தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, அக்டோபர் 30, 2015

எனது கொள்கை


என்னிடம் சிறு வயது தொடங்கி ஒரு பழக்கம் உண்டு ஏதாவது காரணத்தால் எனக்கு எதிரிகள் உருவாகி விட்டால் அவரை எப்படியாவது நமது மரண காலத்துக்குள் நண்பராக்கி விடவேண்டும் என்பது காரணம் நாளைய எனது மரணம் எந்தவொரு மனிதருக்கும் சந்தோஷத்தை கொடுத்து விடக்ககூடாது என்பது எனது கொள்கை நண்பர்களை அதுவும் நான் எதுவுமே செய்திடாமல் எனக்கு மரியாதை செய்து சந்தோஷப்படுத்தியவர்களுக்கு துரோகம் செய்வேனா ? எனக்கு துரோகம் செய்தவர்களை நான் உடன் மறந்து விடுவேன் காரணம் அதனால் பழிக்குப்பழி வாங்கும் எண்ணங்களை உருவாக்கும் முடிந்த அளவு நன்மையை கருதியே ஏதாவது செய்ய நினைப்பேன் அது சிலநேரங்களில் புரிதலின் காரணங்கள் மாறுபட்டு என்னை கெட்டவனாக்கி விடுகிறது பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்பார்கள் அது எனது தற்போதைய வாழ்க்கையில் நிகழ்ந்து கொண்டு வருகிறது கவலைகளும், வேதனைகளும் எனக்கு புதிய விடயங்கள் அல்ல ! அவைகளை கரும்புச்சக்கைகளைப் போல கசக்கி வாழ்ந்து வருபவன் நான் ஆனால் வீண் பழிகள்தான் எனது மனதை வாட்டி வதைத்து விடுகிறது.

யாரிடமும் பேசும் பொழுதும் சரி, எழுதும் பொழுதும் சரி இவை சரியானவைகள்தானா ? என்பதை பலமுறை யோசித்தே வார்த்தைகளை வெளியேற்றுவேன் குடும்பத்திலும் சரி, வெளியிடங்களிலும் சரி நான் நடுநிலையோடு பேசுவதால் கெட்டவன் என்ற பெயரே எனக்கு கிடைத்து இருக்கின்றது ஒருவேளை பெயர் ராசிதான் காரணமோ... என்னவோ... நான் தவறே செய்யாதவன் என்று ஆணித்தரமாக சொல்லி விடமுடியாது அறியாது செய்த தவறுக்காக மனதால் வருந்தி வெட்கப்படுபவன் நான்.

//ஒரு மனிதன் தவறுகளை குறைக்க வெட்கப்பட்டால் போதுமானது//

இது ஒரு வேதத்தில் சொல்லப்பட்ட வார்த்தை இதை எனக்கு விபரம் தெரிந்த வயதில் தேவகோட்டை வீதிகளில் யாரோ, எவரோ சுவற்றில் எழுதி இருந்ததை படித்திருக்கின்றேன் அன்று முதல் நானும் வெட்கப்பட ஆரம்பித்தேன் அதன் காரணமாக எனது தவறுகள் குறைந்தை வருவதை கவனித்தேன் அதையே எனது கொள்கையாகவும் ஆக்கி கொண்டவன் காரணம் நான் சொன்னது யார் ? என்பதை பார்ப்பதில்லை சொன்னது என்ன ? என்பதை பார்ப்பவன் எனக்குப் பிடித்த, பிடிக்காத பெரியாரின் கருத்துகளும் உண்டு, கிருபானந்த வாரியாரின் கருத்துகளும் உண்டு கூடுதலாக பெரியாரின் கருத்துகள் பிடிக்கும் இதனால் நான் கெட்டவனாகி விடுகிறேன் .

