தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, பிப்ரவரி 26, 2016

நான்தான் கடவுள்

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்
கடவுளும், மனிதனும்.

நான் கடவுள் இந்த உலகத்தை நான்தான் படைத்தேன் உனக்கு என்ன வேண்டும் ?
உனக்கு என்ன வேண்டும் ?
(தனக்குள் என்ன இவன்... தமிழ் தெரியாதோ ? சரி இங்கிலீஷ்ல கேட்போம்)

I am “God” I created this world what you want ?
What you want ?
(தனக்குள் கொல்ட்டியா இருப்பானோ ? தெலுங்குல கேட்போம்)

నేను దేవుడు లోకము చేసినాను నీకు ఏమి కావాలి ?

நேனு தேவுடு நீ ஈ லோகம் சேசினானு நீக்கு ஏமி காவாலி ?
నీకు ఏమి కావాలి ?
நீக்கு ஏமி காவாலி ?
(தனக்குள் கஞ்சியா இருப்பானோ ? மலையாளத்தில கேட்போம்)

ഞാൻ ദൈവമാന്നു ഈ ലോകത്തേ ഞാൻ ഉണ്ഡാക്കി നിനക്കു എന്താനു വേണ്ഡതു ?
ஞான் தைய்வமானு ஈ லோகத்தே ஞான் உண்டாக்கி நினக்கு எந்தானு ? வேண்டது
നിനക്കു എന്താനു വേണ്ഡതു ?
நினக்கு எந்தானு ? வேண்டது
(தனக்குள் ஆஹா வேற மாதிரியிலே போகுது... எதுக்கும் கன்னடத்துல கேட்போம்)

நேன்னு தெய்வா ஈ உலகனா நாதெ உண்டாக்கிதே நிங்கே யாத்துரு பேக்கு ?
நிங்கே யாத்துரு பேக்கு ?
(தனக்குள் ஒரு வேளை வடக்கே உள்ளவனோ ? ஹிந்தியிலே கேட்போம்)

मे भगवान हुं यि दुनिया मे बनाया मागो, तुमको क्या चाहिय ?
மே பஹ்வான் ஹூம் ஏ துனியா மே பனாயா மாஹோ தும்க்கோ க்யா ஸாகியே ?
तुमको क्या चाहिय ?
தும்க்கோ க்யா ஸாகியே ?
(தனக்குள் தாளன் கொம்பாவுல இருக்கு புலியா இருக்குமோ ? சிங்களத்துல கேட்போம்)

மம தேவிய மே லோகே அதுவே வாடே மொனவாத வோனே ?
வாடே மொனவாத வோனே ?
(தனக்குள் வடிவேலு சினிமா பார்த்திருப்பானோ ஏரியாவே வேற இருக்குமோ ? அப்ப பிலிப்பைன்ஸ் தகாலன் மொழியில் கேட்போம்)

Ako ang panginoon  Ginawa ang mundo  ano ang Gusto mo ?
அஹோ ஆங் பாங்கிநூன் கினவா ஆங் முண்டோ அனோ ஆங் குஸ்தோ மோ ?
Ano ang Gusto mo ?
அனோ ஆங் குஸ்தோ மோ ?
(தனக்குள் என்ன இது நமக்கே ஒன்னும் புடிபடலே ? சோனத்தாளனா இருக்குமோ ? அரபியிலே கேட்போமா ? வேண்டாம் இவன் பேச்சைப் பார்த்தால் தேவகோட்டைக்காரன் மாதிரி இருக்கு தமிழ்ல பேசி கொஞ்சம் விளையாண்டுதான் பார்ப்போமே)

ஏம்பா நீ எந்த ஊரு ?
யாதும் கோட்டை யாவரும் தேவா.
(தனக்குள்.... ஆஹா அவன்தானா இவன் ? )
ஏம்பா கேக்குறதுக்கெல்லாம் குண்டக்க மண்டக்க பதில் சொல்லுறியே நீ யாரு ?
பார்த்தீபம் தெரியவில்லை உனக்கு நான்தான் கடவுள்.
அய்யோ சாமி ஆள விட்றா.....

