தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மார்ச் 22, 2016

कमरा में आइए जी (கம்ராமே ஆயியே ஜி)


சில வருடங்களுக்கு முன்பு ஒருநாள் BUS STOPபில் நான் காத்திருந்தேன் எனதருகே ஒரு NEW BMW CAR வந்து நின்றது அதிலிருந்த ஒருவர் எனது இந்திய மொழியான ஹிந்தியில் POST OFFICE போகவேண்டுமென வழி கேட்டார் நானும் சொன்னேன் பிறகு என்னை எங்குபோக வேண்டுமென கேட்டு நான் இறக்கி விடுகிறேன் எனசொன்னார் எனக்கும் வெயில் கொடுமை தாங்க முடியாததால் ஏறிக்கொண்டேன் தான் இந்தியன் from MUMBAI என்று அறிமுகப்படுத்தி கொண்டார் அவர் AL AIN னிலிருந்து வருவதாகவும் தனக்கு ABUDHABI பற்றி சரியாக தெரியாது எனவும் சொன்னார் நான் இறங்க வேண்டிய இடம் வரவும் அவர் தன்னுடன் வரமுடியுமா ? PLEASE எனக்கேட்டார் என்னுடைய வேலை அப்படியொன்றும் அவசரமில்லை ATM மில் பணமெடுத்து WESTERN UNION னில் ஒரு நல்ல காரியத்திற்கு அனுப்ப வேண்டும் அவ்வளவுதான் சரியென POST OFFICE போனோம் CAR PARK ல் PAY TICKET செய்து விட்டு உள்ளே போனால் TOKEN SYSTEM சுமார் 150 நபர்களுக்கு, பிறகு தான் எங்களுக்கு எப்படியும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகும் என்ன செய்வது ? 

நாம் போய் விடலாம் எனநினைத்தேன் அப்பொழுதுதான் COUNTER ரில் எனது EGYPT நண்பனொருவன் இருப்பதை கண்டேன் அவன் எதிர்புறம் அமர்ந்து கொண்டு அவனுக்கு MOBILE செய்து அடுத்த நம்பரை தட்டுமுன் தனது நண்பருடைய வேலையை முடித்துக்கொடு எனசொன்னேன் அவன் வரச் சொல்லவும் இவரை போகச் சொல்லி ஜாடை காண்பித்தேன் உடன் போய் EMIRATES I.D யை வாங்கி வந்தார் அவருக்கு மிகமிக சந்தோஷம் காரணம்.

வழி காண்பித்தது வந்த வேலை உடன் முடிந்தது CAR க்கு PAY PARKING விசயம் அவருக்கு தெரியாது ஒருவேளை நான் வராமலிருந்தால் POLICE FINE வந்திருக்கலாம்.

தனது அரபாபுக்கு (முதலாளி) MOBILE செய்து தான் EMIRATES I.D யை வாங்க இரண்டு மணி நேரமாகும் எனச்சொன்னார் பிறகு என்னை வழுக்கட்டாயமாக RESTAURANT அழைத்துப் போயி COFFEE சாப்பிட்டோம் பிறகு என்னை BANKகில் நிறுத்தி பணம் எடுக்கும்வரை நின்று என்னுடன் EXCHANGE வந்து பணம் அனுப்பி விட்டு என்னை எனது ROOMல் கொண்டு வந்து விடுகிறேன் எனக்கு நேரமிருக்கிறது எனச்சொல்லி வந்தார் ஒரு பேச்சுக்காக (கம்ராமே ஆயியே ஜி) 
அறைக்கு வாருங்கள் என்றேன் உடன் வந்து விட்டார் சரியென உள்ளே சென்றோம் எனது நண்பர்களிடம் நண்பரென அறிமுப்படுத்தினேன் (வேறு என்ன சொல்ல முடியும்) TEA போட்டுக் கொடுத்தார்கள் குடித்துக் கொண்டு இருக்கும்போது TOILET டிலிருந்து மற்றொரு நண்பர் வந்தார் இருவரும் ஒரு கணம் பார்த்துக் கொண்டது தான்தாமதம் ROOM அதிர்ந்தது... 

ஹரே இக்பால், ஹரே எட்வர்ட், இருவரும் கட்டித்தழுவிக் கொண்டார்கள் MUMBAI PUNEயில் இருவரும் பால்யகாலம் தொடங்கி பள்ளி நண்பர்கள் 27 வருட பிரிவுக்கு பின் இன்று சந்திக்கிறார்கள் இருவருமே கண் கலங்கியது 

எங்கள் அனைவருக்குமே கலக்கத்தை உண்டு பண்ணியது பிறகென்ன இருவரும் தனியாகப் போயி ஒருமணி நேரமாக பேசினார்கள் MOBILE No: பரிமாற்றம் பிறகு அடிக்கடி வந்து போனார்(கள்) நெடுங்கால நண்பர்கள் சேர்வதற்க்கு தெரிந்தோ தெரியாமலோ நான் காரணமாகி விட்டேன்.

