தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஆகஸ்ட் 06, 2017

போவோமா... ஊர்கோலம்...


புதாபி நகரப்பேருந்து இதில் ஆடவர்களுக்கு 22 இருக்கைகளும், பூவையர்களுக்கு 12 இருக்கைகளும், ஊனமுற்றோரின் ஊர்தி நிறுத்துவதற்கு ஒரு இடமும் மிகுதி இடங்கள் அனைத்தும் நின்று கொண்டு பயணிக்கும் வகையில் அமைந்திருக்கும் ஆடவர்களின் அனைத்து இருக்கைகளும் நிறைந்து, பூவையரின் 5 இருக்கைகள் காலியாகி இருக்க, நான் நின்று கொண்டு பயணித்து கொண்டிருந்தேன் சூரிய பகவான்ஜி மானிடர்களின் அக்கிரமச் செயல்களை தண்டிக்க வழியின்றி இதுதான் தருணமென உச்சியில் நின்று சுட்டெரித்து கொண்டிருந்தார் பேருந்து ஒரு நிறுத்தத்தில் நிற்க, ஞானி ஸ்ரீபூவு மாதிரி இருந்த பெரியவர் ஒருவர் ஏறினார் பார்த்ததுமே அவர் பாக்கிஸ்தானியர் என்பது தெரிந்தது இருக்கைகள் அனைத்தும் மனிதர்கல்ள் அந்தப் பெரியவர் உட்காருவதற்கு யாருமே எழுந்து இடம் கொடுக்க முன்வரவில்லை அவர் கம்பியை பிடித்துக் கொண்டு நின்றார் நானாக இருந்தால் நிச்சயமாக எழுந்து இடம் கொடுப்பேன் ஆனால் நானே நின்று கொண்டுதானே வருகிறேன் என்ன செய்ய முடியும் ? நான் பலமுறை விமானத்தில் போகும் பொழுது பெரியவர்களுக்கு இருக்கை இல்லாவிட்டால் எனது இருக்கையை கொடுத்து விட்டு நின்று கொண்டு பயணித்து இருக்கிறேன்.

நான் இப்படி நடந்து கொண்டதற்கு காரணமென்ன ? இவ்வகை உதவிகளை இறைவன் நேரலையில் காண்கிறான் என்பதில் எமக்கு முழு நம்பிக்கை உண்டு ஆகவே உலகையறிந்த இரண்டேகால் வயதிலிருந்து இந்த செயல்கள் அறிந்தோ, அறியாமலோ எம்மை பற்றிக்கொண்டு விட்டது இவைகளை செய்யாமல் இறைவனையோ, இறைவியையோ, இறைதூதர்கள் என்று சொல்லப்படும் நித்தியானந்தா போன்ற ஞானிகளையோ தொழுவதில் எமக்கு உடன்பாடில்லை காரணம் யாம் மதவாதி இல்லை மிதவாதி. இந்த இடத்தில் இஸ்லாம் மதத்தில் சொல்லப்பட்டதை இந்தியச்சுவர்களில் எழுதியிருந்த ஒரு வாசகம் எமது மனக்கண்ணில் வந்து செல்கிறது நல்லதை யார் சொன்னால் என்ன ? சொன்னது நல்லவையா ? இதைத்தான் பார்க்க வேண்டும் இப்படிப் பார்த்திருந்தால் பெரியார் சொன்ன நல்லவைகளையும் ஆத்திகர்கள் கேட்டிருக்கலாம், கிருபானந்த வாரியார் சொன்ன நல்லவைகளையும் நாத்திகர்கள் கேட்டிருக்கலாம் இதுவே நல்ல சிந்தனையாளனுக்கு அழகு ஆனால் நம்மில் மனம் அழுக்கானவர்களே அதிகம் ஆகவேதான் அ.தி.மு.க செய்வதை தி.மு.க. ஏற்றுக்கொள்வதில்லை, தி.மு.க செய்வதை, அ.தி.மு.க. ஏற்றுக்கொள்வதில்லை. இதன் காரணமாக நாடு நஷ்டம் சரி அது கிடக்கட்டுமே சாக்கடை நாம் வந்த விடயத்துக்குள் செல்வோமே.... அந்த சுவர் வாசகம் இதோ...

//தேவையுடையவருக்கும், அனாதைகளுக்கும் உதவுவதற்காக பெரும் முயற்சி கொள்பவர் இறைவனின் பாதையில் தீவிரமாக ஈடுபட்டிருப்பவரை போன்றவராவார் இரவு முழுவதும் நின்று வணங்கக்கூடிய முறிக்காமல் தொடர்ந்து நோன்பு வைக்கக்கூடிய மனிதரைப் போன்றவராவார்//


ஆனால் இன்றைய மனிதர்கள் இதில் நம்பிக்கை வைத்து இப்படி இருக்கின்றார்களா ? என்பது நமக்கு அவசியமில்லாத விசயம் சரி நம்ம பேருந்துக்குள் போவோமே... அந்தப் பெரியவருக்கு யாருமே இடம் தராததால் ச்சே என்ன மனிதர்கள் என்று ஒவ்வொரு மனிதராக முகம் படித்தேன் மனிதாபிமானம் யாருக்குமே இல்லையா ? மனிதநேயம் செத்து விட்டதா ? மனதுக்குள் அவர்களை வெறுத்து அழகான எனது முகத்தால் கஷ்டப்பட்டு கொடூரமாக முறைத்தேன். முறைப்படி, வரிசைப்படி முறைத்து வந்தவன் அந்தப் பெரியவரை பார்த்ததும் திடுக்கிட்டேன் காரணம் அவர் என்னை கர்ண கொடூரமாய் முறைத்துக் கொண்டு நின்றார் பிறகுதான் எனக்கு புரிந்தது அவரா நீ ? உனக்காகவா நான் இரக்கப்பட்டேன் ? இத்தனை வருடங்களில் எத்தனை நாட்டுக்காரனை பார்த்திருப்பேன், எத்தனை காவல்துறையினரை சந்தித்து இருப்பேன் இதற்காக நமது உதவி செய்யும் மனப்போக்கை மாற்றிக்கொள்ள முடியுமா ?

சரி அவர் ஏன் உங்களை முறைத்தார் ? என்று கேட்பது எனக்கு புரிகிறது நண்பர் திரு. அப்பாதுரை அவர்களே... வேறென்ன ? எனது மீசைதான். மீசை அவரை என்ன செய்தது ? அடுத்த பதிவில் பார்ப்போமே....

இதோ தலைப்பு.
 मूछ మీసం മീശ ಮೀಸೆ Bigote ரவுலே Mustache شنـــبமீசை 

சனி, ஆகஸ்ட் 05, 2017

நான் அவரில்லை...


இந்தியா மதுரையில் வலைப்பதிவர், வலைச்சர நிறுவனர் ஐயா திரு. சீனா அவர்களுடன் உங்கள் கில்லர்ஜி

 
யுனிடெட் அரப் எமிரேட்.ஸ் அபுதாபியில் சூடான் நண்பர் திரு. முஹம்மத் ஜலீல் அபுபக்கர் அவர்களுடன் உங்கள் கில்லர்ஜி


வியாழன், ஆகஸ்ட் 03, 2017

என் நூல் அகம் 11


வணக்கம் நட்பூக்களே... என் நூலகத்திற்குள் நுழைந்து சிறிது காலமாகி விட்டதல்லவா... இதோ இனிய நண்பர் திரு.கரந்தையார் அவர்களின் மாணவர் திரு.கே.எஸ்.வேலு அவர்கள் தனது செல்வ மகளின் பெயரான நிவேதிதா என்ற பெயரில் எழுதிய நல்லதொரு குடும்பம் என்ற பல்கலைக்கழகத்தினுள் சென்று வருவோமா ?

