தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், செப்டம்பர் 20, 2017

விதண்டாவாதிகள்


தம்பி உங்க பேரென்ன ?
ஏன் ?
இப்படியும் ஒரு பேரா ?
? ? ? ஆமா... உங்க பேரென்ன ?
நீ எதுக்கு கேட்கிறே ?
பேரு வித்தியாசமா இருக்கே...
? ? ?
0--------------------------------------------------------1

கடை ஏன் அடைச்சிருக்கு... ?
பூட்டியிருக்கிறதாலே...
? ? ? அப்படியா ?
ஏன்... கேட்கிறீங்க... ?
பூட்டியிருக்கிறதாலதான்...
? ? ?
0--------------------------------------------------------2

மதுரைக்கு எந்த வண்டியில போகணும் ?
மதுரை வண்டியிலதான்.
? ? ? இந்த வண்டி எங்கே... போகுது ?
மதுரைக்குத்தான்.
நல்லது.
இந்த வண்டியில, எதுக்கு போறீங்க ?
மதுரை வண்டியை பிடிக்கத்தான்.
? ? ?
0--------------------------------------------------------3

மச்சான் அல்வா வாங்குங்களேன்...
கையில காசு இல்லை.
பைக்கு உள்ளே இருகிற அல்வா யாருக்கு ?
யாருக்கோ...
அந்த யாருக்கோ.... யாரு ?
உங்க அக்காதான்.
இதைத்தானே எதிர் பார்த்தேன்.
? ? ?
0--------------------------------------------------------4

உங்கள்ட்ட ரெண்டு ஐம்பது இருக்குமா ?
இல்லையே என்ன விசயம் ?
இருந்தால் ஒண்ணை வாங்கிகிறலாமேனுதான்.
? ? ? உங்கள்ட்ட  Credit Card இருக்கா ?
இல்லையே என்ன விசயம் ?
இருந்தால் பர்ஸேசிங் செய்யலாமேனுதான்...
? ? ?
0--------------------------------------------------------5

Chivas Regal சிவசம்போ-
நாட்டுல நிறையப்பேரு இப்படித்தான் திரியிறாங்கே....

58 கருத்துகள்:

  1. ஹா ஹா ஹா.. தமணாவை ஜொயின் பண்ணி விட்டிட்டேன்ன்:) .. இது வேற தமனா:)..

    சிவாஸ் ரீகல் சிவசம்போ வின் உரையாடலைப் படிச்சால் நாங்களும் வெள்ளை பஸ்ல ஏறப்போவது உறுதி:).. ஹா ஹா ஹா அனைத்தும் வித்தியாசமான நகைச்சுவை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க முதலில் வந்து இணைத்தமைக்கு சிவால்ரீகலின் நன்றி

      நீக்கு
  2. எனக்கொன்று நினைவுக்கு வருது... இருவர்.., இருவருக்குமே காது கேட்காதாம்.. அதில் ஒருவர் குளிப்பதற்குப் போகிறார்.. மற்றவர் அவரைப் பார்த்துக் கேட்கிறார்..

    1.அண்ண எங்க குளிக்கவோ போறீங்கள்?

    2.இல்லத்தம்பி நான் குளிக்கப் போறேன்...

    1.ஆஆஆஆஆ நான் நினைச்சேன் நீங்கள் குளிக்கப் போறீங்களாக்கும் என:)..

    ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா.. அதிரா! நீங்க அவங்க குளிக்கப் போறதைப் பத்தி எழுதி இருக்கீங்கன்னு நினைச்சேன்.

      நீக்கு
    2. என்னது... குளித்தலைக்கு போறீங்களா ? வரும்போது தலைக்கறி வாங்கிட்டு வாங்க.

      நீக்கு
    3. இல்ல ஸ்ரீராம்.. நான் அவர் குளிக்கப் போறதைப் பற்றிச் சொன்னேன்.. ஹா ஹா ஹா:).

      நீக்கு
    4. ஸ்ஸ்ஸ்ஸ் கில்லர்ஜி நான் சிக்கின் மட்டின் பக்கம் கொஞ்ச நாளைக்கு தலையே வைக்கமாட்டேனாக்கும்:))

      நீக்கு
    5. என்னது சிக்கன் மட்டன், தலைக்கறி வைக்க மாட்டீங்களா.... ?

      நீக்கு
    6. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)
      எனக்கொரு டவுட்டூ கில்லர்ஜி... மேலே படத்தில் இருப்பவரைப் பார்க்க ஸ்ரீராம் போலவே தெரியுதே???:).

      நீக்கு
    7. //ஸ்ரீராம் போலவே தெரியுதே....//


      அதிரா... எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?

      நீக்கு
    8. ஆம் அதிரா நாங்க இரண்டு பேரும்தான் ஹி.. ஹி..

