தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, செப்டம்பர் 29, 2017

புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி


காயம்பட இதயத்தை கல்லால் அடித்து விட்டாயடி
காயல்பட்டணக்காரன் என்னை கோபப்பட வைத்தாயடி

காடு எங்கும் எங்கள் பாரம்பரிய சொத்து நிறைந்ததடி
வீடு தேடி வந்தவனை நாயை விட்டு விரட்டி விட்டாயடி

எங்கள் வீட்டில் யானை கட்டி போர் அடித்த குடும்பமடி
உங்கள் வீட்டில் பூனைக்குகூட சோறு போட முடியாதடி

சிங்கம் போல நடந்த என்னை அசிங்கப்படுத்தி விட்டாயடி
தங்கம் நிறைந்த குடும்பத்தை பங்கம் விளைய வைத்தாயடி

முப்போகமும் விளைந்தது எங்கள் வீட்டில் களஞ்சியமடி
முக்காடு போட வைத்து எங்களை மூழ்கிப்போக செய்தாயடி

வங்கிகளுக்கே கடன் கொடுத்த வள்ளல் பரம்பரை நாங்களடி
வாங்கி குடிக்க வழியில்லாத ஊர் சுற்றும் கூட்டம் நீங்களடி

அழகி என்று உன்மீது ஆசை வைத்தேன் நான் முட்டாளடி
அழுகிப் போனது உன் மனம் என்று தெரிய வைத்தாயடி

சொந்த மாமன் மகள் மாலா எனக்காகவே இருக்காளடி
இந்த சோமன் அவளுக்கு என்றும் பொருத்தமானவனடி

சோமனுக்கும், மாலாவுக்கும் 16 பொருத்தம் இருப்பதாக சோலந்தூர் சோசியர் சோனைமுத்து சொல்ல, வரும் புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி கோலாகலமாய் நடக்க இருக்கும் திருமணத்துக்கு நாமும் வாழ்த்துவோமே நட்பூக்களே...

புதன், செப்டம்பர் 27, 2017

ஔவை – யார் ?


ன்பைக்கொடு
சையை ஒதுக்கு
ன்முகம் காட்டு
கை குணம்கொள்
ண்மை பேசு
ரே போற்ற வாழ்
ண்ணம் நலமெனில்
ற்றம் காண்பாய்
யம் இல்லை இதில்
ன்றே குலமென
ங்கி குரலெழுப்பு
வை பாட்டி
சொன்ன நற்சொல்,
என மனதில் கொள்,
மகிழ்வுடன் வாழ்.
          - கில்லர்ஜி
 காணொளி

சாம்பசிவம்-
என்ன இவன்... இப்படி சொல்லிக்கிட்டு ஓடுறான், அப்படின்னா ஔவையார் நம்ம ஊடகழி ஜாதி இல்லையோ அப்ப ஔவை-யாரு ?

திங்கள், செப்டம்பர் 25, 2017

சிரித்து வாழவேண்டும்

 
இந்த படத்தை நுழைத்தது எதிர்க்கட்சிகளின் சதி.
முதலில் ஃபோட்டோ காப்பாற்றுவதை பிறகு பார்க்கலாம்.

வெள்ளி, செப்டம்பர் 22, 2017

நீதிபதிகள் பற்றாக்குறையா ?


நமது நாட்டில் நீதி மன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறதே.... ஸாரி நம்மைக் கடந்து போகிறதே... இது நமக்கு எதைக் காட்டுகிறது ? நீதிபதிகளின் பற்றாக்குறையையா ? இல்லை சண்டைகளும், பிரச்சனைகளும் வளர்ச்சியா ? இந்த அவல நிலைக்கு முடிவு நிச்சயமாக அரசாங்கம் தீர்வு காணாது மக்களான நாமே தீர்வைத் தேடிக்கொள்ள வேண்டும் எப்படி ? ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை கட்டுப்பாடு மீறிப்போய் வசைபாடியில் தொடங்கி அடிதடியில் முடிந்து விட்டது பிரச்சனையை காவல் நிலையம் வரை கொண்டு போய் எதைக் கண்டோம் ? அவர்களும் எஃப்.ஐ.ஆர் எழுதி நீதி மன்றத்தில் கொண்டு போய் சேர்த்து விட்டு அடுத்த எப்.ஐ.ஆர் எழுத தயாராகி விடுவார்கள் அவர்களையும் குறை சொல்ல இயலாது காரணம் அது அவர்களது கடமை நாமும் பகைமை உணர்வுடன் வீட்டுக்கும், நீதி மன்றங்களுக்கும் அலைந்து கொண்டு இருப்போம்.

