தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், செப்டம்பர் 18, 2023

Audi Car நல்லால்லே...

ணக்கம் நண்பர்களே... ‘’ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே’’ என்ற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் அற்புதமான பாடலை திருமதி வல்லிசிம்ஹன் அம்மா அவர்கள் வேண்டுகோளுக்காக எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன். 

 
இதோ எனது பாடல்...
 
ஈட்டி பிடித்திருந்த பத்மினியின் துன்பத்தை கற்றவன் நான்
அவள் இருதயத்தில் கொப்பளித்த எச்சங்களை தின்றவன் நான்
ஆள வந்தவளை ஆள விடாமல் தடுத்து விட்டு நாளும்
பணத்தை எல்லாம் பறக்க விட்டவன் நான் இந்தக் கலைகளையே
மறந்து விட்டேன் இனி எந்தக் காலை விட்டாலும் வெட்டுவான்டி
ஞானம்பாளே பதில் சொல்லடி நீ ஞனம்பாளே பதில்
சொல்லடி நீ ஞனம்பாளே சொல்லடி நீ ஞானம்பாளே
 
ஆடம்பரம் ஏனடி உனக்குள்ளே நான் ஆடிக்கார்
வாங்குனது நல்லாலே
ஆலோசித்து பாரடி உனக்குள்ளே
ஆத்திரம் வருதடி எனக்குள்ளே
ஆடம்பரம் ஏனடி உனக்குள்ளே நான் ஆடிக்கார்
வாங்குனது நல்லாலே
 
இன்பத்தை நாடி துன்பத்தை சுமக்கிறேன்
ஞானம்பாளே நான் துன்பத்தை சுமக்கிறேன்
ஞானம்பாளே இன்பத்தை நாடி துன்பத்தை சுமக்கிறேன்
ஆடம்பரம் ஏனடி உனக்குள்ளே நான் ஆடிக்கார்
வாங்குனது நல்லாலே
 
நூறுக்கும், நூறான நோட்டுக் கட்டுகளை
தள்ளிக்கொண்டு வந்தேனே ஞானம்பாளே நான்
கதறி கதறி அன்று அழுது புலம்பினேனே
படார் படார்னு விட்டாங்கே ஞானம்பாளே
ஆடம்பரம் ஏனடி உனக்குள்ளே நான் ஆடிக்கார்
வாங்குனது நல்லாலே
ஆலோசித்து பாரடி உனக்குள்ளே
ஆத்திரம் வருதடி எனக்குள்ளே
படார் படார்னு விட்டாங்கே ஞானம்பாளே
 
வங்கிக்காரன் வாங்கி கொண்டான்டி
ஞானம் வங்கிக்காரன் வாங்கி கொண்டான்டி
வாழ்க்கையே வெறுத்து விட்டேன்டி
காரை கொடுத்தவனே எடுத்து கொண்டான்டி
சாலையில் வங்கிகாரன் காட்டி விட்டான் வேலையை
வண்டி ஓட்டத் தெரிந்திருந்தும் பெட்ரோல்
போட அறிந்திருந்தும் காரை ஓட்டி போயிருந்தேன்
சாலையில் வங்கிகாரன் காட்டி விட்டான் வேலையை
 
எதிரி வந்து கெடுக்கவில்லை உதயநிதி தடுக்கவில்லை
மேலாளர் ஏவி விட்டான் அவனும் செய்து விட்டான் காலியே
வங்கிக்காரன் வாங்கி கொண்டான்டி
ஞானம் வங்கிக்காரன் வாங்கி கொண்டான்டி
வாழ்க்கையே வெறுத்து விட்டேன்டி
 
சிங்காரியைத் தொட்டு சீக்கு புடிச்ச எனக்கு
சமாச்சாரம் வேண்டாமடி ஞானம்
சமாச்சாரம் வேண்டாமடி
 
துணைவியை குருந்தனை துறந்து
திரிந்தவனுக்கு சாத்தவும் வேணுமடி
ஞானம் மன்னிச்சு விட்டுடடி
சிங்காரியைத் தொட்டு சீக்கு புடிச்ச எனக்கு
சமாச்சாரம் வேண்டாமடி ஞானம்
 
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி

வருடம்: 1959
படம்: தங்கப்பதுமை
பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடியவர்கள்: சி.எஸ்.ஜெயராமன், பத்மினி

இதோ பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகள்
 
ஈடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான் அவள்
இதயத்தில் கொந்தளித்த எண்ணத்தைக் கொன்றவன் நான்
வாழத் தகுந்தவளை வாழாமல் வைத்து விட்டு
பாழும் பரத்தையினால் பண்புதனைக் கொன்றவன் நான்
அந்தக் கொலைகளுக்கே ஆளாகி இருந்து விட்டேன்
இனி எந்தக் கொலை செய்தாலும் என்னடி என்
ஞானப்பெண்ணே என்னடி என் ஞானப்பெண்ணே
 
ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே அவன்
ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே மனிதன்
ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
ஆரம்பமாவது மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
 
அன்பைக் கெடுத்து நல்லாசையைக் கொன்றவன்
அஞ்சி நடப்பானோ ஞானப்பெண்ணே
துன்பத்தைக் கட்டி சுமக்கத் துணிந்தவன்
சொன்னாலும் கேட்பானோ ஞானப்பெண்ணே
ஆரம்பமாவது மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
 
தவறுக்கும் தவறான தவறை புரிந்து விட்டு
தனிப்பட்டு போனவன் ஞானப்பெண்ணே
பதறி பதறி நின்று கதறி புலம்பினாலும் பயன் பட்டு
வருவானோ ஞானப்பெண்ணே பயன் பட்டு
வருவானோ ஞானப்பெண்ணே
ஆரம்பமாவது மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
 
கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி
மானே வளர்த்தவனே வெறுத்து விட்டான்டி
கண்ணை கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி
பொருத்தமான துணையிருந்தும்
பொங்கி வரும் அழகிருந்தும்
போன பக்கம் போக விட்டேன் பார்வையை
அவன் பொருத்திருந்தே புரிந்து கொண்டான் வேலையை
கண்ணை கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி
மானே வளர்த்தவனே வெறுத்து விட்டான்டி
 
எதிரில் வந்து கெடுக்கவில்லை
இதயம் இடம் கொடுக்கவில்லை
எங்கிருந்தோ ஏவி விட்டான் கிளியை
அது என் தலையில் போட்டதடி பழியை
கண்ணை கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி
மானே வளர்த்தவனே வெறுத்து விட்டான்டி
 
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
மனைவியை, குழந்தையை மறந்து
திரிந்தவனை வாழ்த்துவதாகாதடி
 
மனைவியை, குழந்தையை மறந்து
தங்கம் மன்னிக்க கூடாதடி
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
 
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=CNqT7kR7JSs
நன்றி கில்லர்ஜி தேவகோட்டை

Share this post with your FRIENDS…

33 கருத்துகள்:

  1. நன்று. ரசித்தேன் ஜி. வல்லிம்மா சென்ற வருடம் கேட்ட நேயர் விருப்பம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      இதை அப்பொழுதே எழுதி விட்டேன்.

      சில பாடல்களுக்கு பிறகு என்று நினைத்தபோது அம்மா பதிவுகளுக்கு வரவில்லை.

      காத்திருந்து ஒரு வருடத்துக்கு மேலாகி விட்டது

      ஆகவே இன்று வெளியிட்டு விட்டேன்.

      பாடலை இரசித்தமைக்கு நன்றி ஜி

      நீக்கு
    2. என்னடா வல்லி எப்போக் கேட்டாங்கனு திகைச்சுப் போயிருந்தேன். ஒரு வருஷம் ஆச்சா? அவங்க ஸ்விட்சர்லாந்தில் இருந்தாங்க. அங்கே தான் இருக்காங்களா, கிளம்பியாச்சானு தெரியலை. என்னமோ அவங்களும் இணையம் பக்கம் வராமல் இருக்காங்களே! :( இப்போத் துளசியும் கொஞ்ச நாட்கள் விடுமுறைனு சொல்லி இருந்தாங்க. ஆனால் வந்தாச்சு போல!

      நீக்கு
    3. ஆம் ஒரு வருடம் கடந்தும் வல்லிம்மா பதிவுக்கு வராததால் வெளியிட்டு விட்டேன்

      நீக்கு
  2. விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் ஜி

      நீக்கு
  3. பாடலை ரசித்தேன். ஆமாம் ஆடம்பரம் நமக்கெதற்கு. என்று யோசித்தால் ஒவ்வொருவர் செய்வதும் அவருக்குக் கீழ்பட்டவர்களுக்கு (பொருள் பலத்தால் தாழ்ந்து இருப்பவர்கள்) ஆடம்பரமாகத்தான் தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே இருப்பவர் ஆடம்பரமாக வாழட்டும்.
      வாழ்க்கை வாழ்வதற்கே!

      நீக்கு
    2. பணம் இருந்தும், நமக்குக் கீழே இத்தனைபேர் கஷ்டப்படும்போது நாம் எதற்கு ரொம்ப ஆடம்பரமாக இருக்கணும் என நினைப்பவர்கள் உயர்ந்தவர்கள். நான் பொதுவா ஆடம்பரமாக வாழ்வதில்லை

      நீக்கு
    3. நான் ஆடம்பரமாக வாழ்ந்தது இல்லை தமிழரே...
      மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. உங்கள் கவிதையை படித்து கொண்டே வரும் போது தங்கபதுமை பாடல் நினைவுக்கு வந்தது. நீங்கள் அந்த பாடலையும் பகிர்ந்து விட்டீர்கள்.