எனது மனதுக்கு தவறு என்று தெரிந்து விட்டால் என்னால் பாதிக்கப்பட்ட இதயம் என்னைவிட அகவையில் உயர்வோ தாழ்வோ துளியும் தாமதிக்காமல் மன்னிப்பு கோருவதில் தயங்குவதில்லை இதில் நான் வறட்டுக் கௌரவம் பார்ப்பதில்லை அதேநேரம் தவறில்லை என்றால் என்னிடமிருந்து யாருமே மன்னிப்பை பெற முடியாது எனது தலையில் அகந்தையும் கிடையாது சேரவிடுவதும் இல்லை சேர்ந்தாலும் தலையில் தட்டி இறக்கி விடுவேன் நான் தனிமை விரும்பி தனிமையில் சிந்திக்கும் பொழுது மனம் விசாலமாகும் அதற்காக நண்பர்களை ஒதுக்குபவன் என்று அர்த்தமல்ல ! இந்தியாவிலும் சரி, U.A.Eயிலும் சரி அதிக நண்பர்களை, அதிக நாட்டு நண்பர்களை பெற்றவன் நான் எனது ஆசையே நாளைய எனது மரண ஊர்வலத்துக்கு நிறைய பேர்கள் வரவேண்டும் என்பதே ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை அவனது மரணநாள் அன்று கணித்து விடலாம் என்பது எனது தாழ்மையான கருத்து அரசியல்வாதிகளின் மரணக்கூட்டத்தை இதில் சேர்க்க வேண்டாம் அதன் வகை வேறு நான் சொல்வது என்னைப்போன்ற சாதாரணக்காரர்களின் மரணம்.

வாழ்க ! நலம்.

நல்லதை நினை நன்மை நடக்கும்
தொண்டு செய் மேலான நிலை அடைவாய்.
- குடமுருட்டி சிவமுத்தர் ஸாது சுவாமிகள்

உன்னுடைய மரணம் எந்த ஒரு மனிதனுக்கும் சந்தோஷத்தை
கொடுக்ககூடாது அந்த முறையில் வாழ முயற்சி
- கில்லர்ஜி (எனது செல்வங்களுக்கு நான் சொல்வது)

குறிப்பு - பதிவுகள் எழுத எனக்கு இந்த குருட்டு சமூகத்தில் ஆயிரமாயிரம் விடயங்கள் கொட்டிக் கிடப்பது எனது கண்களுக்கு தென்படுகிறது அதை தொடர்ந்து எழுதுவதற்க்கு தமிழ் மணம் ஓட்டுப்பெட்டி எனக்கு இடையூராக இருப்பது போல் தோன்றுகிறது இனிய நண்பரொருவர் இல்லை என்கிறார் போகட்டும் காலம் பார்க்கலாம்.

என்றென்றும் இதே நட்புடனே....
கில்லர்ஜி किल्लरजि കില്ലർജി కిల్లర్ జి    Killergee كـــيللرجــــي
தேவகோட்டையான்

செவ்வாய், அக்டோபர் 27, 2015

பதிவர்களுக்கு இனிய வேண்டுகோள்

அன்பிற்கினிய வலையுலக நண்பர் – நண்பிகளுக்கு... என்னைவிட எத்தனையோ வயதில் மூத்த பதிவர்கள் உண்டு இந்த பதிவு எழுதியதற்க்கு எமது மன்னிப்புக் கோரலை முன்னிருத்துகிறேன் காரணம் இதில் தவறுகள் இருக்கலாம் ? ஒருக்கால் இருப்பின் பொருத்தருள்க... – கில்லர்ஜி

