தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், நவம்பர் 30, 2017

பூர்வீகம் தேவகோட்டை



சிலர் ஆபூர்வமான சிந்தனையாளர்களாக இருப்பார்கள், சிலர் மிகவும் திறமையானவர்களாக இருப்பார்கள் இதைக்காணும் நாம் நாமும் இவர்களைப் போல் முயன்றால் என்ன ? என்று தோன்றக்கூடும் எனக்கும் இப்படித்தான் இதோ கீழே காணும் காணொளியில் இந்த ஜப்பான் நாட்டான் விசிட்டிங் கார்டை வைத்து செய்யும் வேலைகளைப் பார்த்தேன் எனக்குள் ஒரு சந்தேகம், சந்தேகத்தை தீர்க்க இவன் யாரென இணையத்தில் உலாவினால் அது பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்தது ஆம் இவன் ஜப்பான் நாட்டுக்காரனாக இருந்தாலும் பூர்வீகம் இந்தியா, தமிழ்நாடு அதுவும் தேவகோட்டையாம் எனக்கு ஒரு சந்தேகம் என்று சொன்னேன் அல்லவா அது இதோ இதேதான் நம்மூருக்காரன் இவ்வளவு திறமைசாலியாக இருக்கின்றானே.... என்று சந்தோசப்பட்டு உடன் நாமும் இதனைப் போல் செய்வோம் என்று நினைத்தேன் அதேநேரம் நாம் இவனைப் போல் செய்யாமல் வித்தியாசமாக செய்வோமே என்று தோன்றியது காரணம் கில்லர்ஜி என்றாலே சராசரி நபர்களிடமிருந்து வேறு படவேண்டும் அதனால்தான் வாழ்க்கை வீணாகப் போனது என்பது வேறு விடயம் சரி விடயத்துக்கு வருவோம்.

01.இவன் என்ன செய்கின்றான் ? ஒருத்தியை காற்றுள்ள பலூனை உயரத்தில் வீசவைத்து அதை விசிட்டிங் கார்டை வீசி உடைத்து எறிகின்றான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
பெரிய தீப்பந்தம் ஒன்று கொளுத்தி வைத்துக் கொண்டு என்னருகே வீச சொன்னேன் பலூன் பக்கத்தில் வரவும் தீயைக் காட்டினேன் அதனைப் போலவே டமார் என்ற சப்தத்துடன் வெடித்தது.

02.பிறகு கொக்ககோலா டின்னை டேபிளின் மீது வைத்து விசிட்டிங் கார்டை வீசி கீழே சாய்க்கின்றான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
டேபிளில் பெப்ஸி டின்னை வைத்து ஒரு அடி தூரத்திலிருந்து சுத்தியலை வீசினேன் அதனைப் போலவே சடார் என்று கீழே விழுந்தது.

03.பிறகு சிறிய ப்ளாஸ்டிக் டம்ளர்களை வரிசையாக அடுக்கி வைத்து விசிட்டிங் கார்டை வீசி கீழே சாய்க்கின்றான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
பெரிய சாம்பார் வாளிகளை அடுக்கி வைத்து மண்வெட்டியை எடுத்து வீசினேன் அதனைப் போலவே சடச்சடவென்று கீழே விழுந்தது.

04.பிறகு ஒரு டேபிளில் மார்ல்போரோ சிகரெட்டை நிறுத்தி வைத்து விசிட்டிங் கார்டை வீசி கீழே சாய்க்கின்றான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
முருகன் சுருட்டை ஒருவன் வாயில் வைத்து சினிமாவில் காண்பிப்பது போல கையில் தீப்பந்தம் வைத்துக் கொண்டு வாயில் பெட்ரோலை கொஞ்சம் வைத்துக் கொண்டு ஊதினேன் தீ சுருட்டை பிடித்தவன் முகத்தை பதம் பார்த்து அவன் முகமே கருகி விட்டது.

