கண்ணே என்றான் கண்மணியை
கனியே என்றான் கனிமொழியை
பொன்னே என்றான் பொன்னியை
முத்தே என்றான் முத்தழகியை
முன்குறிப்பு - உலக இணையத் திரையில் முதன்முதலாக துபாய் இணையத்திலிருந்து உங்கள் கில்லர்ஜியின் உருவாக்கத்தில் வெளியாகிறது...
வணக்கம் நண்பர்களே... ‘’பூ பூ பூ பூ பூத்த சோலை பூ பூ பூ பூமாதுளை’’ என்ற கங்கை அமரன் அவர்களின் பாடலை எனது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.
மேலேயுள்ள புகைப்படத்தை பார்த்தீர்களா ? ஒரு மோட்டார் சைக்கிளில் யாரோ ஒரு கோமாளி விநாயகர் சதுர்த்தி அன்றாக இருக்கலாம். மக்களை கவர்வதற்காக இப்படியான கோமாளித்தனங்களை செய்யும் மனிதர்கள் உலகில் எங்கும் உண்டு இதுவொரு நகைச்சுவையாக எடுத்து பொழுதை கடத்தி விடவேண்டும். ஆனால் பக்கத்தில் நிற்கும் ஒரு மனிதர் அவனை பிள்ளையாரே வந்ததாக நினைத்து சாலையில் கும்பிடுவது முறையா ?
வணக்கம் சமீபத்தில் பொழுது போகாமல் இணையத்தில் உலாவிக் கொண்டு இருந்தேன். அப்பொழுது ஒரு கேள்வி கேட்டு இருந்தார்கள். அதாவது தமிழ் சினிமாவில் இவர்களில் எந்த ஹீரோ மக்களுக்கு உதவும் உள்ளம் கொண்டவர் ? என்று கேட்டு இருந்தது. அதற்கு நாம் வாக்களித்தால் உடன் விடை வரும். அதன்படி நாமும் செய்யலாம் என்ற ஆசை.
என்னடா தெள்ளுமணி முகம் ஏன் வீங்குனாப்பல இருக்கு ?
சாமான் வாங்க போனேன் என்னை, அறைஞ்சுட்டாங்கே வந்து கேளுணே...
ஏண்டா என்ன சாமான் வாங்க போனே ?
டைல்ஸ் விலை எவ்வளவுனு ? கேட்டேன், கிடையாதுனு சொன்னாங்கே...
வணக்கம் நண்பர்களே... மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை என்ற கவிஞர் வாலி அவர்களின் பாடலை. எனது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.
கொடிமுல்லை பெயரைப்போல ஆளும் அழகுதான் ஆனால் குணம் ? அதுதான் இந்த ஏரியாவுல எங்கே தேடினாலும் கிடைக்காத அபூர்வ குணம். கணவனை பணம், பணம் என்று நச்சரித்துக் கொண்டே இருப்பாள். பக்கத்து வீட்டுக்காரி பாயாசம் செய்தால்கூட நாமும் செய்ய வேண்டும் என்று நினைப்பவள். வேலை செய்து விட்டு வந்து நிம்மதியாக சாப்பிடக்கூட விடமாட்டாள். இதனால் சாப்பிட்டவுடன் வெளியேறி விடுவான்.