புதன், செப்டம்பர் 20, 2017

விதண்டாவாதிகள்


தம்பி உங்க பேரென்ன ?
ஏன் ?
இப்படியும் ஒரு பேரா ?
? ? ? ஆமா... உங்க பேரென்ன ?
நீ எதுக்கு கேட்கிறே ?
பேரு வித்தியாசமா இருக்கே...
? ? ?
0--------------------------------------------------------1

கடை ஏன் அடைச்சிருக்கு... ?
பூட்டியிருக்கிறதாலே...
? ? ? அப்படியா ?
ஏன்... கேட்கிறீங்க... ?
பூட்டியிருக்கிறதாலதான்...
? ? ?
0--------------------------------------------------------2

மதுரைக்கு எந்த வண்டியில போகணும் ?
மதுரை வண்டியிலதான்.
? ? ? இந்த வண்டி எங்கே... போகுது ?
மதுரைக்குத்தான்.
நல்லது.
இந்த வண்டியில, எதுக்கு போறீங்க ?
மதுரை வண்டியை பிடிக்கத்தான்.
? ? ?
0--------------------------------------------------------3

மச்சான் அல்வா வாங்குங்களேன்...
கையில காசு இல்லை.
பைக்கு உள்ளே இருகிற அல்வா யாருக்கு ?
யாருக்கோ...
அந்த யாருக்கோ.... யாரு ?
உங்க அக்காதான்.
இதைத்தானே எதிர் பார்த்தேன்.
? ? ?
0--------------------------------------------------------4

உங்கள்ட்ட ரெண்டு ஐம்பது இருக்குமா ?
இல்லையே என்ன விசயம் ?
இருந்தால் ஒண்ணை வாங்கிகிறலாமேனுதான்.
? ? ? உங்கள்ட்ட  Credit Card இருக்கா ?
இல்லையே என்ன விசயம் ?
இருந்தால் பர்ஸேசிங் செய்யலாமேனுதான்...
? ? ?
0--------------------------------------------------------5

Chivas Regal சிவசம்போ-
நாட்டுல நிறையப்பேரு இப்படித்தான் திரியிறாங்கே....

திங்கள், செப்டம்பர் 18, 2017

அழகான மனிதர்கள் அழுக்கான மனதுடன்


ஒருமுறை 2005 என்று ஞாபகம் அதாவது எனது மனைவி மறைந்து ஐந்து வருடமிருக்கலாம் அபுதாபியில் தமிழ் உணவகம் ஒன்றில் உணவருந்த போனேன் எனது பக்கத்து டேபிளில் ஒருவர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார் அப்பொழுது இரண்டு நண்பர்கள் வந்தார்கள் வந்தவர்கள் அவரின் டேபிளில் உட்கார்ந்தார்கள்.

பெயர் வேண்டாமே ஊரைச் சொன்னாலும் பெயரைச் சொல்லக்கூடாது என்பார்கள் பேசும்பொழுது அவரின் ஊர் திருவாரூர் என்று அறிந்து கொண்டேன்
என்னங்க.... நல்லாயிருக்கியலா...
நலகுசலங்கள் முடிந்தது நான் அடுத்த டேபிள் என்பதால் அவர்கள் பேசுவது அனைத்தும் எனக்கு கேட்டது மூவரும் பேசியது...

ஊருக்கு போறீங்களாமே....
ஆமா அடுத்த வாரம்.
ஏதும் விஷேசமா
ஆமா கல்யாணம் வச்சு இருக்காங்க.... புள்ளைய பார்த்துக்கிறவும் ஆளு வேணுமுள்ள... குழந்தையை வச்சுக்கிட்டு ரொம்ப கஷ்டமா இருக்கு...
ஆமா.. ஆமா.. புள்ளையை வளர்த்துத்தானே ஆகணும்..
அதான் ரெண்டரை மாச லீவுல போறேன்..
நல்லது நல்லபடியா போயி கல்யாணத்தை முடிச்சிட்டு வாங்க... ஆமா நீங்க ஊருக்குப் போயிட்டு வந்து எவ்வளவு நாளாச்சு
அஞ்சு மாசம் ஆச்சு என் மனைவி இறந்ததுக்கு ஒரு வாரம் எமர்ஜென்ஸி லீவுலதானே போனேன்.
அப்படியா...
சரி பார்ப்போம் நான் பில் கொடுக்கிறேனே....
வேண்டாம், வேண்டாம் ஊருக்குப் போயிட்டு வந்து பார்ட்டி வையிங்க..
கண்டிப்பா... சரி வாரேன்..
நல்லது.

