தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, செப்டம்பர் 27, 2014

My India, By Devakottaiyan

 वनदे मातरम्


வதனநூலில் (FACE BOOK) மலையாள நண்பர் ஒருவர் எனக்கு இந்த வாசகம் அடங்கிய புகைப்படத்தை அனுப்பி இருந்தார் படித்ததும் எனக்கு தோன்றியது எத்தனை சத்தியமான வார்த்தைகள், இதையேன் நாம் நம் தமிழர்கள் படிப்பதற்கு தமிழில் அனுப்பக் கூடாது ? எனதோன்றியது.



உடனே என் இனிய தமிழில் TYPE செய்தேன், பிறகு தோன்றியது இதையேன் தமிழர்கள் அல்லாத நம் இந்தியர்கள் அனைவரும் படிப்பதற்கு ஹிந்தியில் அனுப்பக் கூடாது ? எனதோன்றியது 

(தமிழர்களுக்கு மட்டும்தானே ஹிந்தி படிக்கத் தெரியாது)



உடனே எனது இந்திய மொழியான, ஹிந்தியில் TYPE செய்தேன். பிறகு தோன்றியது இதை அரேபியர்களும் படித்தால் என்ன ? எனதோன்றியது.



உடனே அரபியில் TYPE செய்தேன், பிறகு தோன்றியது இதையேன் நாம் உலகமே படிப்பதற்கு ஆங்கிலத்தில் அனுப்பக் கூடாது ? எனதோன்றியது.



உடனே ஆங்கிலத்தில் TYPE செய்தேன் பிறகு தோன்றியது இதுவரை தெரிந்த மொழிகளில் TYPE செய்து விட்டோம், தெரியாத மொழி ஒன்றில் செய்தால் என்ன ?



உடனே கொஞ்சம் பேசத் தெரிந்த தெலுகுவை, தேர்வு செய்து தெலுகுவில் TYPE செய்தேன், சத்தியமாக இந்த நிமிடம்வரை தெலுகு படிக்கத் தெரியாது ஆனால் நான்தான் இதை TYPE செய்தேன், எனது தெலுகு நண்பர்களான ராமுலு, சேகர், கௌதுவிடம் காண்பித்து, 100 % சரி செய்த பிறகே இதை வெளியிடுகிறேன்.

கடைசியில் என்ன ஆனது ? 

நான் தற்காலம் தெலுகு படித்துக் கொண்டு இருக்கிறேன்.

கடைசியாக இப்படியும் தோன்றியது, நாளை நாம் இறந்து விட்டாலும் எனது சந்ததிகள், எனது குரலை INTERNET டில் எப்பொழுதும் கேட்க கூடுமே, ஆகவே இதை நாமே படித்துக் காண்பித்து நமது குரலை பதிவு செய்தால் என்ன ? 

விளைவு இதோ.....

காணொளி
(Please ask Audio Voice)

இந்தப் பதிவை எமது இனிய நண்பர் திரு. துளசிதரன் தில்லை அகத்து மற்றும் திருமதி. கீதா 
அவர்களுக்காக வெளி இடுகின்றேன் - கில்லர்ஜி.

செவ்வாய், செப்டம்பர் 23, 2014

ஔவையார் TRANSPORT

 ஞானி ஸ்ரீபூவு துணைவியார்
 
 என்னை கல்லாக்கி விட்டு பருந்தாய் பறந்தாய்.


அவள், என்மீது ன்பை பொழிந்தாள்
 
நான், அவள்மீது சையை தொடுத்தேன்
 
 என்னைக் காணும்போது ன்முகம் பூத்தாள்
 
அவள்மீது மான் கொண்டேன்
 
 எனக்கு லகமே நீதான் என்றாள்
 
அவள் மனதுடன் டுருவினேன்
 
 எனக்கு ல்லாமே நீதான் என்றாள்
 
அவளுக்காக ங்கத் தொடங்கினேன்
 
 என்னுயிருடன் க்கியமானாள்
 
 நாங்களிருவரும் ன்றாகவே
 
திரிந்தோம் வீதியெங்கும் டியாடி
 
 திடீரென வையார் டிரான்ஸ்போர்ட்
 
குறுக்கே வந்து மோதியவேகத்தில்
தூக்கியெறியப்பட்டாள் என்னவள்
அருகில் சென்று பார்த்தால் ?
 
