நம்ம சரக்கு மூட்டைகள்
செவ்வாய், டிசம்பர் 29, 2015
ஞாயிறு, டிசம்பர் 27, 2015
வாழ்வாதாரம்
இந்த சமூகத்தில் பலரும் கஷ்டப்படுவதற்கு முக்கிய காரணம் தன்தகுதிக்கு மீறிய வாழ்க்கை
வாழ, ஆசைப்படுவது மட்டுமல்ல அதை நடைமுறைப்படுத்துவது, இதற்காக கடன் வாங்குவது,
வட்டிக்கு வாங்குவது இதன் விளைவு வாழ்வாதாரம் உயர்வில் நிரந்தர சறுக்கல்.
(சம்பாரிப்பன் எல்லோருமே பணக்காரன் ஆகமுடியாது சேமிப்பவனே
பணக்காரன் ஆகமுடியும். 1980-ல் நாட்காட்டியில் நான்கண்ட
பொன்மொழி)
பணக்காரன் ஆவது இன்றைய சூழ்நிலையில்
பெரியகஷ்டம் ஒன்றுமில்லை, ஆனால் அதற்கு முதலில் கொஞ்சம் பணம் வேண்டும், இதுதான்
மிகப்பெரிய கஷ்டம் ஏனெனில் அந்த கொஞ்ச பணத்தை சேமிப்பதற்குள் நமது ஆயுளின் பகுதி காலம்
முடிந்து விடும் காரணம் குடும்பச்சுமை, அன்றாட விலைவாசி உயர்வு, புதிது புதிதாய்
வியாதிகள், கல்விக்கட்டணம், தங்க விலை உயர்வு, தங்கம் நமது வாழ்க்கையில் ஒரு
முக்கிய அங்கமாகி விட்டது ஏனெனில் மகளுக்கு கட்டாயம் வரதட்சினை கொடுத்தாக வேண்டும்,
விஞ்ஞானத்தின் அபார வளர்ச்சியால் புதிது புதிதாய் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களின்
வரவுகள், அவைகளை நாம் வாங்காமல் வாழமுடியாது ஏனெனில் அப்பொழுதுதான் சமூகத்தில்
சமமரியாதை கிடைக்கும், அதனால் கூடுதலாய் மின்சார செலவுகள், இத்யாதி, இத்யாதிகள் இந்த
கஷ்டங்களுக்கு மூலகாரணம் ஒட்டுமொத்த சமூகமே ! ஆம் நல்ல ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்தலின் அறியாமை, காரணம் நாம் ஏணியாகவே
இருந்து ஏற்றிவிட்டு ஏமாறுவதில் சுகம் கண்டு விட்டோம், ஏணியில் ஏறிப்போக
ஆசையில்லை, காலம் மாறி விட்டது மானிடா ! இன்று ஏணியே தானியங்கியாக மேலே போய் விட்டு கீழே வருகிறது அந்த இரும்பு ஏணிகூட
காலப்போக்கில் தன்னை மாற்றிக் கொள்ளும்போது நாமேன் மாற்று சிந்தனைக்கு வரக்கூடாது ? அப்படி வரவில்லை எனில் இதற்க்கு மாற்றுத்தீர்வு
ஆசையை துறக்க வேண்டியதுதான் வேறு வழியில்லை.
ஆகவே புத்தரின் போதனைப்படி நாம் ஆசையை ஒழிக்க வேண்டாம் ஆசை
என்பதை பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் எடுத்துக் கொண்டால் போதுமானது,
ஆசையில்லாமல் வாழ்வதுகூட விரக்தியை கொடுத்து விடும் பேராசை, பெரிய ஆசைகளை
தவிர்த்து சிறிய ஆசைகளுடன் வாழ நினைத்தால் சீறான, சிறப்பான வாழ்வே !
