தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, அக்டோபர் 27, 2024

நவீன வசதிகளுடன்...


ணக்கம் நண்பர்களே... நமது தமிழகத்தில் எல்லா ஊர் பேருந்து நிலையங்களிலும் பாருங்கள் நகராட்சியோ அல்லது மாநகராட்சியோ இப்படித்தான் கழிவறைகள் கட்டி வைத்து இருக்கின்றது. அதாவது நான்கு அடி உயரத்தில் மட்டுமே தடுப்புச்சுவர்கள். இதன் அருகிலும் போய் பேருந்தை நிறுத்தி விட்டு ஓட்டுனரும், நடத்துனரும்கூட போய் நிற்பார்கள். வரிசையாக தலைகள் மட்டும் தெரியும்.

செவ்வாய், அக்டோபர் 22, 2024

இருள் முகங்கள்

 

ணக்கம் நட்பூக்களே... மேலேயுள்ள புகைப்படச் செய்தியை பார்த்தீர்களா ? இது உ.பி.யில் மட்டுமல்ல, தமிழகத்தில் பல இடங்களிலும் இப்படி கணவன் – மனைவிகள் போலியாக வாழ்க்கின்றார்கள். இது விஞ்ஞான வளர்ச்சியால் நமக்கு கிடைத்த சாபக்கேடு. எனக்கு நீ துரோகம் செய்தால் உனக்கு நான் செய்வேன். குட்டு உடைபட்டு விட்டதா ? பரவாயில்லை அமைதியாக நீ உன் வழியில் போ, நான் என் வழியில் போகிறேன்.

வியாழன், அக்டோபர் 17, 2024

ஊட்டி, ஊதாரி ஊமைத்துரை


ஊமைத்துரை
இவன் பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாத அப்பாவியைப் போலிருப்பான். ஆனால் எமகாதகன் வீட்டில் கடைக்குட்டி ஊமைத்துரை என்று பெயர் வைத்ததனாலோ என்னவோ வாய் பேசாத ஊமையாகிப் போனான். அய்யா அய்யாத்துரை இரண்டு பெரிய தேயிலை தோட்டங்களை நடத்தி, அப்பா அப்பாத்துரையிடம் விட்டு சென்று விட்டார்.

ஞாயிறு, அக்டோபர் 13, 2024

ஜெய்ஹிந்த்புரம், ஜெயின் ஜெயந்தி

கோவைக் கனியே என்றேன்
தேவை மணியே என்றாள்
சேலத்து மாம்பழம் என்றேன்
வேண்டும் சம்பளம் என்றாள்

செவ்வாய், அக்டோபர் 08, 2024

வசம்புவாயனும், வடிச்சகஞ்சியும்

ணக்கம் வசம்புவாயண்ணே நல்லா இருக்கியளா ?
வாடாத்தம்பி வடிச்சகஞ்சி நல்லா இருக்கியாடா ? என்ன இந்தப்பக்கம் ?
 
சில சந்தேகம் வந்துச்சு அதான் கேட்டுப் போகலாம்ணு...
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்லுறேன்.

வியாழன், அக்டோபர் 03, 2024

எனது அமைதிப்பூங்கா

றைவா துரோகங்களை மறக்கும் மனம் கொடு
கூடவே துரோகிகளை மறக்கவும் குணம் கொடு
இனி எனக்கு நாளும் உறங்கும் நிலை கொடு
வாழும் வரையில் எனக்கு நிம்மதியை கொடு

சனி, செப்டம்பர் 28, 2024

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (8)

 
முன்குறிப்பு - உலக இணையத் திரையில் முதன்முதலாக புதாபி இணையத்திலிருந்து உங்கள் கில்லர்ஜியின் உருவாக்கத்தில் வெளியாகிறது...

செவ்வாய், செப்டம்பர் 24, 2024

வம்பு உருவாகுமே...

 

ணக்கம் நண்பர்களே... ‘’அன்பு நடமாடும் கலைக்கூடமே’’ என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல். எனக்கு மிகவும் பிடித்தமான பாடலாகும். இதன் சிறப்பு கவிஞர் இறுதியில் மே... மே... மே.. என்று முடித்து இருப்பார். எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்

வெள்ளி, செப்டம்பர் 20, 2024

நான் ரசித்தவை (3)

    ணக்கம் நண்பர்களே... முன்பு நான் ரசித்த திரைப்பட வசனங்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டேன், இப்பொழுது பாடல் வரிகளில் சில பகிர்ந்து கொள்கிறேன். தாங்களும் இரசிக்கலாம். பாடிய பாடகர்-பாடகிகளையும் குறிப்பிட்டுள்ளேன் கில்லர்ஜி

