தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், டிசம்பர் 04, 2023

மார்வாடி

 

ணக்கம் நட்பூக்களே... பொதுவாக நான் பிறரது கருத்துகளை எனது தளத்தில் வெளியிடுவது இல்லை இது நமது எதிர்கால சந்ததிகளின் வாழ்வாதாரம் பற்றிய தகவல் என்பதால் பகிர்கின்றேன். யாரோ எழுதியது படித்து விட்டு கடந்து போகாமல் சற்றே சிந்திக்கவும் - கில்லர்ஜி
 
மார்வாடி (சேட்டு) எலக்ட்ரிக், ஜவுளி, பேன்சி போன்ற கடைகளில் தான் கூட்டம் அதிகமாக உள்ளது காரணம் கேட்டால் மக்கள் விலை குறைவாக உள்ளது என்று கூறுகிறார்கள் இது நம் தலையில் நாமே மண்ணை போட்டு விடுவதற்கு சமம். மார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்.
 
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் ஒரு கோடியே நாற்பது லட்சம் வட இந்தியர்கள் குடியேறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் சொல்கிறது. இதில் எண்பது லட்சத்துக்கும் மேல் தமிழக வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் அதிர்ச்சி தகவல். இருநூறு இடங்களை கூட எங்களால் பிடிக்க முடியுமென்று தமிழிசை சொன்னதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, கடந்து விட முடியாது.
 
சங்பரிவார் கூட்டம் காலூன்ற முடியாத தமிழகத்தில் வட இந்தியர்களை குடியேற்றி வாக்காளர்களாக்கி வெற்றி பெற சதித் திட்டம் தீட்டுகிறது. மார்வாடிகள் இல்லாத ஊர் என்று பார்த்தால் சின்னஞ்சிறு கிராமமாக மட்டுமே இருக்க முடியும் ? நகர்ப்புற பகுதிகளில் வளையல் கடை, பிளாஸ்டிக் கடை, பேன்சி கடை, துணிக்கடை, நகைக்கடை என்று தங்களின் வியாபார யுக்திகளை கையாள்வதின் மூலம் பாஜகவையும் சேர்த்தே அவர்கள் வளர்க்கிறார்கள்.
 
இந்த மார்வாடிகளிடம் தமிழர்கள் வியாபாரம் செய்வதையும், அவர்களுக்கு கடை, குடோன் மற்றும் வீடு வாடகைக்கு விடுவதையும் தமிழர்கள் நிறுத்தினால் போதும். அவர்கள் தானாகவே தமிழகத்தை விட்டு வெளியேறி விடுவார்கள். மார்வாடிகள் தங்கள் சொந்த கட்டிடத்தில் (ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்) மார்வாடி அல்லாதவர்களுக்கு வாடகைக்கு விட மாட்டார்கள்.
 
ஒரு பில்டிங்கில் பத்து கடை இருந்தால், தனக்கு வேண்டிய கடைகளை வைத்துக் கொண்டு மீதிக்கடைகளுக்கு அவன் சொந்தக்காரன், ஊர்க்காரனை அழைத்து வந்து பிஸினஸ் செய்ய வைப்பான். மார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்.
 
இப்படித்தான் யூதர்கள் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்தார்கள். வட நாட்டுக்காரனுடன் அதிகம் உறவாடும் ஒரு நண்பர் இன்று கொடுத்த அதிர்ச்சி தகவல். பாண்டிச்சேரி அரவிந்த் ஆசிரமம், தஞ்சை சாஸ்த்ரா பல்கலைகழகம், கோவை ஈஸா போன்ற பெரும் பணக்காரர்கள், கல்வியாளர்கள், மார்வாடி வியாபாரிகள் போன்றோருக்கு RSS உத்தரவிட்டுள்ளதாம்.
 
தமிழகத்தின் நிலப்பரப்புகளை வட நாட்டவர்கள் அதிகளவில் தொடர்ந்து ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்த வேண்டுமாம். இதன் காரணமாகவே மார்வாடி, ஜெயின், பீகாரி, குஜராத்தி அதிகமானோர் தமிழ் நாட்டில் படிக்க வருவதும், வியாபாரம் செய்வதும், நிலம் வாங்கி வீடு கட்டுவதும் நடைபெறுகிறது.
 