கடவுள் ஓடுகிறார்.... ஓடுகிறார்.... ஓடியே விட்டார்.
நண்பா நண்பி இந்த விசயத்தை அரபியில் எனக்கு சொல்லவும் தெரியும் எழுதவும் தெரியும் இருப்பினும் சொல்லவில்லை ஏனெனில் எனக்கு தமிழனைப் பற்றியும் தெரியும் ஆம் இந்த விசயத்தை அரபியில் சொல்லும்போது நான் ஒரு முரண்பட்ட விசயத்தை எத்தி வைத்ததைப் போல மதப் பிரச்சினையை கிளப்பி விடக்கூடும்.

Anyway...

அந்த விசயத்திற்க்கு சொல்லி விட்டேன்
مــــع الـسلامــــــة
 (மாசலாமாஹ் MEANING of GOOD BYE)

என்னால் ஒரு மதப்பிரச்சனைக்கு உதவ முடியுமானால் அதைவிட சந்தோஷம் இந்த உலகில் வேறென்ன இருக்க முடியும் ? அப்படிப்பட்ட நான் ஒரு மதப்பிரச்சனை உருவாக காரணமாய் இருக்க விரும்பவில்லை.

தூண்டி விட்ட முனைவர் அவர்களுக்கு நன்றி. 

சாம்பசிவம்-
சரி இந்த மதப் பிரச்சனையை தீர்க்கவே முடியாதா ?
Killergee-
முடியும்.
சாம்பசிவம்-
முடியுமா எப்படி ?
Killergee-
அது விஞ்ஞானிகளால் மட்டுமே முடியும்.
சாம்பசிவம்-
விஞ்ஞானிகளால்..... எப்படி ?
Killergee-
நிச்சயமாக முடியும். பிற்காலத்தில் நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கும் வேறு வகையில் பயன் பெறக்கூடும்.
சாம்பசிவம்-
எப்படி ?
Killergee-
Wait & See…

குறிப்பு – வில்லங்கத்தார்களுக்கு மலையாளத்தில் சிறிய பிழைகள் உண்டு    காரணம் எனது பான்ட் கார்த்திகா.

74 கருத்துகள்:

  1. பழமொழி பேசி கடவுளை விரட்டிட்டீங்க...

    அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னே தேவகோட்டைக்காரன் கிட்ட பருப்பு வேகுமா ?

      நீக்கு
  2. பகவான் போனால் போகட்டும் ,இதோ ,பகவான்ஜி வந்து விட்டேன் ,உமக்குப் பிடித்த த ம வோட்டையும் முதலில் போட்டு அருள்பாலித்து விட்டேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி பகவான்ஜி அருள் எமக்கு நிரந்தம்தானே....

      நீக்கு
  3. பதில்கள்
    1. வாங்க சகோ தாங்களும் 4 மொழிகளாவது அறிந்திருக்க சாத்தியமுண்டே....

      நீக்கு
    2. நீங்கள் எழுதியிருப்பது கன்னடா, இந்தி, மலையாளத்தில் புரிந்தது சகோ.. என் கருத்து மொழி பற்றியதல்ல, கடவுளின் ஓட்டத்தைப் பற்றியது..பாவம் அவர இப்படி ஓட விட்டுட்டீங்களே :)

      நீக்கு
    3. நான் எதிர் பார்க்கவே இல்லை சகோ பேசிக்கிட்டு இருக்கும்போதே மனுசன... சாரி கடவுள் விழுந்தடிச்சு ஓடுறாரு...

      நீக்கு
    4. ஹாஹா

      உங்கள் மொழியறிவை வியக்கிறேன் சகோ..வாழ்த்துகள்

      நீக்கு
  4. ஆஹா அருமை ஐயா.பல மொழியில் பேசினாலும் நம் தமிழ் மொழி போல வேறு எந்த மொழி அழகு..!!

    கடவுளே மிரண்டு போயிட்டாரு சூப்பர் ஜி சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தமிழ் மொழியால்தானே பதிவே நீள்கிறது மற்றவை நமக்கு ஊறுகாய் போன்றதே... தமிழ் நமது உணவு.