ஞாயிறு, செப்டம்பர் 15, 2024

கருங்குழி, கருவிழி கனிமொழி

ருங்குழி, அழகிய கிராமம் அங்கு செல்வந்தர்  கருங்குமலை தனது பணபலத்தால் எதிரிகளை படுகுழியில் தள்ளி விடுவார். இவருக்கு ஒரே செல்வமகள் இருந்தாள் நல்ல அழகி. பெயர் கனிமொழி, பார்க்கும் ஆடவர்களை கவரும் கருவிழியழகி அவ்வளவு வசிகரமானவள். அவளை நேர் கொண்ட பார்வையாக பார்க்க அஜீத்தால் மட்டுமே முடியும் ஆனால் அவராலும் முடியாது காரணம் ஷாலினி.

புதன், செப்டம்பர் 04, 2024

சனி, ஆகஸ்ட் 31, 2024

எனக்கு அகவை முந்நூறு


ண்பர்களே... மேலே மேற்படியார் சொல்லி இருப்பதை பார்த்தீர்களா ? இவர் நூற்றி ஐம்பது வருடம் வாழ்வாராம். இருக்கட்டும் நானும்கூட முந்நூறு வருடம் வாழப்போகிறேன் அதற்கான ஆய்வை முடித்து விட்டேன். அந்த ஆய்வு ரகசியம் எமது சீடர்களால் எப்படியோ கசிந்து இவரது கைக்கு போய் விட்டது போல... பரவாயில்லை எனது ஆய்வில் பாதிதான் கிடைத்து இருக்கிறது ஆகவே நூற்றி ஐம்பது வருடம். நான் முந்நூறு அல்லவா...

திங்கள், ஆகஸ்ட் 26, 2024

குட்டிச்சுவரு...

ண்பர்களே... ஜெயிலர் என்றொரு திரைப்படத்தில் வந்த பாடல் வரிகள் ஒன்று என்னை மெய் சிலிர்த்து கேட்டு இரசிக்க வைத்தது அதனைக் குறித்து எழுத வேண்டுமென்று வெகு நாட்களாக நினைத்திருந்தேன். பாடலின் தொடக்க வரிகள் என்னவென்பதை என்னால் இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை காரணம் பின்னணி இசையின் மெல்லிய நீரோட்டம் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது.

புதன், ஆகஸ்ட் 21, 2024

வள்ளியை கிள்ளியபோது...

 

01.  மளிகை கடை வேலை செய்து மாளிகை வீடு கட்டியவர்களும் உண்டு.
மாளிகையில் வாழ்ந்து கெட்டு மளிகை கடை வேலை செய்பவரும் உண்டு.

வெள்ளி, ஆகஸ்ட் 16, 2024

நினைவஞ்சலி

 

ணக்கம் நட்பூக்களே...இப்பொழுது எங்கெங்கு காணிணும் நினைவஞ்சலி சுவரொட்டிகள், நெகிலி பதாகைகள் என்று சுவர்களில் இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அதாவது இறந்ததற்கு சுவரொட்டி அடிக்கின்றார்களோ... இல்லையோ மறுவருடம் முதல் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மட்டுமல்ல, அப்பத்தாவின் பதினாறாம் ஆண்டு நினைவஞ்சலி என்று சுவரொட்டிகள் ஒட்டுகின்றார்கள்.

ஞாயிறு, ஆகஸ்ட் 11, 2024

பாஞ்சாலி


ண்பர்களே.. மேலே புகைப்படத்திலிருக்கும் குடும்பம் ஹரியானா மாநிலத்தில் நாகரீகம் வளராத மலைவாசி மக்களின் குடும்பங்களில் ஒன்று. முன்புறம் கையில் தான் பெற்ற குழந்தையுடன் நிற்பதுதான் குடும்பத்தலைவி பின்புறம் நிற்பவர்கள் யார் தெரியுமா ? அவர்கள் இந்தப் பெண்மணியின் கணவர்கள். ஆம் ஐந்து நபர்களும் கணவர்களே... வரிசைப்படி பிறந்தவர்கள்.