05.பிறகு விசிட்டிங் கார்டை பூட்டப்பட்ட கடைகளின் கண்ணாடி கதவுகளின் இடைவெளிக்குள் வீசி உள்ளே தள்ளினான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
அலுவலகத்தில் எனக்கு கொடுத்திருந்த விசிட்டிங்க கார்டை அதைப் போலவே வீசினேன் வீசும் பொழுது கையில் கட்டியிருந்த ராடோ வாட்ச் கழன்று கீழே விழுந்து உடைந்து விட்டது.

06.பிறகு ஒரு தக்காளியை டேபிளில் வைத்து விசிட்டிங் கார்டை வீசி தக்காளியில் சொருகினான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
காய்கறிக் கடைக்குப் போய் ஐந்து ரூபாய்க்காசை எடுத்து தக்காளியை நோக்கி வீச அது நேராக காய்கறிக் கடைக்கார பொம்பளையில் கண்ணாம்பட்டையில் அடிக்க காய்கறி மார்க்கெட் சங்க நிர்வாகிகள் அனைவரும் என்னை ஓட ஓட விரட்டி விட்டார்கள்.

07. பிறகு மாடியில் திறந்திருந்த விண்டோரை நோக்கி விசிட்டிங் கார்டை வீசி அதன் வழியே உள்ளே விழ வைத்தான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
பால்கனியில் நிற்கும் பெண்ணை நோக்கி எனது விசிட்டிங் கார்டை வீச அவள் என்னை தவறாக புரிந்து கொண்டு சட்டென மண்தொட்டியை எடுத்து எனது தலையில் போட்டு உடைத்து விட்டாள் எனக்கு தலையெல்லாம் மண்ணு பிறகு வீட்டுப் போயி குளித்தேன்.

08.பிறகு டேபிளில் எரிந்து கொண்டு இருந்த ஒரு மெழுகுவர்த்தியை விசிட்டிங் கார்டை வீசி விளக்கை அணைத்தான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
விளக்கை அணைப்பது தவறுதானே... ஆகவே விளக்கை ஏற்றுவோம் என்று மெழுகுவர்த்திக்கு பக்கத்தில் வைத்து அதில் பிடிக்க வைப்போம் என்று குச்சியால் தட்டி விட்டேன் அது பறந்து போய் பக்கத்து வீட்டு கூரையில் பிடிக்க இதற்கு போய் தெருவோடு என்னை துறத்தி அடிக்க வருகின்றார்கள்,

09.பிறகு உயரத்தில் காற்றுள்ள பலூனை தொங்க விட்டு அதை விசிட்டிங் கார்டால் வீசி உடைத்தான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
நாமும் பலூன் உடைப்போமே என்று அதைப் போலவே கட்டித் தொங்க விட்டு கல்லை எடுத்து எறிந்தேன் கல் நேராக பக்கத்தில் கட்டியிருந்த போகஸ் லைட்டை பதம் பார்த்து வீட்டையே இருட்டாக்கி விட்டது.

10.பிறகு ஒருவன் தலையில் டம்ளரை நிறுத்தி வைத்து விசிட்டிங் கார்டால் வீசி டம்ளரை கீழே வீழ்த்தினான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
இதுதாங்க என் வாழ்க்கையில் சோதனையைக் கொடுத்து இப்பொழுது உங்களுக்கு தகவல் சொல்ல வைத்து இருக்கின்றது நானும் அவனைப் போலவே ஒருவனை உட்கார வைத்து தலையில் டம்ளரை நிறுத்தி வைத்து டம்ளரை கீழே வீழ்த்துவதற்காக கோடரியை வீசினேன் அது குறி தவறி அவனது கழுத்தைப் பதம் பார்த்து விட்டது இப்ப அவன் அந்தோ மருத்துவமனை ஐ.ஸி.யூ.வில் இருக்கின்றானாம் இதுக்குப் போயி போலீஸ்ல சொல்லி என்னை கைது பண்ணி உள்ளே வைக்க சொல்றாங்க இது நியாயமா ? 

Chivas Regal சிவசம்போ-
நாயை அடிப்பானேன்... பீயை சுமப்பானேன் ?

