தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜூலை 05, 2015

பொக்கிஷம்.

உயிருள்ள ஜீவராசியான மனிதர்கள், பலபேர் என் மனதை காயப்படுத்தியது உண்டு இப்பொழுதும்கூட, மேல் காணும் இந்த உயிரற்ற பொருள் என்வாழ்வில் பலமுறை எனது கௌரவத்தை காப்பாற்றி இருக்கிறது, எனது கஷ்டங்களில் பங்கு எடுத்துள்ளது மற்றவர்களை பொருத்தவரை இதுஒரு கையில் கட்டும், சாதாரண கடிகாரம் என்னைப் பொருத்தவரை நான் மிகமிக நேசிக்கும் உயிரற்ற ஜீவன்.
ஒரு காலகட்டத்தில் இந்த ஜீவன் என்னைவிட, நைனா முஹம்மதுவிடமே அதிககாலம் இருந்தது, காரணம் அவர்தான் இதை வைத்துக்கொண்டு எனக்கு பணம் கொடுப்பார் இந்த ஜீவனைவிட அதிகமான பணத்தை நான் வட்டியாக கொடுத்து இருக்கிறேன், இவ்வளவு வட்டி கொடுப்பதற்கு விற்று விடலாமே எனநினைக்கலாம் விற்று விட்டால், மீண்டும் வைப்பதற்க்கு வேறு ஜீவனில்லை என்னிடம், வட்டி கொடுப்பவனின் மனநிலையை நான் முழுமையாக அறிந்தவன், அதனால்தான் நம்வாழ்வின் கடைசி காலம்வரை யாரிடமும் வட்டி வாங்ககூடாது என முடிவு செய்தேன், கஷ்டப்பட்டாவது மீட்டு விடுவேன் மீட்டும், மீண்டும்... மீண்டும்... அவரிடமே..... இப்பொழுது நிரந்தரமாக மீட்டு விட்டேன் இந்த ஜீவனுக்காக நான் நிறைய வைத்தியசெலவு செய்துள்ளேன் இப்பொழுது இந்த ஜீவன் என்னை விட்டு பிரிவதில்லை, என்வாழ்வில் நான் நேசிக்கும் உயர்ந்த விசய வரிசையில் இந்த ஜீவனும் உண்டாகும், கடைசிவரை ஒரு பொக்கிஷம் போல், இந்த பொக்கிஷத்திற்கு நான் இதுவரை சக்களத்தியை கொடுத்ததில்லை, கொடுக்கப் போவதுமில்லை, ஒரு நன்றிக்காக உயிரற்ற ஜீவனுக்கே.... நான் இத்தனை தூரம் நன்றிக்கடன் செலுத்தும்போது உயிருள்ள ஜீவராசிகளுக்கு நான் எவ்வளவு செலுத்த கொடுக்கவேண்டும், அதற்காகத்தான் தேடிக்கொண்டு இருக்கிறேன் இதுவரை கிடைக்கவில்லை அந்த மாதிரி ஜீவராசி இதற்க்கு இன்னுமொரு காரணமும் உண்டு இதை எனக்கு பரிசு தந்த அந்த ஜீவராசி இந்த பூவுலகில் இன்று இல்லை. 

29 கருத்துகள்:

  1. தம 1

    மணி....
    மணியான பொக்கிஷம் தான்
    அன்பால் கொடுத்ததை
    ஆசையாய் வைத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஜி
    அழியாத பொக்கிஷம் ஜி.. தங்களின் மனைவின் அன்பளிப்பு போல தோன்றுது..ஜி
    நன்றாக சொல்லியுள்ளீர்கள்.த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. நானும் கூட என் நண்பர் ஒருவர் பரிசளித்த கைக்கெடிகாரத்தை 25 வருடங்களுக்கும் மேலாகக் கட்டியிருந்தேன். இப்போது அது ஓடவில்லை என்றாலும் அவர் நினைவாக பத்திரமாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  4. காலம் காட்டும் கருவி மட்டுமல்ல
    காலம் காலமாய் கொடுத்தவரின்
    நினைவலைகளை வழிய வழிய தேக்கி வைத்திருக்கும்
    ஒர காலப் பெட்டகம்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  5. உங்கள் வரிகள் ஒவ்வொன்றும் அந்நாளைய நடுத்தர மக்கள் வாழ்க்கை முறையை அப்பட்டமாகச் சொல்லுகின்றன. உண்மையிலேயே பொக்கிஷம்தான் அய்யா!

    வசந்த கால கோலங்கள்
    வானில் விழுந்த கோடுகள்
    கலைந்திடும் கனவுகள்
    கண்ணீர் சிந்தும் நினைவுகள்

    - கண்ணதாசன் (படம்: தியாகம்)

    இன்று அந்த நிலைமையெல்லாம் மாறி வசதி வாய்ப்புகள் வந்தாலும், பழைய நிலைமையை எண்ணிப் பார்க்கும் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

    த.ம. 7

    பதிலளிநீக்கு
  6. நம்மிடமிருக்கும் உயிரற்ற பொருளெல்லாம் நம் மனசாட்சியின் பிம்பங்கள்.