வியாழன், டிசம்பர் 24, 2015
மண்டபம், மண்ணைவளவன் and மண்டோதரி
தேவதையைப் போன்ற
அவளைப் பார்த்தேன்
என்னைப் பார்த்து
சிரித்தாள் என்னுள்
ஏதோ பாய்ந்தது போல்
இருந்தது ஏன் ? சிரித்தாள்
என்னைப் பார்த்து என்று
பாட
வேண்டும் போலிருந்தது
அவள் இடுப்பில்
மண் குடம் சம்மணமிட்டு
உட்கார்ந்து என்னைப்
பார்த்து கேலி
செய்கின்றதோ.. என்று எனக்கு தோன்றியது
ச்சே இந்தக் குடத்துக்கு
வந்த வாழ்க்கை நமக்கு வராதா ? ச்சே
ஏன் ? என் மனம் இப்படி களி மண்ணாய் இருக்கிறது அதனால்தான்
நமது வீட்டில் உனக்கு
மூளையே இல்லை உள்ளே களி மண்ணுதான்
இருக்கு என்று எல்லோருமே
சொல்கிறார்களோ இவளிடம் பேசலாமா ?
கொஞ்சம் தைரியத்தை வர
வழைத்துக் கொண்டு பக்கத்தில் சென்றேன்
என்ன ? என்பது போல் என்னை
பார்க்கவும் எந்த ஊர் ? என்றேன் மண்டபம்
தான் என்றவள் உங்க பேரென்ன ? என்றாள் மண்ணை வளவன் என்றவன்
உங்கள் பேரு ? மண்டோதரி என்றவள் ஏன் ? இல்லை தாகமாக இருக்கு
குடிக்க தண்ணி வேணும் என்றேன் சரி என்று பானையை கவிழ்த்தி
குடி என்றாள் நான் குனிந்து குடிக்கும் பொழுது
பொரை ஏறி இரும
அவள் சட்டென பானையை
விட்டு எனது தலையில் தட்டி விட
பானை கீழே விழுந்ததில்
சுக்கு 100 ஆகியது மண்ணிலிருந்து
வந்த களி மண் பானை மீண்டும் மண்ணுக்கே போனது
இவளுக்கு நாம் பானை
வாங்கி கொடுக்க வேண்டும்
சந்தைக்கு வர முடியுமா ? என்றேன் ஏன் ? உனக்கு
வேறு பானை வாங்கித்
தருகிறேன் வாங்க
போகலாம் இப்படித் தொடங்கியது
எங்கள் காதல் இப்பொழுது
பானை போன்ற வயிறு
அவளுக்கு காரணம்
இது 8ம் மாதம்
ஹி... ஹி...
Chiwas Regal சிவசம்போ-
போங்கடா நீங்களும் உங்க காதலும்...
சாம்பசிவம்-
4 வார்த்தைகளில் கதை ஆகிப்போச்சே ?
சிவாதாமஸ்அலி-
இவங்களையெல்லாம் பித்தளைப் பானையாலேயே
அடிக்கனும்.
குறிப்பு – முன்பு இலங்கை வாணொலியில் கதை
சொல்வார்கள் கேட்டு இருப்பீர்கள் ஒரே நபர் இரண்டு விதமாக பேசுவது அதைப்போல நாமும்
செய்தால் என்ன ? என்ற தோன்றியதின் விளைவு.
அடிக்குறிப்பு - இப்பதிவை பானை வடிவில் எழுதியமைத்தேன் சில கணினியில் வேறு மாதிரியாக தெரியலாம் அப்படி இருந்தால் கீ-போட்டில் Ctrl கண்ட்ரோல் பட்டனில் ஒரு விரலை அழுத்திக்கொண்டு எலியை சிறியதாக உருட்டுங்கள் பானையின் வடிவம் கிடைத்து விடும் விளக்கம் கொடுப்பதால் தவறாக கருதவேண்டாம் சிலருக்கு தெரியாமல் இருக்ககூடும் ஆகவே சொன்னேன் - கில்லர்ஜி
புதன், டிசம்பர் 23, 2015
மரணத்தின் கொல்லைவாசல்
இணையத்தில் எடுத்தேன் இதே
நிலைப்பாடு அன்றைய விபத்து
நான் மரணத்தின்
தலைவாசலில் நின்றவன் அல்ல ! மரணத்தின் கொல்லை வாசலுக்கே
சென்று வந்தவன்.