காணொளி

திங்கள், நவம்பர் 27, 2017

நான் சொல்வதெல்லாம் உண்மை


அந்தக் குழந்தை பிறந்ததும் குடும்பத்தில் குதூகலம் காரணம் ஆண் குழந்தை அதன் அழகைப் பார்த்து ஆனந்தக் கூத்தாடினர் அவனது தாத்தா பேரனின் காலை தரையில் படாமல் காலின் தடம் பதிக்கும் இடத்தில் எல்லாம் டிஸ்யூ பேப்பர் போட்டு கொண்டே சென்று பார்த்து, பார்த்து வளர்த்தார். அவரே அழகான பெயரும் வைத்தார். இருப்பினும் கண்ணே, மணியே, பொன்னே, முத்தே, ராசா, தங்கம் என்றே அழைத்து வந்தனர். ஒன்றரை வயது நிறைவடைந்ததும் நல்லதொரு திருவோண நட்சத்திர தினத்தில் எல்.கே.ஜி.யில் சேர்த்தார்கள். 

வெள்ளி, நவம்பர் 24, 2017

மனதில் ஒட்டாத, ஒட்டக ஓட்டம்


1998 நான் அபுதாபி மனநல மருத்துவமனையில் வேலை செய்த காலகட்டம் வேலை நேரம் காலை 06:30 மணி ஆனால் அதிகாலை 05:00 மணிக்கே எனது நிறுவனம் குப்பை அள்ளும் சிறிய லாரி போலிருக்கும் வண்டியில் பணியாட்களை கொண்டு வந்து கொட்டிச் செல்லும் அப்பொழுதெல்லாம் இப்பொழுது மாதிரி பேருந்துகள் கிடையாது கடுங்குளிரிலும் ஊரைவிட்டு வெளியே பாலைவனத்தில் அறுபது கி.மீ தூரமிருக்கும் விடுதியிலிருந்து நகரத்துக்குள் வரணும்.

புதன், நவம்பர் 22, 2017

விஸ்வநாத் & ரூபன்


ரூபன் எப்படி இருக்கே ?
வா... விஸ்வா நல்லாயிருக்கேன் விஸ்வரூபம் வருமா ?
கமல் ஸார் நல்லாத்தானே படம் எடுத்துக்கிட்டு வந்தாரு தீடீர்னு ஏன் இப்படி ?
ஆமா அவுங்க ஆளுகளே... அவருக்கு பிரச்சனை கொடுக்கிறாங்க...
என்னையா சொல்றே அவுங்க ஆளுக யாரு ?
முஸ்லீம்
முஸ்லீம் அவுங்க ஆளா ? என்னையா குழப்புறே... அவரு ஐயங்கார் இது எல்லோருக்கும் தெரியுமே...
அவரு பேரென்ன ?
கமல் ஹாசன்.
அவரு பேரு கமல் ஹாசன் இல்லே கமால் ஹசன்
யாருய்யா சொன்னா உனக்கு... துணை எழுத்த தூக்கி வேற இடத்துல போட்டு புதுசா குழப்புறே ?
நீ அவரு பேரை இங்கிலீஷ்ல எழுது.
KAMAL HASSAN இந்தா படி
பார்த்தியா ? கமால் ஹசன்
உன்னைச் சொல்லி குற்றமில்லை பிறந்ததிலேருந்து உனக்கு தமிழை ஊட்டி வளர்க்காம உங்க அப்பா உன்னை ஊட்டி இங்கிலீஷ் காண்வெண்ட் ஸ்கூல்ல. படிக்க வச்சாருல அதான் இப்படி தமிழே தெரியாம வளர்ந்துட்டே அது மட்டுமில்லை ஆரம்பத்திலே கமலஹாசன்’’னு இருந்ததை கமல் ஹாசன் னு’’ மாத்துனாருல அதான் இனிமே நீ தமிழ் நாட்டு விசயங்களை படிக்காதே நிறைய குழப்பத்தை உண்டு பண்ணிடுவே பிறகு வெட்டும், குத்தும் நடக்கும்.