    உங்கள் பொக்கிஷம் அது போன்றதே

    பதிலளிநீக்கு
  7. 1971-ல் என் நண்பர் ஒருவர் எனக்குக் கொடுத்த கைகடியாரம் இன்னும் என்னிடம் நல்ல நிலையில் இருக்கிறது/ அவ்வப்போது அதைக்கட்டுவேன்

    பதிலளிநீக்கு
  8. இத்தனை முறை சென்று மீண்டு வந்துள்ளது என்றால், அது பொக்கிஷம்தான் ..!
    த ம 8

    பதிலளிநீக்கு
  9. ம்..ம் நெகிழ்ச்சியாகவே உள்ளது கண்கள் கலங்கி விட்டன ஜி அது பத்திரமாக வைக்க வேண்டிய பொக்கிஷமே. நன்றி ! வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  10. அழியாத நிணைவு பொக்கிசம்........

    பதிலளிநீக்கு
  11. சொற்றொடர்களில் உணர்வுகளை வெளிக்கொணர்ந்து படிக்கும் வாசகரை உங்களை நோக்கி ஈர்த்துவிடும் பாணியை இப்பதிவிலும் காண முடிகிறது. மனம் சற்றே கனத்தது. தாய்நாட்டு மண்ணில் நண்பர்களையும், உறவினர்களையும் பார்க்கும் நேரத்திலும், பதிவையும் விடாமல் இடுவதை நினைத்து வியக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. uier ilathathai uier ualavar koduthathal ipothu athu uirudan irukerathu ungal manathil. vaalthukal.

    பதிலளிநீக்கு
  13. கைகடிகாரம் அருமையான பொக்கிஷம். உங்கள் பதிவை படிக்கும் போது மனம் கலங்கியது உண்மை.

    பதிலளிநீக்கு
  14. நீங்கள் உங்கள் ‘பொக்கிஷத்தை’ ஏன் இன்னும் வைத்திருக்கிறீர்கள் என்ற காரணத்தை அறிந்தபோது மனம் நெகிழ்ந்தது. உங்கள் துணைவியார் கொடுத்த பொக்கிஷத்தை மாற்றாமல் வைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. காலத்தின் கணக்குப் பிள்ளை !
    ஞாலத்தில் இதை உணர்ந்தார் இல்லை !

    பதிலளிநீக்கு
  16. காலம் பொன் போன்றது என்பார்கள்..
    காலங்காட்டும் கருவியும் பொன்னாகி விட்டது..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  17. தங்களின் நன்றி உணர்வுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு! ஜி

    பதிலளிநீக்கு
  18. மனைவி உயிருடன் இருக்கும் போதே சக்களத்திகள் உருவாகும் இன்றைய உலகத்தில் ,நீங்கள் வாட்சுக்கும் கூட வேண்டாம் சொல்வது ...'இல்லா 'ளின் மீது நீங்கள் வைத்திருக்கும் வைத்திருக்கும் அன்பை உணர்த்துகிறது !

    பதிலளிநீக்கு
  19. பொக்கிஷம்...
    அண்ணி கொடுத்தது அன்பாய்க் கொடுத்தது பொக்கிஷமே...
    பத்திரம் அண்ணா....

    பதிலளிநீக்கு
  20. இதே போல் தான் எங்களிடம் இருந்த ஒரே தங்க செயின் தான் 1986 லே
    எனது மகன் எஞ்சினீரிங் கல்லூரி பிலானியில் படிக்க உதவியது.

    இந்தக் காலத்திலோ இது போல இருபது செயின் இருந்தாலும்
    எல். கே.ஜி. கூட சேர்க்க இயலாது.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  21. நிச்சயம் இது பொக்கிஷம் தான்.

    பதிலளிநீக்கு
  22. பாதுகாக்கப்படவேண்டிய கால பொக்கிஷம்.

    பதிலளிநீக்கு

  23. நேரம் காட்டியும் நினைவுப் பரிசும்
    நீங்கா இடம் பிடித்திருக்கும்
    பொக்கிஷம் - தங்கள்
    பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  24. அன்புப்பரிசு என்றுமே பொக்கிஷம்தான்!

    பதிலளிநீக்கு
  25. மணியான பொக்கிஷம்! உண்மைதான்!
    அருமையான பதிவு நண்பரே!

    பதிலளிநீக்கு
  26. நல்ல பொக்கிஷம்தான். சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் சகோதரரே .

    உயிரற்ற பொருளானாலும், அதை மதித்து, அதற்கும் மேலாக அதை அன்போடு நமக்காக அதை அளித்தவரின் அன்பையும் மதித்து பத்திரமாக பொக்கிஷமாக பாதுகாத்து வரும் தங்கள் செய்கையை பாராட்டுகிறேன். நினைவுகள் நம்மோடு என்றும் நிரந்தரமானவைதான்,.சிலசமயம் அவை காலமெனும் கடினத்தாலும் அழிக்க முடியாததும் உண்மைதான், என்பதை உணர்த்தும் நல்லபதிவு.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு