தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், டிசம்பர் 29, 2020

நீ இந்தியன் இல்லைடா...


வீரா இது வீரமாடா
போரில் பூவையரையும்
பூ பிஞ்சுகளையும்
கொல்வது அறமாடா
இந்தப்பிஞ்சை அழிப்பது
உமது போர் தர்மமாடா
நிச்சயமாக நீங்கள் எமது
இந்தியன் இல்லையடா...

வெள்ளி, டிசம்பர் 25, 2020

கோடீஸ்வரன்


கோடீஸ்வரன் இவன் ஒவ்வொரு தினமும்...

ராக்கெட்டில் போவான் ராதிகாவோடு...
விமானத்தில் பறப்பான் விமலாவோடு.

திங்கள், டிசம்பர் 21, 2020

மள்ளாங்கி ஜாதிக்காரி


கொரோனா வந்தாள் பல்லாயிரம் உயிர்களை எடுத்துச் சென்றாள் ஆறறிவு படைத்தவன் என்ற அகந்தை மனிதன் எல்லாம் உருவமற்ற கொரோனாவை கண்டு அஞ்சினான். ஐந்தறிவு பெற்ற சிந்தையில்லா மிருகங்கள் எல்லாம் நாங்கள் இயல்பு வாழ்க்கைதான் வாழ்வோம் என்றன. ஊரடங்கு உத்தரவு எல்லாம் பத்திரிக்கை படிக்கும் பாவேந்தர்களுக்கு மட்டுமே என்றன படிப்பறியா நாய்களும், ஆடுகளும், மாடுகளும், கழுதைகளும், ஏன் பன்றிகளும்கூட.

வியாழன், டிசம்பர் 17, 2020

டவுட்டு டங்குவாரு...

 

ணக்கண்ணே சில சந்தேகங்கள் கேட்கணும் அதான் உங்களை பார்க்க வந்தேன் நல்லா இருக்கீங்களாண்ணே ?
வாடாத்தம்பி டங்குவாரு நல்லா இருக்கேன்டா கேளுடா அண்ணேஞ் சொல்றேன்.

ஞாயிறு, டிசம்பர் 13, 2020

காதலின் வலிமை


அழுக்கானவளையும், அழகாக காட்டுவது காதல்
கோழையையும், வீரனாக தோற்றுவிக்கும் காதல்
பொல்லாதவனையும், நல்லவனாக காட்டும் காதல்
அம்மை அப்பனையும், அற்பனாக்கி விடும் காதல்

புதன், டிசம்பர் 09, 2020

புதிய கோணம் புதிய பார்வை


ணக்கம் மாடசாமியண்ணே... நல்ல இருக்கீங்களா ?  சில சந்தேகங்கள் கேட்கணும் அதான் உங்களைத் தேடி வந்தேன்ணே...
வாடாத்தம்பி வண்ணமயில் வாகனோம்... கேளுடா அண்ணேஞ் சொல்றேன்.

சனி, டிசம்பர் 05, 2020

இருக்கு... ஆனா, இல்லை


பூ
விற்பவனுக்கு நல் மனம் உண்டு
மல்லிகைப்பூ நறு மணம் இல்லை

பணம்
மடியில் பெரும் கனம் உண்டு
மனதில் ஒரு கணம் இல்லை

செவ்வாய், டிசம்பர் 01, 2020

ரத்தக்களரி


       ரில் திருமணம், காதுகுத்து, சடங்கு மற்றும் அப்பத்தாவின் ஏழாம் ஆண்டு நினைவு நாளுக்குகூட வாழ்த்து பதாகைகள் வைக்கப்படுவது இன்று கட்டாய சடங்காக ஆக்கப்பட்டது இதில் தங்களது சொந்த பணத்தை செலவு செய்பவர்கள் பெரும்பாலும் தங்களது கட்சித்தலைவரின் படம் அல்லது தங்களது அபிமான திரைப்படக் கூத்தாடியின் படத்தை அச்சடித்தே வைக்கின்றார்கள். அதேநேரம் பணம் செலவு செய்த முடுமைகளின் முகங்கள் கீழே ஓரத்தில் அவர்களது மண்டை மட்டும் தெரிவது போல் இருக்கும்.

