தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, டிசம்பர் 16, 2016

மூலகாரணம் யார் ?

நமது பிரச்சனைகள் அதனால் ஏற்படும் மனவேதனைகள் கவலைகளுக்கு காரணம் நமது அன்றாட வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ள மனிதர்களால்தான்.

ஆனாலும் இதற்கு மூலகாரணம் யார் ? இறைவன் ஆம் அவனிடமிருந்து தொடங்குவதுதான் பிரச்சனை.

நடந்த தவறுகளுக்கு நாம் காரணகர்த்தா அல்ல ! இது நமக்கு மட்டுமல்ல இறைவனுக்கும் தெரியும். இருப்பினும் தவறுக்கு நாம் பொருப்பேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம் நான் தவறு செய்யவில்லையே என அழுது புலம்புகின்றோம் அதிலிருந்து விடுபட வழி கிடைப்பதில்லை.

இதற்கு காரணம் என்ன ? இதை இறைவன் எதற்கு நமக்கு கொடுக்கின்றான் ? நாம் செய்திருந்த, செய்து கொண்டிருக்கிற, மற்றொரு தவறிலிருந்து நாம் நம்மை மறைத்துக் கொண்டிருக்கின்றோம் அதற்கு பகரமாகத்தான் இறைவன் நம்மை இதில் சிக்க வைத்துள்ளான்.

இதுவும் ஒருவகை பண்டமாற்று முறைதான்.

இதை மனதால் உணர்ந்து கொண்டால் இதற்கு காரணமான மனிதர்கள் மீது நமக்கு கோபம் வராது நாம் நமது தவறுகளை உணரத் தொடங்கி திருந்தத் தொடங்கி விடுவோம்.

சரி நம்மை இந்தச் சிக்கலில் மாட்டி விட்ட மற்றவர்களுக்கு தண்டனை கிடையாதா ?

அது நமக்கு அவசியமில்லை அதை இறைவன் பார்த்துக் கொள்வான். நமக்கு மற்ற வேலைகள் நிறைய இருக்கிறது.


ஒரு சிலர் இறைவனிடம் பிரார்த்திப்பார்கள் எனக்கு துரோகம் செய்தவர்களுக்கு கூலியை கொடு, தாலியை எடு என்று.

இந்த வகையான எண்ணங்கள்தான் ஒரு சிலரை கோயிலில் காசு வெட்டிப்போடுவது, மந்திரவாதியிடம் போய் செய்வினை செய்வது போன்ற, இழி செயல்களில் கொண்டு போய் விடுகிறது.

இது அவசியமில்லாத வேலை அப்படி பிரார்த்திக்கத்தான் வேண்டும் என்றால், இப்படிப் பிரார்த்திக்கலாமே.

எனக்கு துரோகம் செய்தவர்களுக்கு இதைவிட நல்ல வாழ்க்கை அமைந்து அவர்கள் என்னை விட்டு, வெகுதூரம் சென்றுவிட அருள் கொடு இறைவா என பிரார்த்திக்களாமே ! இது நம்மை மேலும் தவறுகள் செய்ய விடாமல் தடுப்பதுடன், எதிரிக்கும் நன்மை நினைக்கும் நற்பண்பை வளர்க்கும் இது எனது சின்ன வயது முதல் உள்ள அனுபவ பழக்கம் எனக்கு இடையூறாக இருந்த மேலாளருக்கு இப்படி பிராத்தித்து இருக்கிறேன் அவர் என்னை விட்டு வெகுதூரம் சென்று உயர்ந்த நிலையிலும் இருக்கின்றார் இதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு கொய்யா அடிக்கலாமே !

சாம்பசிவம்-
அடங்கொய்யாலே நல்லாத்தான் இருக்கு. ஆனால் நம்ம பரம்பரையில யாருமே இப்படி பிரார்த்திக்கலையே இப்ப நாம மட்டும் எப்படி மாத்திக்கிறது ?

ஞாயிறு, டிசம்பர் 11, 2016

பார்’அடியார் பாட்டு



ஜாதிகள் உள்ளதடி டாப்பா-குலம்
தாழ்த்தி உயர்த்திச் சொல்லல் லாபம்
நிதி கொடுத்தால் மதிப்பெண்-கல்வி
நிறைந்து கிடக்கிறதே நாட்டிலெங்கும்

இருந்து விளையாடு பாப்பா-நீ
இருப்பதற்க்கு வீட்டிலுண்டு சோபா
கூண்டில் விளையாடு பாப்பா-ஒரு
ரோபோட்டை வாங்கி கொள் டாப்பா

சின்னச் சிறுகருவி போலே-நீ
தெருவில் புரண்டு வா பாப்பா
வர்ணக் கலவைகளை கண்டு-நீ
மணலில் புரண்டு கொள்ளு பாப்பா

கொளுத்து திரியுமந்தக் கோழி-அதை
கொளுத்தீ சுட்டுத்தின்னு பாப்பா
எத்தித் திருடுமந்தக் காக்கா-அதை
எட்டி எறிந்து கொல்லு கல்லால்.
பார்அடியார்
பாரதீ இன்று உனது பிறந்தநாள் நீ இருந்திருந்தால் இன்றைய நிலைப்பாட்டில் இப்படித்தான் பாடல் எழுதி இருப்பாய் தவறுக்கு மன்னிப்பாயாக - கில்லர்ஜி.