செவ்வாய், ஆகஸ்ட் 01, 2017

தேவகோட்டை to கீழக்கரை

ருமுறை நானும் எனது மனைவியும் தேவகோட்டையிலிருந்து கீழக்கரைக்கு மருது பாண்டியர் போக்குவரத்து கழக பேருந்தில் போனோம், எனது மனைவியின் கையில் எனது மகன் தமிழ்வாணன் கைக்குழந்தையாக, எனது கையில் எனது சகோதரரின் மகள் ஸபரி 3 ½ வயது குழந்தையாக, எனது மனவாட்டிக்கு இருக்கை கிடைத்து உட்கார (கணவனுக்கு முன் உட்காரக் கூடாது என்பது பொய் வேஷம்) நான் நின்று கொண்டு ஸபரியை கையில் பிடித்து இருந்தேன், சுற்றி இருந்த பெண்கள் என்னையே உற்று நோக்கி கொண்டு இருந்தார்கள் (காரணம் நான் மிகவும் அழகாக இருந்தது என்பது பிறகு நானாகவே எனது சுயஅறிவால் புரிந்து கொண்டேன் என்பதும், இதன் காரணமாகத்தான் எனது மனைவி என்னை ஃபாரன் லவ்லி உபயோகப்படுத்த விடுவதில்லை என்பதும் வேறு விடயங்கள்)

தில் எனக்கு ஓரத்தில் இருந்தபெண், குழந்தையை தாருங்கள் நான் மடியில் வைத்துக்கொள்கிறேன் எனக்கேட்டு வாங்கி கொள்ள, குழந்தையும் சமர்த்தாக உட்கார்ந்து கொண்டது, அந்தப்பெண் சும்மா இருந்திருந்தால் இந்த பதிவு வந்து இருக்காது அவள் என்னிடம் குழந்தை மூத்ததா ? எனக்கேட்க, நான் சொன்னேன் இல்லை இரண்டாவது என்று, உடனே அந்தப்பெண் என்னையும், என்னவளையும் ஆச்சர்யமாக மாறி மாறிப்பார்த்தாள். எனக்கு சந்தேகம் ஒருவேளை நான் இளவயதாக அழகாகவும் இருப்பதால், என்னை சைட் அடிக்கின்றாளோ ? குழப்பமாய் எதேச்சையாக திரும்பியவன், என்னவள் என்னை பத்ரகாளி மாதிரி பார்த்தாள் எனக்கு மீண்டும் குழப்பம் ஏன்... நமது தேவகோட்டை தேவதை தேவையில்லாமல் இப்படி அதுவும் அஷ்டகோணலாக முறைக்கிறாள் ? சிறிது நேரத்தில் விடையும் கிடைத்தது பக்கத்துப்பெண் R.S.மங்கலத்தில் இறங்கவும் நான் குழந்தையை வாங்கி கொண்டு மணவாட்டியின் அருகில் உட்காரவும் மணவாட்டியின் முதல் கேள்வி

அந்தப் பெண்ணுக்கிட்டே ஏன்... அப்படி சொன்னீங்க ?
எப்படி ?
இரண்டாவதுனு...
பின்னே ஸபரி இரண்டாவதுதானே... ராஜா மூத்தவன்ல,
ஐயோ அவங்க நம்ம குழந்தைனு நினைச்சுட்டாங்க, நம்மளே சின்னவயசு அப்படினா ? மூத்தது ஒண்ணு வீட்டிலே இருக்குனு நினைக்க மாட்டாங்களா ?
(உண்மைதான் அந்தநேரம் எனக்கு வயது 24 மனைவிக்கு வயது 22 இந்த வயசுக்குள்ளே மூணா ? சரிதா’’ஙே’’)
ஓஹோ... இப்படியொரு கணக்கு இருக்கா ? இது எனக்கு தெரியலையே....
உங்களுக்கு எதுதான் தெரியுது ?
எதுவும் தெரியாமலா ? தமிழ் படித்து கையில் தமிழை கொடுத்தேன் ? சரி, சரி முறைக்காமல் கீழே இறங்கு இராமநாதபுரம் வந்துருச்சு.
இறங்கி கீழக்கரை பேருந்தை பிடிக்கும் முன்பு மணையாள் சாப்பிடணும் என்று சொல்லவும் சரி பக்கத்துல ஆரியபவனில் சூடாக தோசை சாப்பிடலாம் எனப்போனோம்.