தற்போது பரவலாக தமிழகத்தில் சொத்துக்களையும் வாங்குகின்றனர். இன்னும் 40 - 50 வருடங்களில் தமிழகம் வட மாநிலத்தவரின் ஆதிக்கத்தின் கீழ் வந்து விடும். பிறகு தானாகவே தமிழன் அடிமை இனமாக மாறிடுவான். தமிழர்களே பாசிசத்தின் கோர பிடியிலிருந்து பாதுகாத்து கொள்ள... யாரும் உங்கள் சொத்துக்களை தமிழர் அல்லாதோரிடம் விற்காதீர்கள். தமிழர்கள் புதிதாக சொத்து வாங்குவதாக இருந்தால் வட மாநிலத்தவனிடம் உள்ள தமிழ் மண்ணை வாங்குங்கள். வட நாட்டுக்காரன் வியாபாரத்தை புறக்கணித்து நஷ்டம் ஏற்படுத்தி தமிழகத்தை விட்டு துரத்துங்கள். தமிழனின் பொருளாதாரத்தையும் நிலத்தையும் வட நாட்டுக்காரனிடம் இழக்காதீர்கள்.
 
உஷார் பரப்புங்கள்.
 
தமிழக மருத்துவ கல்லூரிகளில் வடநாட்டுக்காரன் சேருவதற்காக தான் நீட் தேர்வே அறிமுகப்படுத்தப்பட்டது. அறிவோம் சூழ்ச்சியை. வெல்வோம் மதியால்... அன்னியர்களின் வருகை நாளுக்கு நாள் பெருகுவது நாம் இன்னுமும் மதுவின் போதையிலும், மாதுவின் மயக்கத்திலும் உறங்கிக் கொண்டு இருக்கிறதா... தமிழ்ச்சமூகம் ? விழித்தெழுவோம்  சமூக ஒற்றுமையோடு. தமிழ் மக்களே தமிழினமே நம் தாய் மண்ணை அபகரிக்கும் வந்தேரிகள் கூட்டம் ஒரு கோடியை தாண்டி விட்டது. இனி தமிழ் மண்ணில் தமிழ் மக்கள் அகதிகளாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. விழித்துக் கொள்ளுங்கள் தமிழினமே விழித்துக் கொள்ளுங்கள்.
 
இவர்களை  அறவழியில் விரட்டி விடலாம் அது இவர்களிடம் வியாபாரம் செய்வதை நிறுத்துவது மட்டுமே... – கில்லர்ஜி
 
காணொளி

Share this post with your FRIENDS…

22 கருத்துகள்:

  1. இந்தக் கட்டுரை திராவிட வியாதிகளால் திணிக்கப்படும் கருத்து. தமிழகத்தில் முஸ்லீம்கள்தான் அளவுக்கதிகமாக ஆக்கிரமிப்பு செய்கின்றனர். இருபது லட்சங்களுக்கு மேல் வெளியிலிருந்து வந்தவர்கள், அதிலும் பங்களாதேஷ் கார்ர்கள் எனப் பலர் சொல்கின்றனர். ஒரு முஸ்லீம் காம்ப்ளக்சில்கூட மற்ற மத்த்தினரின் கடைகளைக் கண்ணால் பார்க்கமுடியாது. அவர்கள் கடைகளில் அவர்களின் ஆட்கள் மாத்திரமே. மார்வாடிகள் தேசத்திற்கு எதிரானவர்கள் கிடையாது.

    இப்படிப் பார்க்கப்போனால் தெலுங்கர்கள் இருபது சத்த்தைக்கு மேல், தற்காலங்களில் மலையாளிகள் என்று பெருகிக்கொண்டு போகிறார்கள்.

    அதனால் இந்த மாதிரி கட்டுரைகளே பிரிவினைவாதிகளால், தேசவிரோதச் சிந்தனை உள்ளவர்களால் பரப்பப்படும் வதந்தி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுதான் உண்மை..நான் எங்கள் பகுதியை அவர்கள் ஆக்கிரமிப்பை அன்றாட ம் பார்க்கிறேன்

      நீக்கு
  2. உடையில் தமிழர்கள் கலாச்சாரம் இல்லை. வழிபாட்டில் தமிழர் கலாச்சாரம் மிக வேகமாக்க் குறைகிறது. உணவுப் பழக்கத்தில் அதைவிட மோசமாக்க் குறைகிறது. இதுபற்றி இவர் எழுதியிருக்கிறாரா? இந்த மாதிரி 200 லூபாய் ஆட்களின் பேச்சை ஒதுக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. இந்த பிரிவினை வாதங்கள் தற்போது உருவாக காரணம் யார் என்பதை சிந்திக்க வேண்டும். இத்தனை காலம் பாய் பாய் என்று ஆதரித்தவர்களை விரோதியாக்கியது யார்?

