அபுதாபி நகரப்பேருந்து
இதில் ஆடவர்களுக்கு 22 இருக்கைகளும்,
பூவையர்களுக்கு 12 இருக்கைகளும், ஊனமுற்றோரின்
ஊர்தி நிறுத்துவதற்கு ஒரு இடமும் மிகுதி இடங்கள் அனைத்தும் நின்று கொண்டு
பயணிக்கும் வகையில் அமைந்திருக்கும் ஆடவர்களின் அனைத்து இருக்கைகளும் நிறைந்து,
பூவையரின் 5 இருக்கைகள் காலியாகி இருக்க, நான் நின்று
கொண்டு பயணித்து கொண்டிருந்தேன் சூரிய பகவான்ஜி
மானிடர்களின் அக்கிரமச் செயல்களை தண்டிக்க வழியின்றி இதுதான் தருணமென உச்சியில்
நின்று சுட்டெரித்து கொண்டிருந்தார் பேருந்து ஒரு நிறுத்தத்தில் நிற்க, ஞானி
ஸ்ரீபூவு மாதிரி இருந்த பெரியவர் ஒருவர் ஏறினார் பார்த்ததுமே அவர் பாக்கிஸ்தானியர்
என்பது தெரிந்தது இருக்கைகள் அனைத்தும் மனிதர்கல்ள் அந்தப் பெரியவர் உட்காருவதற்கு யாருமே எழுந்து இடம்
கொடுக்க முன்வரவில்லை அவர் கம்பியை பிடித்துக் கொண்டு நின்றார் நானாக இருந்தால்
நிச்சயமாக எழுந்து இடம் கொடுப்பேன் ஆனால் நானே நின்று கொண்டுதானே வருகிறேன் என்ன
செய்ய முடியும் ? நான் பலமுறை விமானத்தில்
போகும் பொழுது பெரியவர்களுக்கு இருக்கை இல்லாவிட்டால் எனது இருக்கையை கொடுத்து
விட்டு நின்று கொண்டு பயணித்து இருக்கிறேன்.
நான் இப்படி நடந்து கொண்டதற்கு காரணமென்ன ? இவ்வகை உதவிகளை இறைவன் நேரலையில் காண்கிறான்
என்பதில் எமக்கு முழு நம்பிக்கை உண்டு ஆகவே உலகையறிந்த இரண்டேகால் வயதிலிருந்து
இந்த செயல்கள் அறிந்தோ, அறியாமலோ எம்மை பற்றிக்கொண்டு விட்டது இவைகளை செய்யாமல்
இறைவனையோ, இறைவியையோ, இறைதூதர்கள் என்று சொல்லப்படும் நித்தியானந்தா போன்ற
ஞானிகளையோ தொழுவதில் எமக்கு உடன்பாடில்லை காரணம் யாம் மதவாதி இல்லை மிதவாதி. இந்த
இடத்தில் இஸ்லாம் மதத்தில் சொல்லப்பட்டதை இந்தியச்சுவர்களில் எழுதியிருந்த ஒரு
வாசகம் எமது மனக்கண்ணில் வந்து செல்கிறது நல்லதை யார் சொன்னால் என்ன ? சொன்னது நல்லவையா ? இதைத்தான் பார்க்க
வேண்டும் இப்படிப் பார்த்திருந்தால் பெரியார் சொன்ன நல்லவைகளையும் ஆத்திகர்கள்
கேட்டிருக்கலாம், கிருபானந்த வாரியார் சொன்ன நல்லவைகளையும் நாத்திகர்கள்
கேட்டிருக்கலாம் இதுவே நல்ல சிந்தனையாளனுக்கு அழகு ஆனால் நம்மில் மனம்
அழுக்கானவர்களே அதிகம் ஆகவேதான் அ.தி.மு.க செய்வதை தி.மு.க. ஏற்றுக்கொள்வதில்லை,
தி.மு.க செய்வதை, அ.தி.மு.க. ஏற்றுக்கொள்வதில்லை. இதன் காரணமாக நாடு நஷ்டம் சரி
அது கிடக்கட்டுமே சாக்கடை நாம் வந்த விடயத்துக்குள் செல்வோமே.... அந்த சுவர்
வாசகம் இதோ...
//தேவையுடையவருக்கும், அனாதைகளுக்கும்
உதவுவதற்காக பெரும் முயற்சி கொள்பவர் இறைவனின் பாதையில் தீவிரமாக ஈடுபட்டிருப்பவரை
போன்றவராவார் இரவு முழுவதும் நின்று வணங்கக்கூடிய முறிக்காமல் தொடர்ந்து நோன்பு
வைக்கக்கூடிய மனிதரைப் போன்றவராவார்//
ஆனால் இன்றைய மனிதர்கள் இதில் நம்பிக்கை
வைத்து இப்படி இருக்கின்றார்களா ? என்பது நமக்கு
அவசியமில்லாத விசயம் சரி நம்ம பேருந்துக்குள் போவோமே... அந்தப் பெரியவருக்கு
யாருமே இடம் தராததால் ச்சே என்ன மனிதர்கள் என்று ஒவ்வொரு மனிதராக முகம் படித்தேன்
மனிதாபிமானம் யாருக்குமே இல்லையா ? மனிதநேயம் செத்து விட்டதா ? மனதுக்குள் அவர்களை வெறுத்து அழகான எனது
முகத்தால் கஷ்டப்பட்டு கொடூரமாக முறைத்தேன். முறைப்படி, வரிசைப்படி முறைத்து
வந்தவன் அந்தப் பெரியவரை பார்த்ததும் திடுக்கிட்டேன் காரணம் அவர் என்னை கர்ண
கொடூரமாய் முறைத்துக் கொண்டு நின்றார் பிறகுதான் எனக்கு புரிந்தது அவரா நீ ? உனக்காகவா நான் இரக்கப்பட்டேன் ? இத்தனை வருடங்களில் எத்தனை நாட்டுக்காரனை பார்த்திருப்பேன்,
எத்தனை காவல்துறையினரை சந்தித்து இருப்பேன் இதற்காக நமது உதவி செய்யும் மனப்போக்கை
மாற்றிக்கொள்ள முடியுமா ?
சரி அவர் ஏன் உங்களை முறைத்தார் ? என்று கேட்பது எனக்கு புரிகிறது நண்பர்
திரு. அப்பாதுரை அவர்களே... வேறென்ன ? எனது மீசைதான். மீசை அவரை
என்ன செய்தது ? அடுத்த பதிவில் பார்ப்போமே....
இதோ தலைப்பு.
मूछ మీసం മീശ ಮೀಸೆ Bigote ரவுலே Mustache شنـــبமீசை