இதன் அடிப்படை காரணமென்ன ? அவர் எனக்கு உதவ காரணம் தெரியாத இடம் நான் அவருக்கு உதவ முதல் காரணம் வெயில் கொடுமை இரண்டாவது எனக்கு வேலையில்லை பொழுது போக்க ஆள் கிடைத்தது.

மேலும் இருவருக்குமே உதவும் மனப்பான்மை இருந்திருக்கிறது.

காணொளி

திங்கள், மார்ச் 21, 2016

என் நூல் அகம் 10


 மனசு தளத்தின் பதிவர் நண்பர். திரு. சே. குமார் அவர்களின் மூலம் பழக்கத்துக்கு ஆனவர் மூஞ்சிப் புத்தகம் நண்பர் திரு. கனவுப் பிரியன் அவர்கள் நல்லதொரு பண்பான பழக்கத்துக்குறியவர் இவர் எழுதிய நூல்தான் ’’கூழாங்கற்கள்’’ நல்ல மனசுடன் நண்பர் சே. குமார் அவர்கள் வீட்டில் பெய்த மழை ரோட்டிலும் பெய்யட்டுமே என்று எனக்கும் இந்நூலை ஓசியில் படிக்க கொடுத்தார் ரோட்டிலும் பெய்த மழையின் பலனை ஏட்டிலும் கொடுப்போமே என்று கருதியது எனது மனசு இதோ தங்களுக்காக இணைய ஏட்டில் உங்களின் வீட்டில் A/c யை போட்டுக் கொண்டு கணினியின் தூசியை தட்டி விட்டு படியுங்கள் சிறுகதைகளின் கதம்பக் குவியல்.

சனி, மார்ச் 19, 2016

தே’’வதை


 தினமும்... என்னை
சாலையில் கடந்து
செல்லும் மங்கையவள் 
சோலையவளை கவனிப்பேன்
பாலைவன பறவையவள்
காலையிலும் கலையாத
அலையாய் மாலையிலும்
சிலை போல் நிலையாய்
அவளுக்காக காத்திருப்பேன்
அந்த இடத்தை விட்டு
நகர மாட்டேன்
சொல்லி விடத்தான் ஆசை
விழுந்திடுமோ செருப்படி பூசை
யோசித்தேன்... யோசித்தேன்...
நாட்களாய்...
வாரங்களாய்...
மாதங்களாய்....
வருடங்களாகியது...
இந்தியாவிலிருந்து
அழைப்பு உனக்கு
பெண் தயார் உடனே வா
திருமணம் என்று
பொறுத்தது போதும்
இன்று கொட்டி விடுவதே...
நலம் விடிய விடிய
கொட்டக் கொட்ட விழித்திருந்து
அதிகாலையில் குளித்து விட்டு
அழகு மீசையை
அழகாக முறுக்கி விட்டு
சாலையில் காத்திருந்தேன்
அழகுத் தேர் அசைந்து
வழக்கம் போலவே வந்தது
சொல்ல வாயெடுத்தேன்
சட்டென குறுக்கே பாய்ந்த சீரூந்தால் 
பதறியடித்து பின் வாங்கினேன் 
அவள் மறைந்து விட்டாள் 
மாலையில் அவளுக்காக காத்திருந்தேன்
வந்தவளிடம் எஸ்க்யூஸ் மீ
என்றேன் திரும்பி பார்த்த
என் தேவதை இதழ்களை
அசைத்து கேட்டாள்
என்ன ஸார் வேணும் ?
மறு நொடி திடுக்கிட்டேன்
தே’’வதை மனதை வதை’’த்தாள்
காரணம் அப்படியே
சீர்காழி எஸ். கோவிந்தராஜனின்
கணீரென்ற வெங்கலக்குரல்
ச்சே அவனா நீ ?

Chivas Regal சிவசம்போ-
ச்சே கடைசியில் நட்டு.

சிவாதாமஸ்அலி-
கூந்தல் நீளமாக வளர்ந்த பெண்ணும், மீசை பெரிசா வளர்த்த ஆணும் சேர்ந்தால் தரித்திரம்’’னு சரித்திரமே இருக்கு.

வியாழன், மார்ச் 17, 2016

சத்திரக்குடி, சந்தேகப்புயல் சந்திரன்


எனக்கு நெடுங்காலமாகவே சந்தேகம்.

