மனிதனை. மனிதன் இரும்புக் கூண்டுகளில்.அடைத்துக் கொண்டு ஆயுதங்களால், இரும்புக் கம்பிகளால். இரும்புச் சேர்களால், தாக்கி இரத்தக் காயமாக்கி வீழ்த்துகின்றார்களே... மேலும் கால்மணி நேரமாக ஒருவன் மற்றொருவனுடன் மோதி ஒருவனை வீழ்த்தும்போது அந்த ஒரு மனிதனை திடீரென்று ஐந்து நபர்கள் ஓடிவந்து தாக்கி வீழ்த்துவதை வெற்றி என்று நடுவர் முடிவு செய்கின்றாரே.... இது முறையா ?
Killergee
பூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...?
நம்ம சரக்கு மூட்டைகள்
திங்கள், ஜனவரி 25, 2021
வியாழன், ஜனவரி 21, 2021
ஞாயிறு, ஜனவரி 17, 2021
வியாழன், ஜனவரி 14, 2021
சனி, ஜனவரி 09, 2021
ஆங்கில் பார்த்த, அங்கிள்
02. உன் காதலி பானம் அருந்தியதற்கு
பெட்டிக் கடைக்கு நீ பணம் கொடு.
03. அவளை மணம் செய்து கொள்ள,
உன் மனம் நினைப்பது புரிகிறது.
04. தனம் நிறைந்திருக்கும் உம்மிடம்
தானம் செய்யும் சிந்தையில்லை.
05. சரித்திரம் படைக்க வேண்டியவன்
ராம் தரித்திரம் பிடித்து இருக்கிறது.
06. பொன்னை வேண்டாம் என்றார்
பெண்ணை கட்டிய பெருமகனார்.
07. கோவில் நிர்வாகம் பார்த்தவரின்
சாவில் சந்தேகம் இருக்கிறதாம்.
08. புனைப் பெயரில் பிரபலமானார்
பூந்தமல்லி எழுத்தாளர் பூனை.
09. உயில் பத்திரம் எழுதியவருக்கு
வெள்ளிப் பாத்திரம் கிடைத்தது.
10. நித்திரை கொள்வதற்கு தினமும்
மாத்திரை போட்டுக் கொண்டான்.
11. தெருக் குழந்தைகளுக்கு பட்டு மாமி
இசை, பாட்டு சொல்லிக் கொடுத்தார்.
12. குடந்தை மருத்துவமனையில் பெண்
குழந்தை பிறந்துள்ளது மாலாவுக்கு.
13. காலை எழுந்ததும் ஆதி காலண்டரில்
தேதி கிழித்து குப்பையில் போட்டான்.
14. சிக்கல் சந்தைக் கூட்டத்தில் பெரும்
மக்கள் வெள்ளம் அலை மோதியது.
15. தாத்தா தஞ்சையில் வாங்கிப் போட்ட
புஞ்சையில் நெல் அறுவடை முடிந்தது.
16. கண்ணை கசக்கினாள் மொக்கச்சி,
வள்ளி மண்ணை அள்ளி தூற்றியதால்.
17. ராஜூவுக்கு மந்திரி பதவி கிடைத்ததால்
முந்திரி பாயாசம் வைத்தாள் மனைவி.
18. டேபிள் மேலே நின்று செங்கோடன்
தொலைக்காட்சிக்கு கேபிள் மாட்டினான்.
19. வீட்டுக்கு வந்த ஆசைத்தம்பி நகைகளை
எடுத்துக் கொண்டு கம்பி நீட்டினான்.
20. ரவியின் திருமணத்தில் செண்டைக்காரர்கள்
சம்பளக் குறைவால் சண்டை போட்டனர்.
21. உஷா திருமணத்துக்கு, அவசியம் வா
என்று அழைப்பிதழ் கொடுத்தாள் நிஷா.
22. தரகர் மெய்யப்பன் இது நல்ல சம்பந்தம்
என்று பெண் வீட்டில் பொய் சொன்னார்.
