தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், பிப்ரவரி 26, 2018

தமிழ் அருவி


வணக்கம் கடந்த எனது பதிவு பேராசை பெருநஷ்டம் அதில் ஆண் குழந்தைகள் மட்டும் எனக்கு ஐந்து பிறக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு எழுதி இருந்தது வில்லங்கத்தாருக்கும், திருச்சி பி.ஜே.பி அவர்களுக்கும் நான் பெண் குழந்தைகள் வேண்டாமென்று சொன்னது போல் புரிதலைக் கொடுத்து விட்டது காரணம் நான் சொன்ன விதமும் அவ்வண்ணமே இருந்தது உண்மையே... வருந்துகிறேன். அதோடு அதிராம்பட்டணத்துக்காரர்களும் ஊரணியில் நின்று கொண்டு கொதித்து விட்டார்கள். ஆகவே இந்த தன்நிலை விளக்கம் பெண் குழந்தைகள் மூன்று வேண்டும் என்பதும் எமது அவா இத்தனை குழந்தைகள் பெற்றால் கிடைக்குமா புவா ? என்று கேட்டு விடாதீர்கள்.

சனி, பிப்ரவரி 24, 2018

ஜப்பான் ஜகன்மோகினி ஜமுனாராணி


என்னடா தம்பி உன்னோட வீட்டுப்பக்கம் போனேன் கொழுந்தியா மாங்காயை கடிச்சுக்கிட்டு இருக்கு..... ஏதும் விஷேசமாடா ?
ஆமாண்ணே... தொழில் சரியில்லை ஊறுகாய் வியாபாரம் தொடங்கினேன்.
? ? ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *
இவரு வீடியோ கடை வச்சுருந்தாரே... பின்னே ஏன் சாமியார் ஆனாரு ?
தொழில்ல க்ராப்பிக்ஸ் டெவலப்மெண்ட் படிச்சுக்கிட்டாராம்.
? ? ?
* * * * * * * * * * 02 * * * * * * * * * *
இவரு அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு சொல்றாரே.. இவருக்கு முன் அனுபவம் இருக்கா ?
ஏற்கனவே பேட்டை தாதாவா இருந்து எட்டு கொலைகள் செய்துருக்காராம்.
? ? ?
* * * * * * * * * * 03 * * * * * * * * * *
அந்த நடிகை திருமணத்தை வெள்ளி விழா கொண்டாட்டமாக நடத்தப் போறாங்களாமே.... ஏன் ?
இது அவங்களோட 25 வது திருமணமாம்.
? ? ?
* * * * * * * * * * 04 * * * * * * * * * *
உன்னோட அம்மா நல்லா மூக்கும், முழியுமா... அழகான பெண்ணைத்தானே பார்த்தாங்க அப்புறம் ஏன் நீ சம்மதிக்கலை ?
அவங்க போட்டோவுல பார்த்துருக்காங்க நான் நேரடியாக பார்க்கும் போது வாயும், வயிறுமா இருந்தாளே...
? ? ?
* * * * * * * * * * 05 * * * * * * * * * *
இந்தக் கட்சித்தலைவர் ஊமையாமே இவர் மக்களிடம் எப்படி பேசமுடியும்னு நம்புகின்றார் ?
வாயிருந்தும் உளறுகின்ற தலைவரையே ஏற்றுக்கொண்ட மக்கள் என்னை நிச்சயம் ஏற்பார்கள்னு எழுதிக் காண்பிக்கின்றாரே..
? ? ?
* * * * * * * * * * 06 * * * * * * * * * *
இந்த சட்டமன்ற தேர்தலில் நீ யாருக்கு ஓட்டுப் போடுவதாக உத்தேசம் ?
எல்லாக் கட்சிக்காரனிடமும் நோட்டு வாங்கிட்டு நோட்டாவுக்கு போடுவேன்.
? ? ?
* * * * * * * * * * 07 * * * * * * * * * *
அந்த நீதிபதி வடமலையானை விடுதலை பண்ணிட்டாரே... எப்படி ?
விடுதலை செய்தால்... தயிர்வடை மாலை சாத்துறேன்னு நீதிபதியிடம் சொல்லி இருக்கான்
? ? ?
* * * * * * * * * * 08 * * * * * * * * * *
இந்த இன்ஸ்பெக்டர் கை நீட்டி லஞ்சம் வாங்க மாட்டாராமே.... உண்மையா ?
ஆமா பேண்ட் பாக்கெட்ல வைச்சு விடணுமாம்.
? ? ?
* * * * * * * * * * 09 * * * * * * * * * *
ஜப்பான் போன ஜகன்நாதனும், அவரு மனைவி ஜமுனா ராணியும் திரும்பி வரும்போது ஒரு மாதிரியாக பேசுகின்றார்களாமே ஏன் ?
ஜப்பான் போனவங்க இரண்டு பேரும் அந்த நாட்டு ஜகன்மோகினி சினிமா பார்த்தாங்களாம்
? ? ?
* * * * * * * * * * 10 * * * * * * * * * *