ஆம், என் இனிய தேவகோட்டையிலிருந்து... (வருடம் 2010 சூன் மாதம்) சென்னை விமான நிலையத்தை நோக்கி முந்னூறு மைல்கள் பேருந்தில் கடந்து விட்டேன் கடைசி ஐம்பதில்தான் விதியின் விளையாட்டு அதிகாலை சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த இரும்பு பட்டா கனரக சரக்கு ஊர்தியின் பின்புறத்தை விரைந்து வந்து சத்தத்துடன் முத்தமிட்டது எனது பேருந்து. பயணிகள் அனைவருமே நித்திரையில் ஒரே கூக்குரல் பிறகு
மயான அமைதி நடந்தது என்ன ? தெளிந்த பின் மீண்டும் கூக்குரல்கள், கதறல்கள், கண்ணீர்கள் நான் ஒரு தெளிவிற்கு வந்தவுடன் உடைந்த சன்னல் கண்ணாடிகளை எனது ஷூக்காலால் தேய்த்து அதன் வழியே வெளியே குதித்தேன் முன்புறம் சென்று ஓட்டுனரை பார்த்தேன் பேருந்தின் இடிபாடுகளுக்கு நடுவே உட்கார்ந்து இருந்தவரை காலை பிடித்து அழைத்தேன் பிறகுதான் தெரிந்தது அவர் இறந்து விட்ட விசயம் நேற்றிரவு திருச்சியில் என்னுடன் பேசிக்கொண்டே தேநீர் அருந்திய மற்றொரு ஓட்டுனர் ஓட்டுனரின் பின்புறத்தில் நசுக்கிய இடிபாடுகளுடன் பிணமாய் என் வாழ்வில் இறந்தவர்களை மண்ணில் புதைக்கும்போது பார்த்து இருக்கிறேன் முதன் முதலாக பேருந்தின் இடிபாடுகளுக்குள் புதையுண்டவர்களை அன்றுதான் கண்டேன்.
தேவகோட்டையில் ஏறிய எனக்கு ஆறாவது வரிசையில் இருக்கை ஆனால் பேருந்து புறப்பட்டதும் முதல் வரிசை காலியாக கிடந்ததால் அதில் உட்கார்ந்து வந்தேன் காரைக்குடி பேருந்து நிலையம் வந்ததும் ஏறிய பெரியவர் ஒருவர் தம்பி இது நான் ஏற்கனவே பதிவு செய்த என்னுடைய இருக்கை உங்கள் இடத்துக்கு செல்லுங்கள் என்றார் நானும் ஒன்றும் சொல்ல முடியாமல் எனது ஆறாவது வரிசைக்கு வந்து உட்கார்ந்தேன் அந்தப் பெரியவர் இப்போது பிய்க்கப்பட்ட சடலமாய் கண்டதும் எனது கண்ணீர் ஆறாய் பெருகியது.
முதல் நாள் மாலை காரைக்குடியில் ஏறிய ஒரு முதியவர் எனது முன் ஐந்தாவது வரிசை இருக்கையில் அமரும்போதே நாராயணா என்று அமர்ந்தார் இன்று காலை அமரராகி அந்த நாராயணனே வைகுண்டத்திற்கு அழைத்துக் கொண்டார் ஒரு வேளை பயணப் பேருந்தின் பெயர் நாராயணமூர்த்தி என்பதாலோ ? மோதிய வேகத்தில் பகுதி பேருந்து எனக்கு முன் ஐந்தாவது இருக்கை வரை நசுங்கி நுழைவாயில் அடைத்துக் கொண்டது கதறிய குழந்தைகளை சன்னல் வழியே வெளியே வாங்கினேன் என்னால் முடிந்தவரை உதவினேன் சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்த முயற்சித்தேன் யாருமே நிறுத்தவில்லை மனிதாபிமானம் யாருக்குமே இல்லையா ? இருக்கிறது இருப்பினும் இல்லை காரணம் நமது சுதந்திர இந்தியாவின் சட்ட திட்டங்கள் பயம் பயம் சராசரி வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற பயம் இந்திய அரசியல் சட்டம் எறிக்கப்பட வேண்டிய ஒன்று இதை நான் சொல்லவில்லை சட்ட அமைப்புக் குழுவில் இடம் பெற்றிருந்த மருத்துவர் அம்பேத்கர் சொன்னது. ஓடி ஓடி உதவிய என்னால் ஓட முடியவில்லை காரணம் பிறகுதான் புரிந்தது எனது காலில் அடி, நெஞ்சில் அடி, நாடியில் அடி தண்ணீரில் குளித்திருந்த எனது உடைகள் முதன் முதலாக எனது குருதியிலும் குளித்தது. அந்நிலையிலும் எனக்கு பிறருக்கு உதவும் மனப்பான்மையை கொடுத்த இறைவனுக்கு (?) நன்றி.
