தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஆகஸ்ட் 31, 2024

எனக்கு அகவை முந்நூறு


ண்பர்களே... மேலே மேற்படியார் சொல்லி இருப்பதை பார்த்தீர்களா ? இவர் நூற்றி ஐம்பது வருடம் வாழ்வாராம். இருக்கட்டும் நானும்கூட முந்நூறு வருடம் வாழப்போகிறேன் அதற்கான ஆய்வை முடித்து விட்டேன். அந்த ஆய்வு ரகசியம் எமது சீடர்களால் எப்படியோ கசிந்து இவரது கைக்கு போய் விட்டது போல... பரவாயில்லை எனது ஆய்வில் பாதிதான் கிடைத்து இருக்கிறது ஆகவே நூற்றி ஐம்பது வருடம். நான் முந்நூறு அல்லவா...
 
நான்கூடத்தான் பதினாறு அகவையைப்போல் இருக்கிறேன். இதை எல்லாம் வெளியில் சொல்லக்கூடாது இருப்பினும் இவரைப் போன்றவர்களால்தான் எனது ஆய்வு வெளியாகி விட்டது. சரி இவர் சொன்னது உண்மைதான் என்று சமூகம் நம்பி விட்டது என்றே வைத்துக் கொள்வோம். இந்த ரகசியத்தை பிறகு வெளியிடுவாராம். பிழைக்கத் தெரியாதவர். நான் இந்த ஆய்வை உலக அளவில் ஐ.நா.சபையில் பதிவு செய்து அமெரிக்க அதிபராக பதவி வகிக்க திட்டம் போட்டேன் அதில் இவரால் மண் விழுந்து விட்டது.
 
சாதாரணமானவர்களுக்கு முதலமைச்சர் பதவி பெரிதுதான் போலும். எனக்கு அப்படியல்ல நான் வேற மாதிரி இருப்பினும் ஸ்பைடன் பதவியைவிட உயரமானது எதுவென்று ஆராய்ந்து அந்த பதவிக்கு குறி வைத்து இருக்கிறேன். விடமாட்டேன் நான், யாராவது குறுக்கே வந்தால் ஜேம்ஸ் ஊரணியில் தள்ளி விடுவேன்.
 
ஸரத்து பொய் சொல்லலாம் ஆனா இப்படி ஏக்கர் கணக்கா விடக்கூடாது. மக்களை எவ்வளவு இழிவாக, அடிமுட்டாளாக நினைத்து விட்டீர்கள் ? 2026-ல் முதலமைச்சர் ஆக்கினால்தான் இந்த ரகசியத்தை சொல்லுவீங்களோ... ? இவ்வளவு காலம் வாழும் போது உங்களுக்கு மனைவி துணை வேண்டுமே... அதற்கு மீண்டும் திருமணம் செய்வீர்களோ ? காரணம் நிச்சயம் வருடம் 2104 மே 29 வரையில் ராதிகா அவர்கள் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அவரும் சேர்ந்து இருப்பார் என்று நீங்கள் சொல்லவில்லையே... அடுத்து திருமணம் செய்வது குடும்பத்து பெண்களா ?
 
நிச்சயமாக உங்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள். காரணம் வயது கூடி விட்டது என்று மேலும் ஏற்கனவே நடிகையை மணப்பதற்காக கட்டிய மனைவியை விவாஹரத்து செய்தவர் தாங்கள். மற்றபடி தேகபலம் உள்ளவர்தான். அதைப் பார்த்தாலே தெரிகிறது. மக்களை குடிக்க வைத்து அரசாளும் திராவிடக்கட்சிகளுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் உண்டா ? சாராய உற்பத்தி ஆலையை நடத்தும் கட்சி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ? மதுவிலக்கு என்று சொல்வதை நம்பி மக்கள் வாக்களிக்கின்றார்கள்.
 
ஆகவே சிந்தை இல்லாத மக்களிடம் எப்படி வேண்டுமானாலும் வாக்குறுதி கொடுக்கலாம். அதை வைத்து நாடாளலாம். என்ற ஆசையா ? உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்ற ஓர் உறுப்பு இருக்கின்றதா ? மனசாட்சிக்கு உருவம் கிடையாதோ... சாதியுணர்வை விட்டு வெளியே வாருங்கள். எல்லா சமூக்கத்து மக்களும் உங்களை மட்டுமல்ல எல்லா தலைவர்களையும் ஆள விடுவார்கள்.
 
கில்லர்ஜி புதாபி
 
Chivas Regal சிவசம்போ-
ஸ்பைடன் பதவியைவிட உயரமானது மேலோக பதவிதான். மேலேதான் அனுப்பி விடணும்.
 
சிவாதாமஸ்அலி-
90 வயசு வரையில் சொத்து சேர்த்து வாழ்ந்தவங்களே பொய் சொல்ற போது 150 வயசு சொல்லலாம்.

22 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    தங்களின் ஆதங்கம் புரிகிறது. அந்த ஆதங்கம் தந்த வலியிலும் நன்றாகவே எழுதியுள்ளீர்கள். ரசித்தேன். இறைவனின் பார்வையில், நம் ஒவ்வொருவருக்கும் பின் நிழலாக நிறுத்தப்படும் மரண தேவனின் நாட்கணக்கு எண்ணிக்கையை யாரரிவார்.?

