தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
சனி, ஆகஸ்ட் 17, 2019
புதன், ஆகஸ்ட் 14, 2019
மூஸாலி கோயில் (3)
முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக...
கண் விழித்த சிவமணிக்கு
கண்கள் கூசியது காரணம் சூரிய ஒளி. விடிந்து விட்டது திறந்த வெளியில் தன்னை தரையில்
பரப்பி படுக்க வைத்து கை கால்களை கட்டியிருந்தார்கள் உடம்பு முழுவதும் கருப்பு
நிறத்தில் மையை தடவி இருந்தார்கள் எதிரே பார்த்தான் இதுதான் மூஸாலி கோயிலோ
கையெடுத்து வணங்கி வேண்ட வேண்டும் போல் இருந்தது கைகள் கட்டப்பட்டு இருக்கிறதே..
பக்கத்தில் வெள்ளை உடையணிந்த ஒருவன் ஏதோ செய்து கொண்டிருந்தான் சூழ்நிலையை
பார்க்கும் பொழுது இரவு முழுவதும் ஏதோ பூஜை நடந்திருக்கின்றது என்பதை உணர
முடிந்தது நேற்றிரவு நமது குருதியைக் குடிக்க சண்டை போட்டவர்களில் ஒருவனைக் காணோமே
ஒருவேளை அவனை இவன் கொன்று விட்டானோ ?
ஞாயிறு, ஆகஸ்ட் 11, 2019
மூஸாலி கோயில் (2)
முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக...
தவசியைக் காணவில்லை
சிவமணிக்கு உடல் முழுவதும் ஒரு நொடியில் வியர்த்தது தவசி தவசி என்று அலறி விட அந்த
சத்தம் மலையில் எதிர் முகட்டிலிருந்து எதிரொலித்து மீண்டும் இவன் காதுக்கே வந்து
பயமுறுத்த என்ன செய்யலாம் யோசித்தவன் அப்படியே கீழே உட்காரந்து கண்களை
மூடிக்கொண்டு தனது குலதெய்வம் குலோத்துங்கன் சாமியை வேண்டினான் சாமி நீ என்னை
மட்டும் வீட்டுக்கு பத்திரமாய் கொண்டு போயிட்டா இந்த வருஷம் களரிக்கு கிடா
வெட்டுறேன்... மனதுக்குள் இப்படியே நினைத்துக் கொண்டு இருந்தவனுக்கு திடீரென
தூக்கி வாரிப்போட்டது காரணம்.
வியாழன், ஆகஸ்ட் 08, 2019
சனி, ஆகஸ்ட் 03, 2019
சென்னை, செம்மொழி செண்பகவள்ளி
செண்பகவள்ளி இவளை நல்ல அழகி என்று சொல்ல
முடியாது, அழகி இல்லை என்றும் சொல்லி விடமுடியாது பெயருக்கு ஏற்றாப்போல அவள்
மேலிருந்து பூவின் மணம் வரும் அதை வாசம் என்றும் சொல்ல முடியாது அல்லது மினி கூவம்
என்றும் சொல்லி விடமுடியாது யாராக இருந்தாலும் சரி பேசும் பொழுது மட்டும் கொஞ்சம் ‘’வள்’’ என்று
இருக்கும் அதிலும் கணவன் கண்ணப்பன் என்றால் கொஞ்சம் இரண்டொரு அறைகளோடு இருக்கும்
ஆனால் ஒன்று மாமியார் மாசாணியை மட்டும் அடிக்க மாட்டாள் அதற்கு ஈடாக வார்த்தைகளில்
வசை பாடி விடுவாள் அந்தப் பாட்டுகல்ள் பீப் பாடல் மாதிரி இருக்கும் என்று சொல்ல
முடியாது அதேநேரம் பீப் பாடல் மாதிரி இல்லை என்றும் சொல்லி விடமுடியாது