வியாழன், டிசம்பர் 08, 2016

பால் பாய்சன்


கல்லல் கல்யாணராமனுக்கும், கல்யாணிபுரம் கல்யாணிக்கும் கல்யாணம் முடிந்து இன்று வெள்ளி விழா 25 ஆம் ஆண்டு இதுவரையில் குழந்தைகளுக்கு பஞ்சமில்லை ஆனாலும் ஆசைக்கும் பஞ்சமில்லையே கட்டிலில் மல்லாந்து படுத்துக் கிடந்த கல்யாணராமனுக்கு பள்ளி கொள்ள வழியில்லை என்று கல்யாணி மீது கோபமாக இருந்தவரை மேலும் கோபத்தைக் கொடுத்தது விட்டத்தில் இருந்த பல்லி ஆம் இவரைப் பார்த்து சிரித்து எள்ளி நகையாடி சொல்லி வைத்தது போலவே இவரின் வாயில் ஆய் போயதே காரணம் சட்டென எழுந்தவர் விஜயகாந்த் மாதிரி தூ தூ என்று கழிவறைக்குப் போய் வாய் அலம்பி வந்தவரிடம் சத்தம் கேட்டு.. 

என்னங்க ? 
என்று வந்த கல்யாணியை அடிக்கள்ளி வந்துட்டியா ? என்றவரை 
என்னாங்கிறேன் காடு வா வானுங்குது, வீடு போ போனுங்குது ஏதாவது கோல்மால் செஞ்சீங்க மூத்தவன்ட்ட சொல்லி மொத்த விட்ருவேன் ஜாக்கிரதை 

மனைவி ஆட்காட்டி விரலைக் காட்டிச் சென்றதும் ச்சே அவனுக்கு சொல்லி விட்டாள்ல் பயபுள்ளே கில்லி மாதிரி பறந்து வந்து அடிப்பானே மீண்டும் படுத்தவருக்கு மேலே நேரே இவரைப் பார்த்து பல்லி ச்சுச்சூ என்றதும் நம்மளை இதுவும் நக்கல் செய்யுதே சட்டென கீழே கிடந்த கோடரியை எடுத்து வீசினார் வீச்சு விலா எலும்புக்கும், தொடைப் பாகத்துக்கும் நடுவில் விழ வெட்டுப்பட்டு கீழே விழுந்த பல்லி துள்ளி துடித்து அகால மரணம் அடைந்தது பள்ளி கொள்ள வழியில்லாத கல்யாணராமன் பல்லியை கொல்லவும் மனம் சமாதானமாகியது உறக்கம் வராததால் உடன் மனதில் தோன்றிய ஹைக்கூ கவிதை ஒன்றை எழுதினார்.

பால் கொண்டு வருவாளென நானிருந்தேன்
 பாவையவள் பாய்சன் போன்ற வார்த்தையை
கொண்டு வந்தாள் மனதை கொன்று சென்றாள்
நான் பள்ளி கொள்வோம் என்றிருக்க, பல்லியை
கொல்லும் பாவத்துக்கு ஆளாக்கி சென்றாயடி
கள்ளி உன் மனமென்ன கல்லா ? பாலா ?

கவிதையை எழுதியவர் நாளை நண்பர் 'தளிர்' சுரேஷ் அவர்களின் சிபாரிசு மூலம் பாக்யாவில் வெளியிட வைப்போம் என்று நினைத்தவருக்கு தூக்கம் கண்ணைச் சொக்க பழைய கால நினைவுகளுக்குள் மூழ்கி உறங்க கல்லூரி கால முன்னாள் காதலி கனகா வந்தாள் கனவில்.

பாவம் கனவிலாவது சந்தோஷிக்கட்டும் நான் போறேன் அடுத்த பதிவெழுத...

திங்கள், நவம்பர் 28, 2016

(அ)சிங்கம்


ண்டி.... அலமேலு, ராத்திரி...
சாப்பாட்டுக்கு என் வைக்கட்டும் ?

எதையாவது குழைச்சு வையிடி.
தவிட்டை கொழச்சை வெக்கெவா ?

வெள்ளி, நவம்பர் 25, 2016

இன்றே கடைசி


வனவாசமா ? பணவாசமா ?
எதுவாயினும். இன்றே கடைசி ஆம் எனக்கு U.A.E இன்றே கடைசி

 U.A.E யில் கால் வைத்த தேதி 26.01.1996

U.A.E யை விட்டு கால் எடுத்த தேதி 25.11.2016