செவ்வாய், ஆகஸ்ட் 06, 2024

கிறுக்கியது ஏழு

 

வனுக்கு ஊரார் வைத்த
பெயர் கிறுக்கன் மாலை
நேரமாதலால் பறவைகள்
நேர்த்தியாக அரை வட்டமாக
கூடு திரும்பும் அவசரத்திலும்
இவனை கூச்சலிட்டு கேலி செய்து
போனது. கிறுக்கன் கேட்டான்
ஏ... பறவைகளே நீங்கள் எதற்கு
என்னை கேலி செய்கிறீர்கள்
நானும் உங்களைப் போல்தானே
ஆடையின்றி வாழ்கிறேன்...
* * * * * * Sunday * * * * * *

வியாழன், ஆகஸ்ட் 01, 2024

ஆத்தூர், ஆதார் ஆராயி

 

தார் அட்டையில் நமது புகைப்படத்தை நாமே அடையாளம் காண முடியாத வகையில் அச்சடிப்பது நமது நாட்டின் சிறப்பு. அதையும் நாம் ஏற்றுக் கொண்டோம். வேறு வழியில்லை என்பதால், பெட்ரோல் விலை, கேஸ் விலை ஏறுகிறது என்ன செய்தோம் ? ஒரு ஆணியும் புடுங்கவில்லை. காரணம் நமக்கு புடுங்கத் தெரியாது. ஆனால் வாங்கத் தெரியும்.

வெள்ளி, ஜூலை 26, 2024

இறுதி வரையில் உறுதி

01.  கருப்பு பணமாய் வந்தாலும்
இருப்பு கொள்ளாததேனோ
 
02.  கனவில் வந்து ஆடுபவளே
நனவில் நீ வராததேனோ

ஞாயிறு, ஜூலை 21, 2024

பொன்மொழியும், என் வழியும்

றுமை வந்தால் வாடாதே
வசதி வந்தால் ஆடாதே
 
நான் வசதியில் ஒருக்காலமும் ஆடியதில்லை ஆனால் வறுமையில் வாடி இருக்கிறேன் காரணம் நான் வசதியிலும் வாடிக் கொண்டுதான் வாழ்கிறேன் இது எனது சாபக்கேடு போலும்.
* * * * * * * * * * 01 * * * * * * * * * *

செவ்வாய், ஜூலை 16, 2024

எனது விழியில் பூத்தது (10)

  ணக்கம் நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த பத்தாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ, திருத்தங்களையோ (Edit)  செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம் நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். - கில்லர்ஜி

வியாழன், ஜூலை 11, 2024

வங்கமுத்தும், வழுக்குப்பாறையும்

ணக்கம் வங்கமுத்தண்ணே... நல்லா இருக்கீங்களா ?
வாடா வழுக்குப்பாறை நல்லா இருக்கேன்டா நீ எப்படி இருக்கே ?
 
நல்லாயிருக்கேன் சில சந்தேகம் வந்துச்சு கேட்கலாம்னு வந்தேன்ணே...
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்றேன்.

சனி, ஜூலை 06, 2024

பாதையோரக் கிளிகள்

குறுக்கு பாதையிலே சந்தைக்கு போறியடி
முறுக்கு வாங்கித் தாறேன் வேணுமாடி
காத்தாயி எனை ஒரு பார்வை பாரேன்டி
காத்தாகி பறக்குமே என் மனந்தான்டி

திங்கள், ஜூலை 01, 2024

அரசியல் கிலோ எவ்வளவு ?

ணக்கம் கீழேயுள்ள இரண்டாவது புகைப்படத்தை பார்த்தீர்களா ? இது அவசியமில்லாத வேலைதானே ? இந்த வகையான கூதரைகளால்தான் நாட்டில் மதப்பிரச்சனை வருகிறது. இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருக்கலாம். அவர்கள்தானே தங்களது பிழைப்புக்காக... மக்களின் மூளையை இப்படி செலுத்தி விட்டு மக்களிடையே பிரச்சனைகளை கிளப்பி பிறகு சமாதானம் செய்வதுபோல் பேசி ஆகமொத்தம் அடித்தட்டு மக்கள்தான் பலியாவான். எந்தவொரு அரசியல்வாதியும் சாகமாட்டான்.

வியாழன், ஜூன் 27, 2024

தமிழ் பழமையான மொழி

 

முதல்வருக்கான மரியாதை வேண்டாமா ?

உங்களை எல்லாம் குழியில்தான் வைக்கணும்

உயிரோட இப்படி செய்யலாமா ?

திங்கள், ஜூன் 17, 2024

ஈரோடு, ஈயக்கட்டி ஈஸ்வரன்

 

ஈரோடு, மாநகராட்சி அலுவலகம் அருகில்....
 
வணக்கம் ஈஸ்வரன்ணே நல்லா இருக்கீங்களா ?
வாடா தொன்னையப்பா நல்லா இருக்கேன் என்ன இந்தப்பக்கம் ?