நீ.........ண்.........ட.... இடை.....வெளி....க்கு....பின்னே
தீ அணைப்பு
வீரர்கள்
வந்தார்கள்,
நின்றார்கள்,
சென்றார்கள்.
மருத்துவமனை விரைவூர்தி
வந்தது,
நின்றது,
சென்றது.
தொலைக்காட்சிகாரர்கள்
வந்தார்கள,
பிடித்தார்கள்,
சென்றார்கள்.
பத்திரிக்கைக்காரர்கள்
வந்தார்கள்,
எடுத்தார்கள்,
சென்றார்கள்.
நானும் சென்றேன் கடைசியாக மருத்துவமனை விரைவூர்தியில் செங்கற்பட்டு அரசாங்க
மருத்துவமனைக்கு என்னுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருவர் இறக்கி உள்ளே கொண்டு
செல்ல ஊழியர்கள் இல்லை மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை எனக்கு முன்னே சென்ற
பயணிகளில் பலரும் சடலங்களாய் சற்றுமுன் மரண வேதனையில் என்கண் முன்னே துடித்தவர்கள்
இறந்து விட்டார்கள் இல்லை இறக்கடிக்கப்பட்டார்கள் இப்போது செவிலித்தாய்கள் மட்டுமே
இறந்தவர்களை கணக்கு எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் இந்நிலையில் எனக்கு எங்கே ? கிடைக்கும்
சிகிச்சை நான் நியாயம் கேட்டேன் கத்தினேன் ஒன்றும் கிடைக்கவில்லை பிறகுதான் புரிந்தது
நான் நின்று கொண்டிருப்பது எனது இந்தியா வென்று வேதனையில் காறித்துப்பி விட்டு வாயிலிருந்த
எனது ரத்தத்தைத்தான்
எனது உடையை மாற்றிக்கொண்டு என்னை நானே
சுத்தப்படுத்திக் கொண்டு விமான நிலையம் வந்து விட்டேன் சிறிது நேரத்தில் நாடியில்
அடிபட்ட எனது முகம் தெற்கும் மேற்குமாய் இழுத்துக் கொண்டு எனக்கே என்னை அடையாளம்
காண்பதற்கு கஷ்டமாக இருந்தது பற்களுக்குள் சிக்கிய நாக்கு Cut ஆகி விட்டது பேச்சு குழறுபடியாகியது சுங்க அதிகாரிகள் என்னை சந்தேகமாகவே
பார்த்தார்கள் அவர்களை சமாளிக்க வாயில் கசிந்த ரத்தத்தை நானே கஷ்டப்பட்டு
குடித்துக்ரரரர கொண்டு இருந்தேன் ஒரு வழியாக விமானத்துக்குள் வந்ததும் பணிப்பெண்ணிடம்
சுகமில்லை என்று சொல்லி போர்வை வாங்கி முழுவதும் தலையைப் போர்த்திக் கொண்டு உணவு
கொண்டு வரும் போதுகூட தலையை மட்டும் அசைத்து வேண்டாம் என்றவன் வேதனையில் உறங்கி
விட்டேன் துபாய் விமான நிலையத்திலும் சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் முகம் ஏன் ? இப்படி
இருக்கிறது எனக்கேட்க சென்னை கழிவறையில் வழுக்கி விழுந்து விட்டேன் உடனடியாக
மருத்துவமனை போகவேண்டும் என்று சொல்லி துரிதமாக வெளியில் வந்தேன் சீருந்துடன்
நின்ற நண்பர்களுக்கு என்னை அடையாளம் தெரியாத நிலையில் எனது முகம் பிறகு அபுதாபி
வந்து முதல் வேளையாக எனது நீண்ட மீசையை சிறிதாக Cut செய்து விட்டு காரணம் மீசையே வேறு மாதிரியான கோணத்தில் இருந்தது மருத்துவமனை
செல்ல மருத்துவர்களுக்கு ஆச்சர்யம் காரணம் இவ்வளவு பெரிய அடியை வாங்கி கொண்டு எப்படி
சுமார் 12 மணி நேரம் சிகிச்சை எடுக்காமல் நாடு விட்டு நாடு வந்தாய் ? நாடி
எலும்பில் முறிவு தொடர்ந்து சிகிச்சை எடுத்தேன் இந்த மருத்துவர்களின் லட்சணம்
இரண்டு மாதங்கள் நாடியில் சீழ் படிந்து ஜலம் வந்தது பிறகு அதற்கும் சிகிச்சை
தொடர்ந்து இரண்டு வருடங்களாக பேச்சும் தெளிவாக வருவது கஷ்டமாக இருந்தது இன்னும்
கூட நாடியில் அடிபட்ட உணர்வு உண்டு.