      நீக்கு
  5. எத்தனை பாஷை தெரிந்து வைத்திருக்கிறீர்கள் கில்லர்ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே..
      பேசுவதில் நம் இனிய தமிழைத் தவிர்த்து...
      முதலிடம் மலையாளம், அரபிக், பிறகே ஹிந்தி மற்றவை கொஞ்சம் கொஞ்சம் அதாவது தத்தக்கா புத்தக்காதான் ஆங்கிலம் எனக்கு படிக்க, பேச வராது காரணம் கண்டாலே எனக்கு முதுகுவலி வரும் முக்கிய காரணம் நான் படிக்காதவன் இந்த விடயம் ஏற்கனவே பதிவின் மூலம் அனைவரும் அறிந்ததே..
      இருப்பினும் சமாளித்து விடுவேன் ஜெர்மனி ஏர்போட்டிலேயே சமாளித்து விட்டேனே...

      ஒரு காலத்தில் பிலிப்பைன்ஸ் மொழி தகாலன் சரளமாக பேசினேன் மேலும் மொழி பயில்வதை ஒரு வேலையாகவே வைத்திருந்தேன் அதாவது இப்பொழுது வலைப்பூ மாதிரி சில வருடங்களாக எனக்கு மறதிகள் கூடிக்கொண்டே வருகிறது.

      காரணம் எனது சுற்றத்தாரும், குடும்பமும் எனக்கு கொடுக்கும் மன உலைச்சல் இதன் காரணமாகவே பல நேரங்களில் சோகமான பதிவுகள் பிறக்கின்றது... மேற்கண்ட மொழிகள் அனைத்தும் எனது கணனியில் நானே டைப்பியதே... இது அந்தந்த தாய்மொழி நண்பர்களிடம் சந்தேகம் கேட்டு 100 சதவீதம் சரியாக இருந்தாலே கணினியில் ஏற்றுவேன்.

      மேலும் நெடுநாள் கனவு சீனமொழி பயில வேண்டும் என்பது அதற்காக மனதை பக்குவப்படுத்துகிறேன்.
      போதும் நண்பரே மேலும் இதனைக்குறித்து பதிவால் பேசுவோமே....

      நீக்கு
  6. பலமொழியில் கலக்கல் ஜீ ஆனாலும் இங்கே கொஞ்சம் கவனம் தேவை[[[மம தெய்யோ மேலோக்கே அதுவே மம உம்பட்ட மொனவத ஓனே! தவறு மொழி உச்சரிப்பில் என நினைக்கின்றேன் சிங்களத்தில் வாக்கிய அமைப்பு மாறுபடும் பேச்சு வழக்கு போல அல்ல! பிழை எனில் மன்னிக்கவும் ஜீ எனக்கும் அதிகம் மொழி தெரியாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எனக்கு சிங்களா முழுமையாக தெரியாது இருப்பினும் 1997 முதல் 2003 வரை ஓரளவு சரளமாக பேசினேன் இப்பொழுது மங்கி கொ(ன்று)ண்டு வருகிறது
      தாங்கள் மன்னிப்பு கேட்பது தவறானதே காரணம் நிச்சயம் தாங்கள் அறிந்தவரே... வருகைக்கு நன்றி நண்பரே.

      நீக்கு
  7. ஆகா
    கடவுளையே தலைதெறிக்க ஓட வைத்துவிட்டீர்களே
    தம =1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அவராகத்தானே ஓடினார் நானா பொறுப்பு.

      நீக்கு
  8. நல்லவேளை.. ஆரம்பத்திலேயே கடவுள் தமிழில் கேட்கவில்லை..

    ஆனாலும் கடவுள் வந்தது - தங்களுடன் விளையாடவே!..

    அதுசரி - போகும்போது ஞானப்பழம் ஏதும் கொடுக்கலையா!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி பழம் ஏதும் தரவில்லையே தந்திருந்தான் கண்டிப்பாக பகுதியை குவைத்துக்கு பார்சல் அனுப்பி இருப்பேனே...

      நீக்கு
  9. உங்களுக்கு ஒரு சமயம் கடவுள் தேவைப்படும் போது கூப்பிட்டால் வருவாரா. இப்படி விரட்டி விட்டீர்களே.

    ஜெயகுமார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே லஞ்சமாக கூட ரெண்டு தேங்காய் உடைத்தால் சரியாகி விடும் வந்து விடுவார் இன்றைய சமூகத்தில் லஞ்சம் உருவானதே தேங்காயில் இருந்துதானே...

