தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, பிப்ரவரி 28, 2020

கோனாபட்டு, கோபக்காரன் கோதண்டம்


மொடிச்சியப்பனும், கலிவரதனும் அபுதாபி விமான நிலையத்துக்கு காரில் போய்க் கொண்டு இருந்தார்கள்.
டேய் கலிவரதா அந்தா... சிக்னல்ல நொங்கு வித்துக்கிட்டு நிக்கிறானே கோதண்டம் பெருங்கோவக்காரன்.
அவனா,,, கோனாபட்டுக்காரன்ல... அப்புடியென்ன... கோவப்பட்டான் ?

ஞாயிறு, பிப்ரவரி 23, 2020

கலாச்சாரக் கொலையாளிகள்



ந்த கூத்துகளை படிச்சேளா ? கூத்தாடிகிட்டே ஆட்சியை கொடுத்தால் அவன் கூத்தியாக்கிட்டே கொடுத்துட்டே போவான்னு ஒரு தலைவர் சொன்னது நம்ம தமிழ்நாட்டில் எவ்வளவு நிரூபணம் ஆச்சு ? அதனுடைய பிரிவுகளில் இதுவும் ஒன்று. நடிகர்-நடிகைகளை பார்த்து முடி வெட்டிய, தோடு போட்டுக் கொண்ட. தாடி வளர்த்துக் கொண்ட, உடையணிந்து கொண்ட, தலையில் வண்ணம் அடித்துக் கொண்ட, சால் போடாமல், கை இல்லாத ஜாக்கெட் போட வாழப்பழகிய இன்றைய இளைய சமூகம் நாளை இதையும் கடைப்பிடிக்காது என்பது என்ன நிச்சயம் ?

செவ்வாய், பிப்ரவரி 18, 2020

கொட்டாம்பட்டி, கொழுந்தியாள் கொடிமலர்


ணக்கம் நட்பூக்களே... மேலே புகைப்படத்திலிருக்கும் நபர்களை பார்த்தீர்களா ? இவர்கள் தந்தையும், மகளும் என்று நினைத்து இருப்பீர்கள் உண்மைதான் சரியாக கண்டு பிடித்து விட்டீர்கள் எவ்வளவு தொலைக்காட்சி நாடகங்கள் பார்த்து இருப்பீர்கள். இவளது கணவன் போகக்கூடாத இடத்துக்கு செல்கிறார் மனைவி தடுத்தும் கேட்காமல் செல்கிறார் உடன் மனைவி தனது தந்தையிடம் வந்து அழுது கொண்டே முறையிடுகிறாள் அவரும் மருமகனை போகவிடாமல் தடுக்க சொல்கிறார்.

வியாழன், பிப்ரவரி 13, 2020

ஆரவல்லி என்ற சூரவல்லி



ரவல்லி நாம இரண்டு பேரும் இப்படி ஆடு மேய்க்கும்போது பேசிப்பழகுறது உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா என்னாகும் ?
விளக்கமாரு நஞ்சுரும். உங்க அப்பா பார்த்தால் என்ன ஆகும் ?
பழைய செருப்பு பிஞ்சுரும்
அப்படினா நாம என்னதான் செய்யிறது செங்கோடா ?

சனி, பிப்ரவரி 08, 2020

நன்நாள் வாழ்த்துகள்



இன்று 08.02.2020 முதல் வருட திருமணநாளை தங்களது செல்வமகள் T.Krishanya-வுடன் கொண்டாடும் எங்கள் வீட்டு செல்வங்கள் தமிழ்வாணன்-பிரியங்கா சீரும், சிறப்புமாய் வாழ இணைய உறவுகள் அனைவரின் வாழ்த்துகளை வேண்டி...

ஞாயிறு, பிப்ரவரி 02, 2020

தமிழுக்கு அஞ்சலி


திருச்சி என்றால் வலைப்பதிவர்களுக்கு நினைவில் வருவது புகைப்படச்சித்தர் திருமிகு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்தான் இன்று (02.02.2020) அவர் மறைந்து முதலாம் ஆண்டு நினைவு தினம். அவர்தம் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வோம்.