    இத்தனை காலம் புதிய டிசைன் பொருட்கள் தேவையா, மார்வாடிக் கடைக்கு போ என்று இருந்தவர்கள் தற்போது அவர்களை புறக்கணிக்க அறிவுறுத்தும்படி செய்தது யார்?

    சாதி மதம் பாராமல் வேற்றுமையில் ஒற்றுமையாக இருந்த மக்களை பெரும்பான்மை மதத்தவர்களுக்கே நாடு சொந்தம் மற்றவர்கள் வேறு நாட்டுக்கு செல்ல வேண்டும் என்று விரோதத்தை வளர்த்தவர்கள் யார்?

    இந்தி கலாச்சாரம் மட்டுமே இந்திய கலாச்சாரம் , மற்ற தமிழ் கலாச்சாரம் போன்றவை இந்திய கலாச்சாரம் அல்ல என்று கூறி இந்தி கலாச்சாரத்தை திணிப்பவர்கள் யார்?

    இத்தகைய மாற்றங்கள் சென்ற 15 ஆண்டுகளாகத் தான் இங்கு விதைக்கப்பட்டுள்ளன என்ற உண்மையை அறிந்து கொள்ளுதல் நன்று.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் எல்லோரும் காரண காரியங்களுக்காக, நம் விருப்பத்திற்காக ஒரு சார்பு எண்ணம்தான் கொண்டிருக்கிறோம். சிறுபான்மையினருக்கு மாத்திரம் சலுகை என்பது பதினைந்து வருடங்களாக மட்டுமே ஆரம்பிக்கப்பட்டதா? வெளி நாட்டு நிதியை இங்கு கொண்டுவந்து மதம் மாற்றுங்கள் என பதினைந்து ஆண்டுகளாக அரசு அனுமதிக்கிறதா? மக்களை சாதி ரீதியாகப் பிளவுபடுத்தியது கடந்த பதினைந்து ஆண்டுகளாகவா? சிந்திப்பவர்களுக்கு உண்மை புரியும்.

      நீக்கு
  4. மார்வாடிகள் ஏல்லோரும் ஹிந்திக்காரர்கள் அல்ல. அடிப்படையில் குஜராத் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கும் ஹிந்தி வெறியர்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அவர்களுடைய பொதுவான குணம் யாரையும் பகைத்துக் கொள்ளமாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  5. @ நெல்லை..

    /// தமிழகத்தில் முஸ்லீம்கள் தான் அளவுக்கதிகமாக ஆக்கிரமிப்பு செய்கின்றனர்.. ///

    உண்மையான கருத்து..

    பதிலளிநீக்கு
  6. 2005 ல தஞ்சாவூரில் கிறித்தவப் பிரிவின் ஒரு வகைக்குக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் நான் வாடகைக்குக் கடை கேட்டபோது மறுத்து விட்டார்கள்..

    பதிலளிநீக்கு
  7. எவர் வணிகத்தையும் புறக்கணிக்கலாம் எனில்
    காக்கா குருவி குறிஞ்சி, தென்றல் என்று பொதுப் பெயர்கள்..

    அதற்கும் மேலாக abc, ghi, xyz, xxx என்று முகச்சாயம் பூசிக் கொள்கின்றனர்..

    பதிலளிநீக்கு
  8. எரிகின்ற கொள்ளியில் நல்ல கொள்ளி எது?..

    பதிலளிநீக்கு
  9. கும்பகோணம் ஐங்கரன் என்ற பெயருடன் காபிக் கடைகளைப் போல டீபாய் என்று பெருகி வருகின்றன..

    ஐயங்கார் பேக்கரி என்றால் என்ன?..

    ஐயங்கார் பிரியாணி என்று இன்னும் வரவில்லை..

    பதிலளிநீக்கு
  10. வணிக ஆக்கிரமிப்புக்கு கும்பகோணத்திற்கு சென்று பாருங்க..