      நீக்கு
  10. உருதுவையும் வங்காளத்தையும் ஏன் விட்டு வைத்தீர்கள். அரபியை விட்டு வைத்தது போன்றா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே உருது 75 சதவீதம் அரபி போன்றதே வங்க மொழி எனக்கு தெரியாது நண்பரே அவ்வப்போதாவது வருகை தருவதற்கு நன்றி

      நீக்கு
  11. கடவுளைவிட அதிக மொழிகள் உங்களுக்கு தெரிஞ்சிருக்கே ஜி!
    அருமை!
    த ம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களைப் போன்றவர்கள் என் மீது பொறாமைப்படுவதால்தான் கண்ணேறு ஆகி விரலில் நகச்சுத்தி வருகின்றது.

      நீக்கு
  12. கடவுளை விரட்டி விட்டீரே நண்பரே....
    கடவுள் மேல அவ்ளோ கடுப்பா....????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நான் ஆரம்பத்தில் நம்மை லந்து பண்ணுறாரோன்னு தவறாக நினைத்து விட்டேன் நண்பா.

      நீக்கு
  13. சியா சியா ....
    நன்றி சீன மொழியில் ...எப்பூடி ?

    பதிலளிநீக்கு
  14. கடவுள் கிட்டயே எதிர் கேள்வியா..அடடா அவர் தெரியாம வந்துட்டார் போல....ஹிஹிஹி....
    6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா சகோ நீங்களே சொல்லுங்க.... நம்ம ஊருக்காரங்கள்ட்டயே வந்து பில்டப் கொடுத்தா விட்ருவோமா நம்ம...

      நீக்கு
  15. பல மொழிகள் கற்றுக் கொண்டோம் நன்றி

    பதிலளிநீக்கு
  16. ஒரே தம்பட்ட சப்தம் வந்து பார்த்தால் நம் கில்லர்ஜியின் பதிவு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தம்பட்டம சப்தமா ? எங்கே.... ?

      நீக்கு
  17. முதல் என் பாராட்டுக்கள் அண்ணா ஜி. எத்தனை திறமை உங்களுக்கு.பல மொழிகள் தெரிந்திருக்கு.கடவுளையும் விட்டுவைக்காமல் எல்லாமொழியிலும் கேள்விக்கணை தொடுத்து ஓடவிட்ட உங்களை என்ன சொல்வது. மிடில. ஒருத்தரும் மிஞ்சமில்லை. இனி அடுத்து யார் சீனமொழியால் அவதிப்படப்போயினமோ... கில்லர் ஜியே அறியார் பராபரமே..
    தேவகோட்டைகாரர்கள் கிட்ட கொஞ்சம் கவனமா இருக்கோனும்...ஆவ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நீங்களாவது தேவகோட்டைக்காரர்களைப்பற்றி புரிந்து கொண்டீர்களே... மிக்க நன்றி

      நீக்கு
  18. உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும் சகோ ஒரே கலக்கல் தான்.

    பதிலளிநீக்கு
  19. இறைவனிடம் பேச உங்களால் தான் முடியும் என நிரூபித்துவிட்டீர்கள் பன் மொழிப்புலவரே! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  20. ஆ.... ”பலமொழிவல்லவர் கில்லர்ஜி”.....

    பதிலளிநீக்கு
  21. வணக்கம்
    ஜி
    மொழிக்கலப்பு கண்டு கடவுள் ஓடி விடுவார் போல. அற்புதமாக உரையாடலை அசத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஜி. த.ம13
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  22. எல்லாம் தெரிந்தவர் எனக் கூறப்படும் கடவுளுக்கு உம்மைப் பற்றித் தெரியவில்லை பாரும்! ஹா... ஹா...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டார்.

      நீக்கு
  23. Jeong-Mal-Joh-ta ஹிஹிஹி நாங்களும் இப்படி எல்லாம் சொல்லுவோம்ல....வாசிக்கும் போது பார்த்திபன் நினைவுக்கு வந்தார்...கடைசியில் நீங்களே அதைச் சொல்லிவிட்டீர்கள்....வில்லங்கத்தார் என்று சொன்னதற்கு
    gamsahamnida / gomapseumnida

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வில்லங்கமாக முடிவில் சொல்லியதை தேடுகின்றேன்.