காணொளி

வியாழன், பிப்ரவரி 22, 2018

நடமாடும் தெய்வம்


ருப்பதின் பெருமை சிலரின் கண்களுக்கு தென்படுவதில்லை தாயை அருகில் இருந்து கவனித்து கொள்ள முடிவதில்லையே என்று ஏங்கும் பலரும் அயல்நாட்டில் வசிப்பர் உள் நாட்டிலேயே வசிக்கும் மகன்கள் சிலர் தாயின் அன்பை உணர்வதில்லை இது இறைவனின் சூழ்ச்சியா ? மனிதன் தெளிவு பெறாத அறியாமையா ? அல்லது சூழ்நிலைகள் இப்படியான வாழ்வை அமைத்து விடுகின்றனவா ? பெரும்பாலானவர்கள் இழந்த பிறகே அதன் அருமையை உணர்கின்றார்கள் பிறகு வருந்தி பயன் என்ன ?

தாய் மட்டுமல்ல நண்பர்களே.... தந்தையும்கூட, ஏன் ? சிலருக்கு மனைவியும்கூட வாழும் காலம் என்பது கொஞ்ச நேரமே... போகும் தூரமோ... அறியாதது இருக்கும்வரை சந்தோஷமாக வாழ்வோம் நமக்கு மீண்டும் இதே தாயும். இதே தந்தையும் ஏன் ? இதே மனைவியும், குழந்தைகளும் கிடைப்பார்கள் என்று உறுதி சொல்ல முடியாது காரணம் மீண்டும் மறுபிறவி உண்டா ? இல்லையா ? என்பது நமக்குத் தெரியாது பிறர் மீது நாம் அன்பு செலுத்துவதால் நமக்கு நஷ்டம் வரப்போவதில்லை கண்டிப்பாக லாபமே இருக்கும் எத்தனையோ மேதைகள் இறந்தும் மக்கள் மனதில் வாழ்கின்றார்கள் அவர்கள் அனைவருமே அன்பே வடிவமாக வாழ்ந்தவர்களே... பெற்றோர்கள் மீது அன்பு செலுத்தாமல் வாழ்ந்தவர்கள் நிச்சயமாக அவர்களை இழந்த பிறகு நினைத்துப்பார்த்து வருந்தும் நிலைக்கு கண்டிப்பாக வருவார்கள் இதை ஆழ்ந்து தங்களின் உறவினர்கள், நண்பர்களை கணக்கு எடுத்துப்பாருங்கள் இந்த உண்மை விளங்கும்.

சிலர் திரைப்பட நடிகர்கள் மீது வைத்திருக்கும் அன்பில் பகுதியாவது பெற்றோர்கள் மீது செலுத்திப்பாருங்கள் நடிகனின் பதாகைகளில் ஏறி பாலூற்றுகின்றாய் கீழே தவறி விழுந்து உனக்கு மறுநாள் உன்னைப்பெற்று வளர்த்து, பாலூட்டி, சீராட்டி வளர்த்த பெற்றோர்கள் உனக்கு பாலூற்றுகின்றார்கள் அவர்களுக்கு நீ பாலூற்றுவாய் என்பதுதானே அவர்களின் எதிர்பார்ப்பு அவர்களுக்காக தீ குளிக்கின்றாய் ரசிகருக்காக எந்த நடிகனாவது தீ குளித்ததாக சரித்திரம் உண்டா ? இதுவரையில் ஏதோ தெரியாமல் வாழ்ந்து விட்டாய் சரி மறந்து விடுவோம் நேற்று நம் சகோதரன் தீ குளித்தானே அவனுக்கு கிடைத்தது என்ன ? அவனது குடும்பத்தின் நிலையென்ன ? இது உனது அறிவுக்கண்ணுக்கு தென்படவில்லையா ? பெற்றோர்களுக்காக தீ குளிக்க வேண்டாம் அவர்களுக்கு தீ மூட்டும் காலம்வரையிலாவது அன்பு செலுத்துங்கள் நடிகர்களின் பெயரை உங்களது பெயரோடு இணைத்து போடுகின்றீர்கள் இதன் அர்த்தம் தெரியுமா ? நண்பர்களே... விரிவாக எழுத எனது கைகள் நடுங்குகின்றன... காரணம் உனது தாய் எனக்கும் தாய் போன்றவளே.