பதிவர் மாநாடு நடந்து முடிந்து விட்டது முதலில் இது நமது விழா என்ற வலையத்துக்குள் நம்மை நாமே நிறுத்துவோம் எந்தவொரு விழாவிலுமே நிறைகளும், குறைகளும் நிகழ்வது சகஜமே இது தனிப்பட்டவருடைய விழா அல்ல ! பொதுவிழா இதற்காக மாதக்கணக்கில் உறக்கம் களைத்து பலரும் உழைத்து இருக்கின்றார்கள் ஒருமுறை விழாவைப்பற்றிய எனது பதிவு எனக்கு முதல் பின்னூட்டம் வந்தது எனது கைப்பேசியில் பார்த்தேன் கவிஞர் திரு. முத்து நிலவன் அவர்கள் பதிவுக்கு பாராட்டி நன்றி சொல்லி எழுதியிருந்தார்கள் எனது பல பதிவுகளுக்கும் வந்து இருக்கின்றார் ஆனால் ? எனக்கு இதில் மட்டும் ஆச்சர்யம் காரணம் என்ன தெரியுமா ? இந்திய நேரப்படி அதிகாலை 01.15 மணிக்கு இவர் தூங்குகின்றாரா ? சரி நமக்குத்தான் இன்று ஏதோ விழித்திருந்தததால் கருத்துரை எழுதி விட்டார் என்று நினைத்தேன் மற்றொருநாள் வேறொருவருடைய பதிவுக்கும் நன்றி சொல்லி எனக்கு முன்பே கருத்துரை போட்டு விட்டார் பிறகுதான் தினம் கவனிக்க தொடங்கினேன் இவர் மாநாட்டின் வேலைகளை பகலில் செய்வதால் நேரமின்றி இரவில் விழித்திருந்து எழுதுகிறார் என்பது எனக்கு விளங்கியது இவர் மட்டுமல்ல நண்பர் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களும் விழித்திருந்து உடனுக்குடன் பதிவுகளை இணைத்து விடுகிறார் பேசுவதற்க்கு சாதாரணமாக தோன்றலாம் செய்து பார்ப்பது கடினம் மொத்தமாக புதுக்கோட்டை வலைப்பதிவர் குழு அனைவருமே விழித்திருந்து வேலை செய்திருக்கின்றார்கள் என்பது பதிவுலகில் யாரும் அறியாததல்ல ! அப்படி அறியவில்லையெனில் அவர் பதிவர் அல்ல ! ஒரு நண்பர் கருத்துரை எழுதி இருந்தார் அவர் யாரென்று எனக்கு தெரியவில்லை வலைப்பூவும் இல்லை திரு. முத்து நிலவன் அவர்கள் அவரை பிரபலப்படுத்த இந்த விழாவை உபயோகப்படுத்துகிறார் என்று இதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியுமா ? அவர் ஒரு சிறந்த பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளர் என்பது உலகறிந்த விடயம் இது அனைத்து தமிழர்களுக்கும் தெரியும் இதில் நுளைந்து இனிமேல் விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டிய அவசியம் ? நிலவு தன்னை வெளிப்படுத்த நட்சத்திரக் கூட்டத்துக்குள் வர வேண்டியதில்லையே நட்சத்திரங்கள்தான் தன்னை வெளிப்படுத்த நிலவை நெருங்கிப் போகின்றன இதுதானே யதார்த்தமான உண்மை இதுகூட தெரியவில்லை எனில் எப்படி ? எழுத்தாளராக வரவேண்டும் என்று வலையுகில் நுளைகின்றார்கள்.
இது நான் கவிஞர் திரு. முத்து நிலவன் அவர்களை பெருமைப்படுத்தி எழுதுவோம் என்று எழுதவில்லை எனது யதார்த்தமான நடையில் வழக்கம் போல் எனது பாணியில் எழுதினேன் என்பது உங்களில் பலருக்கும் தெரியும்.
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் இது தனிப்பட்ட விழா அல்ல ! நம் விழா ஒருக்கால் தவறிருப்பின் அதற்க்கு நாமும் ஒரு துளி காரணம் என்று நினைப்போம் தவறுகளை மறந்து அடுத்த கட்டத்துக்கு போக அனைத்து பதிவர்களும் மீண்டும், மீண்டும் தவறுகளை சுட்டிக்காட்டி அதனால் உண்டாகும் வீண் மன சஞ்சலங்களை தவிர்ப்போம் ஆகவே நண்பர்களே அவரவர்கள் தங்களது யதார்த்தமான பதிவுகளுக்கு மீண்டும் புத்துணர்ச்சியுடன் எழுத துவங்குங்கள் கருத்து வேறுபாடுகளை களைவோம் சிறிது நேரத்தில் அடுத்த பதிவர் மாநாடு நடத்தக்கூடிய காலம் வந்து விடும் ஆகவே மறப்போம் தவறுகளை, நினைப்போம் அடுத்த நிகழ்வுகளை...
நான் இன்னும் எழுதுவேன் தற்போது எனது குடும்ப பிரட்சினை காரணமாக மனநிலை திருப்தி இல்லை என்னைவிட வயதில் மூத்த பதிவரோ, இளைய பதிவரோ எமது இந்தப்பதிவு தவறு என்று யாரும் நினைப்பீர்களானால் இப்பொழுதே மீண்டும் தங்களிடம் எனது மன்னிப்பை கோருகிறேன்.
மேலும் இந்தப்பதிவை பாராட்டியோ, திட்டியோ கருத்துரை இட்டாலும் இதற்க்கு நான் மறுமொழி தரமாட்டேன் என்பது குறிப்பிடத்தக்கது அதற்கும் ஒரு 100 கிராம் மன்னிப்பு கோருகிறேன்
வலைப்பதிவர் ஒற்றுமை தொடரட்டும்
தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ !
என்றும் நட்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