23. ரோமா யுத்தம் நடந்த அமங்கலபுரியில்
ஐயோ, அம்மா என்ற அலறல் சத்தம்.
24. வயலில் நெல்லுக்கு பாய்ச்சிய கேணித்
தண்ணீர் புல்லுக்கும் பாய்ந்தோடியது.
25. பங்களாவுக்கு வந்த, டைரக்டர் அங்கிள்
ஸூட்டிங் எடுக்க ஆங்கில் பார்த்தார்.
26. தார் சாலையில் வழுக்கிக் கொண்டு
போன கார் பல்டி அடித்து கிடந்தது.
27. மாஸ்க் இடாமல் வரிசையில் நின்றனர்
டாஸ்மாக் கடையில் குடி மகன்கள்.
28. சீரியல் பார்த்தே காலத்தை ஓட்டியதால்
சீரியஸ் ஆகி மருத்துவமனையில் உமா.
29. கண்ணன் ராதாவுக்கு கொடுத்த லட்டர்
அவளது அண்ணன் கைக்கு கிடைத்தது.
30. ஜெயில் காம்பவுண்ட் சுவற்றின் மேல்
மயில் நின்றதை படமெடுத்தார் வார்டன்.
31. டாஸ்மாக்கில் மது வாங்கிப் போனாள்
ஒரு மாது இது கலிகாலமடா தேவுடா.
32. அக்கா ஊருக்கு போய் வந்த சேகரன்
மக்காச் சோளம் பறித்து வந்தான்.
சீக்ரெட் ஆக வைத்திருந்தான் சித்தன்.
34. பஞ்சாயத்தில் சாட்டை அடி வாங்கியதில்
காத்தமுத்து சட்டை கிழிந்து போனது.
35. ஜாதகம் பார்த்த ஜோசியரை அடித்தான்
சொன்னது தனக்கு சாதகம் ஆகாததால்.
36. ஜன்னல் வழியே தெரிந்தது வீட்டிலிருந்த
ரமாவுக்கு மழையில் மின்னல் அடித்தது.
37. மலையில் இருந்த அம்மனை தரிசிக்க
போனவர்கள் மாலையில் திரும்பினர்.
38. தனது வயலுக்கு களை எடுக்க போன
கலையரசி வீட்டுக்கு திரும்பினாள்.
39. மழையில் நனைந்து கொண்டு வந்த,
40. கல்லில் அடிபட்டு கீழே விழுந்த ராமுக்கு
பல் விழுந்து மருத்துவமனை போனான்.
கடையில் விலைபேசி வாங்கினான்.
42. வாடகை தராத காளியை வீட்டுக்காரர்,
காலி செய்யச் சொல்லி கத்தினார்.
43. கோவிலில் கொள்ளை அடிக்கும்போது
வெள்ளைச்சாமி மாட்டிக் கொண்டான்.
44. போலீஸ் அடித்து சாகாத சகாதேவன் மனைவி
மகாதேவி அடித்து செத்துப் போனான்.
45. கோவை பேருந்து நிறுத்தத்தில் நின்ற,
பாவை கோவிந்தனிடம் லிப்ட் கேட்டாள்.
வேலைக்காரியிடம் பலன் அடைந்தான்.
47. துபாய் மாப்பிள்ளை துரை அரபி வீட்டில்
தூப்பாய் கழுவியதை படம் எடுத்தான்.
48. ஸார்ஜாவுக்கு போன ஷாஜஹான் தனது
ஸாச்ஜா சாஹிபு ரூமில் தங்கினான்.
49. மலேஷியாவில் வேலைக்கு வந்தவன்
மலேரியா வந்து மருத்துவம் பார்த்தான்.
50. குவைத்ஜி-யின் வலைத்தளம் சென்றால்
இறைவனின் திருத்தலம் தரிசித்து வரலாம்.
கில்லர்ஜி தேவகோட்டை