே அவர்கள் சிந்தித்துதான் காஷ்மீரைக்கூட தனி மாநிலமாக இந்தியாவுக்கு ஒரு நிரந்தர தலைவலி கொடுக்க கூடிய இடமாக ஒப்பந்தத்தைக் வைத்தும், பாண்டிச்சேரியை தனி மாநிலமாகவும் வைத்து விட்டு சென்று விட்டார்கள் இன்றைக்கும் காஷ்மீரியர்களைத் தவிர பிறர் அங்கு இடம் வாங்க முடியாது அதேபோல இன்றுவரை அங்கு விலைவாசிகளும் 1947லில் உள்ள விலையே இதற்காக மட்டும் இந்திய அரசாங்கம் வருடத்துக்கு பல கோடிகளை செலவு செய்து வருகிறது நான் இதை படித்ததற்கான இந்த ஆதார நூல்கள் முன்பு நான் தேவகோட்டையில் வைத்திருந்தேன் இந்தமுறை வரும் பொழுது தேடினேன் கிடைக்கவில்லை அது கிடைத்து இருந்தால் கூடுதல் விபரம் நான் எழுதியிருக்க முடியும் இந்தக்கட்டுரை அதனைக்குறித்து அல்ல ! சீமை கருவேல மரங்களைக் குறித்தே...


சரி இந்த கருவேலமரங்களை சராசரி அன்றாட உழைப்புகளுக்கு ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் மக்களாகிய நாமே ஒழிப்பது நடக்க கூடிய காரியமா ? என்று தோன்றலாம் இதற்கு அரசாங்கம்தான் முன் வரவேண்டும்.

அரசாங்க முன் வருமா ? 
வரவைப்பதே நமது வேலை ஏன் ? 
பக்கத்து மாநிலங்களில் எப்படி கொண்டு வந்தார்கள் ? 

நாம் அரசியல்வாதிகள் கொடுக்கும் இலவசங்களுக்கு மயங்கி விடுகிறோம் ஆகவே இந்த மயக்கமே நம்மை சிந்திக்க மறுக்க வைக்கிறது மேலும் பண ஆசையால் இருக்கின்ற விளை நிலங்களையும் விலைக்கு கொடுத்து விட்டு உலை வைக்க அரிசிக்கு அடுத்த மாநிலங்களை எதிர் பார்க்கும் நிலைக்கு வந்தும் விட்டோம் இது எங்கு போய் நிற்குமோ ? நமது சந்ததிகளுக்கு சொத்து சேர்த்து வைக்க ஆசைப்படும் நாம் அவர்கள் உண்டு களித்து அந்த சொத்துக்களை பராமரிக்க வேண்டும் என்ற சிந்தை இல்லாமல் வாழ்கிறோம் விவசாயம் என்றால் என்ன ? என்பதை நமது சந்திகளுக்கு தெரியாமல் போய்விடுமோ ? என்ற சூழலை உருவாக்கி விட்டோம் இதுவா நாம் நமது சந்ததிகளுக்கு கொடுப்பது நாளை இவர்களின் உணவுக்கு வழி என்ன ? மாடமாளிகைகள் கட்டி வீட்டில் பொன்னும், பொருளும் இருந்தாலும் உண்ணும் உணவு இல்லையெனில் வாழ முடியுமா ? உணவுக்காக வாழ்க்கையா ? வாழ்க்கைக்காக உணவா ? என்றால் இரண்டுமே அவசியமானதே... 

இயற்கையை மறந்து செயற்கையை நோக்கியே மக்களாகிய நாம் பயணிக்கிறோம் இது தொடர் வாழ்க்கை அல்ல இது முற்றுப்புள்ளியை கொடுத்து விடும் இயற்கை வாழ்க்கை நமக்கு தொடர்புள்ளியை அள்ளித்தரும்.

மக்களே மாற்றுச் சிந்தனைக்கு இனியெனும் வருவோம் நமக்காக அல்ல நாளைய நமது சந்ததிகளின் வாழ்வாதாரத்துக்காக இயற்கை தந்த வளங்களை அழிக்க நினைக்கிறோம் ஆளால் நம்மை அழிக்கும் கருவேல மரங்களை ஒழிக்க சலிக்கிறோம் ஒவ்வொரு மனிதனும் இது நம்நாடு, நம் மக்கள் நம் இனம் என்ற கோட்பாட்டுக்குள் நம்மை நாமே வரையறுத்துக் கொண்டு வாழ்ந்தால் நாம் நம்மை காக்கலாம் மக்களின் உணர்வை மழுங்கடிப்பது இன்றைய அரசியல்வாதிகளே இனியெனும் சிந்திப்போம் நாளைய சந்ததிகளை காப்போம்

இயற்கை காக்க இந்த ஒலியை கேட்டால் தங்களுக்கு விளங்கும் சீமை கருவேல மரங்களை வெட்டுவோம் மழை பெறுவோம் இயற்கையுடன் சேர்ந்து இன்பமாய் வாழ்வோம்.

 

தமிழ்நாடு சீமை கருவேலமர ஒழிப்பு இயக்கத்திற்க்கு அபுதாபியிலிருந்து எமது வாழ்த்துகள்.

புதுக்கோட்டை பதிவர் திருவிழா நடத்தும் மின் இலக்கிய போட்டிகள் 2015க்காக எழுதப்பட்டது (வகை 2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய கட்டுரைப் போட்டிக்கு...


பரிசு என அறிவித்து இருந்தார்கள் எனவே ‘’கட்டுரை’’ என்ற வகையில் நான் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையை என்னுடையது என்று உறுதி தருவதோடு போட்டிகள் முடியும் வரை வேறு தளங்களில் வெளியிட மாட்டேன் என்றும் உறுதி தருகிறேன்.

நான் போட்டிக்கு அனுப்பிய பிற படைப்புகளை காண கீழே சொடுக்குக...




2015 புதுக்கோட்டை பதிவர் விழாவுக்கு அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கும்.

தேவகோட்டையான்
கில்லர்ஜி किल्लरजि കില്ലർജി  కిల్లర్ జి  Killergeeكـــيللرجــــي
ஒளி கண்டு ஒலி கேட்பீர்.