ஞாயிறு, அக்டோபர் 25, 2015

புன்னகை


வெளிநாடுகளில்.... வேலை செய்பவர்கள் விடுமுறையில் ஊருக்கு வருவார்கள், காலம் முழுவதும் தொலைபேசிகளில் பேசியே காலத்தை கழித்து வாழ்ந்து வந்த இவர்களின் மனைவிமார்கள், அந்த இரண்டு அல்லது மூன்று மாதம் மட்டுமே பிறவிப்பயனை அடைந்தது போல் வாழ்வார்கள் (உண்மையும் அதுதானே) முகத்தில் ஒருவித சந்தோஷக்களை தெரியும், கூடுதலாக இரண்டு செயின்கள், மோதிரம், கடிகாரம், சிலர் வலையலும் கூட, ஒப்பனைகூட சற்றுக்கூடுதலாக இருக்கும், தனக்காக மட்டுமல்ல, தனது கணவனை திருப்திபடுத்துவதற்காகவும், தனது தாய்-தந்தையரை சந்தோஷப்படுத்துவதற்காகவும், சாதாரண நேரங்களில் அவள் அப்படி இருக்க முடியாது, காரணம் மற்ற நேரங்களில் (கணவன் வெளி நாட்டில் இருக்கும்போது) அப்படியிருந்தால் சமூகம் நிறைய கற்பனைக் கதைகளை திறித்து, அவளின் வாழ்க்கையை முறித்து அவர்களை பிரித்து விடும், அதிலொரு சந்தோஷம் இந்த சமூகத்திற்க்கு.... 3 ஆண்டுகளுக்கு பிறகு விடுமுறையில் வந்த கணவன், நண்பனிடம் இரவல் வாங்கிய மோட்டார் சைக்கிளில், கணவனும் மனைவியும் குழந்தையை தூக்கிக் கொண்டு சினிமாவுக்கு புறப்படுவார்கள், அந்த நேரத்திற்காகவே... காத்திருந்ததைப் போல எதிர்த்த வீட்டு வாசலில், பக்கத்து வீட்டு பார்வதியும், அடுத்த வீட்டு அலமேலுவும் பார்த்துக் கொண்டு இருப்பார்கள், வண்டியில் ஏறும்போதே இவள், அவர்களை பார்த்து விடுவாள், அவர்களின் பார்வையே இவளுக்கு 1000 விசயங்களை சொல்லும், நாம போனதும், இவளுகள் என்ன ? பேசுவாள்கள் என்று, கணவனிடம் திடீரென வேண்டாமென்றால் கோபப்படுவான், சந்தோஷமாக புறப்பட்டவள் இந்த சகுனிகளின் பார்வையால் அறை மனதாகி போவாள், பத்தடிகூட போயிருக்க மாட்டார்கள், ஆரம்பிப்பாள் அடுத்த வீட்டு அலமேலு

ஹூம் ரொம்பத்தான் அலுத்துக்கிறா, என்னமோ காணாததை கண்டது மாதிரி செயினு போட்ருக்காளாம் செயினு, சிலுத்துக்கிட்டு போறா, பாத்தியா ?

(இவள், அவளிடம் ஆறு முறை காபிபொடி ஓசி வாங்கியவள், ஏழாவது முறை கேட்கும்போது, ''இல்லேக்கா இன்னும் யேன் வீட்டுக்காரர் பணம் அனுப்பலை காபி முடிஞ்சு போச்சு'' என்று சொன்னதின் விளைவு) 
உடனே பார்வதி, காணாத கழுதை கஞ்சிய கண்டுச்சாம் ஓயாம, ஓயாம ஊத்தி ஊத்தி குடிச்சுச்சாம். என்னமோ நாமெல்லாம் நகையப் போடாதது, மா......திரி என்று இழுப்பாள்.... 
(இவள், அவளிடம் 7 முறை து.பருப்பு ஓசி வாங்கியவள் 8 வது முறை கேட்கும்போது பழையதை கேட்டதால் பகைக்கப்பட்டவள்) 