    /அந்த ஆய்வு ரகசியம் எமது சீடர்களால் எப்படியோ கசிந்து இவரது கைக்கு போய் விட்டது போல... பரவாயில்லை எனது ஆய்வில் பாதிதான் கிடைத்து இருக்கிறது/

    ஹா ஹா ஹா. முதலில் அந்த சீடர்களை மாற்ற வேண்டும். இல்லையெனில் இந்த மாதிரியான ஏமாற்று வேலைகளை தொடர்வார்கள்.:)) பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  2. கில்லர்ஜி! இவர் சொல்றத கூட்டம் நம்பும்னு நினைக்கறீங்க!!??? நிச்சயமா இல்லை. அதெல்லாம் சும்மா கண நேர கைதட்டல்தான் மற்றபடி ஒன்றும் கிடையாது. எந்த மக்களும் இதைப் பத்தி அப்புறம் யோசிக்க கூட மாட்டாங்க என்பது சர்வ நிச்சயம். யுட்யூபர்களுக்கு நல்ல அவல் கிடைச்சிருக்கலாம். மாத்தி மாத்தி பல சானல்களிலும் போட்டு பேசி சம்பாதிக்க மற்றபடி யாரும் இதை எல்லாம் சீரியஸா எடுத்துக்க மாட்டாங்க கில்லர்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக இன்றைய அரசியல்வாதிகள் கோமாளிகளாகத்தான் இருக்கிறார்கள்.

      ஆனால்
      கோமான்களாக வாழ்கிறார்கள்.

      நீக்கு
  3. பைடன் பதவியைவிட உயரமானது வெள்ளை மாளிகையின் உச்சியில் வெள்ளையடிக்கும் வேலைதான். நூறு வயது வரை வாழ்வது எப்படின்னு புத்தகம் எழுதி காசு சம்பாதித்த தமிழ்வாணனே அறுபது வயதைத் தாண்டின மாதிரித் தெரியலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      அதானே... தேவகோட்டைக்காரருக்கே இதுதான் விதி.

      நீக்கு
  4. அவர்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள், ஆனால் யாரும் நம்புவதாகத் தெரியவில்லை. நம்பவும் மாட்டார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  5. 300 வருடம் வாழுங்கள் வாழ்க வளமுடன்
    வாழும் ஆய்வை முடித்து விட்டீர்களா?
    அதை சொல்லபோகிறீர்களா?
    நீங்களே சொல்லி விடலாம், சீடர் மூலம் கசிந்து போவதை விட.

    திருமூலர் 3000 பாடல் எழுதினார் என்பார்கள் தினம் ஒரு பாடல் எழுதினார் பல காலம் வாழ்ந்தார் என்பார்கள். அவரே "இளமை நிலையாமை" என்று எழுதி இருக்கிறார்.
    உடலும் இளமை மாறி முதுமை கூடி ஒரு நாள் அழிந்து போய் விடும் என்கிறார்.

    பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை.


    சரத் சுவாமிகள் சொல்வது போல 150 வயது வாழலாம்.
    மனிதன் 120 வயது வரை வாழலாம் ஆரோக்கியமாக இருந்தால் என்று சொல்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  6. யாகவா முனிவர், யாகவா முனிவர்னு ...

    இரண்டுபேரா?

    அட...  ஒருத்தர்தான்யா....   யாகவா முனிவர், யாகவா முனிவர்னு ஒருத்தர் இருந்தார்.  அவர் என்ன சொன்னார்னா......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா... வாங்க ஜி

      நீக்கு
    2. யாகவா முனிவர் என்ன சொன்னார் என்று நினைவிருக்கா ஜி?

      நீக்கு
    3. நான்தான் பிள்ளையாரை பால் குடிக்கச் சொன்னேன்" என்றார்.

      நீக்கு
    4. தனக்கு வயது 1300 என்றார்!

      நீக்கு
    5. ஆமாம் ஜி மறந்து விட்டேன்.

      நீக்கு
  7. அதாவது சரத் என்ன சொல்ல வர்றார்ன்னா...  அல்லது என்ன சொல்லுவார்னா...  அவர் முதல்வராகி செய்யும் நல்ல காரியங்களால் மினிமம் 150 வருடம் மக்களின் மனங்களில் வாழ்வார் என்று சொல்வார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படித்தான் அர்த்தம் கொள்ள வேண்டுமோ... ஜி

      நீக்கு
  8. இப்படியான பீலா விடுபவர்களை நம்பும் சிலர் இருக்கிறார்கள் என்றாலும் பெரும்பாலானவர்கள் நம்புவதில்லை ஜி.

    பதிலளிநீக்கு
  9. எவர் எதையும் அள்ளி விடட்டும் நண்பரே! எனக்கும் அந்த ஜேம்ஸ்ஊரணி எங்கு இருக்கிறது என்பதை மட்டும் சொல்லி விடுங்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      ஜேம்ஸ் ஊரணி இங்கிலாந்து நாட்டில் உள்ளது.

      உரிமையாளர் தற்போது ஸ்கோட்லாண்டில் வாழ்கிறார்.

      நீக்கு