விஸ்வரூபம் வெளியான நேரத்தில் வெளியிட்டு நான் மட்டுமே படித்த பதிவு காரணம் அன்று அப்பாவி கில்லர்ஜியை யாருக்கும் தெரியாது. மூலப்பதிவை நீக்கி இதோ தங்களின் பார்வைக்கு...

காணொளி

திங்கள், நவம்பர் 20, 2017

மனிதாபிமானம்


இறைவன் மிகப்பெரிய ரசனையாளனாக இருக்க வேண்டும், மனிதன் விஞ்ஞான பாதையில் முன்னோக்கி ஓட முயற்சித்து அதன் விளைவாய் இறைவனிடமும் முந்திக் கொண்டு போய் விடுகிறான், இது இறைவனுக்கு முன் கூட்டியே தெரியாதா ? தெரிந்திருக்கும் என்பதே எமது கருத்து. புதிய முயற்சியென விண்கலம் உருவாக்குகிறான் தவறுதலாக எங்கோ போய் விழுந்து மனிதர்களை அழிக்கிறது, புதிய முயற்சியென விஷவாயுவை கண்டு பிடிக்கிறான் சோதனை ஓட்டமாக அப்பாவி மக்களின் உயிர்களை கொல்கிறான், இறைவன் நினைத்தால் இதை தடுக்க முடியாதா ?


ஸ்பெயின் நாட்டில் காளையை மைதானத்தில் விட்டு நான்கு வீரர்கள் சிவப்புத் துணியை காளையிடம் காண்பித்து மிரட்சியடைய வைக்கிறார்கள், காளை முட்ட வரும் பொழுது பாதுகாப்பான மரப்பெட்டிகளில்... மரப்பட்டியைப் போல் ஏறிக்கொள்கிறார்கள், அப்பொழுது ஒரு வீரன் குதிரையில் சுற்றி வருகிறான் கையில் மீன் தூண்டில் போலுள்ள மூன்று ஈட்டிகளை ஒன்றன்பின் ஒன்றாக காளையின் முதுகில் பாய்ச்சுகிறான், ஒரு குறிப்பிட்ட நேரம்வரை காளை தாங்குகிறது, பிறகு குருதி மொத்தம் வடிந்து வலி தாங்க முடியாமல் மயங்கி விழுந்து இறந்து போகிறது, உடன் தோற்று விட்டதென... அறிவித்து இரண்டு குதிரைகளில் கட்டி இறைச்சிக்காக இழுத்துப் போகிறார்கள், உடன் கூடியிருந்த மனிதர்கள். கை தட்டுகிறார்கள், மனிதாபிமானம் என்று சொல்கிறார்களே... அதை இந்த இடத்தில் நினைவு கொள்..


ரஸ்லிங் என்ற பெயரில் இரும்புக் கூண்டுக்குள் மனிதனை மனிதன் மிருகங்களைப்போல் ஆயுதங்கள் எடுத்து அடித்தே கொல்கிறான், இதை ஆயிரக்கணக்காண மனிதர்கள் ரசித்து கை தட்டுகிறார்கள், மனிதாபிமானம் என்று சொல்கிறார்களே... அதை இந்த இடத்தில் நினைவு கொள் எந்த பாவமும் செய்ய பக்குவப்படாத நான்கு வயதுக்குழந்தை ஸர்ப்பம் தீண்டி துடிதுடித்து இறந்து போகிறது, இறைவன் நினைத்தால் இதை தடுக்க முடியாதா ?

விபத்தில் அடிபட்டு துடிதுடிக்கிறான், உடனடியாக மருத்துவரிடம் தூக்கி கொண்டு போனால் காப்பாற்ற முடியும், சட்டத்தின் காரணமாய் எல்லோருமே ஒதுங்க வேண்டிய வாழ்க்கைச்சூழல், மனிதாபிமானம் என்று சொல்கிறார்களே... அதை இந்த இடத்தில் நினைவு கொள், இறைவன் நினைத்தால் இதை தடுக்க முடியாதா ?