அவர் பணத்தை கொடுத்து விட்டு வாசலைக்கூட கடந்து இருக்க மாட்டார்.....
..... இவனையெல்லாம் ......... நண்பர்களே டைப்ப முடியாத வார்த்தைகள்

விடுய்யா... இவங்கே இப்படித்தான்....
என்னையா... கொஞ்சமாவது நியாயம் வேண்டாமா... வருஷம்கூட திரும்பலையா.....
நீ ஏன் டென்ஷனாகுறே...
அவன் சொல்ற காரணத்தைப் பார்த்தியா... குழந்தையை வளர்க்க ஆளு வேணுமாம் அஞ்சு மாசமா பச்சைப் புள்ளயை வளர்த்தவங்களுக்கு இனிமேல் முடியாதா வர்றவ உடனே பால் கொடுத்து வளர்த்துடுவாளா
விடு விடு ஏதோ உப்புக்கு சப்பாணி கதை சொல்றான்.
இவனெல்லாம் அந்தக் குழந்தையை கடைசிவரை பார்ப்பானு சொல்றே...
எல்லாம் மேலே உள்ளவன் தீர்மானிக்கிறான் அந்தக் குழந்தை நல்லபடியாக இருக்கணும்னு வேண்டிக்கிருவோம் நம்மளால் முடிந்தது
இவன் கல்யாணம் செய்யிறது தப்புனு நான் சொல்லலையா... கண்டிப்பாக வாழ்க்கைத்துணை வேணும் இல்லைனா மனுஷன் கிறுக்கனாயிடுவான் இருந்தாலும் ஒரு வருஷம் போனபிறகு செய்தாலும் பரவாயில்லை அதை விடக் கொடுமை இவன் சொன்ன காரணம்தான் எனக்கு பத்திக்கிட்டு வருது...
அவன் வேண்டாம்னு சொன்னாலும் வீட்ல பொம்பளைங்க சும்மா இருக்க விடமாட்டாங்க..
இருக்கட்டுமே சமாளிக்க முடியாதா இங்குதானே இருக்கான் கம்பெனி லீவு கொடுக்கலை அப்படி இப்படினு சொல்லக்கூடாதா இவனுக்கு ஆசை வேறென்ன...
இவன் உடன்படாமலா கல்யாணம் நடக்கும்.
எப்படிய்யா அவன் பொண்டாட்டியோட எலும்புக்கூடு இன்னும் மண்ணு தின்னு இருக்காது... ச்சே...
நீ ஏன் கோபப்படுறே... உன் தங்கச்சியா... பேசாமல் சாப்பிடு
தன்கூட படுத்தவ மண்ணுகுள்ளே போயிட்டாளேனு... எண்ணமே வராதா... எப்படி அதை உடனே மறந்துட்டு அடுத்தவ கூடபடுக்கிறாங்கே... மனசு உறுத்தாதா... மனசாட்சியே இல்லையா
சாப்பிடு, சாப்பிடு... மனசாட்சி எவனுக்கு இருக்குது எல்லாப் பயலுக்கும் மனசாட்சி இருந்தால் ஒருத்தன்கூட கட்சியில இருக்க மாட்டான், நாடு உருப்படும் நாமளும் இப்படி அடுத்த நாட்டுக்கு வர வேண்டியதிருக்காது.
இவனுக்கு பொண்ணு கொடுக்கிறானே... அவனைச் சொல்லணும்.
என்ன செய்யிறது அவங்க குடும்பச்சூழல் அவங்களுக்குத்தான் தெரியும் வரதட்சிணையின்னு இருக்குலே... முடியாத பட்சத்தில் இப்படித்தான்.
ச்சே என்ன... மனுஷங்கே...