இப்படிப் பெயர்களை சுவரொட்டியில் அடித்து வீதிகளில் ஒட்டியவர்கள் அனைவருமே பெயருக்குப் பிறகு தங்களது பட்டப் படிப்பையும் போடுகின்றீர்களே... அந்த பட்டத்தை  உங்களுக்கு வாங்கி கொடுத்ததற்கு பின்னால் தங்களது தந்தையின் உழைப்பு மறைந்திருப்பது தெரியுமா ? ஒருவேளை மறைந்திருப்பதால்தான் தெரியவில்லையோ ? அதேநேரம் படிக்காத எத்தனையோ (என்னையும் சேர்க்கவும்) பேருக்கு இப்படி தனது பெயருடன் நடிகரின் பெயரை இணைப்பது தவறு என்று தெரிகின்றது படித்த பட்டதாரியான உனக்கு விளங்காதது ஏன் ? பெற்றோரை காப்பது கடமை என்று அனைத்து மதங்களுமே போதித்து இருக்கின்றது தாயை நடமாடும் தெய்வம் என்றும் சொல்வார்கள் படிப்புக்கும், அறிவுக்கும் இடைவெளி உண்டு என்பது மெய்தானோ ? இளைஞர்களே... கொஞ்சம் சிந்திப்பீர்.

திங்கள், பிப்ரவரி 19, 2018

தமிழ் (நிகழ்)ச்சி


தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளை பார்த்து இருப்பீர்கள் நடத்துபவர் தமிழர்தான் அவருக்கு தமிழ் மிகவும் அழகான உச்சரிப்புடன் பேசத் தெரிந்தவர்களைத்தான் நியமித்து இருப்பார்கள் இதில் சிறப்பு விருந்தினராக வருவார்கள் சிலர் அவர் தற்போதுதான் தனது திறமையை இயக்குனர்களிடம் காண்பித்து முன்னுக்கு வந்து கொண்டு இருப்பார் தமிழ் உச்சரிப்பு கிடக்கட்டும் அவளுக்கு முதலில் தமிழ் பேசவே வராது நல்ல வார்த்தை எது கெட்ட வார்த்தை எது என்று பிரித்துப் பார்க்கும் பக்குவம் வந்து இருக்காது அவளை குற்றமும் சொல்ல முடியாது அவளிடம் இவர்கள் கேள்விகள் கேட்பார்கள் ஏற்கனவே அவளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட விடைகளை இவளும் சொல்வாள் இடையில் மறந்து விடும் காரணம் பிறமொழி பழகிக்கொண்டு இருக்கும் புதுமொழி ஏதாவது வார்த்தை உச்சரிப்பு மாறி அது ஆபாசமான வார்த்தையாக வந்து விடும் சமீபத்தில் ஒருத்தி இப்படி பேசி விட்டாள் இதைக்கேட்டு அனைவரும் சிரிக்கின்றார்கள் சிரிப்பு வருவதும் இயல்புதான் ஆனால் நிகழ்ச்சி நடத்துபவன் அவளை மீண்டும், மீண்டும் சொல்ல வைத்து ரசிக்கின்றான் இது முறையா ?
 