      நீக்கு
  3. விதண்டாவாதமாக இருந்தாலும் நன்றாகத்தான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  4. ஹாஹா! இப்படித்தான் நிரம்ப வருடம் பேசாமல் இருந்த கணவனும் மனைவியும் மகள் கல்யாணம் செய்து மகளுக்கு கர்ப்பம் என்பதை கணவனிடம் நேரடியாக சொல்ல விரும்பாலும் இடைத்தரகு வைத்து நம்ம மகள் குளிக்காம இருக்காளாம் என போய் சொல்லு என சொல்ல அந்த கணவன் ஏனாம் குளிக்கல்லை. மாப்பிள்ளையிடம் ஷாம்பூ வாங்கக்கூட காசு இல்லையோ என கேட்ட நிஜ க்கதை நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிவாளிகள் நிறைந்த குடும்பம் வருகைக்கு நன்றி

      நீக்கு
  5. விதண்டாவாதங்களை ரசித்தேன் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  6. நல்ல நகைச்சுவை! ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  7. ஹாஹாஹாஹா...ரசித்தோம் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வில்லங்கமும், விதண்டவாதிகளும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்தானே...

      நீக்கு
  8. அனைத்தையும் இரசித்தேன்! பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  9. இதெல்லாம் விதண்டாவாதங்களே இல்லை...இவைதான் இன்றைய நாட்டு நடப்பு Killergee !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தாங்கள் சொல்வதும் உண்மையே வருகைக்கு நன்றி

      நீக்கு
  10. தம்பி எங்கேயிருந்து வர்றீங்க?..

    பக்கத்து ஊர்லேயிருந்து!..

    இப்போ எங்கே போய்க்கிட்டு இருக்கீங்க?..

    பக்கத்து ஊருக்கு!..

    ----------------

    வாழ்க விதண்டாவாதம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இதுவும் அதே வழிதான் ஸூப்பர்.

      நீக்கு
  11. நல்லாயிருக்கு. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  12. ஏண்டா லேட்டா வந்தே?!

    சாரி சார் லேட்டாகிட்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ லேட்டாக வந்துட்டு சமாளிக்கிறீங்களே...

      நீக்கு
  13. சிரிக்க வைக்கும் விதண்டவாதிகள் வாழ்க வாழ்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இவர்களும் வாழட்டும் நன்றி.

      நீக்கு
  14. வணக்கம் ஜி

    அத்தனையும் அருமை

    மீண்டும் வருகிறேன் கணனி ஊடாக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே வருகைக்கும், வருவதற்கும் நன்றி.

      நீக்கு
  15. விதண்டாவாதியை விதண்டவாதி ஆக்கிவிட்டீர்களே? (சொல்லவும் பயமாக உள்ளது. அதனைவைத்து அடுத்து ஒரு விவாதம் சேர்த்துவிடுவீர்களோ என)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் வருகைக்கு நன்றி விதண்டவாதம் என்றும், சிலர் விதண்டாவாதம் என்றும் சொல்கின்றார்கள்
      எனக்கும் எதை எழுதுவது என்ற சந்தேகம் இருந்தது இப்பொழுது மாற்றி விடுகிறேன்

      நீக்கு
  16. அருமை அனைத்தும் த ம 14

    பதிலளிநீக்கு
  17. விதண்டா வாதங்களைக் நகைச்சுவை உணர்வுடன் கேட்கும்போது .....விதண்டாவாதிகளை தவிர ஏனையோருக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன.

    அருமை.

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா நலமா ? உண்மைதான் இது விதண்டாவாதம் செய்யாதவர்களை ரசிக்க வைக்கும் உண்மை.

      நீக்கு
  18. என்னையும் ஒரு காலத்தில் விதண்டா வாதின்னு சொன்னார்கள் நண்பரே.........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பொதுவாகவே இறை மறுப்பாளர்களுக்கு தமிழ்நாட்டில் அப்படியொரு பெயர் இருக்கிறது நண்பரே...

      நீக்கு
  19. ஆஹா சிரிப்புவெடிகள்! இந்த குசும்புக்காரங்கள் எங்கேயும் விடமாட்டாங்க போல வங்கி அட்டையே இப்ப வெறுத்துப்போச்சு ஜீ)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர்கள் எங்கும் இருக்கிறார்கள் நண்பரே

      நீக்கு
  20. ஹோட்டல் வாசலில்..என்ன சாப்பிட வந்தீங்களானு கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்!

    பதிலளிநீக்கு
  21. இதைத்தான் ஏட்டிக்கு போட்டி என்கிறார்களோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா இவர்கள்தான் ஏகாம்பரங்கள்.

      நீக்கு
  22. நான் எழுதி இருந்த கருத்து காக்கா ஊச்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமதமாகி விட்டது மன்னிக்கவும் ஐயா

      நீக்கு
  23. ரசித்தேன் நண்பரே

    பதிலளிநீக்கு