அவரது வாயிலிருந்து நிமிடத்துக்கு ஒருமுறை எழுத முடியாத வார்த்தைகள் வெளியில் வந்து விழுந்து கொண்டே இருந்தது இவர்களுக்காகவே நானும் மீண்டுமொரு தோசை சொல்லி விட்டு நேரத்தைக் கடத்திக்கொண்டு இருந்தேன் அவனது கண்களை ஊடுறுவிப் பார்த்தேன் அதில் சுயநலமில்லாத ஒரு கோபம் தெரிந்தது நிச்சயமாக சுயநலமில்லை பொதுநலமே காரணம் இவன் யாரோ... அவன் யாரோ... இருவருமே ஜாதி, மதம், ஊர் வேறுபட்டவர்கள் என்பதை அவர்களின் பேச்சின் ஊடே கவனித்தேன் இருப்பினும் இவனுக்கு கோபம் சமூக கோபம், நியாயமான கோபம்தானே.... மறைந்துபோன முகமறியா அந்தச் சகோதரியின் ஆன்மா சாந்தியும் சமாதானமும் அடைய வேண்டுமென மனதுக்குள் வேண்டிக் கொண்டேன் என்னால் முடிந்தது இவ்வளவுதானே.. வேறென்ன செய்யமுடியும்... இந்தக்கோபம் நியாயமே... ஆனால் சமூகம் இவனது கோபத்தை ஏளனமாக பார்த்து சிரிக்கும் என்பது எனக்குத் தெரிந்தாலும் பின்னாளில் நானும் அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டேன் ஏன்... இன்றுவரை காரணம் நானும் இவரின் ஜாதிதானே.... நான் மறுமணம் செய்யாமல் போனதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் என்னிடம் உண்டு அவைகளை எழுதினால் ஐநூறு பதிவுகளே எழுத முடியும் அந்த ஆயிரம் காரணங்களில் இதுவும் ஒன்று நான் ஏற்கனவே ஒரு பதிவில் கேட்டது போல்

பொண்டாட்டி செத்துட்டா புருஷன் புதுமாப்பிள்ளை ஆகிடுறான் ஆனால் புருஷன் செத்துட்டா பொண்டாட்டி புதுப்பெண்ணாக ஆவதில்லையே ஏன்
இந்த நிலையில் மாற்றம் வரும் பொழுது என் மனதிலும் மாற்றம் வரலாம்
அழகான மனிதர்கள் அழுக்கான மனதுடன்

அதை கழுவ முடியாத நான் எனது கைகளை மட்டும் கழுவி விட்டு வெளியேறினேன் அவர்கள் இன்னும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள், அதில் அவரின் கண்களில் தீ எரிந்து கொண்டிருந்தது.

சனி, செப்டம்பர் 16, 2017

அறியாமைகள்


சமீபத்தில் கணினியில் உலாவும் பொழுது பழைய செய்தியொன்றை படித்தேன் படித்ததும் மனம் வலித்தது ஒரு திரைப்பட நடிகர் காதலித்து திருமணம் செய்த தன் மனைவிக்கு 40 கோடி ரூபாயை நஷ்டஈடாக கொடுத்து விவாகரத்து செய்ய முன்வந்துள்ளார். காரணம் வேறொரு நடிகையுடன் காதல், இவர்களின் காதலைப்பற்றி, நாம் ஆராய வேண்டாம் அது நாய்க்காதல் என்று சொல்வார்களே... அதைப் போன்றது.

சரி இந்த 40 கோடியை சர்வ சாதாரணமாக நஷ்டஈடு கொடுக்க முன் வந்ததற்கு அடிப்படை காரணர்த்தா யார் ? இந்த மாதிரி ஆட்கள் கைவண்டி இழுத்து சம்பாரித்து இருந்தால் இப்படி கொடுக்க முடியுமா ? காதலுக்காக நாற்பது கோடியென்ன ? அதைவிட உயர்வான உயிரைக்கூட கொடுக்கலாம்  ஏன் காதலி மும்தாஜூக்காக ஷாஜஹான் அற்புதமான தாஜ்மஹாலை கொத்தனார் மூலம் கட்டவில்லையா ?

நாட்டில் ஒரு வேளை குடிக்க பால் இல்லாமல் எத்தனை குழந்தைகள் நலிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது பரம்பரை பணக்காரர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் போக சாத்தியம் உண்டு. ஆனால் இவர்களைப் போன்ற ஆட்களுக்கு கண்டிப்பாக தெரியும் ஏனெனில் திரைப்படங்களில் ஏழைப்பங்காளனாக, உழைப்பாளியாக, காதலுக்காக, காதலிக்காக போராடுபவனாக, ராணுவவீரனாக, விவசாயியாக, ஏன் கைவண்டி தொழிலாளியாக கூட உணர்வுப்பூர்வமாய் நடித்து காண்பிக்கிறார்கள். இவர்களுக்கு எப்படி தெரியாமல் இருக்கும் ?