தாங்கள் நினைக்கலாம் பயணத்தை ரத்து
செய்திருக்கலாமே...
அப்படி செய்தால் மருத்துவமனை போகவேண்டும், சிகிச்சை எடுத்தவுடன் ஓய்வு வேண்டும், தேவகோட்டை திரும்பினால் பத்து மணி நேரமாவது மீண்டும் பேருந்து பயணம் செய்ய வேண்டும், வீட்டில் சொன்னால் அனைவரது மனமும் வேதனைப்படும், சொந்த பந்தங்கள் தேவகோட்டை படையெடுத்து வரும், மருத்துமனை செலவு கையை பிகடிக்கும், விமான பயணச்சீட்டு வீணாகி மீண்டும் வேறு சீட்டு எடுக்க வேண்டும், முக்கியமாக மறுநாள் நான் பணியில் இருக்க வேண்டும், அலுவகத்தில் தாமதமானதற்கு வேண்டிய ஆதார சான்றிதழ்கள் வேண்டும், இங்கு பணியில் நுழைந்து அட்டையை பதிந்து விட்டால் மருத்துவ அட்டையில் இலவசமாக பார்த்துக் கொள்ளலாம், பிறகு என்னை நானே பராமரித்துக் கொள்வேன் பிறருக்கு துன்பம் கொடுப்பதை நான் என்றுமே விரும்பாதவன் நாளைய எனது கடைசி காலத்தில் என்னை நானே பராமரித்துக் கொள்வதற்கான ஒத்திகையாக இதை நான் பரீட்சை செய்து கொண்டேன்.
இதிலும்கூட எனக்கு குடும்பத்துக்குள் சில உண்மைகளை
புரிந்து கொள்ள முடிந்தது ஒவ்வொரு மனிதனுக்கும் சரி, மனுஷிக்கும் சரி அவர்களின்
வாழ்க்கைத் துணையைத் தவிர வேறொரு தோழமை இவ் உலகில் வேறு யாருமில்லை இந்த தருணங்கள்தான்
என்னவளை நான் தினம் நினைத்துக் கொண்டு வேதனைப்படும் வாய்ப்பை மேலும் அதிகமாக்கியது
அதுவே இல்லாத அவள் மீது அழுத்தமான ஆழமான காதலை வளர்த்தது, வளர்த்துக் கொண்டு
இருக்கின்றது இன்று வரை.
நான் கடந்த பத்தொன்பது (From 1996 to 2015) ஆண்டுகளாக அரபு நாட்டில் வாழ்ந்து
பழக்கப்பட்டதால் பொறுப்பற்ற சமூக அவலங்களைக் கண்டு மனம் பொறுக்க முடியவில்லை அரேபியர்களுக்கு
தன்னை ஆள்பவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை இருப்பினும் இவர்களுக்கு நல்ல வாழ்க்கை
தேர்ந்தெடுக்கும் உரிமையுள்ள நமக்கோ ?
இதற்கு
காரணம்
சாபக்கேடா ?
துரதிஷ்டமா ?
அறியாமையா ?
முட்டாள்த்தனமா ?
ஒரு வேளை செய்வினையோ ? ? ?
திங்கள், டிசம்பர் 21, 2015
கிலி கிளி கிழி
இந்தப் பதிவுக்கு
முதன் முதலாக வருபவர்கள் இதன் தொடர்பான கீழ்காணும் பதிவுகளை படித்த பிறகு
தொடர்ந்தால் பதிவின் காரணங்கள் விளங்கும் இதில் கொக்கி போட்டு தொடர் பதிவாக்கிய
அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி.
சடையாண்டி, மந்தக்கட்டி, மொக்கைராசு மூவரும் வாழ்க்கையில் முதன் முறையாக மாருதி
சொகுசு வேனில் போவதால் சந்தோஷமாக சிரித்துக் கொண்டு டாக்டர் K 7 ஐக் காண.... போய்க்
கொண்டிருந்தனர் டிரைவிங் ஸீட்டிலும், முன்புற அடுத்த ஸீட்டிலும் இருவர் யாருமே
பேசவில்லை ஸ்பீக்கரில் மறைந்த T.M.S.