செவ்வாய், நவம்பர் 24, 2020

களவு வாழ்க்கை

 

ணக்கம் நட்பூக்களே... நீங்கள் கேட்டவை (1984) என்ற திரைப்படத்தின் பாடலான கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள் பாடல் குடும்ப சோகமானது இது சமூக அவலத்தை வைத்தே எழுதப்பட்டது பாடல் எழுதியவர் திரு. வைரமுத்து இசை திரு. இளையராஜா பாடியவர் திரு. கே.ஜே.யேசுதாஸ் கீழே பாடலின் அசல் வரிகளை நீல நிறத்தில் தந்து இருக்கிறேன் - கில்லர்ஜி

சனி, நவம்பர் 21, 2020

நான், நீ(நா)யாக...

 

உனக்கு கிடைத்த வாழ்க்கை
எனக்கு கிடைக்கவில்லை.
அடுத்த பிறவியிலாவது
நான் நீ(நா)யாகவும், நீ ஏதேனும்
பிறக்க வேண்டும். முக்கியமாக...
இதேபோல் அதிபருடன்...

செவ்வாய், நவம்பர் 17, 2020

எனது விழியில் பூத்தது (2)


  ணக்கம் நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த இரண்டாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ, திருத்தங்களையோ (Edit)  செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம் நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். இவைகளை ரசித்தால் ? ? ? கருத்து மழை பொழியலாம் அன்பன் - கில்லர்ஜி

சனி, நவம்பர் 14, 2020

இன்டா பச்சாய் கிலிகோரு...

ஒருநாள் பொழுது போகாமல் இணையத்தில் உலாவினேன் ஏதாவது திரைப்படத்தின் பாடலை உல்டா செய்து எழுதிக் குதறுவோம் என்று... நான் நீதியை மதிப்பவன் இல்லையா... ஆகவே நீதிக்கு தலைவணங்கு என்ற திரைப்படத்தின் பாடலை தேடிப்போனேன். அங்கு போனால் அதில் எழுதி இருப்பது தமிழ்மொழியா ? இல்லை தாய்லாந்து மொழியா ? என்ற குழப்பம் வந்து விட்டது அம்பூட்டு லந்து பண்ணி வச்சு இருக்காங்கே....

திங்கள், நவம்பர் 09, 2020

ருசியான வசியம்


மருமகனுக்கு மாமியார் வீட்டில்
ருசியா விருந்து வைத்தது அந்தக்காலம்
வசிய மருந்து வைப்பது இந்தக்காலம்.

தனது மகளை மாப்பிள்ளைக்கு
வாஞ்சையோடு கட்டிக் கொடுத்தார்கள் அன்று
வஞ்சகத்தோடு கூட்டிக் கொடுக்கின்றார்கள் இன்று.

வியாழன், நவம்பர் 05, 2020

முதலாளியும், தொழிலாளியும்


01. பிறவியை பலனுள்ளதாக ஆக்க வேண்டுமென்ற ஞானம் இருபது வயதில் தோன்றினால் பயனுண்டு

02. பிறவியை பாழாக்கி விட்டோமே என்ற புத்தி ஐம்பது வயதில் வந்தால் பயனில்லை

ஞாயிறு, நவம்பர் 01, 2020

சேவலும், கோழியும்


ம்ம ரங்கதுரை, செல்லத்துரை மேல வழக்கு போட்டுட்டானாமே ஏண்ணே ?
ஆமாடா தம்பி செல்லத்துரை கோழி வளர்க்கிறான் பக்கத்து வீட்டுல இருக்கிற ரங்கதுரை சேவல் பண்ணை வச்சு இருக்கிறான்ல... இதுல செல்லத்துரை கோழிகள் ரெண்டும் பண்ணையில் உள்ள சேவல்களோட கொஞ்சம் அப்படி, இப்படி இருந்துருக்கும் போல... இதுல செல்லத்துரைக்கு தினம் இரண்டு முட்டை கிடைச்சு இருக்கு. இது எங்க சேவலோட முட்டைனு சொல்லி ரங்கதுரை கேட்டு இருக்கான்.