      நீக்கு
  24. நண்பரே! பதிவில் 'தமிழ்மணம்' வாக்குப்பட்டையைக் காணோம்! கடவுள் போகும்பொழுது உம்மை சபித்துவிட்டுப் போய்விட்டாரா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாபம் என்னை ஒன்றும் செய்யாது நண்பரே இதோ கால் செய்து கொண்டு வந்து வைக்கச் சொல்கிறேன்.

      நீக்கு
  25. Aathadii...ivlo mozhi theriyuma...nanum escape.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி கண்ணேறு படுவதால்தான் எனக்கு ஏற்கனவே விரலில் நகச்சுத்தி வந்துச்சு.

      நீக்கு
  26. அன்புள்ள ஜி,

    ‘நான் கடவுள்’ எத்தனை மொழிகளை அறிவார்...?

    எந்த மொழி என்றாலும் பிரச்சனையில்லை...!

    நமக்குத் தெரிந்ததெல்லாம் ஒரே மொழி...!

    பரவாயில்லை... கடவுள் இவ்வளவு இறங்கி வந்துவிட்டாரே...!

    நன்றி.

    த.ம.15

    பதிலளிநீக்கு
  27. இத்தனை மொழிகள் எழுதவும், வாசிக்கவும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதை அறிந்து பிரமித்துப் போனேன் ஜி.அங்கின இருந்தப்ப இந்த மொழிகளை ஓட்டையும், ஒடசலுமா பேசிக்கிட்டு இருந்தேன். இப்ப அதுவும் மறந்து போச்சு. மொழிகளை வைத்தே கடவுளைக் கதற வைத்து விட்டீர்கள்.கேட்டது குத்தமா? எனக்கிட்டயா கேள்வி கேட்கிறேன்னு என்னையவும் கதறவிட்டுறாதீங்க.....

    பதிலளிநீக்கு
  28. விஞ்ஞானிகளால் முடியாது ஐயா!
    Wait N See; Waste ஐயா!
    ஆனால், இப்பவும்
    மெஞ்ஞானிகளால் முடியும் ஐயா!
    எப்படி என்கிறீரா? - எனது பதிவை
    படித்தால் புரியும் ஐயா!
    ஆண்டவனுக்கு (கடவுளுக்கு) என்ன வேலை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்தேன் நண்பரே தங்களது கவிதை மழையில் நணைந்திட...

      நீக்கு
  29. பெயரில்லா2/28/2016 3:43 PM

    அன்பரே கடவுள் மேல
    இவ்வளவு கோபமா....
    இத்தனை மொழிகளில்
    பந்தாடி இருக்கிறீர்.....!

    பதிலளிநீக்கு
  30. பன்மொழியறிஞரே, உங்களின் இப்பதிவுக்குத் தூண்டுதல் என் எழுத்து என்பதையறிந்து மகிழ்ச்சி. உங்களது அறிவைக் கண்டு மெச்சுகின்றோம். பன்மொழியறிந்த நண்பர் ஒருவர் எங்களோடு இருக்கிறார் என்பதை உணரும்போது எங்களுக்குப் பெருமையே. தங்களது எழுத்துப்பணி தொடரட்டும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  31. எங்கூரு மொழில ஏன் கேள்வி கேட்கவே இல்லையாம்? கடவுளுக்கும் அது தெரியாதோ?

    பதிலளிநீக்கு
  32. த.ம ஒட்டுப்போட்டேன் சுத்திக்கொண்டே இருக்கின்றது,சுத்தி முடிந்ததும் வந்து சேரும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்க ஊமை பாஷையே பேசுவோம் உங்கூரு மொழியா(?)தெரியாது.

      நீக்கு
  33. மகிழ்ச்சி சகோ, இன்னும் பல மொழிகள் கற்க வாழ்த்துக்கள். பல மொழிகள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்,,,

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி சகோ.

      நீக்கு
  34. பழமொழி புலமை! அசத்தல் பதிவு. இறைவனும் அசந்து ஒன்றும் சொல்ல முடியாமல் போய் விட்டார் போலும். பன்முக திறமையாளர் நீங்கள்.

    பதிலளிநீக்கு