// யாரடா மனிதன் இங்கே கூட்டி வா அவனை இங்கே இறைவன் படைப்பில் குரங்குதான் நீ
இங்கே //
என்று ஆணையிட்டுக் கொண்டு
இருந்தார் வேன் நகரை விட்டு ஒதுக்குப்புறமாய் பிரமாண்டமாய் கட்டியிருந்த கில்லிங்
ஹோஸ்பிட்டலை நோக்கி சென்றது எமெர்சென்ஸி வழியாக போனது பார்க்கிங் செல்லாமல்
பின்புறமுள்ள பிரத்யேகமான வழியில் சென்று நின்றதும் ஒருவன் இறங்கி வந்து.
ம் இறங்குங்க...
மந்தக்கட்டி கேட்டான்.
என்னங்க
பின்னாலே கொண்டு வந்துட்டீங்க ?
இது முக்கியமானவங்களுக்கு நீங்க விஐபி இல்லையா... அதனாலதான், டேய் மாரி இவங்க
மூணு பேரையும் மேலே டாக்டர் ரூமுக்கு கூட்டிப்போ.
வாங்க... ஸார்.
ஸாரா... நம்மளையும் ஸார் ? மனம் விமலன் சாரின்
சிட்டுக் குருவியாய் பறந்தது மூவரையும் கூட்டிப்போனவன் பக்கவாட்டில் இருந்த
லிப்டில் நுழைந்து 6 வது தளத்தின் பொத்தானை அமுக்கவும் லிப்ட்
விர்ர்ர்ர்ர்ர்ர் என்று மேலெழும்பவும் வாழ்வில் முதல் முறையாக லிப்டில் போனதும்
மூவேந்தர்களுக்கும் மகிழ்ச்சி சில நொடிகளில் நின்று விட வெளியேறி பக்கவாட்டில்
இருந்த மாடிப்படிகளின் வழியே மேலே அழைத்துப்போய் கதவைத் திறந்தான் கட்டடத்தின்
ரூப் திறந்தவெளி காற்று உய்ய்ய்ய்ய் என்று வீசியது A/c in மிஷின்கள் ஓடிக்கொண்டு
இருந்தன, தெற்கு மூலையில் ப்ளாஸ்டிக் வாட்டர் டாங்க் பிரமாண்டமாய் உட்கார்ந்து
இருந்தது காம்பவுண்ட் சுவருக்கு மேல்ன அடிக்கு கனமான கம்பி வலையால் சுற்றுசுவர் சடையாண்டி கம்பிகளின் ஓட்டை வழியாக
தூரத்தில் வலைப்பதிவர்கள் பகவான்ஜியும், கில்லர்ஜியும் பார்ட்னராக வாங்கிப்போட்ட
கொங்காணி ஆறு ஓடிக்கொண்டிருக்க சரக்கு ரயில் வந்து கொண்டு
இருந்தது பக்கக்தில் தனது வீட்டை கண்டதும் கத்தினான்..
இங்கே
வாங்கப்பா ய்யேன் வூடு தெரியுதுப்பா..
ஓடி வந்த மந்தக்கட்டியும், மொக்கைராசும் பார்த்து விட்டு...
அட ஆமாலே..
என்றனர் அழைத்து வந்தவன் சொன்னான் ஸார் அங்கேயெல்லாம் போகாதீங்க டாக்டர்
ரூமுக்கு வாங்க மறுபுறத்தில் இருந்த கதவைத்திறக்க பிரமாண்டமான ஹால் பிறகு
பக்கவாட்டில் இருந்த அறையைத் திறந்து உள்ளே போங்க ஸார் மொக்கைராசு கேட்டான்
டாக்டர் இங்கேயா... இருக்காரு... ?