இந்த மாதிரியான பெண்கள் (Only for Tamil nadu) எல்லா ஊர்களிலும், எல்லா இடங்களிலும் உண்டு இவர்களுக்கு பொழுது விடிந்தால் பொரணி பேசுவதுதான் வேலை, பெண்களே..... பெண் மனது பெண்ணுக்கே தெரியும் என்கிறார்களே ஏன் நீங்களும் பெண்தானே ? இந்த வகையானவர்களின் கணவர்கள் வெளிநாட்டில் இருக்கும்போது ஒவ்வொரு நாளும் கணவனை நினைத்து வருந்தி வாழ்கிறாள் அவன் நிரந்தரமாய் திரும்பும் நாள்வரை.... கணவனும் வெளி நாட்டில் 15 வருடம் உழைத்து சம்பாரித்து நாட்டுக்கு நிரந்தரமாய் (வியாதிகளோடு) திரும்பும்போது அந்த 15 வருடத்தில் குறைந்த பட்சம் 14 அல்லது 18 மாதம் மட்டுமே கணவனுடன் வாழ்ந்திருப்பார்கள், அவ்வளவுதான் ஆனால் நீங்களோ.... அரைவயிறு கஞ்சி குடித்தாலும், கணவனோடும், குழந்தைகளோடும் பந்துக்களின் திருமணத்திற்கு செல்கிறீர்கள், கோயில் திருவிழாவுக்கு செல்கிறீர்கள், மாதம் ஒரு முறையாவது சினிமாவுக்கு செல்கிறீர்கள், எலவு வீட்டுக்குகூட சென்று அன்றாடம் வாழ்ந்திருக்கிறீர்கள், அவனது மரணகாலம் வரை... அல்லது உங்களது மரணகாலம் வரை... ஆனால் இதெல்லாம் இவர்களுக்கு விதிவிலக்கு என்பது எழுதப்படாத விதி. (கணவனும், மனைவியும் நினைத்தால் மாற்றி எழுதலாம்) பொன் நகை நமது வாழ்வாதாரத்திற்கு தேவைதான் இருப்பினும், பொன் நகையை விட, நமது மனதுக்குள்ளிருந்து வெளியாகும் புன்னகையே பிறவிப்பயன்.

CHIVAS REGAL சிவசம்போ-
இப்படி நகை போடுறதாலதான் எம்பொண்டாட்டி என்னை, தூப்பாய் கழுவுனாலும் பரவாயில்லைனு, துபாய் போகச் சொல்றா. 

வெள்ளி, அக்டோபர் 23, 2015

கும்பகோணம், குழப்பவாதி குணசேகரன்


ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடத்தி வைக்கிறார்கள், ஏதோ விதி ! கணவன் இறந்து விடுகிறான் உடனே மனைவியை தறுத்திணியம் புடிச்சவள், என்று சொல்கிறார்களே, அதேநேரம் மனைவி இறந்து விட்டால் கணவனை தறுத்திணியம் புடிச்சவன் என்று சொல்வதில்லையே எப்படி ? அப்படியானால், அவன் அதிஷ்டசாலியா ? இது, எனக்கு குழப்பமாகவே உள்ளது.
அதேபோல்...

4 பேர், பேசிக்கொண்டு இருக்கும்போது, பல்லி ச்சுச்சுச்....சூ என்று கத்தி விடுகிறது, உடனே நாம் பேசியது ப(ல்)லிக்கப் போகிறது, என்று சொல்கிறார்கள், அதேநேரம் நால்வரில் யாராவது ஒருவர் ஆச்...சூ என்று தும்மி விட்டால் ? தறுத்திணியம் புடிச்சவன் தும்மிட்டான் நடக்காது போலயே என்று சொல்கிறார்களே ஏன் ? 2 வார்த்தையுமே, ச்சூ தானே, ஒரு பல்லி மீது வைக்கும் நம்பிக்கை, ஆறறிவு (?) என்று சொல்கிறார்களே ! அந்த மனிதன் மீது வைப்பதில்லையே ஏன் ? இதுவும், எனக்கு குழப்பமாகவே உள்ளது.
அப்புறம்...