மனிதனிடம் கேட்டால் விதி என்றும் முன் ஜென்மப்பாவம் என்றும் சொல்கிறான். மனிதாபிமானம் இது மனிதனிடம் இல்லை, இது இறைவனிடம் இல்லை, சட்டத்திடமுமா இல்லை ? அது எப்படி இருக்கும் ? சட்டத்தை அமைத்ததே மனிதன்தானே... ஆகமொத்தம் இதன் விடையென்ன ? இறைவன் தனது பொழுது போக்கிற்காக உலகமெனும் நாடக மேடையை அமைத்து மனிதன் என்ற பூச்சிகளை நடிகனாக உலாவ விடுகிறான், இறைவன் மிகப்பெரிய ரசனையாளனாக இருக்க வேண்டும் என்பதே எமது கருத்து. தங்களின் கருத்தென்ன நட்பூக்களே...

காணொளி

வெள்ளி, நவம்பர் 17, 2017

தமிழ் வாழ்க !


கோவை விமான நிலையம் சித்ரா அவினாசி சாலை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த எனது விழிகளில் கண்டதுதான் மேலேயுள்ள புகைப்படத்திலிருக்கும் வாகனத்தின் இலக்கப் பலகை உடன் என் மனம் படபடத்தது காரணம் தமிழ் எண்களில் எழுதியது மனதுக்கு சந்தோஷமளித்தாலும் அந்த எண்கள் எழுதிய முறைகளில் பிழைகள் இருக்கிறது அவரிடம் சொல்ல வேண்டுமே... சொன்னால் ஏற்றுக்கொள்வாரா ? இருப்பினும் பிழை என்றறிந்தும் சொல்லாமல் செல்வது தமிழன்னைக்கு செய்யும் துரோகம் அல்லவா ! ஆகவே விரட்டினேன் அவருடையது ஃபல்சர் என்னுடையது ஸ்கூட்டி அவர் பறந்தார். நானும்தான் இருப்பினும் நான் அபுதாபியில் ஓட்டும் சட்டத்தை இன்னும் கடைப்பிடித்து வருகிறேன் இவரோ சராசரி இந்தியனாய் தொடர்ந்து விடாமல் துறத்தி கொடிசியா, ஹோப் காலேஜ், ஃபன் மால், பீளமேடு, கடந்து வந்தும் அவரைப் பிடிக்க முடியாமல் இனி இந்தியனாய் மாறுவோம் என்று விரட்டினேன் நவஇந்தியா வரும் பொழுது பிடித்து விட்டேன் தலைக்கவசத்தை உயர்த்தியபடியே....
ஸார் இது நீங்களாக எழுதியதா ?
ஆமா..
இதுல பிழை இருக்கு.
வாகனத்தை ஓரங்கட்டி நிறுத்தினார் நானும் நிறுத்தினேன்.
ஸார் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க...
சொல்லுங்க ஸார்
இந்த எண்கள் தமிழில் எழுதி இருக்கீங்க சந்தோஷம் ஆனால் எண்களில் பிழைகள் இருக்கிறது இது சராசரி தமிழ் எழுத்துகள்தான் எண்கள் அல்ல ! இதில் நான்கும், மூன்றும் பிழை மற்றவைகள் சரிதான் இருந்தாலும் எல்லாமே தமிழ் எழுத்து வழியாக எழுதி இருக்கீங்க...
உங்களுக்கு தெரியுமா ஸார் ?
தெரியும்.
சரி எழுதித்தாங்க நான் மாற்றிக் கொள்கிறேன்.
உடன் ஒரு பேப்பரில் ஒன்றிலிருந்து பத்துவரை எழுதிக் கொடுத்தேன்.
ரொம்ப சந்தோஷம் ஸார் எல்லா நண்பர்களிடமும் தமிழ்ப்பற்று உள்ளது போல பேசுவேன் ஆனால் சரியாக தெரியாமல் எழுதியதற்காக வருந்துறேன்.
நான்கூட கோபப்படுவீங்களோன்னு நினைச்சேன் சித்ராவிலிருந்து விரட்டி வர்றேன் ஸார்.
உங்களைப் பார்த்தால் கோபம் வராது பார்த்திருந்தால் நிறுத்தி இருப்பேன்.
பரவாயில்லை.
உங்களை சந்திச்சதில் ரொம்ப சந்தோஷம் ஸார்.
நன்றி மாற்றி எழுதிடுங்க...
நல்லது ஸார் இன்றைக்கே எழுதிடுறேன்.
போலீஸ்காரங்க யாருமே கேட்டதில்லையா ?
யாருக்கு ஸார் இதெல்லாம் தெரியுது ?
நன்றி வர்றேன்.
நன்றி ஸார்.
அதற்கு மேல் பேசுவதற்கு சூழல் சரியில்லை அடுத்த ஸிக்னலில் நிற்கும் பொழுது கிளிக்கினேன். அந்த முகம் அறியாத நண்பர் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்தியனான நான் ஹிந்துஸ்தான் கல்லூரி சாலையில் பறந்தேன்.