    நெல்லை அவர்களுக்குத் தெரியும்..

    பதிலளிநீக்கு
  11. அருகில் சக்கராப்பள்ளி என்ற தேவார பாடல் பெற்ற தலத்தில் சிவ ஆலயத்துக்கு எதிரில் சந்நிதித் தெரு காணாமல் போய் பல வருடங்கள் ஆகின்றன..

    பதிலளிநீக்கு
  12. மயிலாடுதுறை யிலும் நிலைமை மோசம்..

    நல்ல உணவகங்கள் ஒழிக்கப்பட்டு விட்டன...

    பதிலளிநீக்கு
  13. நம் எல்லோரும் இந்திய மக்கள்

    எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
    எல்லாரும் இந்திய மக்கள்,
    எல்லாரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை
    எல்லாரும் இந்நாட்டு மன்னர்,
    ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்,
    பாரத சமுதாயம் வாழ்கவே,
    வாழ்க வாழ்க
    பாரத சமுதாயம் வாழ்கவே - மகாகவி பாரதியார்

    “எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்” என்பது இறைத் தத்துவம். ஆகையால் சாதி, இனம், மதம் என்ற கட்டுக்களை அறுத்தெறிய வேண்டும் என்பது பாரதியின் கனவு.

    பதிலளிநீக்கு
  14. இந்த மண்ணில் சாப்பிட்டு வாழும் சில கீழ்களை (ஐயன் சொன்ன கீழ்) துரத்தினால் போதும்... தமிழ்நாடாவது தப்பிக்கும்...

    பதிலளிநீக்கு
  15. "எடுபிடி" அடிமைக் காலத்தில் RSS விசம் கிராமம் வரை பரவி விட்டது... சிரமம் தான்...

    அனைத்திற்கும் நாட்டின் பேடி மாற வேண்டும்...

    ஆமாம் திருக்குறளில் பேடி-யின் கணக்கு போட்டு விட்டீர்களா...? நம்ம இவறல் வெங்கோலனுக்கு மிகச் சரியாக பொருந்தும்...

    பதிலளிநீக்கு
  16. கில்லர்ஜி, எனக்குத் தெரிந்து மக்கள் ஒற்றுமையாகத்தான் இருக்காங்க. இப்படிப் பதிவுகள் (நீங்க எழுதலைன்னு தெரியும். பகிர்ந்திருக்கீங்க தெரியும்) பிரிவினை வாதத்தை விரோதத்தை வளர்ப்பது போல இருக்கு கில்லர்ஜி. எல்லாரும் இந்நாட்டு மக்கள் பாரத தேசத்து மக்கள். ஒண்ணா மண்ணா பழகுற மக்கள். நாமே விஷ விதையைப் போட வேண்டாமேன்னு அப்புறம் எதுக்கு இந்தியான்னு இந்தியன்னும் நாம சொல்லிக்க வேண்டும்?

    கீதா

    பதிலளிநீக்கு
  17. மேலோட்டமாக பார்க்கும் போது எனக்கும் பிரிவினைவாதம் மாதிரி தோன்றியது ஆனால் இதில் நுட்பமாக 'ஆக்கிரமிப்பு' என்பது மறைந்திருக்கிறது. மண்ணை , மக்களை , பழக்கவழக்கங்களை .....இன்னும் பலவற்றிலும் பிறரின் ஆக்கிரமிப்பு இன்றைய நாளில் அதிகரித்திருக்கிறது. தென் மாவட்டங்களில் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய ஊர்களில் கேரளாவினர் 300 ஏக்கர் அதற்கு மேல் என்று விவசாய இடங்களை மொத்தமாக வாங்கி வருகின்றனர். சுற்றிலும் வேலியிட்டு அங்குள்ள ஆட்களின் நடமாட்டம் மட்டுமே உள்ளது. கல்,மண் குவாரிகள் அவர்கள் வசம். வடநாட்டவர் அதிகரிப்பு சிறு கிராமங்கள் வரை உள்ளது. வீடு வீடாக பழைய துணி சேகரிப்பது என்று ஆரம்பித்து தினசரி சீட் , வார சீட் ,நகை கடன் என்று முன்னேறி வருகிறார்கள். நிலைமை இப்படி இருக்க வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பதில் ஆச்சர்யம் என்ன ?!!!

    பதிலளிநீக்கு