யாரிடமாவது, அவருடைய மகனை பாராட்டி பேசும்போது, உனக்கென்ன சிங்கத்தை பெத்து வச்சுயிருக்கே என்று சொன்னால் சந்தோஷப் படுகிறார்கள், அதே ஆள் உனக்கென்ன கழுதையை பெத்து வச்சுயிருக்கே என்று சொன்னால் அடிக்க வருகிறார்களே ஏன் ? சிங்கம், கழுதை இவை 2-மே, மிருக வகைதானே ! இத்தனைக்கும் கழுதையா இருந்தாலும் பரவாயில்லை, சிங்கமா இருந்தா POLICE கேஸாக்கூட வாய்ப்பு இருக்கு இதுவும்கூட, எனக்கு குழப்பமாகவே உள்ளது.
அப்… 

சாம்பசிவம்-
யோவ், நிறுத்துமய்யா ! இப்பவே எனக்கு தலையை சுத்துது.

நண்பர் கவிஞர் ரூபன் நடத்தும் கவிதைப் போட்டியில் கலந்து வெல்வீரே என அன்புடன் அழைக்கின்றேன் - கில்லர்ஜி

புதன், அக்டோபர் 21, 2015

காட்டுத்தீ


இந்தப் பதிவுக்கு முதன் முதலாக வருபவர்கள் இதோ E ஆடியோ கேஸட் D இதை சொடுக்கி படித்து விட்டு தொடர்க....

வீட்டுக்குள் இருந்த நான் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தேன் மக்கள் கூட்டம் கூட்டமாக அடுத்த தெருவை நோக்கிப் போய்க்கொண்டு இருக்க.. எனது செவிகளில் ஒலி... இதோ இப்படித்தான்...

டண்ட ணக்கும்... டணக்கும் ணக்கும்.... டண்ட ணக்கும்... டணக்கும் ணக்கும்.... டண்ட ணக்கும்... டணக்கும் ணக்கும்.... டண்ட ணக்கும்... டணக்கும் ணக்கும்...

என்ன சத்தம் இந்தநேரம் உறியின் ஒலியா...? (உயிரின் அல்ல) போகும் மனிதரை நிறுத்திக் கேட்டேன் என்னாச்சு ? அட போடா உனக்குத் தெரியாதா ? நம்ம பொட்டு ஐயா போயிட்டாராம்... 
ஐயோ... நம்ம கேஸட்டு ? வேறு வழியின்றி சட்டையை மாட்டிக்கொண்டு அடுத்ததெரு நோக்கிப் போனேன் கூட்டம் கூட ஆரம்பித்து இருந்தது இலவுகார வீட்டின் உள்ளிருந்து ஒப்பாரிச் சத்தம் வந்தது பாடலாய்...

சீமையை ஆண்டவரே சீரழிஞ்சு போனீயலே...
ஸாரட்டுலே போவியலே... இப்படிச் சாஞ்சு போனீயலே...
கட்டுக்கட்டா பணம் சேர்த்த... கட்டழகு பொட்டகமே...
கட்டையிலே... போகும்போது பொட்டெடுக்க வச்சீயலே...
சாயங்காலம் நீ நடந்தா... சந்தனம் மணக்குமய்யா...
கோமயம் தான் மணக்க... கோட்டைக்கு போறீயலே....

ஆ...ஹூம்... அஹும்... அஹூம்....
ஆ...ஹூம்... அஹும்... அஹூம்....

தேவகோட்டையிலே... தேன் குடிச்சு வளந்தவரே...
தேருல போவியலே... இப்படி தெருவுல போறியலே...
கர்ண மகராசா... கலக்கி எடுத்தியலே...
காலறா வந்துதான்... கலங்கி போறீயலே...
மனைவி மரகதத்தை... மறந்த மாணிக்கமே...
மாமிசம் திம்பியலே மண்ணு திங்க போறியலே...

ஆ...ஹூம்... அஹும்... அஹூம்....
ஆ...ஹூம்... அஹும்... அஹூம்....

வட்டிக்கு விட்டியலே... வந்துருச்சா எல்லாமும்...
எழுதி வச்சியலா... எந்திச்சு சொல்லுங்களே....
மானங்கெட்ட பயலுக... மலையவே முழுங்கிடுவான்...
மன்னாதி மன்னரய்யா... மறைக்காம சொல்லுங்களே...
புருஷனை வளைச்சுப்போட்ட... சிருக்கிமவ வந்துட்டாளே..
புதுசா புடுங்க என்னயிருக்கு.... சொல்லேண்டி சக்களத்தி...