நட்பூக்களே சமீபத்தில் வாட்ஸ்-அப் குழுக்களில் பலமுறை தமிழ் எண்களை அறியத் தருகிறேன் என்று தமிழ் எழுத்துகளையே பதிவிட்டு எண்கள் என்று சொல்கின்றார்கள் இது தவறு பொது விடயத்தை அதுவும் நம் தமிழ் மொழியைப்பற்றி பிறருக்கு பொது இடத்தில் சொல்லும் பொழுது அதில் மிகத்தெளிவான பொருளை நாம் முன்வைத்தல் வேண்டும் இதுவே நாம் நமது அடுத்த தலைமுறைக்கு கொடுத்துச் செல்லும் பாடமாகும். இதற்கு மறுப்பு சொல்லி உடனே நானும் வாட்ஸ்-அப்பில் பதில் விளக்கி செல்லிலேயே தமிழ் எண்களை கொடுத்து இருக்கிறேன். ஏற்கனவே இதனைக் குறித்து எனது தளத்தில் பதிவும் எழுதி இருக்கிறேன் இதோ அந்த இணைப்பு தமிழ் எண்கள்


இதுதான் தமிழ் எண்கள் அறிந்து கொள்க – கில்லர்ஜி
௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰
1  2  3  4  5  6  7  8  9  0

காணொளி

புதன், நவம்பர் 15, 2017

நான் இந்திய குடிமகனா ?


மிழகத்தில் தற்போது எங்கு நோக்கினும் ஜாதீய அமைப்புகளை உருவாக்கி மக்களை ஒருக்கிணைக்கின்றோம் என்ற பெயரில் பிரிவினைகளை உருவாக்கி தனது சமூகத்து மக்களை திரட்டிக்காண்பித்து அரசை மிரட்ட வைத்து அதில் ஒரு சிலர் மட்டும் பயன் பெறுகின்றார்கள் நமது சமூகத்துக்கு உயர்வு வேண்டும் நமது சமூகத்து அங்கத்தினர் சட்டமன்றம் செல்லவேண்டும் என்று பொய்யுரைத்து பக்குவமாக தான் நுழைந்து தனது வாழ்க்கையை செம்மை படுத்திக்கொள்கின்றார்கள் இதை முதலில் அனைத்து சமூகத்து பொது மக்களும் உணரவேண்டும் உணராவிடில் இது நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையான விடயமே.

திங்கள், நவம்பர் 13, 2017

பசியின் கொடுமை


லகில் 936 Million மக்கள் உணவின்றி தவிக்கின்றனர் தினம் 20864 நபர்கள் உணவு கிடைக்காமல் இறக்கின்றார்கள் இந்நிலைக்கு இன்னும் இந்தியா வரவில்லை என்பதில் பெருமையும், இறைவனுக்கு நன்றியும் சொல்வோம் பசி என்றால் என்னவென்பது பலருக்கும் தெரிவதில்லை காரணமென்ன ? அவர்கள் வளர்ந்த விதம் அப்படி உதாரணம் தமிழக முன்னாள் முதல்வர் திரு. மு. கருணாநிதி அவர்களுக்கு பசியைப்பற்றி தெரியும் அதேநேரம் அவரது பேரன் திரு. உதயநிதி ஸ்டாலினுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, திரைப்பட இயக்குனர் திரு. T. ராஜேந்தர் அவர்களுக்கு பசியின் கொடுமை தெரியும், அவரது மகன் சிலம்பரசனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை இந்நிலை நம்மில் பலரது குடும்பத்தினருக்கும் உண்டு

சனி, நவம்பர் 11, 2017

இது சிரிப்பதற்கு அல்ல !

