கண்ணே என்றான் கண்மணியை
கனியே என்றான் கனிமொழியை
பொன்னே என்றான் பொன்னியை
முத்தே என்றான் முத்தழகியை
அழகே என்றான் அகிலாவை
அமுதே என்றான் அமுதாவை
மானே என்றான் மாதவியை
தேனே என்றான் தேன்மொழியை
தேவதையே என்றான் தேவகியை
பூவிழியே என்றான் பூமிகாவை
சிலையே என்றான் சினேகாவை
நதியே என்றான் நதியாவை
சுகந்தமே என்றான் சுகந்தியை
சுகமே என்றான் சுமதியை
சொரமே என்றான் சொர்ணாவை
வேதமே என்றான் வேணியை
நாதமே என்றான் நாகினியை
இதமே என்றான் இதயாவை
தவமே என்றான் தமன்னாவை
மேகமே என்றான் மேகலாவை
வாசமே என்றான் வாசுகியை
நேசமே என்றான் நேந்திராவை
ஸ்வரமே என்றான் ஸ்வாதியை
சித்தமே என்றான் சித்ராவை
சங்கே என்றான் சங்கவியை
மலரே என்றான் மலர்விழியை
மதியே என்றான் மதியழகியை
முகிலே என்றான் முகிலாவை
சகியே என்றான் சகிலாவை
மைனாவே என்றான் மைதிலியை
சிந்தையே என்றான் சிந்துவை
விந்தையே என்றான் விந்தியாவை
குயிலே என்றான் குயிலியை
மயிலே என்றான் மயூரியை
தமிழே என்றான் தமிழரசியை
உயிரே என்றான் உத்திராவை
ஆனால் இந்த கவிஞனை இவர்கள் அனைவரும் போடா லூசு என்று சொன்னார்கள்...
கில்லர்ஜி துபாய்
பதிலளிநீக்குஅன்பு காட்டவும் அந்த அன்பை ஏற்றுக் கொள்பவரிடம் அன்பை காட்டி இருக்க வேண்டும்.
ஏகப்பட்ட பேரிடம் அன்பு என்றால் லூசு என்றுதான் சொல்வார்கள்.
கவிஞன் உண்மை அன்பு காட்டவில்லை போலூம்.
வைரமுத்துவைச் சொல்வது போலத் தெரிகிறதே
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. ஒருவரை மட்டும் புகழ்ந்து வர்ணித்தால் அவர் மதிமயங்கி அவரே சரண் என இருப்பர். பலரையும் அவ்வாறே புகழ்ந்தால், யாருக்குத்தான் பொறுக்கும். நல்லவேளை "போடா லூசோடு" நிறுத்தினார்கள். :)). நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபெயருக்கேற்ற பொருத்தமான வர்ணனைகள். பெயர்கள் தேர்வனைத்தும் சிறப்பு. அதை குறிப்பிட வந்து மறந்து விட்டேன். நன்றாக எழுதியுள்ளீர்கள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஒரு பெண்ணை அழைத்தால் சரி, இருக்கிற அத்தனை தமிழ்ப்பெயர்ப் பெண்களையும் கொஞ்சினால், கெஞ்சினால், அவர்கள் வேறென்ன சொல்வார்கள்!!!!
பதிலளிநீக்குஹாஹாஹா! நல்ல ட்விஸ்ட்!
பதிலளிநீக்குஹாஹாஹா....பின்ன போடா லூசுன்னு சொல்லாம என்ன சொல்லுவாங்களாம்!!! ரைமிங்க் நல்லாருக்கு கில்லர்ஜி!
பதிலளிநீக்குகீதா