1986 என்று
நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன்
கம்பெனி ஓனரின் அம்மா வயது 90-க்கும் மேலிருக்கும்
திடகாத்திரமானது கம்பெனியை ஒட்டிய சிறிய வீட்டில் கம்பெனியை பாதுகாத்துக் கொண்டு
தாத்தாவும், பாட்டியும் இருந்தார்கள் மற்ற லேபர்கள் டிங்கர்கள் என்பதால் அடுத்த
கூடாரத்தில் வேலை செய்து கொண்டு இருப்பார்கள் பத்து டிங்கர் லேபர்களை ஒரு வெல்டர்
சமாளித்து விடலாம் நான் வெல்டிங் வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கும் கூடத்தில்
பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கும் இருவரும் பேசிக்கொண்டே இருப்போம் எனக்கும்,
பாட்டிக்கும் அடிக்கடி ஏதாவதொரு பிரச்சனையில் வாக்கு வாதமாகி விடும்.
தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
செவ்வாய், அக்டோபர் 03, 2017
ஞாயிறு, அக்டோபர் 01, 2017
வெள்ளி, செப்டம்பர் 29, 2017
புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி
காயம்பட இதயத்தை கல்லால்
அடித்து விட்டாயடி
காயல்பட்டணக்காரன் என்னை
கோபப்பட வைத்தாயடி
காடு எங்கும் எங்கள்
பாரம்பரிய சொத்து நிறைந்ததடி
வீடு தேடி வந்தவனை நாயை
விட்டு விரட்டி விட்டாயடி
எங்கள் வீட்டில் யானை கட்டி
போர் அடித்த குடும்பமடி
உங்கள் வீட்டில் பூனைக்குகூட
சோறு போட முடியாதடி
சிங்கம் போல நடந்த என்னை
அசிங்கப்படுத்தி விட்டாயடி
தங்கம் நிறைந்த குடும்பத்தை
பங்கம் விளைய வைத்தாயடி
முப்போகமும் விளைந்தது
எங்கள் வீட்டில் களஞ்சியமடி
முக்காடு போட வைத்து எங்களை
மூழ்கிப்போக செய்தாயடி
வங்கிகளுக்கே கடன் கொடுத்த
வள்ளல் பரம்பரை நாங்களடி
வாங்கி குடிக்க வழியில்லாத
ஊர் சுற்றும் கூட்டம் நீங்களடி
அழகி என்று உன்மீது ஆசை
வைத்தேன் நான் முட்டாளடி
அழுகிப் போனது உன் மனம்
என்று தெரிய வைத்தாயடி
சொந்த மாமன் மகள் மாலா
எனக்காகவே இருக்காளடி
இந்த சோமன் அவளுக்கு
என்றும் பொருத்தமானவனடி
சோமனுக்கும், மாலாவுக்கும் 16 பொருத்தம் இருப்பதாக சோலந்தூர் சோசியர்
சோனைமுத்து சொல்ல, வரும் புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி
கோலாகலமாய் நடக்க இருக்கும் திருமணத்துக்கு நாமும் வாழ்த்துவோமே நட்பூக்களே...
புதன், செப்டம்பர் 27, 2017
ஔவை – யார் ?
அன்பைக்கொடு
ஆசையை ஒதுக்கு
இன்முகம் காட்டு
ஈகை குணம்கொள்
உண்மை பேசு
ஊரே போற்ற வாழ்
எண்ணம் நலமெனில்
ஏற்றம் காண்பாய்
ஐயம் இல்லை இதில்
ஒன்றே குலமென
ஓங்கி குரலெழுப்பு
ஔவை பாட்டி
சொன்ன
நற்சொல்,
என மனதில்
கொள்,
மகிழ்வுடன்
வாழ்.
- கில்லர்ஜி
காணொளி
சாம்பசிவம்-
என்ன இவன்...
இப்படி சொல்லிக்கிட்டு ஓடுறான்,
அப்படின்னா ஔவையார் நம்ம ஊடகழி ஜாதி இல்லையோ அப்ப ஔவை-யாரு ?