 இனியாவது திருந்தணும் தலைவர்கள் அல்ல மக்கள்.
 பிரதமர் பதவி நாங்கள் உனக்கு கொடுத்த வேலை.

வியாழன், நவம்பர் 09, 2017

MONEY மண்டபம்


செவாலியே திரு. சிவாஜி கணேசன் அவர்கள் மீது எனக்கு விரோதம் கிடையாது அவர் இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் இதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது மேலும் அவர் பச்சைத்தமிழன் அதில் நாம் அனைவரும் இணைந்தே பெருமை கொள்வோம். அவருக்கு மணி மண்டபம் கட்டுவதற்கு பலரும் பல கருத்துகளை சொல்லி வருகின்றார்கள் அவருடைய ரசிகர்கள் இதற்கு மறுப்பு சொல்வார்களா ? மாட்டார்கள் காரணம் தமிழர்கள் ரசிகர் என்ற வட்டத்துக்குள் தன்னை சிறை படுத்திக்கொண்ட பிறகு திரைப்பட வசனகர்த்தாவின் சுய அறிவில் உதித்ததை தனது தலைவன் வாயசைத்து சொன்னதை வேதவாக்காக நினைக்கிறான். அதனால்தான் அவர்களை முதல்வர் ஆக்கவும் துடிக்கின்றான். பொதுநலத்துக்கு வருபவர்கள் ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டுமென்பது தமிழகத்தைப் பொருத்தவரை அவசியமற்றுப் போய்விட்டது ஆகவே ரசிகர்களுக்கு அவன் நாலு மனைவிகளை திருமணம் செய்து ஏழு நபர்களை வைத்திருந்தாலும் அது தவறாக தோன்றுவதில்லை எல்லாம் சரி எதுவும் சரி இந்த வார்த்தைகள் திரு. சிவாஜி கணேசன் அவர்களை சொல்வதாக நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் வேறு யார் ? நிறைய நபர்களை சொல்லலாம்.

சனி, நவம்பர் 04, 2017

My, Society


இந்த சமுதாயத்தில் எந்த ஒரு திறமைசாலியையும் தட்டிக் கொடுத்து உயர்த்தி விடுபவர்களை விட அவனை மட்டம் தட்டி கவுத்தி விடுபவர்கள்தான் அதிகம் பேர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை இந்த சமுதாயம் ஒரு குப்பைத் தொட்டி அதன் விளக்கம்.

ஒரு குப்பைத் தொட்டியில் சிறிதளவு மலம் கிடந்தாலும் சரி அதே குப்பைத் தொட்டியில் பெரிதளவு சந்தனம் கிடந்தாலும் சரி அதே நாற்றம்தான் வரும் இதைப் போலவே நல்லதோ கெட்டதோ எந்தக் காரியத்தை செய்தாலும் இந்த சமுதாயம் குறை சொல்லிக் கொண்டே.. இருக்கும் நம் மனதுக்கு நல்லது என்று மனசாட்சி சொல்வதை செய்து கொண்டே இருக்க வேண்டும் நியாயமான மனசாட்சிக்கு நிகரான நீதிபதி மட்டுமல்ல இறைவன்கூட வேறு யாருமில்லை ஆகவே என்னைப் பொருத்தவரை இந்த சமுதாயம் ஒரு குப்பைத்தொட்டி.

Chivas Regal சிவசம்போ-
குப்பைத்தொட்டி நாற்றம் வரும்னு கண்டு புடிச்சவரு இவருதான்.