தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஆகஸ்ட் 06, 2024

கிறுக்கியது ஏழு

 

வனுக்கு ஊரார் வைத்த
பெயர் கிறுக்கன் மாலை
நேரமாதலால் பறவைகள்
நேர்த்தியாக அரை வட்டமாக
கூடு திரும்பும் அவசரத்திலும்
இவனை கூச்சலிட்டு கேலி செய்து
போனது. கிறுக்கன் கேட்டான்
ஏ... பறவைகளே நீங்கள் எதற்கு
என்னை கேலி செய்கிறீர்கள்
நானும் உங்களைப் போல்தானே
ஆடையின்றி வாழ்கிறேன்...
* * * * * * Sunday * * * * * *
 
வன் திரையரங்கத்து
வளாகத்துக்குள் நுழைந்தான்
சீட்டு கொடுக்கும் இடத்தை
நோக்கி போனான் தடியோடு
எங்கிருந்தோ ஓடி வந்த காவலாளி
டேய் கிறுக்கா... ஓடுறா வெளியே
என்று கழுத்தை பிடித்து தள்ளினான்
இவனுக்கு குழப்பமாக இருந்தது
நமக்கு ஏன்  அனுமதி இல்லை
நமது வாழ்வைத்தானே படமாக்கி
இருக்கின்றார்கள். காதல் திரைப்பட
சுவரோட்டி ஒட்டிய சுவற்றை பார்த்து
கேள்வி கேட்டான்.
* * * * * * Monday * * * * * *
 
வன் கல்லூரி அருகில்
நின்று ஆலோசித்துக் கொண்டு
நின்றான் இவர்களைப் போல்தானே
நாமும் உடையணிகிறோம் பிறகு
நம்மை மட்டும் எதற்கு கிறுக்கன்
என்று சொல்கிறார்கள்.
* * * * * * Tuesday * * * * * *
 
வன் தொட்டதும் அந்த
தொட்டால் சிணுங்கிச்செடி
தனது உடலை நாணத்தால்
சுறுக்கி கொண்டது.
அது மேலும் சொன்னது
ச்சீ இந்த மனிதர்களுக்கு
வெட்கமில்லை என்று...
* * * * * * Wednesday * * * * * *
 
வள் பூவைப் பறித்து கூடையில்
போட்டாள் இன்று போதும்
என்று கிளம்பியபோது...
இறுதியாக பறித்த பூ
தனது சகோதரியையும்
பறிக்காமல் நிறுத்தியது
தவறு என்று கதறியது
பூ பறித்தவளுக்கு கேட்காததால்
இவளை செவிடியோ என்று
ஐயம் கொண்டது அப்-பூ
* * * * * * Thursday * * * * * *
 
வள், அவனை ஆசையுடன்
பார்த்து சொன்னாள் இன்று
சுமங்கலி பூஜை இந்த தாலியில்
குங்குமத்தை வைத்து விடுங்கள்
அத்தான்  என்று...  மனைவி
சொன்னபடி குங்குமத்தை
வைத்து முடிக்கவும் கட், கட் என்று
அபசகுணமாக சொன்ன இயக்குனர்
இந்திரஜித் மேலும் சொன்னார்
டுடேய் ஷூட்டிங் ஓவர் என்று.
* * * * * * Friday * * * * * *
 
ந்த வயலில் நெற்கதிரை
சுவைத்த மாட்டை வாஞ்சையுடன்
பார்த்தது நெற்கதிர். அது மேலும்
நினைத்தது இயந்திரத்தில் நைந்து
அரிசியாக மனிதனுக்கு உணவாகி
மலமாவதைவிட, மாட்டுக்கு உணவாகி
சாணமாக மீண்டும் வயலுக்கே
உரமாவதே வரம் என்று...
* * * * * * Saturday * * * * * *
 
கில்லர்ஜி புதாபி

19 கருத்துகள்:

  1. நல்ல பகடி... ஒரே ஆளே 7 நாட்களும் வரப்போகிறார் என்று நினைத்தபோது ட்விஸ்ட்.... பாதியில் வந்தார் வேறொரு மாது!

    பதிலளிநீக்கு
  2. ஆறையும் ஏழையும் அதிகம் ரசிக்க முடிந்தது. ஆறாவது - திரையில் நடிக்க என்ன வேண்டுமானாலும் காட்சியில் நடிக்கிறார்கள். காசு காசு.. காசு.. ஆனால் இது பற்பல வருடங்களாக நடி/டப்பதுதானே!

    பதிலளிநீக்கு
  3. வயல் அப்படி நினைக்கத் தொடங்கி அதுவும் நடந்து விட்டால் மனிதனின் கதி..?! - ஏழாவது.

    பதிலளிநீக்கு
  4. முதலாவதை இன்னும் தட்டி கொட்டி நல்ல ஒரு கவிதையாக கொண்டு வர முயற்சிக்கலாமே...

    பதிலளிநீக்கு
  5. தொட்டால் சிணுங்கி , நெற்கதிர் சொன்னதை ரசித்தேன்.
    கவிதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. ​உலகத்தில் உள்ள அத்தனை பைத்தியக்காரர்களும் பைத்தியம் இல்லாதவனை பைத்தியம் என்று தான் கூறும் நூட் பீச்சில் முழு ஆடையில் இருப்பவனைப்பார்த்து.

    உங்களுடைய சிறப்பு அம்சமான எதுகை மோனையை காணவில்லை. கொஞ்சம் சீர்படுத்தினால் மெருகேறும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // உலகத்தில் உள்ள அத்தனை பைத்தியக்காரர்களும் பைத்தியம் இல்லாதவனை பைத்தியம் என்று தான் கூறும்//

      ஜெயகாந்தன் இதை மையமாக வைத்து 'அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்' என்று ஒரு நாவல் எழுதி இருந்தார்.

      நீக்கு
    2. வாங்க ஐயா தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  7. சனிக்கிழமை பகுதியை மிகவும் ரசித்தேன். மற்றவையும் நல்ல முயற்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது ரசிப்புக்கு நன்றி

      நீக்கு
  8. அனைத்தும் நன்று. சனிக்கிழமைக்கான முயற்சி தனித்துத் தெரிகிறது.

    பதிலளிநீக்கு