ஆ...ஹூம்... அஹும்... அஹூம்....
ஆ...ஹூம்... அஹும்... அஹூம்....

நான் யோசித்துக் கொண்டு நின்றேன் உள்ளே போய் கேஸட்டை கேட்போமா ? பக்கத்தில் திண்டு(கல்)மேல் உட்கார்ந்திருந்த இரண்டு பெருசுகள் பேசிக்கொண்டு இருந்தது நேத்து சாயங்காலம்கூட எம்பொஞ்சாதி வந்து பார்த்தப்போ நல்லாத்தான் இருந்துருக்காரு... என்னமோ பாட்டுப் போட்டாய்ங்களாம் கேட்டவரு பொட்டுனு போயிட்டாரு ஆஹா பாட்டுக் கேட்டாரா ?

அப்ப நம்ம கேஸட்டு ? பக்கத்தில் ஒருவன் ஊதினான் கீழே, கீழே பாருங்களேன்.


இப்படித்தான் எனக்கே சங்கு ஊதுவது போலிருந்தது நிற்போமா... இல்லை உள்ளே போய்க் கேட்போமா ? மெதுவாக உள்ளே போனேன் வீட்டின் மையத்தில் பொட்டு ஐயா நெற்றியில் சந்தனம், சாந்துப்பொட்டு வைத்து ஊதுபத்தி மணக்க கால் நீட்டிப் படுத்துக் கிடந்தார் நான் அவரைப் பார்க்காமல் சுற்றும் முற்றும் பார்த்தேன் பக்கத்தில் டேப் ரெக்கார்டர் இருக்கிறதா ? அதோ அலமாரியில் உள்ளே கிடப்பது நமது கேஸட்தான் முன்புறத்தில் எனது அழகான பெயரின் முதல் எழுத்து K சிவப்பு கலரில் எழுதி வைத்திருப்பேன் மெதுவாக எடுப்போமா ? யாராவது தவறாக நினைத்து விட்டால் ? இதனால் என்ன எனது கேஸட் என்று சொல்லுவோம் அந்தநேரம் ஒரு பெருசு பார்த்தவுங்க எல்லாம் வெளியே போங்கப்பா கில்லர்ஜி போப்பா போப்பா என்ன செய்யிறது உனக்கு தாத்தா கொடுத்து வச்சது அவ்வளவுதான்... நான் கேஸட் வாங்கவுல வந்தேன் எப்படிச் சொல்ல முடியும் ஒருவேளை சொன்னால்  சட்டீர்னு வச்சுட்டா ?

வீட்டுக்கு வந்து கேஸட் வாங்கியவனில் ஒருவன்ர் நின்றான்ர் 
அண்ணே... 
என்னடா
கேஸட்... 
என்னா கேஸட்...? போயிரு இல்லே... அதுக்குச் சொல்லலை கூட்டத்துல காணாமல் போயிடும் அதான்... 
எங்க அப்பாவை பாட்டுப்போட்டு கொன்னுபுட்டு கேஸட்டா கேட்கிறே... நான் டென்ஷன்ல இருக்கேன் போயிடு இல்லே.... இன்னைக்கு சனிக்கிழமை வேற, போடா.. போடா... போடா...

பல்லைக் கடித்துக் கொண்டு உறுமினான் சனிக்கிழமையா ? அதுக்கும் கேஸட்டுக்கும் சம்பந்தம் என்ன ? நான் மெதுவாக வெளியே வந்தேன் ஒருவன் கேட்டான் டேய் கில்லர்ஜி உன்னோட பாட்டைப் போட்டு பொட்டு ஐயாவை பட்டுனு தூக்கி விட்டுட்டியாம்... அடப்பாவிகளா ? ஒரு அப்பாவியை இப்படிச் சொல்றியலடா ? உங்க வாயில வண்ணப்புத்து வெக்கே இதுக்குத்தான்டா யாருக்குமே உதவக்கூடாது கீழே உட்கார்ந்து இருந்தேன். 