அன்பே, உன்னைக்கானும்
போதெல்லாம்
கண்ணே, கனி இதழே
என்று வர்ணிப்பேன் இன்று
விபத்தில் சிக்கி சின்னாபின்னாமாகிய
உன்முகத்தைப் பார்த்து என்ன
சொல்வேன் ஓ....விதியே
நீயே பதில்ச்சொல்.
சாம்பசிவம்-
என்ன கொடுமை சரவணன் இது, ஆக்ஸிடெண்ட்டான மூஞ்சியப் பார்த்தாக்கூடவா, கவிதை வரும் ?
F.P-11 Sep 2011

வெள்ளி, செப்டம்பர் 19, 2014

Dr. வடுகநாதன்.

இப்பொழுதெல்லாம், எதற்கெடுத்தாலும் பதவி கொடுக்கிறார்கள், பட்டமளிப்பு கொடுக்கிறார்கள் அதற்க்கு ஒருவிழா வேறு நடத்துகிறார்கள் அந்த பதவிகளுக்கும், பட்டங்களுக்கும் அவர்களுக்கு தகுதி உள்ளாதா ? என்பதைப்பற்றி யாருக்கும் அக்கறையில்லை, ராணுவ அதிகாரியாக நடித்ததற்காக ராணுவத்தில் கௌரவபதவி, கிரிக்கெட்டில் விளையாண்டதற்காக விஞ்ஞானிகளுக்கு கொடுக்ககூடிய விருது, போக்கிரியாக நடித்துக்காண்பித்து மக்களுக்கு நல்லவிசயத்தை சொல்லி கொடுத்தவருக்கு டாக்டர் பட்டம், இதெற்கெல்லாம் பிண்ணணி அரசியல்வாதிகள் ஒருபுறம் கொடுத்துவிட்டு மறுபுறம் வேறுவிதமான ஆதாயத்தை தேடும் தேடுதல் வேட்டை, இவையெல்லாம் பாமரப்பய மக்களுக்கு புரியாது, புரிந்தாலும் கேட்கமுடியாது, வாக்குரிமை பெற்று அதிகாரப்பூர்வமாய் ஓட்டளித்தவர்கள் கூட தங்களது சாலைவசதி, மின்சாரவசதி, மருத்துவவசதி, அடிப்படை வசதிகளைக்கூட கேட்க முடியாதபோது இதெல்லாம் நினைத்துப்பார்க்கவே முடியாததுதான், ஒருகாலத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் மிகஉயரிய மனிதராக மதிக்கப்பட்டார், ஆனால் இன்று பணம் கொடுத்தால் கல்லூரிக்கு போகாமலே கிடைத்துவிடும் M.B.B.S டாக்டர் பட்டத்தைவிட, மலிவாக போனாலும் பரவாயில்லை, அதற்க்கும் கீழே சிறுவர்கள் நூலில்கட்டி பறக்கவிடும் பட்டம்போல் ஆகிவிட்டதுதான் வேதனை, டாக்டர் பட்டத்தால் அந்த மனிதர்களுக்கு மரியாதை வரலாம், மனிதர்களால் அந்த பட்டத்திற்க்கு இழுக்கு வரக்கூடாது. என்பதுதான் எமது வாதம், இனியெனும் கடுகு வியாபாரம் செய்ததற்காக வடுகநாதனுக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுக்காலிருந்தால் சரிதான்.
வாழ்க ! ()னநாயகம்.
Video
(Please ask Audio Voice)


ஞாயிறு, செப்டம்பர் 14, 2014

விருது


அலுவலகத்தில் வழக்கம் போல மண்டையை காய வைத்து விட்டார்கள் வேறு யார் ? அரேபியப் பெண்கள்தான் (My Office Staff) வீட்டுக்கு வந்து வழக்கம் போல் கணினியை திறந்து டாஸ்போர்ட்க்கு போனேன் அதிர்ச்சி பயப்படாதீர்கள் இன்ப அதிர்ச்சிதான் அதுவும் 1400 வோட்ஸ் இருக்கும் என்று நினைக்கிறேன் அப்படி என்ன அதிர்ச்சி ? 

எனது இனிய நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார் 

''அன்பு நண்பரே வணக்கம் விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்'' 
என்று நண்பர் கணித்திருக்கிறார் என்றால் சரியாகத்தானே இருக்க வேண்டும் அப்படியானால் எனக்கு(ம்) தகுதி இருக்கிறாதா ? என ஆலோசித்து கொண்டு இருக்கும் பொழுது மற்றொரு நண்பர் 'தளிர்' சுரேஷ் அவர்களிடமிருந்தும் ஒரு விருது ஆஹா என்ன செய்வேன்... ஏற்கனவே காய்ந்த மண்டை இப்பொழுது தலைகால் புரியாமல்.... இதைப்பெற சில விதிமுறைகள் கொடுத்திருந்தார்கள்.