வியாழன், ஜூன் 13, 2024

தறுதலை ராகம்

ணக்கம் நண்பர்களே... ‘’இது குழந்தை பாடும் தாலாட்டு’’ என்ற டி.ராஜேந்தரின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்

ஞாயிறு, ஜூன் 09, 2024

கிடைக்கும் அல்லது தெரியும்


   ணக்கம் நட்பூக்களே... நல்லவன் வாழ்வான் என்று நமக்கு சொல்லி தந்த முன்னோர்கள் கெட்டவன் சாவான் என்று சொல்லவில்லையே காரணம் என்ன ? முதற்காரணம் வாய்மொழி வாக்குகள் நல்லவைகளாக இருத்தல் அவசியம் அடுத்து நல்லவனாய் இருந்தால் வாழ்வான் என்ற விதையை நம்முள் விதைத்து விட்டனர். மேலும் நல்லவனோ, கெட்டவனோ மரணம் அனைவருக்கும் உறுதிதானே...

புதன், ஜூன் 05, 2024

தம்பட்டம்

ணக்கம் நட்பூக்களே... நமது அரசியல்வாதிகள் எவ்வளவோ திட்டங்கள் தீட்டினோம் அதை சாதித்தோம், இதை சாதித்தோம் என்று தம்பட்டம் அடிக்கின்றார்கள். இந்தியாவிலேயே முதல் மாநிலம் என்றும், உலகத்திலேயே இரண்டாவது நாடு என்றும் சொல்கின்றார்கள், அடிப்படையில் மக்களுக்கு வேண்டியது என்ன ?

சனி, ஜூன் 01, 2024

தெய்வத்தின்ற பூமியில்...

கேரளாவில் திருச்சூரின் விஷ்ணு மாயா கோயிலில் திரைப்படக் கூத்தாடி திருமதி குஷ்பு அவர்களுக்கு கும்பமரியாதை. அதாவது வருடத்திற்கு ஒருமுறை ஒரு பெண்மணியை தேர்வு செய்து இப்படி மரியைதை சய்வது இக்கோயிலில் தொன்று தொட்டு நிகழும் நிகழ்வாம். இதில் கடந்த 03.10.2023 தேதியில் நடந்து இருக்கின்றது.

செவ்வாய், மே 28, 2024

தொங்குமுத்தி

தொங்குமுத்தி அண்ணே வணக்கம்பார்த்து ரொம்ப நாளாச்சு நல்லா இருக்கீங்களாண்ணே ?
வாடாத்தம்பி கருங்காளி நல்லா இருக்கேன்டா... வீட்ல கொழுந்தியாள் எப்படி இருக்கு ? என்ன இந்தப்பக்கம் வந்துருக்கே... ஏதும் விஷேசமா ?

வியாழன், மே 23, 2024

ஓ... மனிதர்களே...

 

ஓ... மனிதர்களே...
உணவைக் குப்பையில் போடுபவர்களை கண்டு
ஏசாதீர்கள் அவர்கள் குப்பையில் போடுவது,
குப்பையில் உணவைத் தேடும் மனிதர்களுக்காக...
* * * * * * * * * * 01 * * * * * * * * * *

ஞாயிறு, மே 19, 2024

தொடரும் தெய்வங்கள்

 

ட்பூக்களே... மேலேயுள்ள புகைப்படத்தை பார்த்தீர்களா ? மூன்று மதங்கள் என்றும், மூன்று வழிபாடுகள் என்றும் நமது முன்னோர் வகுத்து வைத்த பாதையில் வந்த நமக்கு இப்பொழுது புதிதாக இதோ... இது எந்தக் கணக்கில் வருகிறது ? சாய்பாபா என்பவர் ஓர் நல்ல இதயம் படைத்த மாமனிதர் இதில் எள்ளளவும் ஐயமில்லை. அதற்காக இப்படி செய்வது முறையா ?

புதன், மே 15, 2024

ஃப்ரான்ஸ், ஃப்ரொபஸர் ஃப்ரான்ஸிஸ்

ணக்கம் நட்பூக்களே... எனக்கு வெகுகாலமாக ஓர் சந்தேகம் உண்டு அதை தங்களிடம் கேட்கும் எண்ணத்தோடு பதிவைத் துவங்குகிறேன்.

சனி, மே 11, 2024

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (7)

 

முன்குறிப்பு - உலக இணையத் திரையில் முதன்முதலாக அபுதாபி இணையத்திலிருந்து உங்கள் கில்லர்ஜியின் உருவாக்கத்தில் வெளியாகிறது...

செவ்வாய், மே 07, 2024

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா ?

 

எதிர்காலம்
ரயிலில் இருக்கை எண்ணைப்
பார்த்து அமர்ந்தேன் செல்லில்
ஒளிமயமான எதிர் காலம்
பாடல் ஒலித்ததால் போகும்
காரியம் ஜெயம் என்ற உணர்வு.