ரோட்டுல போற பேதியில பெரண்டு போயிறுவாங்கே என்றைக்கும் இல்லாமல் அன்றைக்கு எங்களைத்தான் பார்க்கிறாங்கே.. இதனால் எனக்குதானே பிரச்சனை காரணம் வராத குழந்தை ஸபரியை நான்தானே இழுத்துக்கொண்டு வந்தேன் மணையாளின் கண்ணில் பொறி பறக்கிறது வீட்டுக்குப்போய் எப்படி சமாளித்து... ? எப்படியோ கடந்து உணவகத்துக்குள்ளே நுழைந்தால் ? அங்கேயொரு கிரகம் எனது அம்மாவைவிட 25 வயது மூத்தது ஆனால் எனக்கு உறவுமுறை அத்தாட்சி இது எப்படி ? கிராமத்து கிழம் வேறு என்னை கண்டதும் கொஞ்சம்கூட இங்கிதம் தெரியாமல்,
ஏண்டா..... தூ........ எப்படியிருக்கே ?
கல்லாவில் இருக்கும் பெரிசு முதல் சாப்பிட்டுக்கொண்டு இருந்த அனைவரும் எங்களையே பார்த்து ’’கொல்’’ என சிரித்தார்கள், எனக்கு அந்த தருணமே இந்த கிழவியை கழுத்தை நெறித்து ’’கொல்’’வோமா ? என்று தோன்றியது பொது இடத்தில் இப்படியா ? ’’ச்சே’’ என்ன செய்ய ?
இருக்கேன் அத்தாட்சி நல்லாயிருகியலா ?
எனக்கேட்டு மணையாளை அறிமுகப்படுத்தி வைத்தேன், எனது மனைவி சந்திப்பது முதல்தடவை மனைவியிடம்
ஏண்டி சக்காளத்தி எப்படியிருக்கே ? ய்யேங் கொழுந்தன் உன்னை, எப்படி வச்சுக்கிறான் ?  
எனக்கேட்டு குழந்தையை கொஞ்சி விட்டு இடத்தை காலி செய்தது கிழவி.

ரியென உட்கார்ந்து ஆர்டர் கொடுத்து விட்டு மணையாளை பார்த்தால் ? அவள் முகத்தில்1000 வாட்ஸ் பல்பு காரணம் என்ன ? எல்லாம் அந்தக்கிழவி என்னை ‘’அந்தக்கேள்வி’’ கேட்டதுதான் எப்படியோ, நாக்கைப்பிடுங்கிற மாதிரி ஒரு கேள்வி கேட்டாலும் நமக்கு ஒருவேலை முடிஞ்சு போச்சு நல்லாயிருக்கட்டும் இன்னும் 100 வருஷத்துக்கு அந்தக்கிழவி SORRY அத்தாட்சி (வயது 75) என நினைத்துக்கொண்டு காத்திருந்(தோம்)தேன், சூடான தோசைக்காக ஆரியபவனில் எனது தேவகோட்டை தேவதையின் முகத்தைப் பார்க்க தைரியமில்லாமல்.....

சனி, ஜூலை 29, 2017

காதல் தோல்வி

காதலில் தோல்வியுற்ற தமிழன் தன்னை இப்படி வெளிப்படுத்துகிறான்.

சரி இவர்கள் எப்படி ?

10


09


08


07


06


05


04


03


02

01 

வெளிப்படுத்துவார்கள்.


मेरा प्यारा दोस्त्