கூட்டத்தில ஒரு பெருசு சத்தமிட்டது ஏப்பா சீக்கிரம் சட்டு புட்டுனு வேலையாகட்டும் இன்னைக்கு சனிக்கிழமை வேற சனிப்பொணம் தனியாப் போகாது ஆஹா இதுக்குத்தான் அவன் சனிக்கிழமைனு சொன்னானா ? இதற்கு மேல் இருந்தால் சரியா வராது அவன் நம்மளைத்தான் குறி வச்சுருக்கான் நாசமாப் போங்கடா.. உங்க வாயில மண்ணு’’விழ கேஸட்டு போச்சு மனதுக்குள் திட்டிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டேன் வீடு வருவதற்குள்... 
//கில்லர்ஜி பாட்டுப்பாடி பொட்டு ஐயாவைக் கொன்னுட்டானாம்// 
செய்தி தேவகோட்டை முழுவதும் காட்டுத் தீயாய் பரவியிருந்தது தினத்தந்தியில் மட்டும் வராமல் நண்பர் திரு. S.P. செந்தில் குமார் அவர்கள்தான் பார்த்துக் கொண்டார் அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொல்கிறேன்.

கேளொலி

நட்புகளே... மேலே பாடலைக் கேட்டீர்களா ? அதாவது அந்தக் கேஸட்டில் முதல் பாடல் 1952-ல் மிகப்பெரிய வெற்றி பெற்ற சியாமளா திரைப்படத்தின்... 
‘’ராஜன் மகராஜன் திருவேற்றியூர் மேவும் திருவாளர் தியாகராஜன்’’ 
என்ற பாடல் இரண்டாவது பாடல் 1943-ல் வெளியான சிவகவி படத்தின்... 
வதனமே சந்த்ர பிம்பமோ மலர்ந்த சரோஜமோ வதனமே’’ 
என்ற பாடலை இரண்டு முறை பதிந்து விட்டான் மியூசிக்கல்ஸ்காரன் ராஸ்கல்ஸ் அவனிடம் போய் சண்டை போடுவோம் என்று நினைத்தேன் சரி தொலையிறான் அடுத்த முறை கடைக்கு போக வேண்டுமே என்று நினைத்து விட்டு விட்டேன் அந்த இடத்தில்தான் விதியின் விளையாட்டு... ஆம் நண்பர்களே... எதற்கு ? இரண்டு முறை என நினைத்து ராஜன் மகராஜன் பாடல் முடிந்து வதனமே சந்த்ர பிம்பமோ பாடல் தொடங்கும் முன்பு ஒரு பாடலை அழித்து விட்டு அந்த இடத்தில் நாம் பாடுவோமே என்று நினைத்து டேப்-ரெக்கார்டரில் நான் பாடினேன் முதல் பாடலை ரசித்து கேட்டவர் இரண்டாவது நான் பாடியதை கேட்டதும் அவர் கடைசியாக...

இது யெம்கேட்டியில்லை... 
இது யெம்கேட்டியில்லை...  
இது யெம்கேட்டியில்லை... 

என்று நீதி மன்றத்தில் சொல்வது போல மூன்று முறை சொல்லி விட்டு பொட்டு ஐயா பொட்டு’’னு போயிட்டார். இதுக்குப்போயி என்னை... என்னை... எழுத விரலே நடுங்குது என்னை... கொலைகாரன் அப்படினு சொல்லிட்டாங்கே.... என்னை இப்படிப் படுத்துறாங்களே.... 

நண்பர்களே... நண்பிகளே... நீங்களே சொல்லுங்கள் இந்தப்பாழும் உலகை விட்டு பொட்டு ஐயாவுக்கு பட்டு’’னு விடுதலை வாங்கி கொடுத்த நான் நல்லவனா ? கெட்டவனா ?

CHIVAS REGAL சிவசம்போ-
கில்லர்ஜி சொன்னது போலயே கொஞ்ச நேரத்துல பொட்டு ஐயா வாயில மண்ணு விழுந்திருக்குமே.....

சிவாதாமஸ்அலி-
எல்லாம் சரி கேஸட்டு என்னாச்சு ?

சாம்பசிவம்-
கொஞ்சம் பொறுய்யா, 16-ஆம் நாள் காரியம் முடியட்டும் கில்லர்ஜி சொல்லுவாரு....