திங்கள், அக்டோபர் 26, 2020

பழைய பஞ்சாங்கம்


   கோவை மாநகரம் நான் எனது ஸ்கூட்டியில் தண்ணீர் பந்தலார் தெருவில் போய்க் கொண்டு இருந்தேன் சட்டென ஒரு பெண்மணி கையை குறுக்கே காட்டி நிறுத்தச் சொல்லிட நமக்கு பயம் இல்லா விட்டாலும் பெண்ணைக் கண்டால் பென்ஸ் காரும் நிற்கும் என்று சொல்வார்களே ஸ்கூட்டி எம்மாத்திரம். இரண்டாவது நாம இரக்க குணம் வேறயா.... நான் தமிழக நல்லாட்சியின் ஆணையை மதித்து தலையில் கவசம் மாட்டி இருந்தேன். நான் நின்றதுதான் தாமதம் அவள் சட்டென பின்புறம் வந்து காலைத்தூக்கி இருபுறமும் போட்டுக் கொண்டு...

புதன், அக்டோபர் 21, 2020

திருக்குறளை சுட்டிய திருக்குவளை


   தமிழ் இன்றைய இளைய தலைமுறையினரிடம் வாழ்கிறதா ? நிச்சயமாக இல்லை இதோ தமிழ் மாதங்கள் பனிரெண்டு அதன் பெயர்களைக்கூட சொல்லத் தெரியவில்லையே... வெட்டியாக தமிழ் தமிழ் என்று கூவுகிறது ஓர் கூட்டம் ஆனால் இதில் காரியத்துக்காக குரல் கொடுப்பவரையே நம்புகிறது இந்த பாமரப்பயல்கள் கூட்டம்.

சனி, அக்டோபர் 17, 2020

பெரியகுளம், பெரியவர் பெரியசாமி


துபாய் ஷேக் ஸாயித் பின் சுல்த்தான் அல் நஹ்யான் சாலையில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வெளியேறி எனது சீரூந்துக்குப் போகும் பொழுது இனிமையான குரல்
எஸ்க்யூஸ் மீ
திரும்பிப் பார்த்தேன் அழகிய தேவதையொன்று நின்று கொண்டு இருந்தது.
யூ ஆஸ்க் மீ ?
ஆமா உங்களைத்தான்...
அழகியின் அழகிய உதடுகளிலிருந்து அழகிய தமிழ் வார்த்தை அடடே..

திங்கள், அக்டோபர் 12, 2020

தொட்டில் பழக்கம் கட்டில் வரைக்கும்


   ணுக்கு பெண் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க பெண்கள் சகல துறைகளிலும் தடம் பதித்தார்கள் விண்வெளியில் வாழ்வதிலும்கூட பாரதி இவ்வளவு தூரம் ஆசைப்பட்டு இருப்பானா ? என்பதில் எனக்கு முக்கால் காணி அளவு ஐயமுண்டு இதில் பெண்ணினம் பெருமையே கொள்ளட்டும். அதேநேரம் மது அருந்துவதிலும் நீங்கள் போட்டி போடுவது முன்னேற்றமா ? பின்னேற்றமா ? அதற்காக ஆண்கள் மது அருந்துவது தவறில்லை என்று நான் சொல்வதாக அர்த்தமல்ல

புதன், அக்டோபர் 07, 2020

மாணிக்பாட்ஷாவுக்கு மணிமகுடம்

 

வணக்கம் நட்பூக்களே... நண்பர் திரு. இரா. அரவிந்த் அவர்கள் எனது மாணிக்பாட்ஷா மின்நூலை படித்து விட்டு விமர்சனம் எழுதி அனுப்பி இருக்கிறார். அதை தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். இந்த விமர்சனத்தை படித்து நான் மெய் சிலிர்த்து நிற்கிறேன் காரணம் எனது எழுத்துகள் சரியான கோணத்தில் புரிந்து கொள்ளப்படுகிறதா ? என்ற ஐயப்பாடு எனக்கு வெகுகாலமாகவே இருந்து வந்தது.