ஓர் ஆபாசமான வார்த்தை பொது இடத்தில் தவறுதலாக வந்து விட்டது அதை மூடி மறைப்பதுதான் நல்ல மனிதர்களுக்கு அழகு நாம்தான் பொது இடத்தில் எதைத்தான் செய்வது என்று விவஸ்தையே தெரியாமல் போய்க்கொண்டு இருக்கின்றோமே... இதிலும் இப்பொழுது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தமிழர்களோ, தமிழச்சிகளோ அவசியமில்லை என்றும் ஆகிவிட்டது ஆம் பீஸ்போன பழைய நடிகர் நடிகைகளை வைத்து நடத்துகின்றார்கள் குஷ்பு, மீனா, கௌதமி, ரோஜா, நமீதா, அம்பிகா, ராதா, நிரோஷா இந்த மாதிரியான வி...............களை வைத்து நடத்துகின்றார்கள் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் டமில் பேசலாம் காரணம் இவர்கள் தமிழச்சிகள் இல்லை கேள்வி கேட்பார் யாருமில்லை காரணம் நாம் கொஞ்சும் தமிழைவிட கொல்லும் டமிலை ரசிக்கின்றோம் இவர்கள் தமிழச்சிகளுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள் அவர்களுக்கு முக்கியமான வேலைகளுக்கு மட்டுமே தேவை அது செய்திகளை நல்ல உச்சரிப்புடன் சொல்வதற்கு மட்டும் மற்ற வேலைகள் கிடைக்காது காரணம் நம் இன தமிழச்சிகள் மேலேயுள்ள வி...............களைப்போல வளைந்து போக மாட்டார்கள் இதுதான் நடைமுறை உண்மை மறைந்துள்ள உண்மை.

இந்த தரங்கெட்ட சூழலை உருவாக்கியது திரைப்படத்துறையினர்தான் என்று மேதாவிகளைப்போல சொல்லி விட்டு இதற்கு சமூக அங்கத்தினராகிய நான் அல்ல என்று ஒதுங்கி விடுகின்றோம் உண்மையில் நாம்தான் காரணவாதிகள் இன்னும் சொல்லப்போனால் நமது முந்தைய சந்ததியினர் அதாவது நமது தந்தையர்களே அவர்கள்தான் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் பார்த்து வளர்த்து விட்டு நமக்கு தாரை வார்த்து கொடுத்தார்கள் நாம் அதை இன்னும் அபிவிருத்தி செய்து நமது பிள்ளைகளிடம் கொடுத்து விட்டோம் இனி ஏதும் செய்ய முடியுமா ? இன்று ஏதாவது திரைப்படம் மனைவி மக்களுடன் உட்கார்ந்து பார்க்க முடிகின்றதா ? ஆனாலும் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம் பழைய திரைப்படங்களில் நாயகியை ரவிக்கை பாவாடையுடன் பார்ப்பதே அரிதான விடயமாக இருந்தது இன்று திரையரங்கில் படங்களை விடுங்கள் வீட்டில் தொலைக்காட்சியில் விளம்பரத்தில்கூட உள்ளாடைகளுடன் பெண்கள் காட்சி தருவதை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கின்றோம் இதையெல்லாம் தடுக்க முடியாதா ? முடியும் ஆனால் நமக்கு இது அவசியம் என்ற வட்டத்துக்குள் நம்மை நிறுத்திக்கொண்டு வாழ பழகி விட்டோம் இதை தடுப்பது எப்படி ? உடன் சொல்லி வைத்தாற்ப்போல தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தியிருக்க வேண்டும், திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி இருக்க வேண்டும் அவர்களும் நிறுத்த தொடங்கி இருப்பார்கள் நாம் நிறுத்தவில்லை அவர்களும் நிறுத்தவில்லை இதுதான் நடந்தது