இந்த நிலைக்கு இவர்களை உயர்த்தி விட்டது தவறில்லை இவர்களின் சுயமுகம் தெரிந்த பிறகும் இவர்களை உயர்த்திக் கொண்டு இருக்கும் ரசிகன் என்ற அறியாமைவாதிகள் இருக்கும்வரை இந்த மாதிரியான நாய்க்காதல் மலர்(ல்லா)ந்து கொண்டே இருக்கும்.

வெள்ளி, செப்டம்பர் 15, 2017

புதன், செப்டம்பர் 13, 2017

ரஞ்சிதா மேடம்


    ட்பூக்களே எனக்கு தொலைக்காட்சியை பார்த்தாலே வேதனையாக இருக்கிறது மேலும் மின்சார செலவு செய்து காணும் நம்மை ஊடகக்காரர்கள் சற்றும் மரியாதையின்றி அவமானப்படுத்தி விடுகின்றார்கள். சமீபத்தில் வீட்டில் ஒருநாள் தொலைக்காட்சியில் சுவாமிஜி நித்தியானந்தா அவர்கள் அருளாசியோடு பதில் வழங்குவதாக அழகிய பெண்மணி ஒருவர் மகிழ்ச்சியாக சொன்னார் மேலும் நல்லதொரு ஆன்மீக விடயங்கள் நண்பர்கள் திரு. ’’பசி’’ பரமசிவம், திரு. பகவான்ஜி, திரு. வலிப்போக்கன் போன்றவர்களைப் போல நமக்கும் பிடித்ததுதானே... என்று பார்த்து கேட்டுக் கொண்டு இருந்தேன்.

திங்கள், செப்டம்பர் 11, 2017

பாலூற்றும் வரை...

சமூகத்தின் மீது கோபமாக உள்ளவன் நிச்சயமாக நியாயமானவன் ஆகத்தான் இருக்க முடியும் நியாயம் இல்லாதவன் மீது சமூகம் கோபப்படும். நான் நல்லவனோ ? கெட்டவனோ ? நானறியேன்.
But
இந்த சமூகத்தின் மீது கோபம் உள்ளவன்.
பால்குடி மறக்கும்போது தொடங்கிய இந்தக்கோபம்
எனக்கு பாலூற்றும் வரை தொடருமோ ?
யாமறியோம் பராபரமே.

 குறிப்பு - ஆவின் பால் நிறுவனத்திடமிருந்து பணம் பெறப்படவில்லை கிடைத்தால் பெறப்பட்டு...
சென்னை சிவானந்தா சரஸ்வதி சேவாஸ்ரமம் & ஸ்ரீ சாரதா சக்தி பீடம்
கோயமுத்தூர் குருவம்பாளையம் தி யுனைடெட் ஹேண்டி ஹேப்பிட் ஸ்கூல் போன்ற அனாதை ஆஸ்ரமங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் – கில்லர்ஜி

சனி, செப்டம்பர் 09, 2017

தாலாட்டு


கண்மணி கண்ணழகே கண்ணுறங்கு கற்பகமே
செல்வமணி செண்பகமே கண்ணுறங்கு செந்தமிழே
முத்துமணி முத்தழகே கண்ணுறங்கு முத்தமிழே
பவளமணி பவளமுத்தே கண்ணுறங்கு பைந்தமிழே
ஆராரோ... ஆரிராரிரோ... ஆராரோ... ஆரிராரிரோ..

. தங்கமணி தங்கமயிலே கண்ணுறங்கு தங்கரதம்
வைரமணி வைடுரியமே கண்ணுறங்கு களஞ்சியமே
பொன்னுமணி பொன்மயிலே கண்ணுறங்கு பெட்டகமே
கருகமணி கருப்புமுத்தே கண்ணுறங்கு கனிச்சுவையே
ஆராரோ... ஆரிராரிரோ... ஆராரோ... ஆரிராரிரோ...

தாய்மாமன் வரபோறார் தங்கநகை செய்துக்கிட்டு
சித்தி வரப்போறாள் சீதனமும் கொண்டுக்கிட்டு
தாத்தா வரப்போறார் முத்தமிட தலையைத் தொட்டு
பாட்டி வரப்போறார் முத்தமிட பாதம் தொட்டு
ஆராரோ... ஆரிராரிரோ... ஆராரோ... ஆரிராரிரோ...

சிவாதாமஸ்அலி-
வரப்போற கூட்டம் One Site டாவே இருக்குதே.... ?