01. விருதினை கொடுத்த தளத்தினை பகிர வேண்டும்.
(பகிர்ந்திடுவோம்)
02. விருதினை தளத்தில் பதிய வேண்டும்.
(பதிந்திடுவோம்)
03. குறைந்தது ஐந்து பேருக்கு விருதினை பகிர வேண்டும்
(பகிர்ந்திடுவோம்)
04. விருதினை பெற்ற நான் என்னைப் பற்றி சொல்ல வேண்டும்
(இங்கேதான் இடிக்குது என்னைப்பற்றி சொல்ல என்ன இருக்கு ?)
வேறு வழியின்றி என்னுள் என்னைத் தேடினேன்...


01. அம்மையப்பன் வைத்த திருநாமம் – கில்லர்.


02. அடியேன் போட்டுக் கொண்ட நாமம் – கில்லர்ஜி.


03. தி கிரேட் தேவகோட்டைக்காரன் எல்லாம் தெரியாது என்றாலும் ஏதோ தெரிந்து கொண்டவன்.


04. படிப்புத்தகுதி எனது இரு கைகளில் ஒரு கையில் உள்ள விரல்களைக்கூட முழுமையாக விரிக்க முடியாத அளவு, தற்போது எழுத, படிக்க, தட்டச்சு செய்யத் தெரிந்த மொழிகள் ஐந்து மட்டுமே, இது மேலும் தொடரலாம்.....


05. உங்களால் மூச்சு விடாமல் இருக்க முடியுமா ? ஆனால் என்னால் எழுதாமல் இருக்க முடியாது, காரணம் தமிழ் எழுத்தே எமது மூச்சு.. 2010-ல் வலைப்பூ தொடங்கியவன் அது தற்போதுதான் பூத்து மணம் வீசத் தொடங்கியுள்ளது... காரணம் பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மட்டம் வீக்கு
   
06. சமூகம் என்னை உயர்வாய் மதிக்க வேண்டும் என்ற குருட்டு ஆசையால் நமது இனிய இந்தியாவை விட்டு கடந்த பதினெட்டு ஆண்டுகளாக பணவாசம் தேடி (U.A.E) வந்து பேராசைக் கடலில் தத்தளித்துக் கொண்டு இருட்டுக்குள் வாழ்கிறேன்... வருகிறேன் கரையை நோக்கி இன்னும் சிறிது தூரமே எனக்கு கரைகள் தென்படுகின்றன.... தொட்டு விடும் தொலைவில் எனது பொக்கிஷங்களுடன் வாழும் சூழல்.

07. என்னுள் எழுந்த எனது ஆசைகளை என்னவள் மண்ணுள் புதையும்போது இணைத்து விட்டு, எனது இரண்டு பொக்கிஷங்களுக்காக (அன்புமகன் தமிழ்வாணன் & இனியமகள் ரூபலா) ஆசையின்றி வாழ்கிறேன் நடைபிணமாக... உயிருடன்.

விருது கொடுத்து கௌரவித்தவர்கள்
http://karanthaijayakumar.blogspot.com
http://thalirssb.blogspot.com


எனக்கும் விருது கொடுத்த நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கும், நண்பர் ''தளிர்'' சுரேஷ் அவர்களுக்கும், என்னை ஊக்குவித்து கருத்துரை வழங்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும், என்னைப் பெற்ற அன்னைக்கும், தாய்மொழி தமிழுக்கும் எனது வந்தனங்கள்.



அடுத்து நானும் நண்பர்களுக்கு பகிர்ந்து வழங்க வேண்டுமாம்.


எனது அன்புக்குறியவர்கள்.. இதோ...

01. சகோதரர்
திரு. நடன சபாபதி

02. சகோதரி திருமதி. ஆர். உமையாள் காயத்ரி

03. சகோதரர் திரு. இ.பு.ஞானப்பிரகாசன்

04. சகோதரி திருமதி. கமலா ஹரிஹரன்

05. சகோதரர் திரு. சே.குமார்

06. சகோதரி திருமதி. துளசி ஸ்ரீநிவாஸ்

07. சகோதரர் திரு. கிங் ராஜ்

 08. சகோதரர் திரு. வலிப்போக்கன்

09. சகோதரர் திரு. சாமானியன்

10. சகோதரர் திரு. உலகளந்த நம்பி



நன்றி... நன்றி... நன்றி..

சனி, செப்டம்பர் 13, 2014

Sweet Day in SWITZERLAND

You Want See Big size ? Just Click One Time Photo Inside.