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் இந்த நொடியில் எத்தனை லட்சம் மக்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்பதை கணக்கு எடுக்கமுடியும் அவ்வழியில்தான் நிகழ்ச்சிகள் மேலும், மேலும் அலங்காரம் என்ற பெயரில் அலங்கோலம் ஆக்கப்படுகின்றது தமிழ் வாழ்க ! என்று சொல்கின்றவர்கள் நானாட நாயாட என்ற நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். இனி இதை நமது பிள்ளைகளிடம் சொல்லி தடுப்பது நடக்குமா ? முடியாதுதான் காரணம் அன்று நாம் பெற்றோருக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தோம் இன்று எந்த வீட்டிலாவது பிள்ளைகள் பெற்றோரின் பேச்சைக் கேட்கின்றார்களா ? ஒரு வீடு காண்பியுங்கள் காரணம் அன்று குழந்தைகளை ஆசிரியரிடம் ஒப்படைக்கும் பொழுது இரண்டு கண்ணை மட்டும் விட்டுப்புட்டு தோலை உறிச்சுடுங்க என்று சொன்னார்கள் இன்று எம்புள்ளை மேலே கையை வச்சே லாக்கப்புல வச்சு நச்சுப்புருவேன் என்று குழந்தைகள் முன்பே சொல்லி சேர்க்கின்றோம் விளைவு அனுபவிக்கின்றோம் அனுபவிப்போம் வேறு வழியில்லை எதிர் காலத்தில் நம் இனிய தமிழில் கற்பு என்ற சொல் களையப்படலாம் என்பது எனது கணிப்பு.

குறிப்பு - மேலே குறிப்பிட்ட, வி............களை இடைப்பட்ட இடத்தில் ஐ.பி. என்று போட்டுக் கொள்ளுங்கள் அப்படி நினைத்துதான் நான் எழுதினேன்.

வெள்ளி, பிப்ரவரி 16, 2018

மெட்ராஸ், மெக்கானிக்கர் மெக்னேஷ்


மெக்கானிக்கர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கொடுத்தது தப்பாப்போச்சு.
ஏன் மாப்பிள்ளை என்ன சொல்றார் ?
நெய்த்தோசை சுட நெய் தீர்ந்து போச்சுனு சொன்ன மகள்ட்ட பணமில்லைனு க்ரீஷை கொண்டு வந்து கொடுத்துருக்கார்.
அய்யய்யோ அப்புறம் ?
நெய்க்கு க்ரீஷை தடவச் சொல்றீங்களே... நட்டு கழண்டு போச்சா ? னு கேட்டதுக்கு எட்டாம் நம்பர் ஸ்சுவாணரை எடுத்து மண்டையை உடைச்சிட்டான்.
அடப்பாவமே.... பின்னே
ஹோஸ்ப்பிட்டலில், சேர்த்து ஏழு தையல் போட்டுட்டு எங்களுக்கு போன் பண்ணிச் சொல்றான்.
என்ன சொன்னான் ?
உங்க மகள் ஹோல்ப்பிட்டல் இருக்கா, பாடி இன்னும் பினிஷிங் வேலை முடியலைனு...
? ? ?
* * * * * 1 * * * * *

என்ன... கோமளம் உன் மகள் ஏன் ? கல்யாணம் ஆகியும் புருஷன் வீட்டுக்கு போகாமல் இருக்கா ?
அதயேன் கேட்கிறே ? பெட்ரோல் பங்க்ல வேலை செய்யிற மாப்பிள்ளைக்கு கட்டிக்கொடுத்தோம்.
அதுக்கு என்ன வருமானம் உள்ள வேலைதானே.... ?
வருமானத்துக்கு குறைச்சல் இல்லைதான் எதுக்கெடுத்தாலும் பெட்ரோலை ஊத்தி கொளுத்திடுவேன்னு சொல்றானாம் அதனாலே பயந்துக்கிட்டுப் போகமாட்றா நான் என்ன செய்யிறது ?
? ? ?
* * * * * 2 * * * * *

அதோ போறவரு பூர்வீகம் காக்கி நாடா’’னு சொல்றாங்களே.. பேரென்ன ?
அங்கே இருந்து வந்தவருதான் பேரு பச்சையப்பன்.
அப்ப ஏன் எல்லோரும் மஞ்சமாக்கான் அப்படினு சொல்றாங்க ?
அவரு நீலப்படம் எடுத்தே ஓஞ்சு போனவரு... அதனாலதான்.
எப்பவுமே கருப்பு சட்டைதான் போடுவாரோ ?
ஆமா ஆனால் அவரு கில்லர்ஜி மாதிரி வெள்ளை மனசுக்காரரு...
புதுசா அரக்கு மொத்த வியாபாரம் செய்யிறாராமே.. பணம் ஏது ?  
சொந்த ஊருல ஆரஞ்சு தோட்டத்தை வித்துட்டு வந்தாராம்.
ஆளு நல்லா சிவப்பு தக்காளி மாதிரி இருக்காரே...
* * * * * 3 * * * * *

திங்கள், பிப்ரவரி 12, 2018

படிப்போமா ? குடிப்போமா ?

தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும்
தர்மம் மறுபடியும் வெல்லும்
நான் தேவையில்லாமல் எம்.பி.பி.எஸ் முடிச்சுட்டேன்

சனி, பிப்ரவரி 10, 2018

நடந்தது என்ன ?


இறந்து போகும் மனிதர்கள், என்ன ஆவார்கள் ? என ஒவ்வொரு மதங்களும் ஒவ்வொரு விசயங்களை சொல்கிறது, இது யூகத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டதா ? இல்லை கற்பனையில் உருவாக்கப்பட்டதா ? என யாராலும் உறுதியாக சொல்ல முடியவில்லை சொல்லவும் முடியாது காரணம் யாருமே அனுபவசாலி இல்லை.

வியாழன், பிப்ரவரி 08, 2018

கோட்டையூரிலிருந்து - 50


கோட்டையூர்
கோட்புலிநாயனார்
கோவில்
கோலாகலமான அலங்காரம் காரணம்
கோடீஸ்வரர்கள் இல்லத்திருமணம்
கோபாலபட்டணம்
கோவிந்தன் ஊடகழி
கோமளம் அம்மாள் புதல்வன்
கோச்சடையானுக்கும்,
கோயமுத்தூர்
கோபால்சாமி ஊடகழி
கோசலை அம்மாள் புதல்வி
கோகிலாவுக்கும் திருமணம்
கோகிலாவுக்கு அவனது தம்பி
கோபிநாத் மட்டுமே...
கோச்சடையானின்
கோடிக்கணக்கான சொத்துகளுக்கும் இனி
கோகிலாவும் வாரிசு
கோவில்பட்டி
கோடாங்கி
கோமுட்டியின் வேதவாக்கே இந்த
கோலாகலமான திருமணம்
கோச்சடையான் வீரனும்கூட
கோல்ஃப் விளையாட்டில்
கோல்ட் மெடல் வாங்கியவன்
கோச்சடையான் நல்ல திறமைசாலி
கோபப்படாமல் பேசி யாரையும் தனது
கோட்டுக்குள் நிறுத்தி விடுவான்
கோலப்பொடியிலிருந்து...
கோலா டீலர்வரை தொடாத பிசினஸே இல்லை
கோட்டூர் முதல்
கோடியக்கரை வரை
கோபால்சாமிக்கு உறவினர்கள் உண்டு வலைப்பதிவர்
கோமதி அரசு குடும்ப நண்பரும்கூட கணவர் அரசு
கோட்-ஸூட் போட்டு மிடுக்காக நின்றிருந்தார்
கோவிந்தனும் சாதாரண ஆளில்லை
கோபாலபுரம்வரை அரசியல் செல்வாக்கு உள்ளவர்
கோடீஸ்வரர்களின் வரவுக்கு பஞ்சமில்லை
கோவில் இருக்கும்
கோப்பெருந்தேவி நகரின் தெருவின்
கோடிவரை உயர்ரக கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.
கோலாலம்பூரிலிருந்து
கோச்சடையானின் உயிர்த்தோழன்
கோதைமாறன் தனது மனைவி
கோவழகியுடன் வந்திருந்தான்
கோயில்பிள்ளை in செதுக்கல்கள் தள அதிபர்
கோ அவர்கள் லண்டனிலிருந்து வந்திருந்தார்
கோடீஸ்வரர்களின்
கோட்டையூர் திருமணத்தை வாழ்த்துவோமே...

வலைப்பதிவர் திருமதி. வல்லிசிம்ஹன் அம்மா கேட்டுக் கொண்டதற்காக இப்பதிவு அவர்கள் விரைவில் நலமடைய எமது பிரார்த்தனைகள் - கில்லர்ஜி

காணொளி

செவ்வாய், பிப்ரவரி 06, 2018

பேராசை பெருநஷ்டம்


நான் உலகை அறிந்த சிறிய அகவை முதலே நானொரு பேராசைக்காரன் எனக்கு ஆண் குழந்தைகள் மட்டும் ஐந்து வேண்டுமென பெயர் கூட வைத்து இருந்தேன்.