சனி, அக்டோபர் 03, 2020

எனது விழியில் பூத்தது (1)


  ணக்கம் நட்பூக்களே.... நான் சிறு அகவை முதலே புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவன் சராசரியில் பார்ப்பதைவிட வித்தியாசமான கோணத்தில் பார்த்து அவைகளை படம் பிடித்து இருக்கிறேன் இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ, திருத்தங்களையோ (Edit)  செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம் நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம்.

சனி, செப்டம்பர் 26, 2020

தேவகோட்டை ஊரிலா... தேன் சிந்தும் வேம்பிலா...


வணக்கம் நட்பூக்களே மௌனம் சம்மதம் (1990) என்ற திரைப்படத்திலிருந்து திரு வாலி அவர்கள் எழுதிய கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அந்த வரிகளை மாற்றி எழுதி இருக்கிறேன் இசை இளையராஜா பாடியவர்கள் கே.ஜே.யேசுதாஸ். மற்றும் சித்ரா ரசித்தால் சொல்லிச் செல்லுங்கள்.

திங்கள், செப்டம்பர் 21, 2020

போக்கு மாறிய நாக்குகள்...


     1999 அபுதாபி நான் அன்று அரபி பேசிப்பழகிய காலம் பால் வடியும் குழந்தை முகமாக இருந்ததால்  அலுவலக பையனாக வேலை கிடைத்து செய்து கொண்டு இருந்தேன். அரபு எழுதப்படிக்க தெரியாது தெரிந்து இருந்தால்... இந்தப்பதிவும் வந்து இருக்காது. காலையில் காஃபி, டீ, காவா, துர்கீஷ் என்று அரேபியர்களுக்கு போட்டுக் கொடுக்க வேண்டும்.

வியாழன், செப்டம்பர் 17, 2020

NASA நாசமாகி இருக்கும்


     ணக்கம் ஐயா வசம்பு வேந்தன் அவர்களே கொழுந்தியாள் தினமான இன்று தங்களை பேட்டி காண்பதில் எங்களது வெட்டிவேர் தொலைக்காட்சி பெருமிதம் கொள்கிறது பேட்டியை தொடங்கலாமா ?
நன்று நலமே விளைக தொடங்கலாம்

ஞாயிறு, செப்டம்பர் 13, 2020

நடிகர் நடிகைக்கு ஜாதி கிடையாதா ?


ண்ணே வணக்கம் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு நீங்கதான் தீர்த்து வைக்கணும் சொல்லுங்கணே ?
சரிடா தம்பி கேளுடா அண்ணேஞ் சொல்லுறேன்.

புதன், செப்டம்பர் 09, 2020

மாணிக்பாட்ஷா


வணக்கம் நட்பூக்களே...
மின்நூல் ஆசை மண்ணுள் போனாலும் விடாது கருப்பு போல ஆசையற்ற எனது சரீரத்திலும் இருப்பது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. ஆம் மூன்றாவது மின்நூலாக எனது படைப்பின் தலைப்பூ மாணிக்பாட்ஷா.

சனி, செப்டம்பர் 05, 2020

மனதுள் மனிதம் வாழ்கிறதா ?


    ல்லோரும் மனிதர்களே ஆனால் மனதுள் மனிதம் வாழ்கிறதா ? என்றால் எங்கும், எதிலும் இல்லை, இல்லை. இல்லவே இல்லை. நல்லவர்கள் போலவே நடக்கிறார்கள், கோயில்களுக்கு செல்கிறார்கள் வணங்குகிறார்கள், குழந்தைகளுக்கும் இறையை வணங்கும் முறையை கற்பிக்கிறார்கள். சத்தியம் தவறாத உத்தமன் போலவே பேசுகிறார்கள்.