அதாவது திரைப்படங்களில் கோவில் திருவிழாட்களை காண்பிக்கின்றார்கள் அதில் பூ மிதித்தல் என்று சொல்லப்படும் தீ மிதி சடங்கு, சாமி அலங்காரம், பால்குடம், பால்காவடி, பறவைக் காவடி, வானவேடிக்கைகள், தேர்த்திருவிழா, கரகாட்டம், ஒயிலாட்டம், கேளிக்கை விளையாட்டுக்களுடன் எல்லாக் காரியங்களுமே தெய்வக்குறை ஏற்பட்டு விடாத வண்ணம் ஒரு தெய்வீக மணத்துடன் நடக்கிறது. எல்லாக் காரியங்களுமே தேவகோட்டையில் நடக்கும் கோவில் திருவிழாக்களையே மிஞ்சும் அளவுக்கு மிகமிகச் சரியான முறையில் எடுக்கிறார்கள் ஆனால் ? படத்தில் வரும் கசாநாயகனோ கசாநாயகியோ பூக்குழி இறங்கும்போது மட்டும்
சீரியல் செட்டில் இறங்குகிறார்களே ஏன் ?
 

அப்புறம் இன்னுமொரு சந்தேகம் ?
கசாநாயகன் மீது வேண்டாத வில்லனால் கொலைப்பழி விழுகிறது உண்மையிலேயே அவர் கொலை செய்யவில்லை இது எனக்கு மட்டுமல்ல நூறு முறைக்கு மேல் கண்ட சாட்சியான தியேட்டர் ஆப்ரேட்டருக்கும் தெரியும் ஆனால் காவல் துறையினர் சாட்சிகளை ஆதாரமாய் வைத்து அவரை கைது செய்கிறார்கள் நமது கசாநாயகன்தான் வீரன் வீரபத்ரனாயிற்றே காவல் துறையினரை ஏமாற்றி விட்டு தப்பித்து வந்து வில்லன் வகையறாக்களை தேடிவந்து அடித்து நொறுக்கி உண்மையான உண்மையை நீதி மன்றத்தில் வில்லன் வாயிலாக நிரூபிக்கிறார் நமது நீதிப்பேரரசு நீலகண்டனும் அவரை நிரபராதி என்று விடுவிக்கிறார்.


எமது சந்தேகத்தின் மையமே இனிமேல்தான்.

அதாவது தப்பித்து வந்த கசாநாயகன் தான் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்குள் வில்லனுக்குச் சொந்தமான 2 பெட்ரோல் பங்க்கள், 5 LAND CRUISERS, 8 YAMAHA ,  6 BAJAJ PULSAR பைக்குகள், ஒரு மினி லாரி, 3 மாட்டு வண்டிகள், 6 மாடுகள், ஒரு ஓட்டு வீடு, அந்த வீட்டிற்குள் ஒரு வயதான பாட்டி, ஒரு நாய், 2 பூனைகள், 18 ஆடுகள் இத்தனையையும் கொஞ்சம்கூட ஈவு இரக்கமில்லாமல் டைம்பாம் வீசிவெடித்துச் சிதற விடுவதோடு, 28 அடியாட்களை கைத் துப்பாக்கியால் சுட்டும், டைம்பாம் வீசியும் கொன்று விட்டு வில்லு வண்டியில் குதிரைக்கு கொள்ளு வாங்க ஏர்வாடியிலிருந்து பக்கத்திலுள்ள முள்ளுவாடிக்கு குதிரையோடு போய்க் கொண்டிருந்த வில்லனை விரட்டிப் போய் பிடித்து மிகமிகக் கொடூரமாக மூஞ்சியில் அடித்து காயப்படுத்தி அந்தக் குதிரையிலேயே கட்டி கீழக்கரை காவல் நிலையம் வழியாக ராமநாதபுரம் நீதி மன்றத்திற்கு இழுத்து வருகிறார் இத்தனை குற்றங்களுக்கும் தண்டனை கிடையாதா ? இதுதான் எமது சந்தேகம்.


சாம்பசிவம்-
ஏலே இந்த மாதிரி தீர்ப்பு சொல்ற ஆளுக்கு யாருலே ‘’நீதிப்பேரரசு’’ பட்டம் கொடுத்தது ?

குறிப்பு - சந்தேகங்கள் இனியும் தொடரும். 

செவ்வாய், மார்ச் 15, 2016

மழை


வணக்கம் நட்பூக்களே... கடந்த வாரம் அபுதாபியில் பரவலாக மழையும், காற்றும் துபாயில் சற்றுப்பலமாகவும் இதை நமது நாட்டில் தூறல் என்றுதான் சொல்வோம் இன்னொரு அதிசயம் நான் இந்த நாட்டுக்கு வந்து கடந்த இருபது வருடங்களில் முதல் முறையாக இடி முழக்கம் கேட்டேன் இதில் வேடிக்கை என்னவென்றால் ? அரேபியர்களுக்கு மழை என்றால் அதியசமாக வேடிக்கை பார்ப்பார்கள் பெண்கள் அதைவிட நம்மூரில் குழந்தைகள் மழையில் நனைந்து விளையாட ஆசைப்படுமே அதைப்போல மழையில் நனைவது பிடிக்கும்.