ஆமா உள்ளே உட்காருங்க... அவர்கள் உள்ளே போனதும் படக்கென்று கதவைப்பூட்டினான்
பூட்டியதும் மூவருக்கும் மனதில் கிலியாகியது காரணம் அறைரையிருட்டு 0 வாட்ஸ் பல்பு அதுவும்கூட அரைக்கரண்டு என்பது போல்
மூலை ஓரத்தில் 4 நபர்கள் உட்காரும் அளவில் நீண்ட சேர்
பக்கத்தில் தண்ணீர்ப் பானையும், டம்ளரும் மூவருமே தண்ணீர் குடித்தனர் உட்கார்ந்து
கொண்டு ஒருவரையெருவர் மாறி மாறிப் பார்த்தனர் பேசவில்லை சரியாக பனிரண்டு நிமிடம் கழித்து கதவு திறக்கப்பட்டது
பின்புறமும் இருட்டு ஆஜாகு பாகுவான ஆறு பேர் நுழைந்தவுடன் மூடப்பட்டது ஒருகுரல் கேட்டது மூணுபேரும் ட்ரெஸ் எல்லாம் கழட்டி
அந்தச் சேருல போடுங்கடா...
ய்....யேன்.. ?
மந்தக்கட்டி கேட்க.. போடுங்கடாங்கறேன்...
அடுத்த நொடி இருவரும் வேட்டி சட்டையை கழட்டிப்போட்டு சுடர்மணி ஜட்டியுடன்...
சடையாண்டி வேட்டி மட்டுமே கழட்டி விட்டு வழக்கமான பின்புறம் ஜன்னல் வைத்த
டவுசருடன்.. உங்கள்ல சடையாண்டி எவன்டா... ? ந்....நான்தேன் சில நொடிகள்தான்...
பிறகு... சுமார் 38 நிமிடங்கள், 47 நொடிகள்.... தொடர்ந்து.... இடி
முழக்கமாய்....
‘’அய்யோ‘’ ‘’அம்மா’’ ‘’ஆத்தா’’ ‘’விட்ருங்க’’ ‘’ஐயய்யோ’’ ‘’கடவுளே’’ ‘’அம்...மா’’ ‘’மாரியாத்தா’’ தொடர்ந்து... மீண்டும் ‘’அய்யோ’’ ‘’அம்மா’’ ‘’ஆத்தா’’ ‘’விட்ருங்க’’ ‘’ஐயய்யோ’’ ‘’கடவுளே’’ ‘’அம்...மா’’ ‘’மாரியாத்தா’’
இப்படியான அலறல் இல்லை கதறல் ஒலி ஒழிந்து ஒளி பிறந்தது அறையில்
தரையில் சக்கையாக மொக்கைராசு, மந்தக்கட்டி, சடையாண்டி ஜன்னல் டவுடரில் பகுதி கீழே
சிதறிக் கிடந்தது மஞ்சள் நிறத்தில் துணியிலான ஸ்டிக்கர் அதில் சுடர்மணி என்று
எழுதி கீழே கிடந்தது... இத்தனைக்கும் மூவருக்குமே உடலில் சிறிய அளவில் நககீறலோ,
ஒருதுளி ரத்தமோ வரவில்லை முகமும் சிதைக்கப் படவில்லை கிலி கிளி கிழித்து எடுத்து விட்டார்கள்
ஒருவன் கதவைத்திறந்து விட நர்ஸிங் ட்ரெஸ்ஸில் பகுதி முகத்தை மூடிய இரண்டு ஆண்கள் வந்து அவர்களது வேலையை கவனிக்க மற்ற ஆறு பேரும் களைப்பு தீர தண்ணீர் குடித்தார்கள் நர்ஸெஸ்
மூவருக்கும் முகத்தைத் தவிற உடலில் அங்கங்கு திட்டுத்திட்டாய் சிகப்பாய் இருந்த
இடங்களில் மருந்து தடவினார்கள் ஆளுக்கொரு ஊசி இடுப்பில் போட்டார்கள் வெண்ணீர்
டவலால் ஒற்றி எடுத்தார்கள் தலை முடியை சீவி விட்டார்கள் பிறகு கண்களால் ஜாடை
காண்பித்து விட்டு வெளியேற... ஒருவன் சொன்னான்.
எந்திரிச்சு ட்ரெஸ்ஸை போடுங்கடா...
தட்டுத் தடுமாறி மூவரும் எழுந்து வேட்டி சட்டையை எடுத்துப் போட்டுக்கொள்ள
சேரில் உட்காருங்கடா... ஒருவன் செல்லை எடுத்து.
ம்.. கொண்டு வா...
சிறிது நேரத்தில் கதவு திறக்க கம கம என்று பிரியாணி வாசம் திண்டுக்கல்
தலைப்பாக்கட்டு போல.. ஒருவன் பெரிய தட்டில் அறையின் மையத்தில் கீழே வைத்து விட்டு
போனான்.
