திரைப்படம் கண்டு பிடித்து 100 ஆண்டுகள்
கடந்து விட்டது.
திரைப்படங்களில் நம்பத்தகாத காட்சிகள்
வரும்போது நாம் ஏதாவது குறை சொன்னால் ? சினிமாதானே சும்மா பொழுது போகத்தானே கதைக்கு கால் உண்டா
? என்று மேதாவியைப் போல் கேள்விகள் வேறு. திரைப்படஙகளை பொழுது
போக்காக பார்க்கிறவன் படங்களைப் பார்த்து...
01. அன்பு செலுத்துவது ஏன்
?
02. கண்ணீர் சிந்துவது ஏன்
?
03. காதல் செய்வது ஏன்
?
04. கொலை செய்வது ஏன்
?
05. கடத்திச் செல்வது ஏன்
?
06. வெடிகுண்டு வைப்பது ஏன்
?
07. திருடுவது ஏன் ?
08. திருந்துவது ஏன்
?
09. மது அருந்துவது ஏன்
?
10. புகை பிடிப்பது ஏன்
?
11. பகை வளர்ப்பது ஏன்
?
12. விலைமாதரிடம் போவது ஏன்
?
உணர்ச்சிகள்தானே
? அப்படியானால் அந்த உணர்ச்சிகளை, கொடுப்பதில் உண்மை வேண்டாமா
?
நாம் கடந்த 86
ஆண்டு காலமாக, திரைப்படங்களை பொழுது போக்காக மட்டும் பார்த்திருந்தால்
? திரைத்துறையினரில் பலருக்கும் சம்பள நிலை இன்றைக்கு கோடிகளை
தொட்டு இருக்குமா ? இந்நிலைக்கு யார் காரணம் ? அறியா மடந்தைகளாய், ஆட்டு மந்தைகளாய், சிந்திக்க மறுத்த
நாம்தானே காரணம். ஒரு கைவண்டித் தொழிலாளி நமது சிறந்த அரசாங்கத்தின் விலைவாசி
உயர்வால் சிறிய அளவுதான் இரண்டு ரூபாய், உயர்த்தி கேட்பார் உடனே இந்த மேதாவிகள்
சட்டம் தெரிந்தவர்கள் போல், பேசுவார்கள். திரைப்பட நடிகர்களுக்கு மட்டும் சம்பளம்
கூடுகிறதே அது எப்படி ? யாருடைய பணத்தில் ? அவர்கள் கேட்டதும் கூடுகிறதே இதன் பின்னணி என்ன
? என்றாவது நீ சிந்தித்ததுண்டா ?
கேட்டால் இறைவன் அவர்களுக்கு விதித்த விதி
என்கிறாய், இறைவன் இருக்கிறான் என்பது உண்மையானால் ? விதி என்பது உண்மையானால் ? அந்த இறைவன் படைப்பில் எல்லோரும் மனிதர்தானே ஏனிந்த
ஏற்றத்தாழ்வு ? இந்த ஏற்றத்தாழ்வை நிர்ணயித்தது இறைவனென்றால்
? திரைப்பட
நடிகர்களுக்கும், கைவண்டித் தொழிலாளிகளுக்கும் சம்பளம் நிர்ணயித்தது யார்
? எல்லாம் அறிந்த இறைவனா ? ஏதும் அறியாத மனிதனா ? மனிதன்தானே பிறகு ஏன் இறைவன் விதித்த விதி என்கிறாய்
? இவர்களெல்லாம் உழைப்பால் உயந்தவர்கள் அல்ல காரணம் இதே போல்தானே நாடக நடிகர்களும் உழைக்கிறார்கள்
அவர்கள் ஏன் உயரவில்லை ? இவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் பெற்றிருந்தால் இந்நிலைக்கு
வருவது சாத்தியமும் அல்ல ! ஆகவே இவர்கள் நமது அறியாமையால் உயந்தவர்கள்.
நமது அறியாமையால்
இன்று வளமாய் வாழ்வது இவர்கள்.
நாளை வறுமையில்
வீழ்வது நமது சந்ததிகள்.
சாம்பசிவம்-
நாளை உமது சந்ததிகளில் யாராவது திரைப்பட
நடிகர்களாக வந்தால் ?
கில்லர்ஜி-
நான் சுவாசிக்கும் காணக் கிடைக்காத காற்றின் மீது சத்தியம் அவர்களும் இதில்
உட்பட்டவர்களே.
CHIVAS REGAL சிவசம்போ-
ஹூம் உருவமா இருக்கிற தலையில அடிச்சு
சத்தியம் செய்யிறதுலயே நம்பிக்கையில்லை இதுல காத்துல சத்தியமாம், காத்துல நல்லா
ஊத்துறாங்கய்யா காதுல...
காணொளி