S’TOP*STAR’T
(May be Tomorrow)
மனிதன் முடிந்து விட்டதென நினைக்கும் போது ஆரம்பமாவதும்..... ஆரம்பமாக போகிறதென நினைக்கும் போது முடிந்து போவதும்தான் வாழ்க்கை.
சில திறமைசாலிகள் வெளியே
தெரியாமலேயே மறைந்து விடுகிறார்கள், சிலர் திறமை இல்லாமலேயே நிலைத்து(ம்) விடுகிறார்கள், உலகறியப்பட்டவர்கள் கிறுக்கியதும் கவிதை,
அறிமுகமில்லாதவன் கவிதை எழுதியாலும் கிறுக்கன்.
(இல்லாதவள்
கிழிந்ததைப் போட்டால் கிறுக்கச்சி, இருப்பவள் கிழித்துப் போட்டாலும் புதுமை
என்பதுபோல)
இந்த ஏற்றத்தாழ்வின் முரண்பாடு
எங்கே தொடங்குகிறது ? எல்லாம் ''விதி'' என இரண்டெழுத்தில் முடித்துக் கொள்ளும் விரிந்த மனம் இல்லாத மனிதனிடத்திலா ? இல்லை ஏற்றத்தாழ்வு இல்லையெனில் மனிதன் எல்லோருமே முதலாளி என்ற நினைப்பில் உழைக்காத
சோம்பேறி ஆகி விடுவானென இறைவன் அமைத்த கோட்பாட்டிலா ? மனிதனுக்குள் வயிறு என்ற
சூழ்ட்சியை அமைத்து ''பசி'' என்ற ஒன்றை கொடுத்து உள்வாங்கி வெளியேற்றும்
சுழற்சியை அமைத்ததனால்தான் மனிதன் உழைக்க தொடங்கினான், இந்தத் தொடக்கம் சிந்தனையின்
விரிவாக்கத்தால் ஆசைகளும் விரிந்து பறவையை கண்டு அதனைப் போலவே பறக்கவும் ஆரம்பித்தான்,
தொடரத்தொடர விஞ்ஞானமும் வளர்ந்தது.
வெற்றியாளன் மேலும் தொடர்கிறான், தோல்வியாளன் சோர்ந்து போகிறான், சிலர்
விரக்தி கொள்கிறான், பலரது
வாழ்வில் மரணம் நெருங்கும்போது விலகி விடும் விலகும்போது நெருங்கித் தொடும், சிலரது
வாழ்வில் கிடைத்தது தொலைந்து விடும் சிலருக்கு தொலைந்ததுகூட கிடைத்து விடும்,
இதைப்போல பலர் படிக்க நினைப்பார் படிக்க வைக்க முடியாது, சிலர் படிக்க வைப்பர்
படிக்கத் தெரியாது, இதைப்போல சிலர் பிறருக்கு உதவ நினைப்பர் உதவ முடியாது, சிலருக்கு உதவ முடியும் ஆனால் உதவ மறுப்பர், சிலர் மறப்பர்.
முயற்சி
கொண்டால் வெற்றிநாள் முயற்சியின்மை வெட்டிநாள். முயன்றிடு நண்பா முயன்றிடு
நாளையல்ல ! இன்றே... இப்பொழுதே.... ஓடு,
ஓடு முடிவு தெரியும்வரை ஓடு, உனக்கு ஒருவிடிவு காலம் வரும்வரை ஓடு நண்பா...
மனிதன் முடிந்து விட்டதென நினைக்கும் போது
ஆரம்பமாவதும்.... ஆரம்பமாக போகிறதென நினைக்கும் போது முடிந்து போவதும்தான் வாழ்க்கை
காணொளி