திங்கள், ஆகஸ்ட் 31, 2020

நவீன பட்டினத்தார்


செல்வந்தர்களே...
சமூகத்தில்,
குடும்பத்தில்,
உறவுகளிடத்தில்,
தொழிலாளர்களிடத்தில்,
அரசியல்வாதிகளிடத்தில்,
பொது மேடைகளில்,
ஆலய தரிசனத்தில்,
கோவில் திருவிழாக்களில்,

புதன், ஆகஸ்ட் 26, 2020

நால்வர் அணி


குமரேசா
நீ செய்வது முறையாடா
இசக்கியம்மாளை முடிச்சிட்டும்
மொடிச்சியம்மாள் தேவையாடா
புதியவளை மனதில் நிறுத்துடா
பழையவளையும் திருத்துடா

சனி, ஆகஸ்ட் 22, 2020

சானியா மிர்ஷா, சாணியை மிதிச்சா

         என் இனிஇனியாவுக்கு உன் பனித்துளி படர்ந்த கனி இதழுக்கு சொந்தக்காரன் முனி செதுக்கிய மணிமடல் நான் நலமே... நம் அன்பு மகன் வினித்தும், மகள் வினிதாவும், நீயும் நலமா ? நான் எழுதிய "சானியா மிர்ஷா சாணியை மிதிச்சா" என்ற நாவலுக்கு கொங்காணி விருது கிடைத்து இருக்கிறது. எழுத்தாளர் அருக்காணி அவர்கள் கையால் விருது வாங்க போகிறேன்.

திங்கள், ஆகஸ்ட் 17, 2020

துயரத்துள் துயரம்


வணக்கம் நட்பூக்களே...
சமீப காலமாக உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா எனக்கு பல விடயங்களை சொல்லிச் சென்றது ஆனால் என்னை அள்ளிச் செல்லவில்லை இதற்கு இறைவனுக்கு நன்றி சொல்வதா... வேண்டாமா ? என்பதில் சற்று மனக்குழப்பம். காரணம் இன்றைய வாழ்வு இன்பமா ? துன்பமா ? என்ற கேள்விக்கு விகடகவி என்று பதிலளித்தால் வினா எழுப்பியவரின் நிலைப்பாடு ? விகடகவி இடமிருந்து வலமாக படித்தாலென்ன ? வலமிருந்து இடமாக படித்தாலென்ன ? குழப்பமான வார்த்தைதானே...

புதன், ஆகஸ்ட் 12, 2020

ஸ்வப்னாவுடன் மகிழ்ந்து...


அந்த விடுதியில கல்வி கற்றுக் கொடுத்தது குற்றம்'னு காவல்துறை கைது பண்ணி கூட்டிப் போறாங்களே ஏண்ணே ?
அட முடுமை அங்கே கல்வி கற்றுக் கொடுக்காமல் கலவி கற்றுக் கொடுத்தாங்களாம்

ஏண்ணே மாமா'னு கூப்பிட்டதுக்காக அந்த போலீஸ் ஸ்டேஷன்'ல நம்ம மாதவனை அடிச்சுட்டாங்களாம்ல ?
அவன் மாமா'னு கூப்பிட்டது ஏட்டய்யாவை அப்புறம் அடிக்காமல் என்ன செய்வாங்க...

சனி, ஆகஸ்ட் 08, 2020

செங்கற்படை, செங்கோடன் Weds செங்கமலம்


01. மனிதனை படைக்கும்போதே அவனது மரண தேதியை தீர்மானித்து அழைத்துக் கொல்வது சித்ரகுப்தன் என்பது நம்பிக்கை. ஆனால் கைதி கருப்பசாமிக்கு தூக்குத் தண்டனை தேதியை நிர்ணயித்தாரே நீதிபதி நீலகண்டன் இவருக்கும், சித்ரகுப்தனுக்கும் மின்னஞ்சல் தொடர்பு உண்டோ  ?

திங்கள், ஆகஸ்ட் 03, 2020

ஷாக்கிங் மால்


நினைவுகள்
அமலா நினைத்தாள் விமலா கணவனுடன் காலத்தோடு ஒட்டிவிட
விமலா நினைத்தாள் அமலா கணவனோடு காலத்தை ஓட்டிவிட

திட்டங்கள்
சம்பளம் வாங்கியதும் மனைவிக்கு காது குத்த திட்டமிட்டான் காத்தவராயன்
சம்பளம் பெற்றதும் கணவனை மொட்டை அடித்தாள் மொக்கச்சியம்மாள்

புதன், ஜூலை 29, 2020

வெள்ளி, ஜூலை 24, 2020

வண்ணம் கொண்ட கொரோனாவே...