    கவிதையை நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

    வல்லி அக்கா இந்த படத்தில் இன்னும் ஒறு பாட்டு அதையும் பகிர்ந்து இருக்கிறார்கள் அவர்களுக்கு பிடித்தது என்று. முதல் அடி நினைவுக்கு வரவில்லை,"கண்ணில் விழுந்த மலர் எடுத்து கற்பு நாரில் சரம் தொடுத்து'' என்று வரும் கண்இழந்த கணவனுடன் பெரிய மணியை அடித்து கொண்டே பாடுவார். மனதை என்னவோ செய்யும் அந்த பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பாடலை ரசித்தமைக்கு மிக்க நன்றி.

      நீங்கள் சொன்ன பாடலையும் முயற்சிக்கிறேன்.

      இன்றுகூட ஒரு பாடல் எழுதினேன் "அன்பு நடமாடும் கலைக் கூட்டமே" என்ற அவன்தான் மனிதன் பாடல்.

      நீக்கு
    2. அன்பு நடமாடும் கலைக் கூடமே! நல்ல பாடல்.

      நீக்கு
    3. "வாய் திறந்து சொல்லம்மா" என்று ஆரம்பிக்கும் அந்த பாடல்.

      https://www.youtube.com/watch?v=6WTZwnlWhfs
      தங்கபதுமை பாடல்.

      நீக்கு
    4. ஆம் சகோ இப்பொழுதுதான் இணையத்தில் தேடி எடுத்து கேட்டேன்.
      நீங்களும் வந்து சொல்லி விட்டீர்கள் .

      நீக்கு
  5. பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  6. பட்டுக்கோட்டையார் பாட்டை இந்தக் காலத்திற்கு ஏற்ப தேவகோட்டையார் மாற்றிப் பாடிய விதம் நன்று. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  7. ஆசையா... ஒரு ஆடிக்காரு வாங்கப்போயி...
    அதுக்குள்ளால இவ்வளவு அக்கப்போரும் நடந்து முடிஞ்சுடுச்சா....
    பாடல் வரிகளைப் பார்க்கும்போது....
    தேவகோட்டையாருக்கு "அடி" கொஞ்சம் பலமோ?....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      ஆடிக்குப் வாங்கப்போயி ஓடிப்போறது மாதிரி ஆயிடுச்சு.

      நீக்கு
  8. உங்களோட திறமைக்குக் கேட்பானேன் கில்லர்ஜி! மிக அருமை வழக்கம் போல்.

    பதிலளிநீக்கு
  9. பாடல் நல்லாருக்கு கில்லர்ஜி! ஆடி காரை ஆடியில வாங்கினீங்களோ!!! அதான் பிரச்சனையாச்சோ!!!! ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      ஆம் ஆவணியில் ஆவது போயிருக்கலாம் .

      நீக்கு
  10. அன்பின் தேவகோட்டைஜி,
    என்றும் நலமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.

    நான் இந்தப் பாடலை உங்களிடம் சொல்லி இருந்தேனா.
    என் தம்பி நினைவில் சொல்லி இருப்பேன்.
    மிக மிக நன்றி.

    வலைத்தளங்கள் வந்து ஒரு வருடமா ஆகிவிட்டது!!!!

    என்னையும் நினைவு கொண்டு பதிவிட்டீர்களே.
    மிக நெகிழ்வாக இருக்கிறது.

    கொடுத்த பாடலுக்கு நீங்கள் ''ஆடி'' பாடல் கொடுத்தது
    மிக சுவாரஸ்யம். படித்து, மீண்டும் படித்த் மகிழ்ந்தேன்.
    இன்று உங்கள் பதிவுக்கு வந்ததற்கு நம் கோமதி அரசு தான் காரணம்.

    பலவித யோசனைகள் குழப்பங்கள் என் சிந்தனைப் போக்கையே
    மாற்றிவிட்டது.
    இனியாவது எழுத முயல வேண்டும்.
    உங்கள் குழந்தைகளும் குடும்பமும் நலமாக
    இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.

      தொடர்ந்து எழுதுங்கள்
      வாழ்க நலம்.

      நீக்கு
  11. நலம் விசாரித்த அன்பின் கீதா சாம்பசிவம்,
    அன்பின் கீதா ரங்கன், அன்பின் ஸ்ரீராம், அன்பின் கோமதி அரசு, அன்பின் நெல்லைத்தமிழன்
    மற்றும் அனைவருக்கும் என் நன்றி.

    பதிலளிநீக்கு