டேய் மூணு பேரும் சாப்புடுங்கடா... இப்போ திரும்பி
வருவோம்.
சொல்லி விட்டு கதவைச்சாத்தி விட்டு வெளியேறினார்கள் ஆறு பேரும் அறையில் மூவேந்தர்கள் மட்டுமே
அவர்களுக்கு இப்பொழுது என்ன நடந்தது ? என்பதை கணிக்கவே முடியவில்லை கண்மூடிகண்
திறப்பதற்க்குள் எவ்வளவு வேகமாய் முடிந்து விட்டது வாழ்நாளில் எவ்வளவோ இடங்களில்,
எவ்வளவோ நபர்களிடம் ஏன்... போலீஸ் ஸ்டேஷனில் கூட அடி
வாங்கி மூஞ்சி முகரைகளை பெயர்த்து விட்டு இருக்கின்றார்கள் ஆனால் இவர்கள் காயமே இல்லாமல் அடிக்கின்றார்களே....
எப்படி ? நம்மூர்காரங்கே அடி மாதிரி இல்லையே...
மந்தக்கட்டி கேட்டான்.
ஏலே,
இவங்கே எந்த ஊருக்காரங்கெலே இந்த அடி அடிக்கிறாங்கே... ?
மேல் விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் மொக்கைராசு தட்டில்
இருக்கும் பிரியாணியை வாயில் எச்சில் ஒழுக பார்த்துக் கொண்டிருந்தான் சடையாண்டி.
ஏலே,
கேட்டது காதுல விழலே ?
ஏப்பா,
இவங்கே தேவகோட்டைக்காரங்களேதாம்பா.
எப்படிலே சொல்லுதே
சடையா ?
நான்
கல்யாணத்தப்போ மதினியா வீட்டுக்கு நானும் யேம் பொஞ்சாதியும் போயிருந்தோம்பா...
அப்ப, டாஸ்மாக்ல 7 ½ ஆயிடுச்சுப்பா
அப்போ இதே மாதிரிதான் அஞ்சு பேரு
என்னையும், யேம் சகலைப் பாடியையும் ரவுண்டு கட்டி அடிச்சாங்கே.. இவங்கே கட்டாயமா
தேவகோட்டைதான் சாப்புடுவோம்பா பசிக்குது ராத்திரி வூட்டுக்கு போகலையா பொஞ்சாதி கஞ்சி ஊத்தலபா...
ஏலே,
அதுலே வெசத்தை வச்சுருப்பாங்கலே...
சட்டென நினைவு தெளிந்த மொக்கைராசு...
ஏலே அப்படினா... பிரியாணியை திம்போம்லே..
என்னலே ... வெசமுன்னு
சொல்லுதேன் திம்போம்முங்குறே ... புத்தி பெரண்டு போச்சாலே ?
ஆமாலே பாத்தியாலே ? ஊத்துக்குழிகாரங்கே மாதிரி
ஊமைக்குத்தா... குத்துறாங்கெலே நம்மளைப்பாத்தா அடி வாங்குனவங்கே மாதிரியாலே இருக்கு மாப்புள்ளே மாதிரி ஜோவடிச்சுட்டு
போறாங்கே.. வலி உசுரு போவுதுலே... அதுக்கு பிரியாணியத் துன்னுபுட்டு சாவோம்லே..
நான் வாழ்க்கையில பிரியாணியே இப்பத்தான் பாக்குறேன்லே.. அவங்கே வந்தா ஏன்டா
திங்கலைனு... அடிப்பாங்கலே.. என்னலே சடையா ?
என்று கேட்டு முடிப்பதற்குள் சடையாண்டி பிரியாணியில் கிடந்த ஒரு கோழிக்காலை
எடுத்து கடித்து விட்டான் இரண்டு நொடி தாமதித்து மொக்கைராசும் கை வைக்க மாற்றம் ஒன்றும் நிகழாததால் மந்தக்கட்டியும் நமக்கு
கிடைக்காதென நினைத்து கை வைத்து முழுவதும் சாப்பிட்டு முடித்து தண்ணீர் குடித்து
விட்டு தரையில் சாய்ந்தார்கள் சடையாண்டி ய்யேவ்வ்வ்வ்வ் என்றான்.
சிறிது நேரத்தில் கதவு திறக்கப்படும் ஓசை கேட்டது.
தொடரும்...