SWITZERLAND நாட்டில், விசா முடியும் காலம் நெருங்கி விட்டதால் கூடுதலான இடங்களுக்கு செல்ல முடியவில்லை, SCHAFFHAUSEN என்ற ஊரில் RHEIN FALL இருக்கிறது புகைவண்டி நிலையத்திலிருந்து நடந்தே போய் விடலாம், நம்மூர் திருமூர்த்தி அருவி போலவே சிறிதான உயரத்திலிருந்து அருவி கொட்டுகிறது ஆனால் வேகம் கூடுதலானது, அதன் நடுவில் சிறியமலை படகில் போய் அதன் மேலே ஏறிச்சென்று சுற்றுப்புறத்தை காணமுடிகிறது, படகு தத்தளிக்கும்போது என்னைப் போன்ற பயந்த சுபாவம் உள்ளவர்களுக்கு அச்சமாகத்தான் இருக்கிறது, இரண்டு திசைகளிலும் பாலங்களில் புகைவண்டி செல்வது கண் கொள்ளாக்காட்சி, கண்ணாடி போன்ற தண்ணீரில் அறியவகை மீன்கள் நீந்திச் செல்வது அழகான காட்சி, மீன் பிடிப்பதற்கு SCHAFFHAUSEN நகராட்சி தடை செய்திருக்கிறது, 

அருவியில் விழப்போன ஒரு அமெரிக்கனின் புகைப்படக் கருவியை (CAMARA) எதிர்பாராத விதமாய் நான் சட்டென பிடித்து விட்டேன், அதற்கு நன்றி சொல்லாத அவன், 50 Dollar($) எடுத்து நீட்டினான் நான் அவனை முறைத்துப் பார்த்து விட்டு Throw Here என்று தண்ணீரைக் காட்டினேன், அவன் என்னை ஆச்சர்யமாய் பார்த்து மன்னிப்பு கேட்டு விட்டு, என்னை எந்த நாடென்று கேட்டான், நான் சொன்ன பிறகு சொன்னான், You or Great Indian என்று, அவன் வாயால் இந்தியனை GREAT என்று சொல்ல வாய்பளித்த இறைவனுக்கு, ஒட்டு மொத்த இந்தியனின் சார்பாக மனதிற்குள் நன்றி சொல்லிக் கொண்டேன்.

தெருக்களை ஒழுக்கமான முறையில் எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்கிறார்கள், சாலைகளில் பெரும்பாலும் மின்சார பேருந்துகளே அதிகம் செல்கிறது, இதற்கென தனியாக மின்கம்பங்கள் கிடையாது அதன் மின்சாரக் கம்பிகளை வீடுகளில்தான் இணைத்து இருக்கிறார்கள், ஏனெனில் பெரும்பாலும் பழமை வாய்ந்த வீடுகள், இடிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு, வட்டவடிவ சாலைகளில்கூட மின்சார இணைப்புகளோடு பேருந்து அழகாக செல்கிறது, பேருந்தில் ஓட்டுனர் மட்டுமே இருக்கிறார், பிரயாணச் சீட்டை நாமே பேருத்துக்குள் இருக்கும் தாணியங்கி இயந்திரத்தில், (SWISS FRANCS) நாணயத்தைப் போட்டால் பயணச்சீட்டும், பாக்கியும் வெளியே வரும் பெரும்பாலான இடங்களில் EURO () வைப்பெற மறுக்கிறார்கள், வங்கி சென்று பணமாற்றும் வரை கடன்அட்டையைத்தான் (Credit Card) உபயோகப்படுத்தினேன். 

இதில் ஆச்சர்யமான விசயம் பேருந்தில் ஏறிய நான் செல்ல வேண்டிய இடத்தை பதிவு செய்யும்போது SWISS FRANCS 2.80 கேட்டது, நான் 3.00 EURO () வை உள்ளே செலுத்தினேன் இயந்திரம் நொடிக்குள் பணமாற்றம் (Money Transfer)  செய்து பாக்கி 0.77 SWISS FRANCS சை வெளியே தள்ளியது,

உதவும் மனப்பான்மையில் ஆண்களைவிட, பெண்களே அதிகம் என்பதை அந்த நாட்டில் நான் காணமுடிந்தது, 

SWITZERLAND வங்கிகளைப்பற்றி, தெரிந்து கொள்ள முயற்சித்தேன் இதற்காக இரண்டு முறை பணம் மாற்ற சென்றேன், விபரம் தெரிவிக்கும் (Information  Section) இடத்தில் வேலை நேரம் முடிந்து விட்டது, வங்கியை புகைப்படம் மட்டுமே எடுத்து (தெரியாமல்) வரமுடிந்தது.

Coming More Photos' Swiss Part – 2
F.P- 12 Feb 2013