வணக்கம் நட்பூக்களே...
கொரோனா இந்திய மக்களை வீட்டுச் சிறையில் வைத்து தனிமைபடுத்தி இருந்தபோது நானும் தனிமை படுத்தப்பட்டேன் என்னவொன்று இரட்டை ஆயுள் தண்டனை என்பார்களே அதனைப்போல் எனக்கு மட்டும் இரட்டை தனிமைச்சிறை முன்னதாகவே குடும்பம் என்னை தனிமை படுத்தி விட்டது தொடர்ந்து கொரோனாவும் தனது பங்கை நடைமுறைப்படுத்தி விட்டது. தேவகோட்டை பெரிய வீட்டில் நான் மட்டுமே கணினியும் இல்லை, தொல்லைக்காட்சி பெட்டியும் இல்லை, அலைபேசியும் கீழே விழுந்து தனது முகத்தை கோரப்படுத்திக் கொண்டது ஆகவே இணையமும் பிரச்சனையாகி அலைபேசி செத்துச் செத்து பிழைக்கும். பிறருடைய பதிவை படித்து வேகமாக கருத்துரை எழுதி வெளியிடும்போது அலைபேசி அணைந்து விடும் பிறகு மீண்டும் எழுதுவேன் ஆகவே சிறிய கருத்துரையாகவே இருக்கும்.

ஞாயிறு, ஜூலை 19, 2020

கள்ளுண்ணாமை

       ரடங்கு தவிர்க்கப்பட முடியாத மத்திய, மாநில அரசுகளின் செயல் இதில் டாஸ்மாக்கும் மூடப்பட்டது சுமார் இரண்டு மாதங்கள்வரை குடிகாரர்கள் குடிக்க முடியாமல், வழியில்லாமல் ஏதோ நாட்களை கடத்தி விட்டது உண்மைதான். பிறகு அரசுக்கு வருமானம் இல்லை என்பதற்காக மீண்டும் திறந்தது மக்களுக்கு செய்யும் துரோகம் மட்டுமல்ல ஆள்பவர்கள் தங்களது சந்ததிகளுக்கு செய்யும் துரோகமும்கூட மக்களை குடிக்க வைத்துதான் ஆட்சி செய்ய வேண்டுமெனில் இந்த அரசு எதற்கு ? 

செவ்வாய், ஜூலை 14, 2020

மொழியின் அழகு


மொழிகளில் பல வகைகள் உண்டு அரபு மொழி எழுத பழகுவது மிகவும் கடினமானது என்று பலரும் நினைக்கின்றார்கள். உண்மையில் வெகு சுலபமானது அரபு மொழியை தமிழர்கள் எழுத பழகி விடலாம் ஆனால் தமிழ் மொழியை அரேபியர்கள் எழுத பழகுவதுதான் கடினம். நான் ஒரு சில அரபிகளிடம் எழுதச் சொல்லி சவால் விட்டு இருக்கிறேன். அவர்களால் அவ்வளவு சுலபமாக எழுத முடியவில்லை. இதற்கு நான் தமிழில் தேர்ந்தெடுத்த எழுத்து என்ன தெரியுமா ?

வியாழன், ஜூலை 09, 2020

கண்டிக்காத குழந்தை தண்டிக்கப்படும்


    மீபத்தில் உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தேன். கணவன்-மனைவி-ஆண்மகவு இப்படி தனிப்பட்ட சந்தோஷமான வாழ்க்கைதான். சில குழந்தைகள் எந்நேரமும் எதற்கெடுத்தாலும் அழுது அடம் பிடித்துக் கொண்டே இருக்கும் இது பரம்பரை குணம் மட்டுமல்ல தற்கால மக்களின் மாற்றத்தால் தொற்றிக் கொண்ட வியாதி என்றே சொல்லலாம்.